Online TestTamil

Group 4 VAO General Tamil Model Test 14

Group 4 VAO General Tamil Model Test 14

Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 14. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சரியான இணையைத் தேர்ந்தெடு
A
அஞ்சு – தமிழ்
B
ஐனு – துளு
C
ஐது – கூர்க்
D
ஐந்து – கன்னடம்
Question 2
அந்தரமேல் முற்றும் உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ குற்றம்இலாப் பத்துக் குணம் பெற்றாய்" இவ்வரிகளில் குறிப்பிடப்படும் பத்து குணங்களுள் சில
A
துறை, தாழிசை, விருத்தம்
B
குறம், பள்ளு , பா
C
செறிவு, சமநிலை
D
சத்துவம் ,இராசசம், தாமசம்
Question 3
கீழ்க்கண்ட இணைகளை ஆராய்க.
  1. அரைக்கால் - 1/8
  2. அரை வீசம் – 1/32
  3. அரைக்காணி - 1/160
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1, 3 தவறு
D
அனைத்தும் தவறு
Question 4
தொ. பரமசிவன் அவர்களின் கீழ்க்கண்ட கூற்றை ஆராய்க .
  1. குளித்தல் என்பதற்கு உடம்பினைத் தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பது பொருள்.
  2. குளிர்த்தல் என்பதே குளித்தல் என்று ஆயிற்று .
  3. குள்ளக் குளிரக் குடைந்து நீராடி என்று கூறினார் .
  4. நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன என்று கூறினார்.
A
2 மட்டும் சரி
B
2 , 4 சரி
C
1, 2, 4 சரி
D
அனைத்தும் சரி
Question 5
முல்லைப் பெரியாறு அணை நீர் கீழ்க்கண்ட எந்தெந்த மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுகிறது .
  1. திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை
  2. திண்டுக்கல், தேனி, மதுரை
  3. சிவகங்கை, இராமநாதபுரம்
  4. சிவகங்கை, கன்னியாகுமரி
A
1 , 3
B
2 , 3
C
2 , 4
D
1,4
Question 6
காளைப் போர் பற்றிய சித்திரங்கள் எங்குள்ளன?
A
எகிப்து, கிரீட் தீவு
B
எகிப்து , கிரீஸ்
C
எகிப்து , மலேசியா
D
எகிப்து, கிரேக்கம்
Question 7
காளை சண்டையை தேசிய விளையாட்டாக கொண்ட நாடு
A
ஸ்பெயின்
B
கனடா
C
பாரிஸ்
D
இங்கிலாந்து
Question 8
இணைய வணிகத்தை மைக்கேல் ஆல்ட்ரிச் கண்டுபிடித்த ஆண்டு
A
1979
B
1989
C
1969
D
1959
Question 9
"இணையதளத்தில் இது இல்லையெனில் , உலகத்தில் அது நடைபெறவே இல்லை" என்ற வையக விரிவு வலை வழங்கி குறித்த வாசகம் யாருடையது
A
ஜியோவான்னி காசில்லி
B
டிம் பெர்னர்ஸ் லீ
C
ஹாங்க் மாக்னஸ்கி
D
செஸ்டர் கார்ல்சன்
Question 10
முத்துலெட்சுமி ரெட்டியால் புற்றுநோய் மருத்துவமனை நிறுவப்பட்ட ஆண்டு
A
1952
B
1954
C
1930
D
1968
Question 11
இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியராக பணியாற்றி தமிழ், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய பெண்மணி யார் ?
A
நீலாம்பிகை
B
சாரதா
C
இராஜேஸ்வரி
D
சிவகாமி
Question 12
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம் " எனும் வரி இடம்பெற்றுள்ள நூல்
A
அகநானூறு
B
பதிற்றுப்பத்து
C
புறநானூறு
D
கலித்தொகை
Question 13
புகார் நகரத்தில், சுங்கத் தீர்வை பெற்றுக் கொண்டு புலிச்சின்னம் அடையாளம் வைத்த பொருள்கள், ஏற்றுமதி செய்ய மலைபோல் குவிந்திருந்தன என கூறும் பட்டிப்பாலை அடிகள் எவை ?
