Online TestTamil
9th Std Tamil Notes – Part 5
9th Std Tamil Notes - Part 5
Congratulations - you have completed 9th Std Tamil Notes - Part 5.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பல்யானை மன்னீர் படுதிறை தந்துய்ம்மின்,
மல்லல் நெடுமதில் வாங்குவில் பூட்டுமின்
வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன்
வில்லெழுதி வாழ்வார் விசும்பு - இப்பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
கலிங்கத்துப்பரணி | |
பழமொழி நானூறு | |
இனியவை நாற்பது | |
முத்தொள்ளாயிரம் |
Question 1 Explanation:
விளக்கம் :- மூவேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நூல் முத்தொள்ளாயிரம். ஆயினும், இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. மூவேந்தர்களின் ஆட்சிச்சிறப்பு, படைச்சிறப்பு, போர்த்திறன், கொடை முதலிய செய்திகளை இப்பாடல்கள் விளக்குகின்றன. சிறந்த இலக்கிய நயமும் கற்பனை வளமும் நிறைந்த நூலாக முத்தொள்ளாயிரம் திகழ்கிறது. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
Question 2 |
மூவேந்தர்களின் ஆட்சிச்சிறப்பு, படைச்சிறப்பு, போர்த்திறன், கொடை முதலிய செய்திகளை எந்நூல் விளக்குகின்றன?
கலிங்கத்துப்பரணி | |
பழமொழி நானூறு | |
இனியவை நாற்பது | |
முத்தொள்ளாயிரம் |
Question 3 |
முத்தொள்ளாயிரம் நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. புறத்திரட்டு என்னும் நூல் வாயிலாக ------------ வெண்பாவும், பழைய உரை நூல்களில் மேற்கோள்களாக ------------ வெண்பாவும் கிடைத்துள்ளன.
100, 20 | |
108, 22 | |
116, 32 | |
120, 40 |
Question 4 |
சிறந்த இலக்கிய நயமும் கற்பனை வளமும் நிறைந்த நூலாக முத்தொள்ளாயிரம் திகழ்கிறது. இந்நூலின் ஆசிரியர் பெயர் --------------?
கணியன் பூங்குன்றனார் | |
விளம்பி நாகனார் | |
பூதஞ்சேந்தனார் | |
பெயர் தெரியவில்லை |
Question 5 |
அரசர்களே, உங்களின் வளமிக்க நெடிய மதில்கள்மீது வில் சின்னத்தைப் பொறித்து வையுங்கள். ஏனெனில், வாடாத மாலையணிந்த வானவர்களும் -------------- என்பவரின் வில் வடிவத்தை எழுதி வைத்தே வானுலகில் வாழ்கின்றார்கள்.
சேரன் | |
சோழன் | |
பாண்டியன் | |
பல்லவர்கள் |
Question 6 |
----------------- என்பவன் தன்னிடம் அடைக்கலமான புறாவினைக் காக்க, தன் தசையை அறுத்துக்கொடுத்தான். அத்தசை ஈடாகாத காரணத்தால், தானே துலாக்கோலில் ஏறினான். இப்படிச் செய்யத் துணிந்தமைக்கு அவனது கொடை வீரமோ மெய்யொழுக்கம் குறையாத படைவீரமோ காரணம் அன்று. அது ----------------- என்பவனின் நற்பண்பு.
சேரன் | |
சோழன் | |
பாண்டியன் | |
பல்லவர்கள் |
Question 7 |
நெருங்கி அமைந்த இலைபோன்ற வடிவிலான வேலை உடையவன் --------------------- மன்னன். அம்மன்னனின் யானை, தன் தந்தங்களை எழுத்தாணியாகவும் வீரம் செறிந்த வேற்படையையுடைய பகை மன்னரின் அகன்ற மார்புகளை ஓலைகளாகவும் கொண்டு செல்வம் நிலைத்த உலகமெல்லாம் எம் -------------- என்பவருக்கு உரியது என எழுதும்.
சேரன் | |
சோழன் | |
பாண்டியன் | |
பல்லவர்கள் |
Question 8 |
சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி
ஈர்த்திட் டுயர்துலைதான் ஏறினான் – நேர்ந்த
- என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
கலிங்கத்துப்பரணி | |
பழமொழி நானூறு | |
இனியவை நாற்பது | |
முத்தொள்ளாயிரம் |
Question 9 |
கொடைவீர மோமெய்ந் நிறைகுறையா வன்கட்
படைவீர மோசென்னி பண்பு . - என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
கலிங்கத்துப்பரணி | |
பழமொழி நானூறு | |
இனியவை நாற்பது | |
முத்தொள்ளாயிரம் |
Question 10 |
மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர்
உருத்தகு மார்போலை யாகத் திருத்தக்க
வையக மெல்லா மெமதென் றெழுதுமே
மொய்யிலைவேல் மாறன் களிறு . - என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
கலிங்கத்துப்பரணி | |
பழமொழி நானூறு | |
இனியவை நாற்பது | |
முத்தொள்ளாயிரம் |
Question 11 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
உய்ம்மின் – பிழைத்துக்கொள்ளுங்கள் | |
மல்லல் – பெருமை | |
வள் – நெருக்கம் | |
விசும்பு – வானம் |
Question 11 Explanation:
விளக்கம் :- மல்லல் என்பதன் பொருள் வளமை.
