Online TestTnpsc Exam

Indian Polity Model Test 21 in Tamil

Indian Polity Model Test Questions 21 in Tamil

Congratulations - you have completed Indian Polity Model Test Questions 21 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தேசிய வளர்ச்சிக் குழுவின் உறுப்பினர் யார்?
A
மாநில முதல்வர்கள்
B
நிதி அமைச்சர்
C
பாதுகாப்பு அமைச்சர்
D
உள்துறை அமைச்சர்
Question 2
பாராளுமன்றத்தின் கீழ் அவை உறுப்பினர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
A
ரகசிய வாக்கு
B
வயது வந்தோர் வாக்குரிமை
C
ஒற்றை வாக்கு
D
பன்மை வாக்கு
Question 3
நிதி ஆயோக் தலைவர் யார்?
A
ஜனாதிபதி
B
பிரதம மந்திரி
C
துணை குடியரசுத் தலைவர்
D
உச்சநீதிமன்ற நீதிபதி
Question 4
இந்திய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
A
ஜனவரி 26, 1950
B
பிப்ரவரி 26 1950
C
ஆகஸ்ட் 26, 1950
D
மார்ச் 26 1950
Question 5
மைய ஆட்சிப் பகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை
A
16
B
13
C
14
D
15
Question 6
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகள்
A
25
B
23
C
22
D
27
Question 7
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
A
12வது அக்டோபர் 2005
B
21வது அக்டோபர் 2005
C
12வது அக்டோபர் 2006
D
21வது அக்டோபர் 2006
Question 8
சட்டமன்றங்களுக்கான தேர்தலை சட்டபூர்வமாக ஏற்றுக் கொண்ட சட்டம்
A
1861
B
1892
C
1909
D
1919
Question 9
பண்டித ஜவஹர்லால் நேருவின் அமைதிக்கான ஐந்து அம்ச கொள்கை
A
சுதேசி
B
இன ஒதுக்கல்
C
புதிய பயனுரிமை
D
பஞ்ச சீலம்
Question 10
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்
A
25
B
22
C
23
D
27
Question 11
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட எத்தனை நீதிபதிகள் உள்ளனர்?
A
26
B
22
C
25
D
21
Question 12
இந்திய பாராளுமன்றம் ________ அவையை கொண்டதாகும்.
A
ஒரு அவை
B
இரண்டு அவைகள்இரண்டு அவைகள்
C
மூன்று அவைகள்
D
நான்கு அவைகள்
Question 13
மக்களாட்சி எத்தனை வகைப்படும்?
A
3
B
2
C
1
D
4
Question 14
தற்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அரசாங்க முறை
A
மன்னராட்சி
B
உயர் குடியாட்சி
C
மக்களாட்சி
D
சர்வாதிகார ஆட்சி
Question 15
இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்
A
புதுடெல்லி
B
மும்பை
C
சென்னை
D
முராதாபாத்
Question 16
உள்ளாட்சி  அரசாங்கத்தின் தந்தை என்று அழைக்கப்படுவர்?
A
காந்திஜி
B
ரிப்பன் பிரபு
C
நேருஜி
D
மவுண்ட்பேட்டன்
Question 17
நிதி மசோதாக்கள் மாநில அவையினால் எத்தனை நாட்கள் மட்டும் தாமதப்படுத்தலாம்?
A
30 நாட்கள்
B
20 நாட்கள்
C
14 நாட்கள்
D
7 நாட்கள்
Question 18
44வது சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு
A
1976
B
1947
C
1950
D
1978
Question 19
இந்தியாவில் முதன்முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த ஆண்டு
A
1870
B
1872
C
1874
D
1881
Question 20
இந்திய தலைமை வழக்கறிஞர் தொடர்பாக பின்வரும் கூற்றுகளை கவனிக்க,
  1. இந்திய அரசுக்கு சட்ட விஷயங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறார்.
  2. அரசாங்கத்தின் முதன்மை சட்ட அதிகாரி ஆவார்
  3. அரசியலமைப்பு விதி 76-ன் படி அரசாங்கம் மாறினால் அவர் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.
  4. வாக்குரிமை இன்றி பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளின் நடவடிக்கைகளில் பங்கேற்கவும், பேசுவதற்கும் அவருக்கு உரிமை உண்டு,
மேற்கூறிய கூற்றுகளில் எது அல்லது எவை தவறானவை?
A
3 மட்டும்
B
4 மட்டும்
C
1 மற்றும் 3 மட்டும்
D
1 மற்றும் 4 மட்டும்
Question 21
எந்தக் குழு 1990ஆம் ஆண்டு, மாநிலங்களுக்கிடையே மன்றம் அமைக்க வேண்டுமென்று கூறியது?
