Online TestTnpsc Exam
வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Online Test 8th Social Science Lesson 2 Questions in Tamil
வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Online Test 8th Social Science Lesson 2 Questions in Tamil
Congratulations - you have completed வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Online Test 8th Social Science Lesson 2 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
__________ நூற்றாண்டில் நிலவழியாகவும், கடல் வழியாகவும் புதிய நிலவியல் கண்டுபிடிப்புகளின் சகாப்தமாக ஐரோப்பா விளங்கியது.
13 | |
14 | |
15 | |
16 |
Question 1 Explanation:
(குறிப்பு: புதிய நிலவியல் கண்டுபிடிப்புகளின் முக்கிய நோக்கம் வணிகத்தின் மூலம் அதிக லாபம் பெறுவதும் மற்றும் அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதும் ஆகும்.)
Question 2 |
- கூற்று 1: 1498 ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த மாலுமி வாஸ்கோடகாமா ஐரோப்பாவிலிருந்து இந்தியா வருவதற்கான புதிய கடல் வழியை கண்டுபிடித்தார்.
- கூற்று 2: வங்காளத்தின் வெற்றிக்குப் பின் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் வலுவடைந்தது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 2 Explanation:
(குறிப்பு: ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் முக்கிய நோக்கம் வணிகம் மற்றும் ஆட்சி அதிகாரத்தை விரிவுபடுத்துவதே ஆகும்.)
Question 3 |
வங்காள நவாப் அலிவர்திகான் இறந்த பின்பு ___________ என்பவர் வங்காளத்தின் அரியணை ஏறினார்.
மீர்காசிம் | |
சிராஜ்-உத்-தெளலா | |
மீர்ஜாபர் | |
நிஜாம்-உத்-தெளலா |
Question 3 Explanation:
(குறிப்பு: வங்காள நவாப் அலிவர்திகான் 1756ல் இறந்தார். அதன் பின்பு அவரது பேரன் சிராஜ்-உத்-தெளலா அரியணை ஏறினார்.)
Question 4 |
சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.
- இருட்டறை துயரச் சம்பவம் 1756 ஆம் நடைபெற்றது.
- சிராஜ்-உத்-தௌலாவின் படை வீரர்கள் 146 ஆங்கிலேயர்களை சிறைப்பிடித்து கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் காற்று புகாத ஒரு சிறிய இருட்டறை ஓர் இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்தனர்.
- மறுநாள் காலை அறையை திறந்தபோது அவர்களுள் 23 பேர் மூச்சு திணறி இறந்திருந்தனர்.
அனைத்தும் சரி | |
1, 3 சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி |
Question 4 Explanation:
(குறிப்பு: இருட்டறை துயரச் சம்பவத்தில் 123 பேர் மூச்சு திணறி இறந்திருந்தனர்.)
Question 5 |
__________ ஆண்டு ஆங்கிலேயரின் வில்லியம்கோட்டை வங்காள நவாப் சிராஜ்-உத்-தெளலாவிடம் சரணடைந்தது.
1756 ஜூன் 20 | |
1756 ஜூலை 20 | |
1757 ஜூன் 20 | |
1757 ஜூலை 20 |
Question 5 Explanation:
(குறிப்பு: சிராஜ்-உத்-தௌலா கல்கத்தாவிலுள்ள ஆங்கிலேயரின் குடியேற்ற பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தி வங்காளத்தின் காசிம் பஜாரில் அமைந்துள்ள வணிக மையத்தையும் கைப்பற்றினார்.)
Question 6 |
சிராஜ்-உத்-தெளலா, இராபர்ட் கிளைவ் ஆகியோரிடையே _________ அன்று அலிநகர் உடன்படிக்கை ஏற்பட்டது.
1757 ஜனவரி 19 | |
1757 பிப்ரவரி 9 | |
1757 மார்ச் 9 | |
1757 மே 9 |
Question 6 Explanation:
(குறிப்பு: இவ்வுடன்படிக்கையின் படி சிராஜ்-உத்-தெளலா, இராபர்ட் கிளைவின் நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றார்.)
Question 7 |
பிரெஞ்சு குடியேற்றமான சந்திர நாகூரை ஆங்கிலேயர் கைப்பற்றிய நாள்
1757 பிப்ரவரி | |
1757 மார்ச் | |
1757 ஏப்ரல் | |
1757 மே |
Question 8 |
பிளாசிப் போரானது சிராஜ்-உத்-தௌலா, பிரஞ்சுக் கூட்டணிக்கும் மற்றும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே __________நாள் நடைபெற்றது.
1757 மார்ச் 17 | |
1757 ஏப்ரல் 28 | |
1757 ஜூன் 23 | |
1757 ஜூலை 24 |
Question 8 Explanation:
(குறிப்பு: இப்போரில் சிராஜ்-உத்-தௌலாவின் படைகளை இராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் படைகள் தோற்கடித்தன.)
Question 9 |
1757ஆம் ஆண்டு பிளாசிப் போருக்கு பின் கீழ்க்கண்ட எந்த பகுதிகளில் ஆங்கிலேயர்கள் தடையில்லா வணிக உரிமை பெற்றனர்?
- வங்காளம் 2. ஆக்ரா 3. ஒரிசா 4. பீகார்
அனைத்தும் | |
1, 2, 3 | |
1, 3, 4 | |
2, 3, 4 |
Question 9 Explanation:
(குறிப்பு: வங்காளத்தின் '24 பர்கானா’ எனும் பகுதியை ஆங்கிலேயர் பெற்றனர்.)
Question 10 |
பிளாசிப் போருக்கு பின் வங்காளத்தின் அரியணை ஏறியவர்
மீர்காசிம் | |
இராபர்ட் கிளைவ் | |
மீர்ஜாபர் | |
நிஜாம்-உத்-தெளலா |
Question 10 Explanation:
(குறிப்பு: மீர்ஜாபர் (1757-1760) ஆங்கிலேயரின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறியதால் அவரை கட்டாயப்படுத்தி பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவரது மருமகன் மீர் காசிம் என்பவரை வங்காள நவாம் ஆக்கினர்.)
Question 11 |
மீர்காசிம் வங்காளத்தின் தலைநகரை மூர்ஷிதாபாத்திலிருந்து _________க்கு மாற்றினார்.
மிட்னாபூர் | |
சிட்டகாங் | |
மாங்கீர் | |
பாட்னா |
Question 12 |
தஸ்தக் என்றழைக்கப்படும் சுங்கவரி விலக்கு ஆணையை தவறாக பயன்படுத்திய ஆங்கிலேயர் மீது கலகத்தில் ஈடுபட்ட மீர்காசிம் ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்டு __________க்கு தப்பி ஓடி அடைக்கலம் புகுந்தார்.
ஆக்ரா | |
அயோத்தி | |
பாட்னா | |
ஹைதராபாத் |
Question 12 Explanation:
(குறிப்பு: அயோத்தியில், சுஜா-உத்-தெளலா மற்றும் இரண்டாம் ஷா ஆலம் ஆகியோருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்.)
Question 13 |
வங்காள நவாப்பாக அரியணை ஏறிய பின்னர் மீர்காசிம் ஆங்கிலேயருக்கு கீழ்க்கண்ட எந்த பகுதிகளை வழங்கினார்?
- புர்த்வான்
- மிட்னாபூர்
- சிட்டகாங்
- மாங்கீர்
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 | |
1, 2, 4 |
Question 14 |
சுஜா-உத்-தௌலா, இரண்டாம் ஷா ஆலம், மீர் காசிம் மற்றும் ஆங்கிலப் படைக்கு இடையேயான பக்சார் போர் நடைபெற்ற நாள்
1757 அக்டோபர் 20 | |
1762 நவம்பர் 19 | |
1764 அக்டோபர் 22 | |
1768 ஆகஸ்ட் 21 |
Question 14 Explanation:
(குறிப்பு: பீகார் பகுதியின் பாட்னாவிற்கு மேற்கே 130 கி.மீ தொலைவில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட ஒரு சிறிய நகரமே பக்சார் ஆகும்.)
Question 15 |
பக்சார் போரில், சுஜா-உத்-தெளலா இரண்டாம் ஷா ஆலம், மீர்காசிம் ஆகியோர் ஆங்கிலப்படைத் தளபதி _________ என்பவரால் தோற்கடிக்கப்பட்டனர்.