Question 12 |
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக.
மல்லல் நெடுமதில் – உரிச்சொற்றொடர் | |
நெடுமதில் – வினையெச்சம் | |
வாங்குவில், உயர்துலை – வினைத்தொகை | |
குறையா வன்கண் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் |
Question 12 Explanation:
விளக்கம் :- நெடுமதில் என்பதன் இலக்கணக்குறிப்பு பண்புத்தொகை.
Question 13 |
பல்யானை மன்னீர் படுதிறை தந்துய்ம்மின்,
மல்லல் நெடுமதில் வாங்குவில் பூட்டுமின்
வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன்
வில்லெழுதி வாழ்வார் விசும்பு - இந்த பாடலில் பயின்று வந்துள்ள அணி எது?
உருவக அணி | |
வேற்றுமை அணி | |
உவமை அணி | |
தற்குறிப்பேற்ற அணி |
Question 14 |
மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர்
உருத்தகு மார்போலை யாகத் திருத்தக்க
வையக மெல்லா மெமதென் றெழுதுமே
மொய்யிலைவேல் மாறன் களிறு - இந்த பாடலில் பயின்று வந்துள்ள அணி எது?
உருவக அணி | |
வேற்றுமை அணி | |
உவமை அணி | |
தற்குறிப்பேற்ற அணி |
Question 15 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
மாறன் - பாண்டிய மன்னன் | |
களிறு - பெண் யானை | |
மருப்பு - தந்தம் | |
மறம் - வீரம் |
Question 15 Explanation:
விளக்கம் :- களிறு என்பதன் சொற்பொருள் ஆண் யானை.
Question 16 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
கனல் - காற்று | |
துலை - துலாக்கோல் (தராசு) | |
நிறை - ஒழுக்கம் | |
மேனி - உடல் |
Question 16 Explanation:
விளக்கம் :- கனல் என்பதன் சொற்பொருள் நெருப்பு.
Question 17 |
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக.
இலைவேல் – உவமைத்தொகை | |
மருப்பூசி – உருவகங்கள் | |
மாறன்களிறு – ஆறாம் வேற்றுமைத்தொகை | |
மார்போலை - வினைத்தொகை |
Question 17 Explanation:
விளக்கம் :- மார்போலை என்பதன் சரியான இலக்கணக்குறிப்பு உருவகம்.
Question 18 |
பொருந்தாதது எது? பிரித்தறிதல்.
மருப்பூசி = மருப்பு + ஊசி | |
மார்போலை = மார்பு + ஓலை | |
எமதன்று = எமது + என்று | |
தந்துய்ம்மின் = தந்து + உய் + மின் |
Question 18 Explanation:
விளக்கம் :- தந்துய்ம்மின் என்பதன் சரியான பிரித்தறிதல் தந்து+உய்ம்மின்.
Question 19 |
மார்போலையில் எழுதும் எழுத்தாணி எது?
ஈட்டி | |
புறா | |
தூரிகை | |
தந்தம் |
Question 20 |
தீயின் வாயினீர் பெறினு முண்பதோர்
சிந்தை கூரவாய்வெந்து லர்ந்துசெந்
நாயின் வாயினீர் தன்னை நீரெனா
நவ்வி நாவினால் நக்கி விக்குமே
- என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் | |
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார் | |
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 21 |
காடிதனைக் கடத்தும்எனக் கருமுகிலும்
வெண்மதியும் கடக்க அப்பால்
ஓடிஇளைத்து உடல்வியர்த்த வியர்வன்றோ
உகுபுனலும் பனியும் அம்மா
- என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் | |
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார் | |
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 22 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
முகில் – மேகம் | |
மதி – நிலவு | |
உகு – சொரிந்த (பொழிந்த) | |
புனல் – காற்று |
Question 22 Explanation:
விளக்கம் :- புனல் என்பதன் சரியான பொருள் நீர்.
Question 23 |
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக?