A
நிர்வாகச் சீர்திருத்தக் குழு
B
சர்க்காரியா குழு
C
அசோக் மேத்தா குழு
D
கோர்வாலா குழு
Question 22
தமிழ்நாட்டில் தற்பொழுது நகராட்சிகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் பணியாளர் முறைமை எவ்வகையைச் சார்ந்தது?
A
மாற்றுப்பணி முறைமை
B
தனிப்பட்ட பணியாளர் முறைமை
C
ஐக்கிய பணியாளர் முறைமை
D
ஒருங்கிணைந்த பணியாளர் முறைமை
Question 23
1992-93 நிதி நிலை கூட்டத்தொடரில் இந்திய நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்ட பெரிய மாற்றம் என்ன?
A
ஜி.எஸ்.டி. மசோதா தாக்கல் செய்யப்பட்டது
B
மாநிலங்களவை மற்றும் மக்கள் சபை உறுப்பினர்கள் உள்ளடக்கிய புதிய குழுக்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது
C
கூட்டு நாடாளுமன்ற அமைப்பு முறை
D
கட்சி தாவல் தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது
Question 24
1951- 52ம் ஆண்டுகளில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலின் போது தேர்தல் ஆணையத்திற்கு  உதவுவதற்காக இரண்டு பிராந்திய தேர்தல் ஆணையர்கள் தற்காலிகமாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டனர். பின்வரும் எந்த இரண்டு இடங்கள் பிராந்திய ஆணையர்களின் தலைமையிடங்களாக செயல்பட்டன?
A
மும்பை மற்றும் கொல்கத்தா
B
மும்பை மற்றும் சென்னை
C
மும்பை மற்றும் பாட்னா
D
மும்பை மற்றும் ஹைதராபாத்
Question 25
பின்வருவனவற்றுள் எந்த வழக்கு அரசியலமைப்பை திருத்தம் செய்வது தொடர்பான பாராளுமன்ற அதிகாரங்களுடன் தொடர்பில்லாதது ஆகும்.
A
கோலக்நாத் எதிர் பஞ்சாப் அரசு
B
கேசவானந்தாபாரதி எதிர் கேரள அரசு
C
சங்கரி பிரசாத் எதிர் இந்திய அரசு
D
எஸ்.பி. குப்தா எதிர் இந்திய குடியரசுத் தலைவர்
Question 26
மாநிலங்களின் இரண்டாவது அவையினை உருவாக்குவதற்கும் மற்றும் கலைப்பதற்குமான வழிமுறைகளை அளிக்கும் விதி
A
விதி 196
B
விதி 169
C
விதி 161
D
விதி 191
Question 27
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று 1951-ம் ஆண்டு முதலாவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்படவில்லை?
A
புதிய உட்கூறு அதாவது சட்ட உட்கூறு (4) 15-வது விதியில் சேர்க்கப்பட்டது
B
விதி 31-க்கு அடுத்ததாக விதி 31A , விதி 31B சேர்க்கப்பட்டன
C
பொதுப்பட்டியலில் உள்ள 33-வது பொருள் குறிப்பை மாற்றியமைத்தது
D
9-வது அட்டவணை சேர்க்கப்பட்டது
Question 28
குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை குறைக்கும் செயலோடு தொடர்புடைய அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எது?
A
44-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
B
42-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
C
26 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
D
46 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
Question 29
நொய்டாவில் (நிதாரி) பெருமளவில் பாலியல் வன்மை, பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டறிய அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன?
A
பூகான் குழு
B
கே.கே. குப்தா குழு
C
மஞ்சுளா கிருஷ்ணன் குழு
D
நீதியரசர் பேல்லூர் என்.ஸ்ரீ கிருஷ்ணா குழு
Question 30
இந்தியாவில் குடியரசுத் தலைவருக்கு எதிராக குற்ற வழக்குகள் பதிவு செய்ய முடியுமா?
A
முடியும், ஆனால் முன் அனுமதி பெற வேண்டும்
B
முடியாது, எந்த ஒரு வழக்கும் குடியரசுத் தலைவருக்கு எதிராக கொடுக்க முடியாது
C
சிவில் வழக்குகளுடன் குற்ற வழக்குகள் பதிவு செய்யலாம்
D
சிவில் வழக்குகள் மட்டும் பதிவு செய்ய முடியும். ஆனால் அவ்வழக்குகள் குடியரசுத் தலைவரின் பதவி காலத்திற்கு முன்போ அல்லது பின்போ உள்ள காலமாக இருக்க வேண்டும்.