இராபர்ட் கிளைவ் | |
டியுப்ளே | |
ஹெக்டர் மன்றோ | |
கவுண்டிலாலி |
Question 15 Explanation:
(குறிப்பு: இப்போரின் முடிவில் மீண்டும் மீர்ஜாபர் வங்காள அரியணையில் அமர்த்தப்பட்டார். மீர்ஜாபரின் இறப்புக்கு பின் அவரது மகன் நிஜாம் உத்-தெளலா வங்காள நவாப் ஆனார்.)
Question 16 |
___________ல் நடந்த அலகாபாத் உடன்படிக்கையின் படி பச்சார் போர் முடிவுக்கு வந்தது.
1764 ஜனவரி 18 | |
1765 பிப்ரவரி 20 | |
1764 பிப்ரவரி 18 | |
1765 ஜனவரி 18 |
Question 16 Explanation:
(குறிப்பு: அலகாபாத் உடன்படிக்கையின் படி வங்காள நவாப் தன்னுடைய இராணுவத்தின் பெரும்பகுதியை கலைத்துவிட வேண்டும் எனவும், கம்பெனியால் நியமிக்கப்பட்ட துணை சுபேதார் மூலம் இனி வங்காளம் நிர்வகிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.)
Question 17 |
வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை கொண்டு வந்தவர் யார்?
இராபர்ட் கிளைவ் | |
டியுப்ளே | |
ஹெக்டர் மன்றோ | |
கவுண்டிலாலி |
Question 17 Explanation:
(குறிப்பு: பச்சார் போரின் முடிவில், இராபர் கிளைவ் அயோத்தி நவாப் சுஜா-உத்-தெளலாவுடனும், முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலத்துடனும் தனித்தனியாக ஒப்பந்தம் செய்து கொண்டார்.)
Question 18 |
- கூற்று 1: 18 ஆம் நூற்றாண்டில் மூன்று கர்நாடகப் போர்கள் பல்வேறு இந்திய ஆட்சியாளர்களிடையே நடைபெற்றது.
- கூற்று 2: கர்நாடகப் போர்களில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியும் எதிர் எதிர் அணியில் இருந்தது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 18 Explanation:
(குறிப்பு: பாரம்பரியமாக, ஐரோப்பாவில் பிரிட்டனும், பிரான்சும் போட்டி நாடுகள் ஆகும். அந்நிலை இந்தியாவிலும் வணிகம் செய்வதிலும், ஆட்சி செய்வதிலும் தொடர்ந்தது. இதன் விளைவாக தொடர் இராணுவப் போட்டி தென்னிந்தியாவின் கர்நாடக பகுதியில் நடைபெற்றது. அவை கர்நாடக போர்கள் எனப்படுகின்றன.)
Question 19 |
கர்நாடகப் போர்கள் எந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்றன?
1736-1764 | |
1746-1768 | |
1746-1763 | |
1746-1784 |
Question 19 Explanation:
(குறிப்பு: இப்போரின் விளைவாக ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அரசியல் அதிகாரம் வலுப்பெற்றது.)
Question 20 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- முதல் கர்நாடகப் போர் : 1746-1748
- இரண்டாம் கர்நாடகப் போர்: 1749-1756
- மூன்றாம் கர்நாடகப் போர்: 1756-1763
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 21 |
சாந்தோம் என்ற இடத்தில் நடைபெற்ற அடையாறு போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?
அன்வாருதீன், போர்ச்சுக்கீசியர்கள் | |
ஆங்கிலேயர்கள், போர்ச்சுக்கீசியர்கள் | |
அன்வாருதீன், பிரெஞ்சுக்காரர்கள் | |
முசாபர் ஜங், பிரெஞ்சுக்காரர்கள் |
Question 21 Explanation:
(குறிப்பு: சென்னையின் அடையாறு நதிக்கரையில் சாந்தோம் அமைந்துள்ளது.)
Question 22 |
நன்கு பயிற்சி பெற்ற ஐரோப்பிய படை இந்திய படையை வெற்றி பெற்று தங்கள் மேலாண்மையை நிலைநாட்டி முதல் நிகழ்வு
ஆற்காட்டுப் போர் | |
வந்தவாசி போர் | |
அடையாறு போர் | |
மைசூர் போர் |
Question 22 Explanation:
(குறிப்பு: கேப்டன் பாரடைஸ் தலைமையிலான மிகச்சிறிய பிரெஞ்சுப் படை மாபூஸ்கான் தலைமையிலான மிக வலிமைவாய்ந்த நவாப் படையை அடையாறு போரில் (1746) தோற்கடித்தது.)
Question 23 |
____________ உடன்படிக்கையின் மூலம் முதல் கர்நாடகப் போர் முடிவுக்கு வந்தது.
பாண்டிச்சேரி உடன்படிக்கை | |
அய்-லா-சப்பேல் உடன்படிக்கை | |
மதராஸ் உடன்படிக்கை | |
மங்களூர் உடன்படிக்கை |
Question 23 Explanation:
(குறிப்பு: இவ்வுடன்படிக்கையின்படி மதராஸ் ஆங்கிலேயரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. மாறாக வட அமெரிக்காவின் சில பகுதிகளை பிரான்சு பெற்றது.)
Question 24 |
கர்நாடகம் மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமை பிரச்சனை ____________ போருக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
முதலாம் கர்நாடகப் போர் | |
இரண்டாம் கர்நாடகப் போர் | |
மூன்றாம் கர்நாடகப் போர் | |
அடையாறுப் போர் |
Question 24 Explanation:
(குறிப்பு: கர்நாடக நவாப் பதவிக்கு அன்வாருதீனும், சந்தாசாகிப்பும் உரிமை கோரினர். அதேபோல் ஹைதராபாத் நிசாம் பதவிக்கு நாசிர் ஜங்கும் முசாபர் ஜங்-ம் உரிமை கோரினர்.)
Question 25 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- இரண்டாம் கர்நாடகப் போரில் பிரெஞ்சுக்காரர்கள் சந்தா சாகிப்பிற்கும், முசாபர் ஜங்-க்கும் உதவி செய்தனர்.
- ஆங்கிலேயர்கள் அன்வாருதீனுக்கும், நாசிர்ஜங் - கும் உதவினர்.
இரண்டும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 25 Explanation:
(குறிப்பு: இரண்டாம் கர்நாடகப் போர் மூலம் இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் எண்ணினர்.)
Question 26 |
_________ ஆண்டு ஆம்பூரில் நடைபெற்ற போரில் பிரெஞ்சு கவர்னர் டியூப்ளே, சந்தாசாகிப், முசாபர் ஜங் ஆகியோரின் கூட்டுப் படைகளால் கர்நாடக நவாப் அன்வாருதீன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
1746 ஆகஸ்ட் 13 | |
1747 அக்டோபர் 3 | |
1748 ஆகஸ்ட் 3 | |
1749 ஆகஸ்ட் 3 |
Question 26 Explanation:
(குறிப்பு: அன்வாருதீனின் மகன் முகமது அலி திருச்சிராப்பள்ளிக்கு தப்பி ஓடினார்.)
Question 27 |
சந்தாசாகிப்பை பிரெஞ்சுக்காரர்கள் கர்நாடக நவாப் ஆக்கியதற்கு ஈடாக அவர் பாண்டிச்சேரியை சுற்றியுள்ள _________ கிராமங்களை பிரெஞ்சுக்காரர்களுக்கு வெகுமதியாக வழங்கினார்.
50 | |
60 | |
70 | |
80 |
Question 28 |
- கூற்று 1: இரண்டாம் கர்நாடகப் போரின்போது தக்காணத்தில் பிரெஞ்சுக்காரர்களால் நாசிர் ஜங் தோற்கடிக்கப்பட்டு, கொல்லப்பபட்டார்.
- கூற்று 2: முசாபர் ஜங் ஐதராபாத்தின் நிசாம் ஆனார்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 28 Explanation:
(குறிப்பு: புதிய நிசாம் முசாபர் ஜங், பிரெஞ்சுக்காரர்களுக்கு போதிய வெகுமதி வழங்கினார்.)
Question 29 |
முசாபர் ஜங் கிருஷ்ணா நதியின் தென்பகுதிகள் அனைத்திற்கும் _________யை ஆளுநராக நியமித்தார்.