கருமுகிலும் வெண்மதியும் – எண்ணும்மை | |
செந்நாய், கருமுகில், வெண்மதி – பண்புத்தொகைகள் | |
வெந்து, உலர்ந்து, எனா, கூர, கடக்க, ஓடி, இளைத்து – வினையெச்சங்கள் | |
வியர்த்த வியர்வன்றோ – வினைத்தொகை |
Question 23 Explanation:
விளக்கம் :- வியர்த்த வியர்வன்றோ என்பதன் சரியான இலக்கணக்குறிப்பு பெயரெச்சம்.
Question 24 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக?
தீயின்வாய் – நெருப்பில் | |
சிந்தை – காடு | |
கூர – மிக | |
நவ்வி – மான் |
Question 24 Explanation:
விளக்கம் :- சிந்தை என்பதன் பொருள் எண்ணம்.
Question 25 |
இவர் யார் என கண்டறிக?
கலிங்கத்துப்பரணியை இயற்றியவர், இவர், திருவாரூர் மாவட்டத்திலுள்ள தீபங்குடி என்னும் ஊரினர். முதல் குலோத்துங்கச் சோழனின் அரசவைப் புலவராகத் திகழ்ந்தவர். இசையாயிரம், உலாமடல் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார். இவரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு.
கம்பர் | |
புகழேந்திப் புலவர் | |
சேக்கிழார் | |
சயங்கொண்டார் |
Question 26 |
சயங்கொண்டாரை, பரணிக்கோர் சயங்கொண்டார் எனப் பாராட்டியவர் யார்?
சடையப்ப வள்ளல் | |
நாகுத்தனார் | |
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் | |
இளங்கோவடிகள் |
Question 27 |
கீழ்க்கண்ட கூற்று எந்த நூலைப் பற்றி கூறுகிறது?
ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்குப் ------------- என்பது பெயர். இது, தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று
அம்மானை | |
பரணி | |
கலம்பகம் | |
தூது |
Question 28 |
பரணி இலக்கியங்களுள் தமிழில் தோன்றிய முதல் நூல் எது?
சீனத்துப் பரணி | |
பாசவதைப் பரணி | |
தக்கயாகப் பரணி | |
கலிங்கத்துப்பரணி |
Question 29 |
கலிங்க மன்னன் அனந்தபன்மன் மீது முதல் குலோத்துங்கச் சோழன் போர்தொடுத்து வெற்றிபெற்றான். அவ்வெற்றியைப் பாராட்டி எழுந்த இந்நூல், தோல்வியுற்ற கலிங்கநாட்டின் பெயரால், அமைந்து உள்ளது. இந்நூலில், --------------- தாழிசைகள் உள்ளன.
430 | |
109 | |
509 | |
530 |
Question 30 |
சயங்கொண்டாரின் சமகாலப் புலவரான -------------- என்பவர் இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி எனப் புகழ்ந்துள்ளார்.
புகழேந்திப் புலவர் | |
ஒளவையார் | |
ஒட்டக்கூத்தர் | |
கம்பர் |
Question 31 |
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவ னுக்கு வகுப்பது பரணி - என்று கூறும் நூல் எது?
கலித்தொகை | |
பன்னிருபாட்டியல் | |
முதுமொழிக்காஞ்சி | |
பழமொழி நானூறு |
Question 32 |
"எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே." - என்று கூறியவர் யார்?
அண்ணா | |
திரு.வி.க | |
வரதராசனார் | |
பெரியார் |
Question 33 |
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி எனத் தமிழினத்தின் தொன்மையை ---------------- கூறும்
திருக்குறள் | |
புறநானூறு | |
புறப்பொருள் வெண்பாமாலை | |
பன்னிரு பாட்டியல் |
Question 34 |
------------------ என்ற இடத்தில் தோன்றிய தமிழினம் உலகமெல்லாம் பரவித் தன்புகழை நிலைநாட்டி வருகிறது.
டெரா ஆஸ்திராலிசு | |
கேர்கைலன் | |
மூ கண்டம் | |
குமரிக் கண்டம் |
Question 35 |
தமிழர் புலம் பெயரக் காரணங்கள்
வாணிகம், வேலைவாய்ப்பு | |
அயல்நாட்டு படையெடுப்பு | |
பஞ்சம் | |
அயல்நாட்டு மோகம் |
Question 36 |
திரை கடலோடியும் திரவியம் தேடு - இந்த பாடல் வரி யாருடையது?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
ஒளவையார் | |
நாமக்கல் கவிஞர் |
Question 37 |
சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு --------------- நூலில் உள்ளது.
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
வளையாபதி | |
குண்டலகேசி |
Question 38 |
பரப்பளவில் சிறியதான -------------- தீவில் வாழ்பவர்களுள் பெரும்பான்மை மக்கள் தமிழரே.