A
அடி 125 – 134
B
அடி 145 – 152
C
அடி 120 – 135
D
அடி 124 – 135
Question 14
2 ம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட மூவர் கோயில் அமைந்துள்ள இடம்
A
நார்த்தாமலை – புதுக்கோட்டை
B
சீனிவாசநல்லூர் – திருச்சி
C
கொடும்பாளூர் – புதுக்கோட்டை
D
திருவரங்கம் – திருச்சி
Question 15
இலக்கணக் குறிப்புத் தருக – மலர்க்கண்ணி
A
2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
B
3ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
C
4ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
D
5ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
Question 16
  • "புகைவிரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ
  •    ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம் "
  • இவ்வரிகள் இடம்பெறும் நூல்
A
தொல்காப்பியம்
B
நன்னூல்
C
அகத்தியம்
D
புறநானூறு
Question 17
  • "இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
  •     அசையுடன் இருந்தோர்க்கு
  •     அரும்புணர்வு இன்மென "
  • இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A
பெரும்பாணாற்றுப்படை
B
சிறுபாணாற்றுப்படை
C
மலைபடுகடாம்
D
நற்றிணை
Question 18
சமூக வளர்ச்சிக்கு ____ஐ மிகச் சிறந்த கருவியாகப் பெரியார் கருதினார்
A
செல்வம்
B
தொழில்
C
உரிமை
D
கல்வி
Question 19
ஈ.வெ.ரா.வுக்குப் 'பெரியார்’ என்னும் பட்டம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்  _____.
A
1937 நவம்பர் 13
B
1970 அக்டோபர் 5
C
1938 நவம்பர் 13
D
1970 ஜூன் 27
Question 20
கீழ்க்கண்டவற்றுள் பிறர் நலவியலை கர்பித்த அறிஞர்கள் யாவர்?
  1. லாவோட்சு 2. கன்பூசியஸ் 3. பிளேட்டோ
  2. அரிஸ்டாட்டில்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1, 3 சரி
D
1, 2, 4 சரி
Question 21
“பண்புடைமையாவது யாவர்மாட்டும் அவரோடு அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்குப் பரிதலும் பகுத்து உண்டலும் பழி நாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை" என்று பண்புடைமை அதிகாரத்திற்கு உரை எழுதியவர் யார்?
A
மல்லர்
B
மணக்குடவர்
C
பரிப்பெருமாள்
D
பரிதி
Question 22
பற்று நீங்கியவனுக்கு உண்டாவது – பற்றற்வனைப் பற்றுவதால் உண்டாவது
A
பற்றுகள் பெருகும் – பொருள்களின் இன்பம் பெருகும்
B
பற்றுகள் அகலும் – பொருள்களின் துன்பம் அகலும்
C
பொருள்களின் துன்பம் அகலும் - பற்றுகள் அகலும்
D
பொருள்களின் இன்பம் பெருகும் – பற்றுகள் பெருகும்
Question 23
விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ” என்னும் பாடலடி இடம் பெற்றுள்ள நூல்
A
தொல்காப்பியம்
B
திருமுருகாற்றுப்படை
C
திருமலை முருகன் பள்ளு
D
ஐங்குறுநூறு
Question 24
மலை என்ற வடிவம் "தோணிமலை “ என்னும் இடப்பெயரில் பயன்படுத்தப்படுவது எப்பகுதியில்
A
கேரளா
B
தமிழ்நாடு
C
ஆந்திரா
D
கர்நாடகா
Question 25
யானையின் மூளையையும் மனிதனின் மூளையையும் அவற்றின் உடல் கனத்துடன் ஒப்பிட்டால் விகிதாச்சாரம்
  1. மனிதன் - 2 .5%
  2. யானை - 0.2%
A
இரண்டும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 26
குருதி, உயிர்வளி ஆகியவற்றின் மொத்த தேவையில் எவ்வளவு பாகத்தை மூளை அபகரித்துக் கொள்கிறது
A
1/100 பங்கு
B
1/50 பங்கு
C
1/5 பங்கு
D
1/15 பங்கு
Question 27
மனிதனின் மூளையிலுள்ள நியுரான்களின் எண்ணிக்கை
A
பத்தாயிரம் நியுரான்கள்
B
பத்து இலட்சம் நியுரான்கள்
C
பத்து கோடி நியுரான்கள்
D
பத்தாயிரம் கோடி நியுரான்கள்
Question 28
பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும் ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி கற்றதை புறநானூற்றில் பாடியவர்
A
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி
B
ஒளவையார்
C
ஆரியப் படைக் கடந்த நெடுஞ்செழியன்
D
பாரதம் பாடிய பெருந்தேவனார்
Question 29
பின்வருவனவற்றுள் ஏட்டுக்கற்றைகளின் பெயர்களில் அல்லாதது
A
ஏடு
B
சுவடு
C
பொத்தகம்
D
பனுவல்
Question 30
விளாப்பாக்கத்தில் சமணப் பள்ளியை நிறுவியவர்
A
சமணக் குரவர்கள்
B
பட்டினிக்குரத்தி
C
திகம்பரர்
D
மகாவீரர்
Question 31
நாட் குறிப்புகளின் முன்னோடியாக திகழ்வது _____ என்று அழைக்கப்படும் கிரேக்கக் குறிப்பேடு .