இராபர்ட் கிளைவ் | |
டியூப்ளே | |
ஹெக்டர் மன்றோ | |
கவுண்டிலாலி |
Question 30 |
_________ ஆண்டு, முசாபர் ஜங் தன் மக்களால் படுகொலை செய்யப்பட்டார்.
1746 | |
1749 | |
1751 | |
1753 |
Question 30 Explanation:
(குறிப்பு: முசாபர் ஜங் இறப்பிற்கு பின் நாசிர் ஜங்-ன் சகோதரர் சலபத் ஜங் பிரெஞ்சுப் படைத் தளபதி புஸ்ஸியின் உதவியுடன் ஹைதராபாத் நிசாம் ஆனார்.)
Question 31 |
சலபத் ஜங் ___________ மாவட்டத்தை தவிர வட சர்க்கார் முழுவதும் பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கினார்.
ரேணிகுண்டா | |
குண்டூர் | |
நெல்லூர் | |
மெட்ராஸ் |
Question 31 Explanation:
(குறிப்பு: இதன் மூலம் டியூப்ளே-ன் அதிகாரம் உச்சநிலையை அடைந்தது.)
Question 32 |
இரண்டாம் கர்நாடகப் போரின் போது, ஆற்காட்டை தாக்கும் இராபர்ட் கிளைவின் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய கவர்னர்
கவுண்-டி-லாலி | |
சாண்டர்ஸ் | |
லாரன்ஸ் | |
புஸ்ஸி |
Question 32 Explanation:
(குறிப்பு: 200 ஆங்கில படையினர், 300 இந்திய படை வீரர்களுடன் கிளைவ் ஆற்காட்டை தாக்கி கைப்பற்றினார்.)
Question 33 |
சரியான கூற்றை தேர்ந்தெடு. (இரண்டாம் கர்நாடகப் போர்)
- லாரன்ஸ் உதவியுடன் இராபர்ட் கிளைவ் ஆரணி, காவேரிபாக்கம் ஆகிய இடங்களில் பிரெஞ்சுப் படைகளை தோற்கடித்தார்.
- சந்தாசாகிப் திருச்சியில் கொல்லப்பட்டார்.
- அன்வாருதீனின் மகன் முகமது அலி ஆங்கிலேயரின் உதவியுடன் ஆற்காட்டு நவாப் ஆனார்.
அனைத்தும் சரி | |
1, 3 சரி | |
2, 3 சரி | |
1, 2 சரி |
Question 33 Explanation:
(குறிப்பு: இரண்டாம் கர்நாடகப் போரின் தோல்வியால் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் டியூப்ளே-வை பாரிசுக்கு திரும்ப அழைத்தது.)
Question 34 |
டியூப்ளேவை தொடர்ந்து பிரெஞ்சு ஆளுநராக பதவியேற்றவர்
புஸ்ஸி | |
கவுண்-டி-லாலி | |
கோதேயூ | |
பிரிகேடியர் மேத்யூஸ் |
Question 34 Explanation:
(குறிப்பு: கோதேயூ ஆங்கிலேயருடன் பாண்டிச்சேரி உடன்படிக்கையினை செய்துகொண்டார்.)
Question 35 |
இரண்டாம் கர்நாடகப் போர் ________ ஆண்டு ஏற்பட்ட பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி முடிவுற்றது.
1754 | |
1755 | |
1756 | |
1757 |
Question 35 Explanation:
(குறிப்பு: பாண்டிச்சேரி உடன்படிக்கையின் படி இரு நாடுகளும் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது எனவும், போருக்கு முன்னர் இருந்த பகுதிகள் அவரவரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்பட்டது. மேலும் புதிய கோட்டைகளை கட்டக் கூடாது எனவும் கூறப்பட்டது.)
Question 36 |
- கூற்று 1: ஐரோப்பாவில் வெடித்த ஏழாண்டு போர் இந்தியாவில் மூன்றாம் கர்நாடகப் போருக்கு இட்டுச்சென்றது.
- கூற்று 2: இச்சமயத்தில் ஆங்கில படைத் தளபதி இராபர்ட் கிளைவ் பிளாசிப் போரின் மூலம் வங்காளத்தில் ஆங்கில ஆதிக்கத்தை நிறுவியதுடன் மூன்றாம் கர்நாடகப் போருக்கு தேவையான நிதியையும் வழங்கினார்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 37 |
மூன்றாம் கர்நாடகப் போரில் பிரெஞ்சு படைகளை வழிநடத்த __________ என்பவரை பிரெஞ்சு அரசாங்கம் நியமித்தது.
இராபர்ட் கிளைவ் | |
டியூப்ளே | |
புஸ்ஸி | |
கவுண்டிலாலி |
Question 37 Explanation:
(குறிப்பு: கவுண்டிலாலி கடலூரில் உள்ள செயின்ட் டேவிட் கோட்டையை எளிதாக கைப்பற்றினார்.)
Question 38 |
- கூற்று 1: மூன்றாம் கர்நாடகப் போரின் போது, கர்நாடகப் பகுதியிலிருந்து ஆங்கிலேயரை விரட்ட தன்னுடன் இணையுமாறு புஸ்ஸிக்கு, கவுண்டிலாலி உத்தரவிட்டார்.
- கூற்று 2: புஸ்ஸி ஐதராபாத்திலிருந்து புறப்பட்ட தருணத்தை பயன்படுத்தி வட சர்க்கார் பகுதிகளை கைப்பற்ற கர்னல் போர்டை வங்கத்திலிருந்து இராபர்ட் கிளைவ் அனுப்பினார்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 38 Explanation:
(குறிப்பு: வட சர்க்கார் என்பது ஆந்திர பிரதேசம், ஒடிசா ஆகிய பகுதிகளை குறிக்கும்.)
Question 39 |
____________ ஆண்டு நடைபெற்ற வந்தவாசிப் போரில் ஜெனரல் அயர் கூட் தலைமையிலான ஆங்கிலேயப் படை கவுண்டிலாலி தலைமையிலான பிரெஞ்சுப் படையை முற்றிலும் தோற்கடித்தது.
1756 ஜனவரி 20 | |
1760 ஜனவரி 22 | |
1763 ஜனவரி 30 | |
1764 ஜனவரி 24 |
Question 39 Explanation:
(குறிப்பு: வந்தவாசிப் போருக்கு பின்னர் ஓர் ஆண்டுகள் இந்தியாவிலிருந்த அனைத்துக் குடியேற்றங்களையும் பிரெஞ்சுக்காரர்கள் இழந்தனர். கவுண்டிலாலி பிரான்சு நாட்டுக்கு திரும்ப அழைக்கப்பட்டு சிறையிலிடப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டார்.)
Question 40 |
ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டுப் போர் ____________ உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது.
அய்லாசாப்பேல் உடன்படிக்கை | |
பாரிசு உடன்படிக்கை | |
மைசூர் உடன்படிக்கை | |
பாண்டிச்சேரி உடன்படிக்கை |
Question 40 Explanation:
(குறிப்பு: இவ்வுடன்படிக்கையின் படி பாண்டிச்சேரி உட்பட இந்தியாவிலிருந்த பிரெஞ்சு குடியேற்றங்கள் அனைத்தும் பிரெஞ்சுக்காரர்கள் வசம் திரும்ப கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தங்கள் பகுதிகளை பலப்படுத்தவும், படைகளை பெருக்கவும் தடை விதிக்கப்பட்டது.)
Question 41 |
_________ ஆண்டு ஹைதர் அலி மைசூர் சமஸ்தானத்தின் உண்மையான ஆட்சியாளரானார்.
1758 | |
1761 | |
1764 | |
1768 |
Question 41 Explanation:
(குறிப்பு: ஹைதர் அலியின் தலைமையில் மைசூர் சமஸ்தானம் தென்னிந்திய வரலாற்றில் மிகப்பெரிய எழுச்சியை பெற்றது.)
Question 42 |
முதல் ஆங்கிலேய-மைசூர் போருக்கான காரணங்களில் சரியானதை தேர்ந்தெடு.
- ஹைதர் அலியின் வளர்ச்சி, அவர் பிரெஞ்சுக்காரர்களிடம் கொண்டிருந்த நட்புறவு ஆகியன ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் எதிர்ப்புக்கு காரணமாயின.
- ஹைதர் அலிக்கு எதிராக மராத்தியர்கள், ஹைதராபாத் நிசாம், ஆங்கிலேயர்கள் இணைந்து முக்கூட்டணியை ஏற்படுத்தினர்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 43 |
தளபதி ஜோசப் ஸ்மித் தலைமையிலான ஆங்கிலப் படை உதவியுடன் ஹைதராபாத் நிசாம் __________ ஆண்டு மைசூர் மீது படையெடுத்தார்.