சிங்கப்பூர் | |
மலேசியா | |
ரியூனியன் | |
பிரான்ஸ் |
Question 38 Explanation:
விளக்கம் :- சிங்கப்பூர், மலேசியா, பினாங்குத் தீவு ஆகிய நாடுகளில் கோவில்கள் கட்டி ஆண்டுதோறும் திருவிழாக்களைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். பரப்பளவில் சிறியதான ரியூனியன் தீவில் வாழ்பவர்களுள் பெரும்பான்மை மக்கள் தமிழரே. அவர்கள் பிரெஞ்சுக்காரர்களால் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலிருந்து ஒப்பந்தக் கூலிகளாக அங்குக் குடியமர்த்தப்பட்டார்கள். பிரான்சு நாட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் அத்தீவில் வாழும் தமிழர்கள் பிரெஞ்சு மொழியே பேசுகிறார்கள். அவர்கள், தமிழைப் பேசாத போதும் தமிழர் தம் பண்பாட்டுக் கூறுகளை மறவாது இன்றளவும் பின்பற்றி வருகிறார்கள்.
Question 39 |
-------------- நாட்டில் வாழும் தமிழருள் தொண்ணுற்றைந்து விழுக்காட்டினர் தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழிலேயே கல்வி பயில்கின்றனர்.
இலங்கை | |
சிங்கப்பூர் | |
மொரிசியசு | |
மலேசியா |
Question 39 Explanation:
குறிப்பு :- சிங்கப்பூர், மொரிசியசு, மலேசியா, பிஜித்தீவுகள், தென் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகியநாடுகளில் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.
Question 40 |
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் ஆட்சி மொழியாக ------------- என்ற இந்திய மொழி திகழ்கிறது.
இந்தி | |
உருது | |
மலையாளம் | |
தமிழ் |
Question 40 Explanation:
குறிப்பு :- இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழைப் பாடமொழியாகப் பயிலவும், தமிழியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
Question 41 |
தமிழர் ----------------, --------------, ------------ முதலிய நாடுகள் பலவற்றில் உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்புகளையும் வகித்து வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் எனப் பல பதவிகளிலும் சிறப்புறத் தொண்டாற்றி வருகின்றனர்.
ஆஸ்திரேலியா, ஜப்பான், ஓமன் | |
பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் | |
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் | |
சீனா, வியட்னாம், அமெரிக்கா |
Question 42 |
இந்தியாவில் மட்டுமல்லாமல், -------------, ----------------- ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும் தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கிறது.
ஓமன், துபாய் | |
அமெரிக்கா, பிரிட்டன் | |
சிங்கப்பூர், மொரிசியசு | |
தாய்லாந்து, சீனா |
Question 43 |
யாதும் ஊரே யாவரும் கேளீர் - என்பது யாருடைய பாடல் வரி?
கணியன் பூங்குன்றனார் | |
கம்பர் | |
ஒளவையார் | |
ஒளவையார் |
Question 44 |
தங்குதடையற்ற மேடைப் பேச்சாலும் இயல்பான மொழி நடையாலும் தமிழைப் பட்டி தொட்டிகள் எல்லாம் பரப்பித் தமிழ்த்தென்றல் எனப் போற்றப்பட்ட பெருந்தகையர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
திரு.வி.கலியாணசுந்தரனார் |
Question 45 |
கீழ்க்கண்ட கூற்று யாரைப் பற்றியது எனக் கூறவும்?
அ] சென்னைக்கு அருகேயுள்ள துள்ளம் என்னும் ஊரில் விருத்தாசலனார் - சின்னம்மையாரின் மகனாக 26.08.1883 ஆம் நாள் பிறந்தார். சென்னை இராயப்பேட்டையிலுள்ள வெஸ்லி பள்ளியில் படித்தார்.
ஆ] கதிரைவேலர் என்பாரிடம் தமிழ் பயின்று தமிழ்ப் பேராசிரியராக உயர்ந்தார். இலக்கியங்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் கற்பதில் பேரார்வங் கொண்டார்.
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
திரு.வி.கலியாணசுந்தரனார் |
Question 46 |
தமிழ்ப்பற்று எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதனை முழு மூச்சாகக் கொண்டு, வடமொழிச் சொற்கள் கலவாமல் தூய தமிழிலேயே பேசவும் எழுதவும் வேண்டும் என வலியுறுத்தியவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
திரு.வி.கலியாணசுந்தரனார் |
Question 47 |
நமது உடல் நலத்தைப் பேண வேண்டும் என்று குறிப்பிட்டால், பிறர் உடல் நலத்தைக் கேடு சூழவேண்டும் என்று பொருள் கொள்ளக்கூடாது. அதுபோலவே, தமிழை வளர்க்க வேண்டும் என்றால், பிறமொழியை வெறுக்க வேண்டும் என்பது பொருளன்று - என்று கூறியவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
திரு.வி.கலியாணசுந்தரனார் |
Question 48 |
காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அவரது மேடைப் பேச்சினை மொழி பெயர்த்தவர் இவரே.