A
EPHERIDES
B
EPHEMERS
C
EPHEMERIDES
D
EPHEDIARY
Question 32
வாஸ்கோடாகாமாவின் நாட்குறிப்புகள் _____ என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
A
ஆனந்தரங்கர்
B
துய்ப்ளே
C
ஆல்வாரோ வெல்லோ
D
பிரான்சுவா மர்த்தேன்
Question 33
ஆனந்தரங்கரின் எந்த தேதியிட்ட நாட் குறிப்பு பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமையை பெற்றதை விளக்குகிறது.
A
10.09.1736
B
09.10.1736
C
03.06.1736
D
10.09.1763
Question 34
கீழ்க்கண்டவற்றுள் கற்றளி கோவில் அல்லாதது எது / எவை?
  1. மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
  2. பனைமலைக் கோயில்
  3. தஞ்சைப் பெரியக் கோயில்
  4. காஞ்சி கைலாசநாதர் கோயில்
  5. திருச்சி மலைக்கோட்டை
A
எதுவுமில்லை
B
1 மட்டும்
C
3 மட்டும்
D
5 மட்டும்
Question 35
எப்போது தஞ்சை பெரியக் கோவிலின் 1000வது ஆண்டு நிறைவடைந்தது
A
2007
B
2008
C
2009
D
2010
Question 36
“பயம் + இல்லைàபயமில்லை" என்பதில் வரும் புணர்ச்சி விதி
A
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் க ச த ப மிகும்.
B
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
C
இன மிகல்
D
மேற்கண்ட எதுவுமில்லை
Question 37
பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தை தமிழ் வடிவில் தந்தவர் யார்?
A
பாரதி
B
கனக சுப்புரத்தினம்
C
வாணிதாசன்
D
சுரதா
Question 38
நெடுஞ்சேரலாதன் குறித்த கூற்றுகளில் எது தவறானது ?
A
வடக்கே இமயமலைவரை படையெடுத்துச் சென்று, வெற்றி பெற்று, இமயத்தில் வில்லினைப் பொறித்தவன்
B
தமிழின் சிறப்பை உலகறியச் செய்தவன்
C
கடம்பர்களை வென்று தன் வீரர்களுக்கு கவசமாக விளங்கியவன்
D
இவரைப் புகழ்ந்து குமட்டூர்க் கண்ணனார் புறநானூற்றில் பாடியுள்ளார்
Question 39
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
  •         நிரையம், ஒரீஇய
A
நிறைவு, நோய்
B
நரகம், நோய் நீங்கிய
C
நிறைவு, நரகம்
D
நரகம், நோய் உண்டாதல்
Question 40
சித்தர்களை 'கிளர்ச்சியாளர்கள் ‘ என்று கூறியவர் யார்?
A
கனக சுப்புரத்தினம்
B
சபாபதி
C
க. கைலாசபதி
D
பாரதியார்
Question 41
  • '' ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
  •     சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்"
  • என்று பாடியவர் யார்?