1758 | |
1762 | |
1765 | |
1767 |
Question 43 Explanation:
(குறிப்பு: ஆங்கிலப் படையை ஹைதர் அலி தோற்கடித்து மங்களூரை கைப்பற்றினார்.)
Question 44 |
முதல் ஆங்கிலேய-மைசூர் போரின் போது ___________ ஆண்டு ஹைதர் அலி மதராஸ் மீது படையெடுத்தார்.
1767 | |
1768 | |
1769 | |
1770 |
Question 44 Explanation:
(குறிப்பு: இதனால் ஆங்கிலேயர்கள் 1769 ஏப்ரல் 4 ல் அவரிடம் மதராஸ் உடன்படிக்கை செய்து கொண்டனர்.)
Question 45 |
இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்களில் சரியானதை தேர்ந்தெடு.
- 1769ல் செய்துகொள்ளப்பட்ட மதராஸ் உடன்படிக்கையை ஆங்கிலேயர்கள் நிறைவேற்றத் தவறினர். 2. 1771ல் மராத்தியர்கள் ஹைதர் அலி மீது படையெடுத்த போது மதராஸ் உடன்படிக்கையின் படி ஆங்கிலேயர்கள் ஹைதர் அலிக்கு உதவவில்லை.
- ஹைதர் அலியின் ஆட்சிக்குட்பட்ட பிரெஞ்சு குடியேற்ற பகுதியான மாஹியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். இந்நிகழ்வு ஆங்கிலேயருக்கு எதிராக ஹைதர் அலி, ஹைதராபாத் நிசாம், மராத்தியர்களின் முக்கூட்டணியை உருவாக்கியது.
அனைத்தும் சரி | |
2, 3 சரி | |
2, 3 சரி | |
1, 2 சரி |
Question 46 |
_____________ ஆண்டு ஆங்கிலேய படைத் தளபதி சர் அயர்கூட் ஹைதர் அலியை பரங்கிப்பேட்டை என்ற இடத்தில் தோற்கடித்தார்.
1780 | |
1781 | |
1782 | |
1783 |
Question 46 Explanation:
(குறிப்பு: இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரின் போது, மைசூர் படைகள் சோளிங்கர் என்ற பகுதியிலும் தோல்வியை தழுவியது.)
Question 47 |
புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஹைதர் அலி ___________ ஆண்டு இறந்தார்.
1781 | |
1782 | |
1783 | |
1784 |
Question 47 Explanation:
(குறிப்பு: ஹைதர் அலியின் இறப்புக்குப் பின் அவரது மகன் திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக போரினைத் தொடர்ந்தார்.)
Question 48 |
திப்பு, ஆங்கிலேய படைத்தளபதியான பிரிகேடியர் மேத்யூஸ் மற்றும் அவரது படைவீரர்களை கைது செய்த ஆண்டு
1781 | |
1782 | |
1783 | |
1784 |
Question 49 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
முதல் ஆங்கிலேய மைசூர் போர் : 1767 - 1769 | |
இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் : 1780 – 1784 | |
மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் : 1790 – 1792 | |
நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் : 1798 |
Question 49 Explanation:
(குறிப்பு: நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் : 1799)
Question 50 |
ஆங்கிலேயருக்கும், திப்பு சுல்தானுக்கும் இடையே மங்களூர் உடன்படிக்கை __________ ஆண்டு கையெழுத்தானது.
1783 மே 8 | |
1783 மார்ச் 7 | |
1783 மார்ச் 7 | |
1784 மே 8 |
Question 50 Explanation:
(குறிப்பு: இவ்வுடன்படிக்கை மூலம் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் புதிதாக உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் ஆதிக்கத்தை வலிமைமிக்க எதிரிகளான மராத்தியர்கள் மற்றும் ஹைதர் அலியிடம் இருந்து பாதுகாத்துக் கொண்டார்.)
Question 51 |
பின்வருவனவற்றுள் மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்கள் எவை?
- மங்களூர் உடன்படிக்கைக்கு பின் ஆங்கிலேயருக்கு எதிராக வெளிநாடுகளுடன் கூட்டணி அமைக்கும் பொருட்டு பிரான்சு, மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு திப்புசுல்தான் தன்னுடைய தூதுவர்களை அனுப்பினார்.
- ஆங்கிலேய கூட்டணியில் இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தை திப்புசுல்தான் 1789ல் தாக்கினார்.
- இச்சமயத்தில் திப்புசுல்தானுக்கு எதிராக ஆங்கிலேயர்கள், ஹைதராபாத் நிசாம் மற்றும் மராத்தியர்களுடன் இணைந்து மூவர் கூட்டணியை உருவாக்கினர்.
2, 3 | |
1, 3 | |
1, 2 | |
அனைத்தும் |
Question 52 |
மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இப்போரில் திப்பு சுல்தான் தனியாக எதிர்த்து போராடினார். | |
1788ல் தலைமை ஆளுநர் காரன்வாலிஸ் தானாகவே படையை வழிநடத்தினார். | |
இப்போர் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. | |
போரின் முடிவில் காரன்வாலிஸ் 1792ல் ஸ்ரீரங்கபட்டிண உடன்படிக்கையை திப்புசுல்தானுடன் செய்து கொண்டார். |
Question 52 Explanation:
(குறிப்பு: இப்போரில் தளபதி மேடோஸ் தலைமையிலான தாக்குதல் தோல்வியில் முடிந்ததால் 1790ல் காரன்வாலிஸ் தானாகவே படையை வழி நடத்தினார்.)
Question 53 |
ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கையின் படி, ஆங்கிலேயர்கள் கீழ்க்கண்ட எந்த பகுதிகளை பெற்றனர்?
- மலபார்
- குடகு மலை
- திண்டுக்கல்
- பாரமஹால்
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 4 | |
அனைத்தும் |
Question 53 Explanation:
(குறிப்பு: பாரமஹால் என்பது சேலம், கோயம்புத்தூர் பகுதிகளை குறிக்கும்.)
Question 54 |
ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கையின் படி, போர் இழப்பீட்டு தொகையாக ___________ ரூபாய் செலுத்த வேண்டும் என்று திப்பு சுல்தான் கட்டாயப்படுத்தப்பட்டார்.
1.2 கோடி | |
2.4 கோடி | |
3.6 கோடி | |
4.8 கோடி |
Question 54 Explanation:
(குறிப்பு: தன்னுடைய இரண்டு மகன்களை ஆங்கிலேயரிடம் பிணைக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டும் வும் திப்பு சுல்தான் கட்டாயப்படுத்தப்பட்டார்.)
Question 55 |
பின்வருவனவற்றுள் நான்காம் ஆங்கிலேய-மைசூர் போருக்கான காரணங்கள் எவை?
- திப்பு சுல்தான் ஆங்கிலேயருக்கு எதிரான வெளிநாட்டு கூட்டணிக்காக அரேபியா, துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளுக்கு தன்னுடைய தூதர்களை அனுப்பினார்.
- அச்சமயத்தில் எகிப்து மீது படையெடுத்த நெப்போலியனுடன் திப்பு தொடர்பு வைத்திருந்தார்.
- பிரெஞ்சு அலுவலர்கள் ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு வருகை புரிந்து அவர்கள் ஜாக்கோபியன் கழகத்தை நிறுவினார்கள், மேலும் அங்கு சுதந்திர மரம் ஒன்றும் நடப்பட்டது.
2, 3 | |
1, 3 | |
1, 2 | |
அனைத்தும் |
Question 56 |
1799 நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரின் போது __________திப்புவின் மீது போர் தொடுத்தார்.
இராபர்ட் கிளைவ் | |
புஸ்ஸி | |
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
வெல்லெஸ்லி |
Question 56 Explanation:
(குறிப்பு: இது குறுகிய காலத்தில் நடந்த, கடுமையான போராக இருந்தது.)
Question 57 |
நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரின் நிகழ்வுகளில் சரியானதை தேர்ந்தெடு.
- மைசூரின் மேற்கே பம்பாய் இராணுவம் தளபதி ஸ்டூவர்ட் தலைமையில் படையெடுத்தது.
- இச்சமயத்தில் மெட்ராஸ் இராணுவம் தலைமை ஆளுநரின் சகோதரர் ஆர்தர் வெல்லெஸ்லி தலைமையில் திப்பு சுல்தானை தாக்கியது.