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
திரு.வி.கலியாணசுந்தரனார் |
Question 49 |
இளைஞர்களுக்குத் தமிழுணர்வூட்டும் நோக்கில், "இளைஞர்களே! உங்கள் தமிழ்த்தாய் நேற்றுப் பிறந்தவள் அல்லள்; இன்று பிறந்தவள் அல்லள்; அவள் மிகத் தொன்மையுடையவள்; கலைகளையுடையவள். அவளையா கொல்வது? தாய்க்கொலை புரிவதா தமிழர் வீரம்? - என்று கூறியவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
திரு.வி.கலியாணசுந்தரனார் |
Question 50 |
நேற்றும் இன்றும் பிறந்த நாடுகளையும் கலைகளையும் ஒம்பவும் பெருக்கவும் அவ்வந்நாட்டார் முயன்று வருகின்றனர். நாமோ, பழம் பெருநாட்டை மறைக்கப் பார்க்கின்றோம். தமிழ் இறந்தபின் தமிழ் மண் மட்டுமிருந்தென்ன? மொழி இறந்துபடின் நாடும் இறந்து படுமன்றோ? உலகிற்கே ஒருபோது நாகரிகத்தை வழங்கிய மாண்பு வாய்ந்த ஒரு பெரும் நாட்டையா மறப்பது? அதனையா மறைப்பது? - என்று கூறுபவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
திரு.வி.கலியாணசுந்தரனார் |
Question 51 |
"இளைஞர்களே! தமிழுலகின் இழிந்த நிலையை ஒருங்கள்; ஒர்ந்து (எண்ணி) உங்கள் பொறுப்பை உணருங்கள்; தமிழ்த்தாயைப் புதுப்போர்வையில் ஒப்பனை செய்து அரியாசனத்தமர்த்த சூள் கொண்டெழுங்கள், எழுங்கள், பழந்தமிழ் வீரத்துடன் எழுங்கள்”என்று அறைகூவல் விடுப்பவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
திரு.வி.கலியாணசுந்தரனார் |
Question 52 |
எழுத்து மட்டுமல்லாமல், தமது பேச்சாலும் தமிழ் வளர்த்த பெருமகனார் இவர். -------------- நடை என்றே ஒரு தனிநடையை நடைமுறைப்படுத்தும் அளவிற்கு பேசுவது போலவே எழுதுவது; எழுதுவது போலவே பேசுவது என்னும் முயற்சியில் இவர் வெற்றி கண்டவர்.
திரு.வி.க | |
அண்ணா | |
நாமக்கல் கவிஞர் | |
மபொ சிவஞானம் |
Question 53 |
கீழ்க்கண்ட கூற்று யாரைப் பற்றியது?
வெல்லுஞ்சொல் இன்மையறிந்து உணர்ச்சிச் சொற்களைக் கோத்துக் "கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம்" பேசுவதில் வல்லவர். அறிஞர் அண்ணா உள்ளிட்ட அக்கால இளைஞர்களை உணர்ச்சிமிகு பேச்சினால் தம்பால் ஈர்த்து மேடைத் தமிழின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
திரு.வி.க. | |
பெரியார் | |
மபொ சிவஞானம் | |
பாரதியார் |
Question 54 |
உரைநடை எழுதுவது எனது தொழில் என்னும் அளவிற்கு உரைநடைக்கு அவர் மதிப்புக் கொடுத்தார். அவருக்கு வாய்த்த மொழிநடை மலை எனத் தமிழுலகில் ஓங்கி உயர்ந்துள்ளது என்பார் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார். - இது யாரைப்பற்றிய கூற்று?
திரு.வி.க. | |
பெரியார் | |
மபொ சிவஞானம் | |
பாரதியார் |
Question 55 |
இக்காலத் தமிழ் மொழி நடையாளராக மதிப்பிட்டுக் காணுமளவிற்குச் சீரிய மொழி நடையில் அவரின் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம், இமயமலை அல்லது தியானம் முதலிய நூல்கள் அவரது கற்பனைத்திறனையும், சீர்திருத்த ஈடுபாட்டையும் உயர்ந்த நடையையும் வெளிக்காட்டுகின்றன. - இது யாரைப்பற்றிய கூற்று?