A
திருமூலர்
B
சிவவாக்கியர்
C
பாம்பாட்டிச் சித்தர்
D
பத்திரகிரியார்
Question 42
சித்தர்கள் தங்களது பாடல்களில் மறைபொருள் கூற்றுகளாக குறிப்பிட்டுள்ளதை ___ , ___ , ___ என்ற மூன்று கூறுகளை அறிந்தவர்களால் மட்டுமே பொருள் காணத்தக்கவையாக அமைந்துள்ளன.
A
கல்வி, மந்திரம், ஞானம்
B
யோகம், தந்திரம், மருத்துவம்
C
யோகம், மந்திரம், ஞானம்
D
தந்திரம், மந்திரம், மருத்துவம்
Question 43
தாகூர் தமது எத்தனையாவது வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கினார் ?
A
10
B
12
C
14
D
16
Question 44
“குருதேவ்" என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் யார் ?
A
நேதாஜி
B
தாகூர்
C
மகாத்மா
D
நேரு
Question 45
  • "காலையில் கடிநகர் கடந்து நமது
  • வேலை முடிக்குதும், வேண்டின் விரைவாய்
  •                 இன்று இரா முடிக்கினும் முடியும்; “
  • இது யாருடைய கூற்று?
A
சுந்தர முனிவர்
B
நடராஜன்
C
சுந்தரனார்
D
சலீம் அகமது
Question 46
சரியான இணையைக் கண்டறி.
  1. நெரிக்கட்டு - சிறுகதை தொகுப்பு
  2. உனக்கும் எனக்குமான சொல் - கவிதை தொகுப்பு
  3. மீள் கோணம் - கட்டுரை தொகுப்பு
  4. அரூப நெஞ்சு -கவிதை தொகுப்பு
A
அனைத்தும் சரி
B
1, 2
C
1, 3, 4
D
1, 2, 3
Question 47
" மலரில் ஆரளி இந்துளம் பாடும் மடையிடங்கணி வந்துளம் ஆடும் " இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A
குற்றாலக் குறவஞ்சி
B
ஏதிலிக் குருவிகள்
C
திருமலை முருகன் பள்ளு
D
திருமலை ஆண்டவர் பள்ளு
Question 48
வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்.
  • கனக விசயர் செங்குட்டுவனால் கொல்லப்பட்டனர் – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
A
செய்வினை வாக்கியம்
B
செயப்பாட்டுவினை வாக்கியம்
C
செய்தி வாக்கியம்
D
உடன்பாட்டு வாக்கியம்
Question 49
  • "கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
  • தாளை வணங்காத் தலை"
  • - இக்குறளில், கோளில் - குணமிலவே என்பது
A
இணை மோனை
B
பொழிப்பு மோனை
C
ஒரூஉ மோனை
D
கூழை மோனை
Question 50
கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?
A
கோ - குகன்
B
சோ – மகன்
C
சே – எருது
D
தா – விடை
Question 51
தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
A
சீதை புத்தாடை அணிவித்தாள்
B
சீதை புத்தாடை அணிந்தாள்
C
புத்தாடை சீதையால் அணிவிக்கப்பட்டது
D
சீதை புத்தாடை அணியாள்
Question 52
ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெற்றுள்ள சொற்றொடர் எது?
A
முட்புதர்
B
கன்னிபாலன்
C
கொத்துப்பூ
D
பதத்துணை
Question 53
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
A
காஞ்சி, காதை, கார், கானல்
B
காதை, காஞ்சி, கானல், கார்
C
கார், கானல், காஞ்சி, காதை
D
கானல், கார், காதை, காஞ்சி
Question 54
மல்லிகை மாலை – என்பது எப்பெயர்?
A
சினையாகு பெயர்
B
பண்பாகு பெயர்
C
பொருட்பெயர்
D
காலவாகுபெயர்
Question 55
  • விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
  • “பயவாக் களரனையர் கல்லாதவர்”
A
கல்லாதவர் யார்?
B
களரனையர் விளக்கம் தருக ?
C
பயன்படாதவர் யார்?
D
கல்லாதவர் எதைப் போன்றவர்?