Question 31
தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடர்பான கூற்றுகளில் பின்வரும் எந்த ஒன்று சரியானதாகும்?
  1. இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரின் உத்திரவாதம் மற்றும் முத்திரையின் பேரில் நியமிக்கப்படுகின்றார்கள்.
  2. பொதுச் செயலாளராக இருப்பவர் ஆணையத்தின் முதன்மை செயல் அதிகாரியாக செயல்படுவார்
  3. தலைவர் மற்றும் உறுப்பினர்களை பரிந்துரை செய்வதற்கான குழுவில் இந்திய தலைமை நீதிபதி பதவி வழி உறுப்பினராக இருப்பார்.
  4. எந்த ஒரு உறுப்பினரும் 70-வயதை அடைந்த பிறகு பதவியில் தொடர இயலாது
A
அனைத்தும் சரியானவை
B
1,2 மற்றும் 4 மட்டும் சரியானவை
C
2,3 மற்றும் 4 மட்டும் சரியானவை
D
2,3 மற்றும் 4 மட்டும் சரியானவை
Question 32
தமிழ்நாடு அரசு  சட்ட ஆணையத்தின் தலைவராக செயல்படுபவர் யார்?
A
நீதிபதி சந்துரு
B
நீதிபதி சொக்கலிங்கம் நாகப்பன்
C
நீதிபதி ஹரி பரந்தாமன்
D
மேற்கூறிய எவருமில்லை
Question 33
இந்தியாவில் அந்நிய பங்களிப்பு ஒழுங்கு முறைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள NGO-க்கள் மொத்தம் எத்தனை?
A
10,000
B
15,000
C
20,000
D
25,000
Question 34
கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் இந்தியாவில் ஆங்கிலேயர் மேற்கொண்ட பத்திரிக்கை கொள்கையைப் பற்றியது. இதில் எது தவறான இணை?
A
லைசன்ஸ் (அனுமதி சட்டம்) 1857
B
பத்திரிக்கை சட்டம் 1867
C
தடைச் சட்டம் 1870
D
தாய்மொழி பத்திரிக்கை சட்டம் 1873
Question 35
அரசியலமைப்புச் சட்டப்படி போர் மற்றும் அமைதிப் பிரகடனத்தை பிரயோக்கிக்கும் அதிகாரம் படைத்தவர்
A
பிரதம மந்திரி
B
பாதுகாப்புத்துறை அமைச்சர்
C
பாராளுமன்றம்
D
குடியரசுத் தலைவர்
Question 36
கீழ்க்கண்ட இவர்களுக்கு உள்ளாட்சி அரசாங்கத் தேர்தலில் இட ஒதுக்கீடு கிடையாது.
A
தாழ்த்தப்பட்டோர்
B
பழங்குடியினர்
C
பிற பின்தங்கியவர்கள்
D
பெண்கள்
Question 37
மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை இந்த விதி அதிகாரத்தின் மூலமாக பிரயோகிக்கப்படுகிறது.
  1. விதி 356    2. விதி 360    3. விதி  352               4. விதி 365
A
1 மட்டும்
B
1 மற்றும் 3 மட்டும்
C
1 மற்றும் 4 மட்டும்
D
1 மற்றும் 2 மட்டும்
Question 38
பிரதமரின் அறிவுரையின்படியே, குடியரசுத் தலைவர் அனைத்து அமைச்சர்களையும் நியமிக்கிறார்- என பின்வரும் எந்த விதி கூறுகிறது?
A
70-வது விதி
B
72 (A) – வது விதி
C
73-வது விதி
D
75 (1) – வது விதி
Question 39
அகில இந்திய பணியாளர்களின் நிலையை தீர்மானிப்பது
A
ஜனாதிபதி
B
இந்திய அரசியலமைப்புச் சட்டம்
C
இந்திய பாராளுமன்றம்
D
UPSC
Question 40
பிரதம மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்றத்திற்கு பொறுப்பு என்பது
A
அவ்வப்பொழுது
B
மறைமுகமானது
C
தேர்தலின்போதும் மட்டும்
D
நேரடியாகவும், தொடர்ந்தும் மற்றும் கூட்டாகவும்
Question 41
1986-ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் __________ அளவில் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்த வழிவகுத்தது.
A
தேசிய அளவில் மட்டும்
B
மாநில அளவில் மட்டும்
C
தேசிய மற்றும் மாநில அளவில் மட்டும்
D
தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் மட்டும்
Question 42
டில்லி ஒன்றிய பிரதேசம் என்பது __________ மூலம் டில்லி தேசிய தலைநகர பிரதேசம் என்று மாற்றப்பட்டது.