திரு.வி.க. | |
பெரியார் | |
மபொ சிவஞானம் | |
பாரதியார் |
Question 56 |
முருகன் அல்லது அழகு, சைவத்திறவு, சைவத்தின் சமரசம், கடவுட் காட்சியும் தாயுமானவரும், இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், தமிழ்நாடும் நம்மாழ்வாரும், நாயன்மார் வரலாறு, தமிழ்நூல்களில் பெளத்தம், காதலா? முடியா? சீர்திருத்தமா?, என் கடன்பணி செய்து கிடப்பதே, இந்தியாவும் விடுதலையும், தமிழ்ச்சோலை, உள்ளொளி என்பன இவர் இயற்றிய இன்னபிற உரைநடை நூல்கள். - இவை யாருடைய உரைநடை நூல்கள்?
திரு.வி.க | |
வரதராசனார் | |
மீனாட்சி சுந்தரனார் | |
பாரதியார் |
Question 57 |
முருகன் அருள்வேட்டல், திருமால் அருள்வேட்டல், கிறித்துவின் அருள்வேட்டல், அருகன் அருகே, உரிமை வேட்டல், பொதுமை வேட்டல், பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியமும் இவை யாருடைய செய்யுள் நூல்கள்?
திரு.வி.க. | |
வரதராசனார் | |
மீனாட்சி சுந்தரனார் | |
பாரதியார் |
Question 58 |
தேசபக்தன், நவசக்தி எனும் இதழ்களின் வாயிலாகத் தொழிலாளர் முன்னேற்றம் பெறப்பாடுபட்டவர். அதற்காகத் தமது ஆசிரியர் பணியையும் துறந்தார். தமது வீறுகொண்ட தமிழ் முழக்கத்தால், சிதறிக்கிடந்த தொழிலாளர்களை ஒன்றிணைத்துத் தொழிலாளர் இயக்கம் கண்டார். - இந்த கூற்று கீழ்க்கண்ட யாருடன் தொடர்புடையது?
திரு.வி.க. | |
வரதராசனார் | |
மீனாட்சி சுந்தரனார் | |
உ.வே.சா |
Question 59 |
---------------- என்பவர் தம் சிந்தனை, சொல், செயல் நிலையால் சுத்த சன்மார்க்கியாக, சமயப் பொதுமையாளராக விளங்கி அருந்தொண்டாற்றினார். எழுபது வயதாகி உடல் தளர்ந்து படுக்கையில் இருந்த போதும் வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல் என்னும் நூலை மு.வரதராசனாரின் உதவியுடன் வெளியிட்டார். அவர், வாழ்நாளின் இறுதி வரை தமிழைத் தன் மூச்சாகக் கொண்டு தமிழ்ப்பணி ஆற்றினார்.
திரு.வி.க. | |
வி.எஸ்.செங்கல்வராய பிள்ளை | |
மீனாட்சி சுந்தரனார் | |
உ.வே.சா |
Question 60 |
மணமுடித்த ஆறே ஆண்டுகளில் அவர்தம் மனைவி கமலாம்பிகை அம்மையாரை இழந்தார். தனிமையில் வாழ்ந்துவந்த அவரிடம் நண்பர் ஒருவர், மனைவியை இழந்து தனிமையில் வாழ்வது கடினமாக இல்லையா? எனக் கேட்டார். அதற்கு, நான் தனியாகவாழவில்லை; தமிழோடு வாழ்கிறேன் எனக் கூறினார். - இது யாரைப் பற்றிய கூற்று?
திரு.வி.க | |
வி.எஸ்.செங்கல்வராய பிள்ளை | |
மீனாட்சி சுந்தரனார் | |
உ.வே.சா |
Question 61 |
திரு.வி.க., -------------ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் பதினேழாம் நாள் தமது எழுபத்தோராம் வயதில் தமிழ் மூச்சுக்கு விடைதந்தார்.
1947 | |
1950 | |
1953 | |
1956 |
Question 62 |
தயிரை இறக்கு. இத்தொடர் ------------------ ஆகும்.
தானியாகு பெயர் | |
சொல்லாகு பெயர் | |
இடவாகு பெயர் | |
பொருளாகுபெயர் |
Question 63 |
பெரியோர் சொல் கேள். இத்தொடர் --------------- ஆகும்.
தானியாகு பெயர் | |
சொல்லாகு பெயர் | |
இடவாகு பெயர் | |
பொருளாகுபெயர் |
Question 64 |
கழல் பணிந்தான் என்பது ------------------ ஆகுபெயர்.
தானியாகு பெயர் | |
சொல்லாகு பெயர் | |
இடவாகு பெயர் | |
பொருளாகுபெயர் |
Question 65 |
நூற்கு உரை செய்தான் என்பது ------------- ஆகுபெயர்.