Question 56
பிரித்தெழுதுக : இன்னரும்பொழில்
A
இன்னருமை + பொழில்
B
இனிமை + அருமை + பொழில்
C
இனிமை + அரும்பொழில்
D
இனிமை + அரும் + பொழில்
Question 57
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாத சொல்லைக் கண்டறிக: 'வினையெச்சம்'
A
படர்ந்து
B
தொட்டு
C
பதித்து
D
எளிது
Question 58
வா – என்னும் வேர்ச்சொல் எவ்வாறு வினையாலணையும் பெயராய் அமையும்?
A
வருவான்
B
வருதல்
C
வந்தவன்
D
வாரான்
Question 59
  • "நாணாமை நாடாமை, நாரின்மை, யாது ஒன்றும்
  • பேணாமை பேதை தொழில்”
  • - இக்குறளில் உள்ளவாறு எது தவறான விடை
A
சீர்மோனை வந்துள்ளது
B
சீர்எதுகை வந்துள்ளது
C
சீர் இயைபு வந்துள்ளது
D
அடி இயைபு வந்துள்ளது
Question 60
முருகனுக்கு ‘அடி’ விழுந்தது – ‘அடி' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.
A
முதனிலை தொழிற்பெயர்
B
தொழிற்பெயர்
C
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
D
காலப்பெயர்
Question 61
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்  
  •          கரி                                                               கழி
A
யானை - குறை
B
களிறு – சுருக்குதல்
C
கருமை – குறைக்க
D
எரிப்பொருள் – குறைவு
Question 62
வேர்ச்சொல்லை தெரிவு செய் :
  • வாடினான்
A
வா
B
வாடிய
C
வாடு
D
வாடுக
Question 63
தொழாஅர் – இலக்கணக் குறிப்பு தருக
A
சொல்லிசை அளபெடை
B
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
C
செய்யுளிசை அளபெடை
D
இன்னிசை அளபெடை
Question 64
  • 'மரப்பாவை நானால் உயிர் மருட்டல் போல'
  • என்ற உவமையின் பொருளைத் தேர்ந்தெடுக்க
A
அரிய செயல்
B
புத்துணர்வு
C
மயங்குதல்
D
முயற்சி
Question 65
புலவராற்றுப்படை என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
A
திருமுருகாற்றுப்படை
B
பொருநராற்றுப்படை
C
சிறுபாணாற்றுப்படை
D
பெரும்பாணாற்றுப்படை
Question 66
  • “பயிரை வளர்த்தால் பலனாகும் – அது
  • உயிரைக் காக்கும் உணவாகும்
  • வெயிலே நமக்குத் துணையாகும் – இந்த
  • வேர்வைகள் எல்லாம் விதைமாகும்"
  • என்ற வரிகளை இயறறியவரின் காலம்
A
1922- 1950
B
1930 – 1950
C
1930 – 1959
D
1929 – 1960
Question 67
தாராசுரம் கோயிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும், குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகசியத்தை காட்டுவதாகக் கூறியவர்
A
சார்லஸ்
B
ஜி.யு.போப்
C
கால்டுவெல்
D
கார்ல் சேகன்
Question 68
தவறான இணையைத் தேர்ந்தெடு
A
டிபன் - நாஸ்தா
B
டைப்ரைட்டர் -தட்டச்சுப்பொறி
C
தம்ளர் – குவளை
D
கரண்ட் – மின்சாரம்
Question 69
கீழ்க்கண்டவர்களுள் திருச்சி மேலக்குடிக்காட்டில் பிறந்தவர் யார்?
A
திரு.வி.க
B
மருதகாசி
C
பிச்சமூர்த்தி
D
கவிமணி
Question 70
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  1. ஓவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்றுப் புலமை பெற்ற ஆசிரியர் ஓவிய புலவன் எனப் போற்றப்பட்டார்
  2. ஓவியக் கலைஞர் குழுவை ஓவிய மாக்கள் என்றழைத்தனர்
  3. ஆண் ஓவியர் சித்திரன் எனவும் பெண் ஓவியர் சித்திரசேனா எனவும் பெயர் பெற்றிருந்தனர்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
3 மட்டும் சரி
Question 71
கீழ்க்கண்டவற்றுள் ஓவியம் வரையப்பட்ட இடங்களில் அல்லாதது எது?