A
67-வது திருத்தம்
B
66-வது திருத்தம்
C
69-வது திருத்தம்
D
68-வது திருத்தம்
Question 43
இந்திய கூட்டாட்சி முறை இதன் அடிப்படையில் உருவானது
A
சுவிட்சர்லாந்து
B
அமெரிக்கா
C
ரஷ்யா
D
கனடா
Question 44
இந்திய அரசியலமைப்பில் எந்தப் பிரிவு ஆங்கிலோ-இந்தியர்களின் நலன் பாதுகாக்கும் சிறப்பு அதிகாரங்கள் பற்றி கூறுகிறது.
A
பிரிவு XIII
B
பிரிவு XIV
C
பிரிவு XV
D
பிரிவு XVI
Question 45
மத்தியக் கண்காணிப்புக் குழுவை எந்த ஆண்டு பாராளுமன்றம் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக அறிவித்தது?
A
2002
B
2003
C
2005
D
2006
Question 46
கீழ்க்கண்டவற்றுள் இந்திய அமைச்சரவைக்கு உட்படாதவை எவை?
  1. அமைச்சர்கள் மக்களவை உறுப்பினர்களாவர்.
  2. நிதியமைச்சர் மேலவையிலிருந்து வருபவர்
  3. அமைச்சரவை ரகசியத்தை அமைச்சர்கள் காக்கின்றனர்.
  4. மக்களவைக்கு அமைச்சர்கள் பொறுப்பானவர்கள்
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
3 மற்றும் 4
D
1 மற்றும் 4
Question 47
பாரத பிரதமர் உடான் திட்டத்தின் கீழ் முதல் விமான சேவையை கொடியசைத்து ஆரம்பித்தது எங்கிருந்து?
A
சிம்லா
B
அம்ரிஸ்தர்
C
குலு
D
மானாலி
Question 48
பின்வருவனவற்றை பொருத்துக.
  1. அ. அசல் அதிகார வரம்பு                            1. சட்டமன்ற சட்டத்தின்                                                                                               அரசியலமைப்பு  தன்மை
  2. ஆ. மேல் முறையீடு அதிகார வரம்பு       2. உச்சநீதி மன்றத்திடம்                                                                             இந்தியாவின் குடியரசுத் தலைவரால்                                                                   விஷயங்களைப் பற்றி ஆலோசனை கேட்டது
  3. இ. அறிவுரை கூறும் அதிகார வரம்பு      3. கீழமை நீதிமன்றத்தின்                                                                                        தீர்ப்பை சீர் ஆய்க
  4. ஈ. நீதிப் புனராய்வு                       4. அடிப்படை உரிமைகளை அமுல்                                                                                        செய்வது
A
1 2 3 4
B
3 1 4 2
C
2 4 1 3
D
4 3 2 1
Question 49
எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் வாயிலாக புதிதாக நான்கு மொழிகளான: போதோ, டோக்ரி, மைதிலி மற்றும் சாந்தலி ஆகியவை சேர்க்கப்பட்டது?
A
75 வது சட்டத்திருத்தம்
B
78 வது சட்டத்திருத்தம்
C
84வது சட்டத்திருத்தம்
D
92வது சட்டத்திருத்தம்
Question 50
  • கூற்று (A): இந்தியா ஒரு இறைமையுடைய மக்களாட்சி குடியரசாகும்.
  • காரணம் (R) : இந்திய அரசியலமைப்பு பிரிட்டனின் பாராளுமன்ற முறைக்கும் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் முறைக்குமிடையே ஒரு சமமான சுமூக உறவை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கமல்ல
C
(A) என்பது சரி ஆனால் ® என்பது தவறு
D
(A) என்பது தவறு ஆனால் ® என்பது சரியே
Question 51
சட்ட விதி 352-ல் ‘உள்நாட்டு அச்சுறுத்தல்’ என்ற வார்த்தையை நீக்கி அதற்கு பதிலாக ‘ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள்’ என்ற வார்த்தையை சேர்த்த சட்ட திருத்தமானது
A
44வது சட்டத்திருத்தம்
B
45 வது சட்டத்திருத்தம்
C
62 வது சட்டத்திருத்தம்
D
69 வது சட்டத்திருத்தம்
Question 52
அரசியலமைப்பு நிர்ணய சபையில் மாநிலங்களுக்கான குழுவின் தலைவராக இருந்தவர்
A
டாக்டர் ராஜேந்திர பிரசாத்
B
டாக்டர் கே.எம். முன்சி
C
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
D
ஜவஹர்லால் நேரு
Question 53
பின்வருவனவற்றை பொருத்துக.