தானியாகு பெயர் | |
சொல்லாகு பெயர் | |
இடவாகு பெயர் | |
பொருளாகுபெயர் |
Question 66 |
------------------- என்பது, ஒரு பொருளை அல்லது நிகழ்வை மற்றொரு பொருளோடு அல்லது நிகழ்வோடு ஒப்புமைப்படுத்துவது.
உவமேயம் | |
எண்ணும்மை | |
உவமை | |
உருவகம் |
Question 66 Explanation:
விளக்கம் :- உவமை, உவமிக்கும் பொருளைவிட உயர்ந்தது. உவமைத் தொடரில் உவமை முன்னும், பொருள் பின்னுமாக வரும். (எ-டு) மதி போன்ற முகம் - மதி - உவமை; முகம் - (உவமேயம்) பொருள்.
Question 67 |
கவிஞர், தாம் கருதிய பொருளையும் ஒப்புமைப் பொருளையும் (உவமையையும்) வெவ்வேறு எனக் கூறாமல், இரண்டும் ஒன்றெனக் கூறுவது ---------- ஆகும்.
உவமேயம் | |
எண்ணும்மை | |
உவமை | |
உருவகம் |
Question 67 Explanation:
விளக்கம் :- உருவகத்தொடரில் பொருள் முன்னும், உவமை பின்னுமாக வரும். (எ-டு) முகமதி: முகம் - பொருள்; மதி - உவமை. இங்கு இரண்டும் ஒன்றெனக் கூறப்பெற்றது
Question 68 |
வந்தான் - என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
வினைமுற்று | |
பெயரெச்சம் | |
வினையெச்சம் | |
தொழிற்பெயர் |
Question 69 |
வந்த - என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
வினைமுற்று | |
பெயரெச்சம் | |
வினையெச்சம் | |
தொழிற்பெயர் |
Question 70 |
வந்து - என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
வினைமுற்று | |
பெயரெச்சம் | |
வினையெச்சம் | |
தொழிற்பெயர் |
Question 71 |
வருதல் - என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
வினைமுற்று | |
பெயரெச்சம் | |
வினையெச்சம் | |
தொழிற்பெயர் |
Question 72 |
படித்தான் - என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
வினைமுற்று | |
பெயரெச்சம் | |
வினையெச்சம் | |
தொழிற்பெயர் |
Question 73 |
படித்த - என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
வினைமுற்று | |
பெயரெச்சம் | |
வினையெச்சம் | |
தொழிற்பெயர் |
Question 74 |
படித்து - என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
வினைமுற்று | |
பெயரெச்சம் | |
வினையெச்சம் | |
தொழிற்பெயர் |
Question 75 |
படித்தல் - என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
வினைமுற்று | |
பெயரெச்சம் | |
வினையெச்சம் | |
தொழிற்பெயர் |
Question 76 |
பன்னிரண்டு என்பதன் தமிழெண்
௧௨ | |
௭ | |
கக | |
௨அ |
Question 77 |
ஏழு என்பதன் தமிழெண்
௨ | |
௭ | |
க | |
அ |
Question 78 |
பதினொன்று என்பதன் தமிழெண்
௧௨ | |
௭ | |
கக | |
௨அ |
Question 79 |
இருபத்தெட்டு என்பதன் தமிழெண்
௧௨ | |
௨௦ | |
கக | |
௨அ |
Question 80 |
இருபது என்பதன் தமிழெண்
௧௨ | |
௨௦ | |
கக | |
௨அ |
Question 81 |
'பாடு' எனக் கூறியவுடன் பாடுபவர் ?
ஆசுகவி | |
மதுரகவி | |
சித்திரகவி | |
வித்தாரக்கவி |
Question 82 |
செவிக்கினிய ஓசைநலம் சிறக்கப் பாடுபவர் யார்?
ஆசுகவி | |
மதுரகவி | |
சித்திரகவி | |
வித்தாரக்கவி |
Question 83 |
சொல்லணி அமைத்துச் சுவைவளம் செழிக்கப் பாடுபவர்?
ஆசுகவி | |
மதுரகவி | |
சித்திரகவி | |
வித்தாரக்கவி |
Question 84 |
தொடர்நிலைச் செய்யுளும், தூய காப்பியங்களும் இயற்றுபவர் ?
ஆசுகவி | |
மதுரகவி | |
சித்திரகவி | |
வித்தாரக்கவி |
Question 85 |
ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரக்கவி - ஆகிய பொருளுடைய நால் வகைக் கவிகளையும் பாடவல்ல பாவலனைப் ------------- எனத் தமிழறிஞர் போற்றுவர்.