A
சித்திரக் கூடம்
B
எழுதுநிலை மண்டபம்
C
எழுதெழில் அம்பலம்
D
சித்திர சபை
Question 72
தவறான இணையைத் தேர்ந்தெடு
  •    பேச்சு வழக்கு                   எழுத்து வழக்கு
A
கோர்த்து _ கோத்து
B
சுவற்றில் – சுவரில்
C
மனத்தில் – மனதில்
D
பதட்டம் – பதற்றம்
Question 73
தேம்பாவணி நூலில் அமைந்துள்ள படலங்களின் எண்ணிக்கை
A
3
B
36
C
3615
D
படலங்கள் இல்லை
Question 74
சமுதாயச் சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்றது எந்த நூற்றாண்டில்?
A
17
B
18
C
19
D
20
Question 75
நாடக உலகின் இமயமலை, தமிழ்நாடகத் தலைமையாசிரியர் என்று அழைக்கப்படுபவர் யார்?
A
பரிதிமாற் கலைஞர்
B
சங்கரதாசு சுவாமிகள்
C
பம்மல் சம்பந்தனார்
D
கந்தசாமி
Question 76
  • "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
  • இறைவன் அடிசேரா தார்"
  • இக்குறளில் பயின்று வரும் அணி
A
ஏகதேச உருவக அணி
B
இல்பொருளுவமையணி
C
எடுத்துக்காட்டுவமையணி
D
பிறிது மொழிதல் அணி
Question 77
மங்கம்மாளின் பெயரன் விசயரங்கச் சொக்கநாதன் பெயரளவில் அறியணையில் ஏற்றப்பட்ட ஆண்டு
A
1680
B
1682
C
1688
D
1690
Question 78
தனது அறுநூறாவது விற்பனை மையத்திற்குத் தில்லையாடி வள்ளியம்மை மாளிகை என்று பெயர் சூட்டிய சங்கம் எது?
A
தமிழ்நாடு உழைப்பாளர்கள் சங்கம்
B
தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்
C
இந்திய நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்
D
இந்திய உழைப்பாளர்கள் சங்கம்
Question 79
வள்ளியம்மை அவர்களுக்கு தென்னாப்பிரிக்க நீதிமன்றம் எத்தனை மாதக் கடுங்காவல் தண்டனை அளித்தது
A
3
B
5
C
6
D
9
Question 80
“ திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்” என்று பாடியவர் யார்
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கவிமணி
D
நாமக்கல் கவிஞர்
Question 81
"திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று. அது மன்பதைக்கு உலகுக்கு பொது " என்று கூறியவர் யார்?
A
கால்டுவெல்
B
ஜி.யு.போப்
C
திரு.வி.க
D
கி.ஆ.பெ.விசுவநாதம்
Question 82
சைவ அடியார்களுள் ஒருவரான திருநாவுக்கரசருக்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் _______.
A
தருமசேனர்
B
மருணீக்கியார்
C
வாகீசர்
D
அப்பர்
Question 83
  • “வைய மீன்ற தொன் மக்க ளுளத்தினைக்
  • கையி னாலுரை கால மிரிந்திடப்
  • பைய நாவைய சைத்த பழந்தமிழ்
  • ஐயை தாடலை கொண்டு பணிகுவாம்"
  • என்ற பாடலில் அமைந்துள்ள பாவகை
A
எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
B
நேரிசை ஆசிரியப்பா
C
கலி விருத்தம்
D
வஞ்சிப்பா
Question 84
பாரதியார் ஆசிரியராக இருந்த வாரப்பத்திரிக்கை
A
சுதேசிமித்திரன்
B
நவஇந்தியா
C
இந்தியா
D
சக்கரவர்த்தினி
Question 85
தவறான இணையைத் தேர்ந்தெடு
A
ஒழுகல் - தொழிற்பெயர்
B
செயின் – வினையெச்சம்
C
ஒடுக்கம் – தொழிற்பெயர்
D
பூண்டனை – வினைத்தொகை
Question 86
சரியான இணையைத் தேர்ந்தெடு
A
அலமாரி - உருது
B
நபர் – போர்ச்சுக்கீசியம்
C
பீரோ – பிரெஞ்சு
D
ரிக்க்ஷா – அரபி
Question 87
சாதி மத வேறுபாடுகளை பலவுரையால் மறுத்து சமரச ஞானத்தை அறிவுறுத்திக் கோயில்களெல்லாஞ் சாதிக் கோயில்களாக மாறியது கண்டு, எல்லாரும் போந்து வழிபடுவதற்கெனச் சமரச் கோயிலை அமைத்தவர் யார்?