  1. அ. தொழிற்சாலைகள் சட்டம்                                1. 1961
  2. ஆ. தொழிற்பழகுநர் சட்டம்                                    2. 1948
  3. இ. பீடி மற்றும் சுருட்டு தொழிலாளர்  (பணி நிலை) சட்டம்    3. 1986
  4. ஈ. குழந்தை தொழிலாளர் (பாதுகாப்பு) சட்டம்            4. 1966
A
3 1 2 4
B
2 1 3 4
C
2 1 4 3
D
1 3 2 4
Question 54
இந்திய அமைப்பின் முகவுரையிலுள்ள முக்கிய சொற்றொடர்களை அவைகளின் பொருள்களோடு பொருத்துக.
  1. அ. இறைமை                            1. தனிநபர் குணங்களின் மேம்பாட்டிற்கான                                                                வாய்ப்புகள்
  2. ஆ. குடியரசு                              2. நிறம், ஜாதி, இன, மதம் மற்றும் பிறவற்றின்                                                          அடிப்படையில்    பாகுபாடு இல்லை
  3. இ. சுதந்திர உரிமை               3. அரசின் தலைவர் நேரடியாக அல்லது                                                                    மக்களால்    தேர்ந்தெடுக்கப்படுபவர்
  4. ஈ. சமத்துவம்                            4. அதற்கு மேலான உச்ச அதிகாரம் இல்லை
A
4 3 1 2
B
3 2 4 1
C
2 1 3 4
D
1 4 2 3
Question 55
இந்திய அரசியலமைப்பின் 2வது பகுதியில் காணப்படும் குடியுரிமை பற்றிய அரசியலமைப்பு விதிகள் 5-9 நடைமுறைக்கு வந்தது.
A
1950 ஆண்டு ஜனவரி 26ம் நாள்
B
1947 ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள்
C
1949 ஆண்டு நவம்பர் 26ம் நாள்
D
1955 ஆண்டு ஜனவரி 26ம் நாள்
Question 56
கீழ்க்கண்ட கருத்துக்களில் தவறானதை சுட்டிக் காண்பிக்கவும்.
A
இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி ஒரு அரசியலமைப்பு சார்ந்த அதிகாரியாவார்
B
மாநில அரசுகளின் கணக்குகளை இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி தணிக்கை செய்யமாட்டார்
C
இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறைக்கு இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி தலைவர் ஆவார்
D
இவர் அரசாங்கத்திற்கு சொந்தமான கம்பெனிகளுக்கு தணிக்கை அதிகாரி ஆவார்
Question 57
மனித உரிமைகள் ஆணையத்தின் அதிகார வரம்பிற்குள் வராதது
A
5 ஆண்டுகள் முடிவுற்ற நிகழ்வு
B
3 ஆண்டுகள் முடிவுற்ற நிகழ்வு
C
1 ஆண்டு முடிவுற்ற நிகழ்வு
D
3 மாதங்கள்முடிவுற்ற நிகழ்வு
Question 58
1949 ஆண்டு அக்டோபர் 17ம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கீழ்க்கண்ட எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பின் முகவுரைக்கு அடித்தளமாக அமைந்தது?
A
அரசியல் நிர்ணய சபையில் நேருவால் முன்மொழியப்பட்ட “இலட்சியத் தீர்மானங்கள்”
B
பாலகங்காதர திலக்கின் சுயராஜ்ஜிய அறிக்கை
C
காந்திஜியின் ராமராஜ்யம்
D
அரசு நெறிக் கொள்கைகள்
Question 59
பி.சி. ஹோதா குழுவுடன் தொடர்புடையது
A
குடிமைப் பணியாளர் ஆட்சேர்ப்பு
B
குடிமைப் பணியாளர் பணியிட மாற்றம்
C
குடிமைப் பணிகள் சீர்திருத்தம்
D
குடிமைப் பணியினை தனியார் மயப்படுதல்
Question 60
இந்திய உயர்நீதிமன்றங்களின் தன்மை பற்றிய கீழ்க்கண்ட எந்த ஒரு கருத்து சரியானதாகும்?
A
அஸ்ஸாம் உயர்நீதிமன்றம், அஸ்ஸாம், நாகலாந்து, திரிபுரா, மணிப்பூர் போன்ற மாநிலங்களுக்கு பொதுவானதாகும்
B
ஒரு உயர்நீதிமன்றத்தின் வரம்பெல்லை அது அமைந்துள்ள மாநிலத்தின் பரப்பெல்லையுடன் பொருந்துவதில்லை
C
அரசியலமைப்பு விதி 224 ‘உயர்நீதி மன்றம்’ என்பதன் பொருளை விளக்குகிறது
D
குடியரசுத் தலைவர் பொதுவான உயர்நீதி மன்றத்தை அமைக்கும் அதிகாரம் படைத்தவராவார்
Question 61
இந்தியாவில் முதன்முதலில், தன்னுடைய மாநிலத்தில் தகவல் அறிவும் உரிமை சட்டத்தை அறிமுகப்படுத்தியது
A
ராஜஸ்தான்
B
தமிழ்நாடு
C
ஜம்மு மற்றும் காஷ்மீர்
D
மத்திய பிரதேசம்
Question 62
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து இறுதி முடிவெடுப்பது யார்?