- 1799 மே 14 ஆம் நாள் ஸ்ரீரங்கப்பட்டினம் கைப்பற்றப்பட்டது.
- போரின் முடிவில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார்.
அனைத்தும் சரி | |
1, 2, 3 சரி | |
1, 2, 4 சரி | |
2, 3, 4 சரி |
Question 57 Explanation:
(குறிப்பு: 1799 மே 4 ஆம் நாள் ஸ்ரீரங்கப்பட்டினம் கைப்பற்றப்பட்டது.)
Question 58 |
நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரின் முடிவில் திப்புவின் குடும்பத்தினர் _________கோட்டைக்கு அனுப்பப்பட்டனர்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை | |
வில்லியம் கோட்டை | |
வேலூர் கோட்டை | |
திண்டுக்கல் கோட்டை |
Question 58 Explanation:
(குறிப்பு: நான்காம் ஆங்கிலேய-மைசூர் போருக்கு பின் மீண்டும் இந்து உயர் குடும்பத்தை சேர்ந்த மூன்றாம் கிருஷ்ண ராஜா உடையார் மைசூர் அரியணை ஏறினார்.)
Question 59 |
நான்காம் ஆங்கிலேய-மைசூர் போருக்கு பின் கீழ்க்கண்டஎந்த பகுதிகளை ஆங்கிலேயர்கள் இணைத்து கொண்டனர்?
- கனரா 2. வயநாடு 3. கோயம்புத்தூர் 4. தாராபுரம்
2, 3, 4 | |
2, 3 | |
2, 4 | |
அனைத்தும் |
Question 60 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- புனா – பேஷ்வா
- பரோடா – கெய்க்வாட்
- நாக்பூர் – போன்ஸ்லே
- இந்தூர் – ஹோல்கர்
- குவாலியர் – சிந்தியா
அனைத்தும் சரி | |
2, 3, 4, 5 சரி | |
1, 3, 4 சரி | |
1, 4, 5 சரி |
Question 60 Explanation:
(குறிப்பு: மூன்றாம் பானிபட் போர் தோல்விக்கு பிறகு, மராத்தியர்கள் தங்கள் மீதான டெல்லி முகலாயர்களின் கட்டுப்பாட்டை பத்தாண்டுகளுக்கு பிறகு மீட்டனர். எனினும் பேஷ்வா கட்டுப்பாட்டில் இருந்த பழைய மராத்தாஸ் கூட்டமைப்பு கிட்டத்தட்ட ஐந்து சுதந்திரமான மாநிலங்களுக்கு வழிவகுத்தது.)
Question 61 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
- முதல் ஆங்கிலேய மராத்திய போர் : 1775-1782
- இரண்டாம் ஆங்கிலேய மராத்திய போர் : 1801-1803
- மூன்றாவது ஆங்கிலேய மராத்திய போர் : 1815-1817
1, 2 தவறு | |
1, 3 தவறு | |
2, 3 தவறு | |
எதுவுமில்லை |
Question 62 |
மராத்தியர்களின் பேஷ்வா நாராயண ராவின் இறப்புக்குப் பிறகு ________அடுத்த பேஷ்வா ஆனார்.
நானா பட்னாவிஸ் | |
ரகுநாதராவ் | |
மாதவராவ் | |
கங்காபாய் |
Question 62 Explanation:
(குறிப்பு: ரகுநாதராவ்விற்கு (ரகோபா) எதிராக பூனாவிலிருந்த ஒரு குழு நானா பட்னாவிஸ் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தது. அக்குழு நாராயணராவின் மனைவியான கங்காபாய்க்கு பிறந்த குழந்தையை (இரண்டாம் மாதவராவ்) பேஷ்வாவாக அங்கீகரித்தது.)
Question 63 |
__________ ஆண்டு ஆங்கிலேயருக்கும் ரகுநாத ராவுக்கும் இடையே சூரத் ஒப்பந்தம் கையெழுத்தானது.
1773 | |
1774 | |
1775 | |
1776 |
Question 63 Explanation:
(குறிப்பு: கல்கத்தா பிரிட்டிஷ் கவுன்சில் சூரத் உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் தலைமை ஆளுநரான வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.)
Question 64 |
கர்னல் அப்டன் __________ ஆண்டு பூனாவின் பாதுகாப்பரசுடன் புரந்தர் ஒப்பந்தத்தை செய்து கொண்டார்.
1775 | |
1776 | |
1777 | |
1778 |
Question 64 Explanation:
(குறிப்பு: பம்பாயில் ஆங்கில அரசாங்கத்தின் எதிர்ப்பு காரணமாக இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை.)
Question 65 |
___________ ஆண்டு வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மகாதாஜி சிந்தியா இடையே சால்பை ஒப்பந்தம் கையெழுத்தானது.
1781 ஏப்ரல் 17 | |
1781 மே 17 | |
1782 ஏப்ரல் 17 | |
1782 மே 17 |
Question 66 |
முதல் ஆங்கிலேய மராத்தியப் போரின் விளைவுகளில் சரியானதை தேர்ந்தெடு.
- போரின் முடிவில் இரண்டாம் மாதவராவ் பேஷ்வாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ரகுநாத ராவுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
- பிரிட்டிஷ் அரசுக்கு சால்செட் பகுதி வழங்கப்பட்டது.
- இந்திய அரசியலில் சால்பை ஒப்பந்தம் பிரிட்டிஷாருக்கு செல்வாக்கை ஏற்படுத்தியது.
- பிரிட்டிஷாருக்கும் மராத்தியர்களுக்கும் இடையே அடுத்த இருபது ஆண்டுகளுக்கு சமாதான உறவு நீடித்தது.
1, 2, 3 சரி | |
2, 3, 4 சரி | |
1, 3, 4 சரி | |
அனைத்தும் சரி |
Question 67 |
மகாதாஜி சிந்தியா __________ ஆண்டு இறந்தார்.
1792 | |
1793 | |
1794 | |
1795 |
Question 67 Explanation:
(குறிப்பு: மகாதாஜி சிந்தியா இறந்தபின் அவருடைய மருமகன் தௌலத் ராவ் சிந்தியா பதவியேற்றார்.)
Question 68 |
பேஷ்வா இரண்டாம் மாதவராவ் _________ ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
1794 | |
1795 | |
1796 | |
1797 |
Question 68 Explanation:
(குறிப்பு: இரண்டாம் மாதவராவ் இறந்த பிறகு ரகுநாதராவின் வலிமையற்ற மகனான இரண்டாம் பாஜிராவ் பேஷ்வா ஆனார்.)
Question 69 |
பேஷ்வா, வெல்லெஸ்லி பிரபு இடையே__________ ஆண்டு பஸ்ஸீன் உடன்படிக்கை ஏற்பட்டது.
1800 | |
1801 | |
1802 | |
1803 |
Question 69 Explanation:
(குறிப்பு: இவ்வுடன்படிக்கையின்படி பேஷ்வா துணைப்படைத்திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.)
Question 70 |
சிந்தியாவுடன் சுர்ஜீ-அர்ஜுகான் ஒப்பந்தத்தையும், போன்ஸ்லேவுடன் தியோகான் ஒப்பந்தத்தையும் __________ ஆண்டு ஆங்கிலேயர்கள் செய்து கொண்டனர்.
1802 | |
1803 | |
1805 | |
1807 |
Question 70 Explanation:
(குறிப்பு: ஆங்கிலேயரின் இராணுவம் வெல்லெஸ்லியின் தலைமையில், அஸ்ஸே மற்றும் அரகான் பகுதியில் சிந்தியா, போன்ஸ்லே ஆகியோரின் கூட்டுப் படைகளை தோற்கடித்தது. இவ்வெற்றிக்கு பிறகு மேற்கண்ட ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.)
Question 71 |
பின்வருவனவற்றுள் இரண்டாம் ஆங்கிலேய-மராத்திய போரின் விளைவுகள் எவை?
- இப்போருக்கு பின் மராத்தியர்களின் வலிமை காலப்போக்கில் பலவீனமடைந்தது.
- இந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தலையாய சக்தியாக மாறத்தொடங்கியது.
இரண்டும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 72 |
- கூற்று 1: மூன்றாவது ஆங்கிலேய மராத்தியப் போர், ஆங்கில படைவீரர்கள் மராத்திய பகுதிகளை ஆக்கிரமிக்கும் போது தொடங்கியது.