A
பெரியார்
B
அண்ணா
C
இராமலிங்க அடிகளார்
D
பட்டினத்தாரடிகள்
Question 88
பிழைகளற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடு
A
ஒன்றோ இரண்டோ தருக
B
ஏற்கத்தக்கது அல்ல
C
மக்கள் கிடையாது
D
சென்னை என்ற நகரம்
Question 89
  • "பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
  • பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ” என்று கூறியவர்
A
பவனந்தி முனிவர்
B
பட்டினத்தாரடிகள்
C
கம்பர்
D
கபிலர்
Question 90
  • "பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற் றுள்ளும்
  • சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும்
  • ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
  • மூத்தோன் வருக என்னாது "
  • இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல்
A
அகநானூறு
B
புறநானூறு
C
பதிற்றுப்பத்து
D
பரிபாடல்
Question 91
தவறான இணையைத் தேர்ந்தெடு
A
பழமலை -பழநி மலை
B
குடமூக்கு – கும்பகோணம்
C
திருமுதுகுன்றம் – விருத்தாசலம்
D
திருச்சிற்றம்பலம் – சிதம்பரம்
Question 92
கீழ்க்கண்ட எந்த உடம்பின் செயல்பாடுகள் மொழி வெளிப்பாட்டின் பகுதியாக உள்ளன.
  1. கைகால் அசைவுகள்
  2. தசைநார் சுருக்க அபிநயங்கள்
  3. உதட்டின் அசைவுகள்
  4. விரல் அசைவுகள்
A
அனைத்தும்
B
3 மட்டும்
C
1 மட்டும்
D
1, 2
Question 93
எந்தவொரு சொல்லும் மற்றொரு சொல்லை விட முக்கியமாகி விடாதபடி கவிதை இயற்றுபவர்கள் யாரை போன்றவர்கள்
A
வால்ட் விட்மன்
B
மல்லார்மே
C
பாப்லோ நெருடா
D
யாருமில்லை
Question 94
  • " புத்தகங்களிலெல்லாம் படித்துவிட்டேன்
  • நான் தப்பிப் போகத்தான் வேண்டும் அங்கே
  • ஆனால் உடலோ சோகத்தில்”
  • யாருடைய வரிகள்
A
வால்ட் விட்மன்
B
மல்லார்மே
C
பாப்லோ நெருடா
D
ஸ்ரீராம்
Question 95
கவிஞர் இந்திரனின் இயற்பெயர் _____
A
இந்திரேசன்
B
இராசலிங்கம்
C
இராசேந்திரன்
D
இராசமாணிக்கம்
Question 96
  • " திசைகளின் சுவரெலாம் எழுதத்தான் வேண்டும்
  • எழுகின்ற யுகத்தினோர் பாடலை " என்று பாடியவர்
A
வில்வரத்தினம்
B
முத்துலிங்கம்
C
அழகிய பெரியவன்
D
பவணந்தி முனிவர்
Question 97
பதிகம் என்பது ____பொதுவும் ___சிறப்புமாகிய பலவகை பொருள்களையும் தொகுத்து சொல்வது
A
5, 16
B
5, 11
C
6, 11
D
6, 12
Question 98
  • "கொள்வதும் மிகை கொௗாது 
  •   கொடுப்பதும் குறைபடாது" 
  • என்று கூறும் நூல் 
A
புறநானூறு
B
அகநானூறு
C
பட்டினப்பாலை
D
பரிபாடல்
Question 99
  • "தம்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
  • பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சுற்றி
  • _ _ _ _ _ _
  • உமணர் போகலும்”
  • என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A
நாலடியார்
B
நற்றிணை
C
குறுந்தொகை
D
அகநானூறு
Question 100
திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப் பெற்றவர் யார்?
A
வல்லிக்கண்ணன்
B
இராசேந்திரன்
C
துரைராசு
D
எத்திராசலு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!