A
பாராளுமன்றம்
B
குடியரசுத் தலைவர்
C
உச்சநீதி மன்றம்
D
தேர்தல் ஆணையம்
Question 63
இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வழிசெய்யும் விதி எது?
A
விதி 322
B
விதி 320
C
விதி 324
D
விதி 330
Question 64
பின்வருவனவற்றை பொருத்துக.
  1. அ. சென்னை மாநகராட்சி              1. 1726
  2. ஆ. பாம்பே மாநகராட்சி                 2. 1882
  3. இ. ரிப்பன் பிரபு தீர்மானம்             3. 1687
  4. ஈ. மயோ பிரபு தீர்மானம்                4. 1870
A
3 2 1 4
B
1 2 3 4
C
3 1 2 4
D
4 3 1 2
Question 65
அரசியலமைப்பு சட்ட விதி 47 கூறுவது
A
சத்துணவு விகிதம் மற்றும் வாழ்க்கை தரத்தினை உயர்த்த
B
கல்வி நிலையினை உயர்த்த
C
தொழிற்சாலைகளின் நிலைகளை உயர்த்த
D
வேளாண் பணிகளை அதிகரிக்க
Question 66
  •  கூற்று (A) : ஒரு குறிப்பிட்ட வகை சட்டத்தை இயற்றும்படி நீதிமன்றம் நெறிப்படுத்த இயலாது
  • காரணம் (R):: சட்டமியற்றுவது முழு உரிமையாகும்
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கமல்ல
C
(A) என்பது சரி ஆனால் ® என்பது தவறு
D
(A) என்பது தவறு ஆனால் ® என்பது சரியே
Question 67
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மற்ற மூன்றை விட பிரத்தியேகமாக மாறுபட்டுள்ளது?
A
சட்ட விதி 352
B
சட்டவிதி 356
C
சட்டவிதி 360
D
சட்டவிதி 370
Question 68
இந்தியாவின் மண்டல் குழு உருவாக்கப்பட்டது எந்த அரசால்?
A
தேசிய முன்னணி அரசு (வி.பி. சிங் பிரதமராக இருந்த போது)
B
காங்கிரஸ் கட்சி (ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது)
C
பி.ஜே.பி. (வாஜ்பாய் பிரதமராக இருந்த போது
D
ஜனதா கட்சி (மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது)
Question 69
உச்சநீதி மன்ற நீதிபதிகளின் ஊதியம் பெறப்படுவது?
A
இந்திய தொகுப்பு நிதியிலிருந்து ஆனால் வாக்கெடுப்பிற்கு உட்படாது
B
இந்திய அவசரகால நிதியிலிருந்து ஆனால் வாக்கெடுப்பிற்கு உட்படாது
C
இந்திய அவசர கால நிதியிலிருந்து ஆனால் வாக்கெடுப்பிற்கு உட்பட்டது
D
இந்திய தொகுப்பு நிதியிலிருந்து ஆனால் வாக்கெடுப்பிற்கு உட்பட்டது
Question 70
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை எந்நாளில் குறிக்கோள்கள் அடங்கிய தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது?
A
ஜனவரி 22, 1947
B
நவம்பர் 26, 1949
C
ஜனவரி 26, 1950
D
ஜனவரி 22, 1950
Question 71
  1. கூற்று (A): அரசியலமைப்புச் சட்டத்தின்படி முதலமைச்சர் ஆளுநரின் விருப்பம் உள்ளவரை மட்டுமே தனது  பதவியை வகிக்கிறார்.
  2. காரணம் (R): முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கமல்ல
C
(A) என்பது சரி ஆனால் ® என்பது தவறு
D
(A) என்பது தவறு ஆனால் ® என்பது சரியே
Question 72
மக்களவையில் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பவர்
A
குடியரசுத் தலைவர்
B
பிரதம மந்திரி
C
நிதியமைச்சர்
D
நிதிச் செயலர்
Question 73
பஞ்சாயத்து ராஜ் அமைப்பை முதன்முதலாக அறிமுகம் செய்த மாநிலம்
A
தமிழ்நாடு
B
மேற்குவங்காளம்
C
ராஜஸ்தான்
D
உத்திரப்பிரதேசம்
Question 74
இந்திய அரசியலமைப்பில் எந்தப் பகுதி யூனியன் பிரதேசங்கள் பற்றி கூறுகிறது?