- கூற்று 2: இந்த ஆக்கிரமிப்பில் தலைமை ஆளுநர் ஹேஸ்டிங்ஸ் பிரபுவுக்கு, ஜெனரல் ஹிஸ்லாப் தலைமையின் கீழ் ஒரு படைப்பிரிவு உதவியது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 72 Explanation:
(குறிப்பு: மூன்றாவது ஆங்கிலேய மராத்திய போரின் போது, சித்தாபால்டி போரில் போன்ஸ்லேவும், மகித்பூர் போரில் ஹோல்கரும் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.)
Question 73 |
பின்வருவனவற்றுள் மூன்றாவது ஆங்கிலேய மராத்திய போரின் விளைவுகள் எவை?
- இப்போரின் முடிவில் மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டது மற்றும் பேஷ்வா பதவி ஒழிக்கப்பட்டது.
- பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் பெரும்பாலான பகுதிகள் பம்பாய் மாகாணத்தோடு இணைக்கப்பட்டன.
- தோற்கடிக்கப்பட்ட போன்லே மற்றும் ஹோல்கரின், மராத்திய பகுதிகளான நாக்பூர், இந்தூர் ஆகியவை ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப்பட்டன.
- மராத்தியரின் கடைசி பேஷ்வாவான இரண்டாம் பாஜிராவிற்கு வருடாந்திர ஓய்வூதியம் 8 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
1, 2, 4 சரி | |
2, 3, 4 சரி | |
1, 2, 3 சரி | |
அனைத்தும் சரி |
Question 73 Explanation:
(குறிப்பு: மராத்தியரின் கடைசி பேஷ்வாவான இரண்டாம் பாஜிராவிற்கு வருடாந்திர ஓய்வூதியம் 8 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.)
Question 74 |
ஆங்கிலேயரின் இந்திய நிர்வாக அமைப்பு _________ முதன்மை நிறுவனங்களாக இயங்கியது.
2 | |
3 | |
4 | |
5 |
Question 74 Explanation:
(குறிப்பு: 4 முதன்மை நிறுவனங்கள்
1. குடிமைப் பணிகள் 2. இராணுவம் 3. காவல் 4. நீதித்துறை)
Question 75 |
‘சிவில் சர்வீஸ்' என்ற வார்த்தை முதன் முதலில் _________ ஆல் பயன்படுத்தப்பட்டது.
போர்ச்சுக்கீசிய கிழக்கிந்திய கம்பெனி | |
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி | |
டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி | |
டேனியக் கிழக்கிந்திய கம்பெனி |
Question 75 Explanation:
(குறிப்பு: சட்டங்களை முறையாக செயல்படுத்துதல், வரி வசூலித்தல் ஆகியன குடிமைப் பணியின் முதன்மைப் பணியாக இருந்தது.)
Question 76 |
- கூற்று 1: ஆரம்பத்தில் வியாபார ரீதியாக இருந்த குடிமைப் பணிகள் பின்னர் பொதுப்பணியாக மாறியது.
- கூற்று 2: முதலில் பொதுப்பணியின் நியமனங்கள் அனைத்தும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர் அவையின் தனியுரிமையாக இருந்தது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 76 Explanation:
(குறிப்பு: நியமனம் செய்யப்பட்ட பொது பணியாளர்கள் லஞ்சம், ஊழல், சட்ட விரோத வணிகம் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.)
Question 77 |
தலைமை ஆளுநராக காரன் வாலிசு பதவியேற்ற ஆண்டு
1782 | |
1784 | |
1786 | |
1788 |
Question 77 Explanation:
(குறிப்பு: காரன்வாலிசு தனியார் வணிகத்திற்கு எதிராக சட்டங்களை இயற்றினார். கம்பெனி ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி, உலகின் மிக உயர்ந்த ஊதியம் பெறும் அரசு ஊழியர்களாக அவர்களை மாற்றினார்.)
Question 78 |
இந்திய கவர்னர் ஜெனரலாக வெல்லெஸ்லி பிரபு பதவியேற்ற ஆண்டு
1792 | |
1794 | |
1797 | |
1798 |
Question 78 Explanation:
(குறிப்பு: வெல்லெஸ்லி பிரபு அரசு ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியை அறிமுகப்படுத்தினார்.)
Question 79 |
வெல்லெஸ்லி பிரபு ___________ ஆண்டு கல்கத்தாவில் வில்லியம் கோட்டையில் மொழி, இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக ஒரு கல்லூரியை நிறுவினார்.
1797 | |
1798 | |
1799 | |
1800 |
Question 79 Explanation:
(குறிப்பு: கம்பெனியின் இயக்குநர்கள் இதனை ஏற்க மறுத்து, 1806 ல் இங்கிலாந்தில் உள்ள ஹெய்லிபரி என்ற இடத்தில் கிழக்கிந்திய கல்லூரியை நிறுவினர்.)
Question 80 |
போட்டித் தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்ற கருத்தை முதன்முதலில் __________ ஆண்டு பட்டயச் சட்டம் அறிமுகப்படுத்தியது.
1793 | |
1813 | |
1833 | |
1853 |
Question 80 Explanation:
(குறிப்பு: கம்பெனியின் இயக்குநர் அவையால் நியமனம் செய்யப்படாதவர்கள் போட்டித் தேர்வினை எழுத தகுதியற்றவர்கள் எனப்பட்டது. எனவே இந்த முறை நியமனம் மற்றும் போட்டித் தேர்வு முறை என்றழைக்கப்பட்டது.)
Question 81 |
திறந்த முறையிலான போட்டித் தேர்வுமுறையில் கம்பெனி ஊழியர்களை தேர்ந்தெடுப்பது ___________ ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
1843 | |
1848 | |
1853 | |
1858 |
Question 81 Explanation:
(குறிப்பு: இம்முறை 1858 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டது.)
Question 82 |
1858 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டப்படி போட்டித் தேர்வுக்கான அதிகபட்ச வயது __________ ஆக நிர்ணயிக்கப்பட்டது.
20 | |
21 | |
22 | |
23 |
Question 82 Explanation:
(குறிப்பு: இச்சட்டத்தை தொடர்ந்து 1858 ஆம் ஆண்டு ஹெய்லிபரியில் இருந்த கிழக்கிந்திய கல்லூரி அகற்றப்பட்டது. மேலும் குடிமை பணிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு குடிமைப் பணியாளர் தேர்வாணையம் வசமானது.)
Question 83 |
___________ ஆண்டின் ஒழுங்குமுறை ஆணையின் மூலம் குடிமைப் பணி தேர்வெழுத அதிகபட்ச வயது 22 ஆக குறைக்கப்பட்டது.
1859 | |
1860 | |
1862 | |
1863 |
Question 83 Explanation:
(குறிப்பு: குடிமைப் பணி தேர்வெழுதும் வயது 1866ல் 21 ஆகவும் 1876ல் 19 ஆகவும் குறைக்கப்பட்டது.)
Question 84 |
___________ ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் இந்திய ஆட்சி பணி சட்டம் இயற்றப்பட்டது.
1858 | |
1859 | |
1860 | |
1861 |
Question 84 Explanation:
(குறிப்பு: இச்சட்டம் சில உயர் நிர்வாக பதவிகள் மற்றும் நீதித்துறை பதவிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய ஒதுக்கீடு செய்திருந்தது. பின்னர் இப்பதவிகள் இந்திய ஆட்சிப் பணிகளாக மாற்றப்பட்டன.)
Question 85 |
கீழ்க்கண்டவர்களுள் 1869ல் ஐசிஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற இந்தியர்கள் யார்?
- சுரேந்திரநாத் பானர்ஜி
- ரமேஷ் சந்திர தத்
- பிகாரி லால் குப்தா
- இரபீந்திரநாத் தாகூர்
1, 2 | |
2, 3 | |
1, 2, 4 | |
1, 2, 3 |
Question 85 Explanation:
(குறிப்பு: வயது வரம்பு குறைப்பு மற்றும் இலண்டனுக்கு சென்று தேர்வு எழுதுதல் ஆகிய காரணங்களால் வசதி படைத்த இந்தியர்கள் மட்டுமே ஐ.சி.எஸ் தேர்வை எழுதக் கூடிய சூழ்நிலை நிலவியது.)
Question 86 |
1863ல் ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் __________.