கவிக்குயில் | |
கவியரசு | |
பாவலரேறு | |
கவித்தென்றல் |
Question 86 |
பொருந்தாதது எது? தமிழ்ச்சொற்கள் தருக.
அங்கத்தினர் - உறவினர் | |
அர்த்தம் - பொருள் | |
அலங்காரம் - ஒப்பனை | |
ஆரம்பம் - துவக்கம் |
Question 86 Explanation:
குறிப்பு :- அங்கத்தினர் என்பதன் தமிழ்ச்சொல் உறுப்பினர்.
Question 87 |
பொருந்தாதது எது? தமிழ்ச்சொற்கள் தருக.
விஞ்ஞானம் - மெய்ஞானம் | |
தீபம் - விளக்கு | |
கும்பாபிக்ஷேகம் - குடமுழுக்கு | |
சாவி - திறவுகோல் |
Question 87 Explanation:
குறிப்பு :- விஞ்ஞானம் என்பதன் தமிழ்ச்சொல் அறிவியல்.
Question 88 |
பொருந்தாதது எது? தமிழ்ச்சொற்கள் தருக.
சரித்திரம் - வரலாறு | |
சபதம் - சூளுரை | |
சாதம் - சோறு | |
பௌத்திரி - மகள் |
Question 88 Explanation:
குறிப்பு :- பௌத்திரி என்பதன் தமிழ்ச்சொல் பெயர்த்தி.
Question 89 |
நடந்தான் - என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
வினைமுற்று | |
பெயரெச்சம் | |
வினையெச்சம் | |
தொழிற்பெயர் |
Question 90 |
நடந்து - என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
வினைமுற்று | |
பெயரெச்சம் | |
வினையெச்சம் | |
தொழிற்பெயர் |
Question 91 |
நடந்த - என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
வினைமுற்று | |
பெயரெச்சம் | |
வினையெச்சம் | |
தொழிற்பெயர் |
Question 92 |
நடத்தல் - என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
வினைமுற்று | |
பெயரெச்சம் | |
வினையெச்சம் | |
தொழிற்பெயர் |
Question 93 |
பொருந்தாதது எது? உவமை - உருவகம்
தாமரைமுகம் - முகத்தாமரை | |
தேன்மொழி - மொழித்தேன் | |
பவளவாய் - வாய்ப்பவளம் | |
முத்துப்பல் - பல்லில்முத்து |
Question 93 Explanation:
குறிப்பு :- முத்துப்பல் என்ற உவமையின் சரியான உருவகம் பல்முத்து.
Question 94 |
உலர்ந்து - உலர் + த் (ந்) + த் + உ.
உலர் - பகுதி; த் - சந்தி; த் - ந் ஆனது விகாரம்; த் - இறந்தகால இடைநிலை; உ - என்பது என்ன?
பெயரெச்ச விகுதி | |
ஆண்பால் வினைமுற்று விகுதி | |
வினையெச்ச விகுதி | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 95 |
நவ்வி - இச்சொல்லின் பொருள் யாது?
மான் | |
நாய் | |
குரங்கு | |
நரி |
Question 96 |
ஆகுபெயர் ---------------- வகைப்படும்.
12 | |
14 | |
16 | |
18 |
Question 97 |
செய்யுளின் முதலில் அமைந்துள்ள சொல்லும், இறுதியில் அமைந்துள்ள சொல்லும் பொருள்படப் பொருந்துவது ------------- பொருள்கோளாகும்.
தாப்பிசைப் பொருள்கோள் | |
கொண்டுகூட்டுப் பொருள்கோள் | |
விற்பூட்டுப் பொருள்கோள் | |
மொழிமாற்றுப் பொருள்கோள் |
Question 98 |
ஊஞ்சலின் நடுநின்ற கயிறு முன்னும் பின்னும் சென்று வருவதுபோலச் செய்யுளின் நடுவில் அமைந்திருக்கும் சொல், செய்யுளின் முதலிலும் இறுதியிலும் அமைந்திருக்கும் சொற்களுடன் பொருந்திப் பொருளைத் தருவது -------------- பொருள்கோள்.
தாப்பிசைப் பொருள்கோள் | |
கொண்டுகூட்டுப் பொருள்கோள் | |
விற்பூட்டுப் பொருள்கோள் | |
மொழிமாற்றுப் பொருள்கோள் |
Question 99 |
தாம்பு + இசை = தாப்பிசை ; - இங்கு தாம்பு என்பதன் பொருள் யாது?
தாமணிக் கயிறு | |
ஊஞ்சல் கயிறு | |
அன்பு | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 100 |
சிற்றிலக்கியங்கள் ---------- வகைப்படும்.
18 | |
108 | |
86 | |
96 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.