A
பகுதி VI
B
பகுதி VII
C
பகுதி VIII
D
பகுதி IX
Question 75
இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் உரிமை என்பது
A
அடிப்படை உரிமை
B
அரசியலமைப்பு உரிமை
C
இயற்கை உரிமை
D
சட்ட உரிமை
Question 76
கீழ்க்கண்ட எந்தச் சட்டத் திருத்தத்தில் மதச்சார்பற்ற, சமதர்ம மற்றும் ஒருமைப்பாடு என்ற பதங்கள் சேர்க்கப்பட்டன?
A
42 வது சட்ட திருத்தம்
B
44 வது சட்ட திருத்தம்
C
46 வது சட்ட திருத்தம்
D
52 வது சட்ட திருத்தம்
Question 77
இந்திய பாராளுமன்றத்தால் நிர்வாகத் தீர்ப்பாயச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு
A
1981
B
1982
C
1985
D
1986
Question 78
அரசு உயர் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பளிக்கும் அரசியலமைப்பு சட்ட விதியானது
A
விதி 310
B
விதி 311
C
விதி 312
D
விதி 315
Question 79
மாநில அரசில் அமைச்சர்கள் இவர்களுக்கு கட்டுப்பட்டவர்களாவர்
A
மக்களவை
B
மாநிலங்களவை
C
பாராளுமன்றம்
D
சட்டமன்றம்
Question 80
மக்களவையில், மசோதாவின் தன்மையைமுடிவு செய்பவர் யார்?
A
பிரதம மந்திரி
B
சபாநாயகர்
C
எதிர்கட்சித் தலைவர்
D
உள்துறை அமைச்சர்
Question 81
கீழ்க்கண்டவற்றில் யார் ஒரு மசோதா பண மசோதாவா இல்லையா என்பதனை தீர்மானிக்கிறார்?
A
நிதியமைச்சர்
B
மேலவையின் தலைவர்
C
குடியரசுத் தலைவர்
D
மக்களவை சபாநாயகர்
Question 82
கீழ்க்கண்டவற்றில் எந்த இந்திய அரசியலமைப்பு விதி ‘தீண்டாமை ஒழிப்பு’ பற்றி கூறுகிறது?
A
விதி 14
B
விதி 15
C
விதி 16
D
விதி 17
Question 83
1975-ம் ஆண்டு தேர்தல் சீர்த்திருத்தம் தொடர்பான தார்குண்டே குழுவின் முக்கிய பரிந்துரை
A
தேர்தல் ஆணையம் மூன்று நபர் கொண்ட குழுவாக மாற்றப்பட வேண்டும்
B
தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் நியமனம் பிரதம அமைச்சரால் தலைமை நீதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் நடைபெற்ற வேண்டும்
C
தேர்தல் ஆணைய உறுப்பினர் நியமனம் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதம மந்திரியால் மேற்கொள்ளப்பட வேண்டும்
D
தேர்தல் ஆணைய உறுப்பினர் நியமனம் பிரதம அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
Question 84
கீழ்க்கண்டவற்றுள் எந்தக் குழு மத்திய லஞ்ச ஒழிப்பு குழுவை உருவாக்க பரிந்துரை செய்தது?
A
ராஜமன்னர் குழு
B
சர்க்காரியா குழு
C
கோத்தாரி குழு
D
சந்தானம் குழு
Question 85
இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் “ஒருமைப்பாடு” என்ற வார்த்தை சேர்க்கப்பட்ட ஆண்டு
A
1956
B
1961
C
1976
D
1981
Question 86
இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படை கடமைகளைப் பற்றி கூறுகிறது?
A
விதி 51 A
B
விதி 44
C
விதி 41 A
D
விதி 52
Question 87
தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு
A
நிலையான சட்டபூர்வமான அமைப்பு
B
அரசியலமைப்பு சாராத அமைப்பு
C
சுய ஆட்சி அமைப்பு
D
தன்னார்வ அமைப்பு
Question 88
பின்வரும் கூற்றுகளில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தைப் பற்றிய உண்மையில்லாத கூற்று எது?
A
இது ஒரு மேல்மட்ட அரசாங்கக் குழு
B
இது 1964ம் ஆண்டு உருவாக்கப்பட்டது
C
இது ஒரு புலன் விசாரணை குழுமம்
D
இது ஒரு தன்னாட்சிக்கு இணையான நிலை உடையது
Question 89
மாநில சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு உள்ளதா?