ரமேஷ் சந்திர தத் | |
பிகாரி லால் குப்தா | |
இரபீந்திரநாத் தாகூர் | |
சத்தியேந்திரநாத் தாகூர் |
Question 86 Explanation:
(குறிப்பு: இவர் கவிஞர் ரபீந்தரநாத் தாகூரின் மூத்த சகோரர் ஆவார்.)
Question 87 |
ஐசிஎஸ் தேர்விற்கான வயது வரம்பு 21 இல் இருந்து 23 ஆக உயர்த்தப்பட்ட ஆண்டு
1881 | |
1883 | |
1891 | |
1892 |
Question 88 |
அரசு பணியைப் பற்றி ஆராய்வதற்காக இஸ்லிங்டன் பிரபு என்பவரின் தலைமையில் அரச ஆணையம் (ராயல் கமிஷன்) நிறுவப்பட்ட ஆண்டு
1909 | |
1911 | |
1912 | |
1913 |
Question 88 Explanation:
(குறிப்பு: இதன் உறுப்பினர்களாக இந்தியர்களான கோபால கிருஷ்ண கோகலே, சர் அப்துர்ரஹீம் மற்றும் நான்கு ஆங்கிலேயர்களும் இடம்பெற்றிருந்தனர்.)
Question 89 |
இஸ்லிங்டன் பிரபுவின் தலைமையில் அமைக்கப்பட்ட அரச ஆணையம் எப்போது தனது பரிந்துரையை வெளியிட்டது?
1912 | |
1914 | |
1916 | |
1917 |
Question 89 Explanation:
(குறிப்பு: இதன் பரிந்துரைகள் இந்தியர்களின் கோரிக்கையை ஓரளவிற்கு பூர்த்தி செய்வதாக இருந்தது மட்டுமல்லாமல் குடிமை பணி தேர்வை இந்திய மயமாக்கியது.)
Question 90 |
மாண்டேகு மற்றும் செம்ஸ்போர்டு ஆகியோர், 1918ல் இந்திய ஆட்சிப் பணியில ___________ சதவீத இந்தியர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.
25% | |
28% | |
33% | |
50% |
Question 90 Explanation:
(குறிப்பு: படிப்படியாக இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் இவர்கள் பரிந்துரைத்தனர்.)
Question 91 |
லீ பிரபு தலைமையிலான அரச ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது?
1918 | |
1921 | |
1923 | |
1925 |
Question 91 Explanation:
(குறிப்பு: இந்த ஆணையம் இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய காடுகள் பணி ஆகிய அனைத்து நியமனங்களும் இந்தியாவுக்கான அரசுச் செயலரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.)
Question 92 |
__________ சட்டம் மத்தியில் கூட்டாட்சி அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒன்றும், மாகாணங்களில்-மாகாண அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒன்றும் உருவாக வழிவகை செய்தது.
1793 பட்டயச் சட்டம் | |
1858 இந்திய அரசுச் சட்டம் | |
1935 இந்திய அரசுச் சட்டம் | |
1833 பட்டயச் சட்டம் |
Question 92 Explanation:
(குறிப்பு: ஒரு சில மாகாணங்கள் ஒன்றிணைந்து மாகாண அரசுப் பணியாளர் தேர்வாணையம் உருவாக்கவும் இச்சட்டம் வழிவகை செய்தது.)
Question 93 |
- கூற்று 1: பிரிட்டிஷ் இந்திய நிர்வாகத்தின் இரண்டாவது முக்கிய தூணாக இராணுவம் விளங்கியது.
- கூற்று 2: ஆங்கிலேயர்கள் ஆரம்ப காலத்தில் வங்காளம், பம்பாய், மதராஸ் ஆகிய மூன்று மாகாணங்களிலும் தனித்தனியாக மூன்று படைப்பிரிவை ஏற்படுத்தியிருந்தனர்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 93 Explanation:
(குறிப்பு: கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய இராணுவத்திற்கு ஆட்களைச் சேர்த்தது, அதற்கு சிப்பாய் இராணுவம் என்று பெயர்.)
Question 94 |
1857 ஆம் ஆண்டு கம்பெனி இராணுவம் ___________ சதவீத இந்தியர்களை கொண்டதாக இருந்தது.
50% | |
65% | |
75% | |
86% |
Question 94 Explanation:
(குறிப்பு: இராணுவத்தில் இந்தியர்களுக்கான உயர் பதவி சுபேதார் மட்டுமே ஆகும்.)
Question 95 |
1857ல் இந்திய இராணுவத்தில் 3, 11,400 வீரர்களில் __________ வீரர்கள் இந்தியர்களாக இருந்தனர்.
1,50,000 | |
1,75,900 | |
2,65,900 | |
2,50,000 |
Question 95 Explanation:
(குறிப்பு: பிளாசிப் போரில் (1757) ஐரோப்பிய காலாட்படை-1950, ஐரோப்பிய பீரங்கி படை-100, ஆங்கிலேய மாலுமிகள்-50, இந்திய சிப்பாய்கள்-2100, வங்காளத்தில் இருந்த ஆங்கில இராணுவம்- 6000 ஆகியவை ஆங்கில இராணுவத்தின் வலிமையாக இருந்தன.)
Question 96 |
__________ ஆண்டு வங்காளத்தில் திவானி (வரிவசூல்) உரிமையை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி பெற்றது.
1755 | |
1758 | |
1765 | |
1768 |
Question 96 Explanation:
(குறிப்பு: இந்த சமயத்தில் சர்க்கார் (கிராம மாவட்டங்கள்) என்ற ஆட்சி பிரிவுக்கு பொறுப்பு பெளஜ்தார் வசம் முகலாய காவல்துறை சென்றது.)
Question 97 |
கொத்வால் என்பவர் ___________ ஆவார்.
மாவட்ட ஆட்சியர் | |
நகரங்களை நிர்வகிக்கும் காவல் அலுவலர் | |
கிராம அளவிலான காவலாளி | |
ஜமீன்தார்கள் |
Question 97 Explanation:
(குறிப்பு: கிராமங்கள் கிராம காவலாளிகளால் பாதுகாக்கப்பட்டது அவர்களை ஜமீன்தார்கள் சம்பளம் வழங்கி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.)
Question 98 |
இந்தியாவில் முதன்முதலில் காவல் துறையை உருவாக்கியவர் யார்?
வாரன்ஹேஸ்டிங்ஸ் | |
இராபர்ட் கிளைவ் | |
காரன்வாலிஸ் | |
வெல்லெஸ்லி பிரபு |
Question 98 Explanation:
(குறிப்பு: காரன்வாலிஸ் ‘தரோகா’ என்பவரை தலைவராக கொண்ட சரகங்கள் அல்லது 'தானாக்கள்' என்ற காவல் பகுதிகளை உருவாக்கினார்.)
Question 99 |
ஜமீன்தார்களை காவல் பணிகளிலிருந்து விடுவித்த காரன்வாலிஸ் ___________ ல் முறையான காவல் துறையை உருவாக்கினார்.
1782 | |
1785 | |
1789 | |
1791 |
Question 100 |
கிராமத்தை பரம்பரையாக நிர்வகித்து வந்த காவலர்கள் ___________ என்றழைக்கப்பட்டனர்.
ஜமீன்தார்கள் | |
கொத்வால் | |
செளகிதார்கள் | |
தரோகா |
Question 100 Explanation:
(குறிப்பு: காவல்துறை உருவாக்கப்பட்டப் பிறகு பெருநகரங்களில் பழைய முறையான கொத்வால் காவல் பணியே தொடர்ந்தது.)
Question 101 |
தரோகா முறை__________ ஆண்டு மதராஸ் மாகாணத்திற்கும் விரிவுப்படுத்தப்பட்டது.
1799 | |
1800 | |
1801 | |
1802 |
Question 101 Explanation:
(குறிப்பு: ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு தரோகா நியமிக்கப்பட்டார்.)
Question 102 |
- கூற்று 1: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவி உருவாக்குவதற்கு முன்னர், அனைத்து தானாக்களும் மாவட்ட நீதிபதியின் பொது மேற்பார்வையில் இருந்தது,
- கூற்று 2: 1806ல் ஒவ்வொரு தானாவிற்கும் ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டார்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 102 Explanation:
(குறிப்பு: 1808 ல் ஒவ்வொரு தானாவிற்கும் ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டார். காவல் துறையை நிர்வகிக்கும் பொறுப்பு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.)