A
ஆம்
B
இல்லை
C
அவர் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்
D
குடியரசுத் தலைவர் மட்டுமே செய்ய முடியும்
Question 90
நாடாளுமன்ற அவை விதிகளின்படி, சபாநாயகர் அனுமதித்தால், ஒரு தீர்மானத்திற்கான அறிக்கையை தேதி குறிப்பிடாமல் மொண்டு வரலாம் – அப்படி கொண்டு வரும் தீர்மானத்திற்கு என்ன பெயர்?
A
கவன ஈர்ப்பு தீர்மானம்
B
ஒத்தி வைப்பு தீர்மானம்
C
நம்பிக்கையில்லா தீர்மானம்
D
தேதியில்லா, பெயர் சூட்டப்பட்ட தீர்மானம்
Question 91
பஞ்சாயத்து அமைப்புக்களுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு முன் முயற்சிகள் எடுக்கப்பட்டது எந்த குழுவின் பரிந்துரையின் பெயரில்?
A
ஜி.வி.கே. ராவ் குழு
B
எல்.எம். சிங்வி குழு
C
அசோக் மேத்தா குழு
D
பல்வந்த்ராய் மேத்தா குழு
Question 92
பின்வரும் இந்திய அரசியலமைப்பு எந்த விதி உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அனுமதி மனுவினை ஏற்கும் அதிகாரத்தை வழங்குகின்றது?
A
விதி 136
B
விதி 32
C
விதி 139
D
விதி 226
Question 93
இந்தியாவில் நீதிப்பினராய்வு அதிகாரம் வரையறைக்குட்பட்டது. ஏனெனில்
A
செயல்துறை உயர்வானது
B
சட்டத்துறை உயர்வானது
C
அரசியலமைப்பு உயர்வானது
D
நீதிபதிகள் இடமாறுதலுக்கு உட்பட்டவர்கள்
Question 94
இந்திய அரசாங்கம் பாரத் ரத்னா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை _______ விதியின் கீழ் உருவாக்கியுள்ளது.
A
இந்திய அரசியல் சட்ட விதி 14
B
இந்திய அரசியல் சட்ட விதி 18
C
இந்திய அரசியக் சட்ட விதி 25
D
இந்திய அரசியல் சட்ட விதி 32
Question 95
‘மதச் சார்பின்மை’ என்ற வார்த்தை , அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பு வரியில் இணைக்கப்பட்டதற்கு முன்னரே உச்சநீதிமன்றம் ‘மதச் சார்பின்மை’ அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளில் ஒன்று என்று கூறிய ஆண்டு எது?
A
1975
B
1973
C
1976
D
1981
Question 96
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370 படி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில தொடர்புடைய சட்டங்கள் இயற்றுவது
A
பட்டியல் 1 மற்றும் 3 (ஏழாவது அட்டவணை
B
பட்டியல் 1 (ஏழாவது அட்டவணை) மட்டும்
C
பட்டியல் 2 (ஏழாவது அட்டவணை) மட்டும்
D
பட்டியல் 1, 2 மற்றும்3 (ஏழாவது அட்டவணை)
Question 97
சுதந்திரம் , சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகள் இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் புனிதமானவையாக ஏற்கப்பட்டமைக்கு தூண்டுதலாக இருந்தது எது?
A
அமெரிக்க விடுதலைப் பிரகடனம்
B
பிரெஞ்சுப் புரட்சி
C
ரஷ்யப் புரட்சி
D
ஐ.நா. சாசனம்
Question 98
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகள் 275 மற்றும் 282ன் கீழ் வழங்கப்படும் மானியங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் தொடர்பாக சரியான ஒன்று அல்ல?
A
விதி 275-ன் கீழ் வழங்கப்படும் மானிய உதவி சட்டப்படியானது. விதி 282-ன் கீழ் வழங்கப்படுவது விரிப்புரிமையானது
B
விதி 282ன் கீழ் மத்திய அரசுக்கு திட்டம் சாரா செலவினங்களுக்கும் மானிய உதவி வழங்க அதிகாரம் உள்ளது
C
விதி275ன் கீழ் நிதி ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மானியங்களை வழங்கலாம்
D
விதி 282-ன் கீழ் அமைச்சரவை குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும் மானியங்களை வழங்கலாம்.
Question 99
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எத்தனை சதவீத நலிவடைந்த பிரிவைச் சார்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும்?
A
25
B
26
C
27
D
28
Question 100
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி பஞ்சாயத்து ராஜ் அமைப்பைப் பற்றி கூறுகிறது?
A
பகுதி VIII
B
பகுதி X
C
பகுதி IX
D
பகுதி XI
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!