Question 103 |
___________ ஆண்டு இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு வரிவசூல் செய்வதையும், நீதி வழங்கும் அதிகாரத்தையும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஏற்றுக்கொண்டது.
1762 | |
1768 | |
1770 | |
1772 |
Question 103 Explanation:
(குறிப்பு: இதன் விளைவாக சிவில் நீதிமன்றம் என்றழைக்கப்பட்ட திவானி அதாலத் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் என்றழைக்கப்பட்ட பெளஜ்தாரி அதாலத் ஆகியன ஏற்படுத்தப்பட்டன.)
Question 104 |
__________ சட்டத்தின்படி கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது.
1793 பட்டயச் சட்டம் | |
1858 இந்திய அரசுச் சட்டம் | |
1935 இந்திய அரசுச் சட்டம் | |
1773 ஒழுங்குமுறைச் சட்டம் |
Question 104 Explanation:
(குறிப்பு: இந்நீதிமன்றத்திற்கு ஒரு முதன்மை நீதிபதியையும் மூன்று துணை நீதிபதிகளையும் பிரிட்டிஷ் மன்னர் நியமித்தார்.)
Question 105 |
கல்கத்தாவில் உள்ள உச்சநீதிமன்றத்தின் மாதிரியில் __________ ஆண்டு முறையே மதராசிலும் பம்பாயிலும் உச்சநீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.
1783, 1823 | |
1823, 1824 | |
1828, 1829 | |
1828, 1829 |
Question 105 Explanation:
(குறிப்பு: 1861 ஆம் ஆண்டு இந்திய உயர்நீதிமன்றச் சட்டத்தின்படி கல்கத்தா, பம்பாய், மதராஸ் ஆகிய இடங்களில் பழைய உச்சநீதிமன்றங்களுக்கு பதிலாக மூன்று உயர்நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.)
Question 106 |
__________ ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு ஜூரி முறையை வங்காளத்தில் கொண்டுவந்தார்.
1823 | |
1828 | |
1832 | |
1837 |
Question 106 Explanation:
(குறிப்பு: சட்டங்களை தொகுக்க இந்திய சட்ட ஆணையம் ஒன்றும் அமைக்கப்பட்டது.)
Question 107 |
- கூற்று 1: வாங்காளத்தின், வில்லியம் கோட்டையில் முதல் உச்சநீதிமன்ற நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.
- கூற்று 2: மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி சர் திருவாரூர் முத்துசாமி ஆவார்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 108 |
இந்தியாவில் இருந்த சுதேச அரசுகளை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் கொண்டுவர ___________ ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே துணைப்படைத் திட்டமாகும்.
வாரன்ஹேஸ்டிங்ஸ் | |
இராபர்ட் கிளைவ் | |
காரன்வாலிஸ் | |
வெல்லெஸ்லி பிரபு |
Question 108 Explanation:
(குறிப்பு: இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை விரிவுபடுத்தவும் அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்தவும் இத்திட்டம் மிகச்சிறந்த கருவியாக பயன்படுத்தப்பட்டது.)
Question 109 |
துணைப்படைத் திட்டத்தின் அம்சங்களில் தவறானதை தேர்ந்தெடு.
- இத்திட்டத்தில் இணையும் இந்திய அரசர் தன்னுடைய படையை கலைத்து விட்டு ஆங்கிலேயரின் படையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- சுதேச அரசின் தலைமையகத்தில் ஆங்கிலேயரின் பிரதிநிதி ஒருவர் இருப்பார்.
- ஆங்கிலேயரின் படையை பராமரிக்கவும், படை வீரர்களின் ஆண்டுச் சம்பளம் வழங்குவதற்காகவும், நிரந்தரமாக சில பகுதிகளை அந்நாட்டு அரசர் ஆங்கிலேயருக்கு வழங்க வேண்டும்.
- ஆங்கிலேயரைத் தவிர மற்ற ஐரோப்பிய அலுவலர்கள் அனைவரும் அந்நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்.
4 மட்டும் தவறு | |
3, 4 தவறு | |
2 மட்டும் தவறு | |
எதுவுமில்லை |
Question 109 Explanation:
(குறிப்பு: சுதேச நாட்டு அரசர் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அனுமதி பெற்ற பின்னரே அயல்நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்.)
Question 110 |
'இந்தியாவில் ஆங்கிலேய பேரரசு’ என்பதை 'இந்தியாவின் ஆங்கிலேய பேரரசு’ என்று மாற்றியவர் _________.
வாரன்ஹேஸ்டிங்ஸ் | |
டல்ஹெளசி | |
காரன்வாலிஸ் | |
வெல்லெஸ்லி பிரபு |
Question 110 Explanation:
(குறிப்பு: வெல்லெஸ்லி பிரபுவின் துணைப்படைத்திட்டம் என்ற இராஜதந்திர முயற்சி ஆங்கிலேயரை இந்தியாவில் தலையாய சக்தியாக மாற்றியது.)
Question 111 |
துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் நாடு எது?
அயோத்தி | |
ஹைதராபாத் | |
ஜெய்பூர் | |
ஜோத்பூர் |
Question 111 Explanation:
(குறிப்பு: 1798 ஆம் ஆண்டு ஹைதராபாத் துணைப்படைத் திட்டத்தில் இணைந்தது.)
Question 112 |
தவறான இணையைத் தேர்ந்தெடு. (துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட நாடுகள் - ஆண்டு)
- தஞ்சாவூர்-1799
- அயோத்தி-1801
- பேஷ்வா-1802
- போன்ஸ்லே-1804
- இந்தூர்-1818
2, 3 தவறு | |
3 மட்டும் தவறு | |
4, 5 தவறு | |
எதுவுமில்லை |
Question 112 Explanation:
(குறிப்பு: போன்ஸ்லே - 1803, குவாலியர் - 1804, இந்தூர் - 1817, ஜெய்பூர், உதய்பூர் மற்றும் ஜோத்பூர்-1818.)
Question 113 |
டல்ஹெளசி பிரபு வாரிசு இழப்புக் கொள்கையை அறிவித்த ஆண்டு
1828 | |
1832 | |
1837 | |
1848 |
Question 113 Explanation:
(குறிப்பு: இக்கொள்கையின்படி, சுதேச மன்னர்கள் ஆங்கிலேயரின் அனுமதி இன்றி வாரிசுகளை தத்தெடுக்க நேரிடும்போது, மன்னரின் சொத்துக்கள் தத்தெடுத்த பிள்ளைக்கும், மன்னரின் ஆட்சிப்பகுதி ஆங்கிலேயரின் தலையாய சக்திக்கும் செல்ல நேரிடும் எனப்பட்டது.)
Question 114 |
தவறான இணையைத் தேர்ந்தெடு. (வாரிசு இழப்புக் கொள்கை மூலம் இணைக்கப்பட்ட நாடு - இணைக்கப்பட்ட ஆண்டு)
- சதாரா – 1848
- ஜெய்த்பூர், சம்பல்பூர் – 1849
- பகத் -1850
- உதய்பூர்-1852
- ஜான்சி – 1853
- நாக்பூர்-1854
2, 3, 4 தவறு | |
2 மட்டும் தவறு | |
4 மட்டும் தவறு | |
எதுவுமில்லை |
Question 114 Explanation:
(குறிப்பு: வாரிசு இழப்புக்கொள்கை, 1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.)
Question 115 |
மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா __________.
பாலாஜி விஸ்வநாத் | |
இரண்டாம் பாஜிராவ் | |
பாலாஜி பாஜிராவ் | |
பாஜிராவ் |
Question 116 |
பொருத்துக.
- அய்-லா-சப்பேல் உடன்படிக்கை i) முதல் ஆங்கிலேய மைசூர் போர்
- சால்பை உடன்படிக்கை ii) முதல் கர்நாடகப் போர்
- பாரிசு உடன்படிக்கை iii) மூன்றாம் கர்நாடகப் போர்
- ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை iv) முதல் மராத்திய போர்
- மெட்ராஸ் உடன்படிக்கை v) மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்
ii i v iv iii | |
iii iv i ii v | |
ii iv iii v i | |
iii v ii i iv |
Question 117 |
பொருத்துக.
- அடையாறு போர் i) 1746
- ஆம்பூர் போர் ii) 1749
- வந்தவாசி போர் iii) 1760
- ஆற்காட்டு போர் iv) 1751
ii i iii iv | |
v ii i iii | |
i ii iii iv | |
i iii iv ii |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 117 questions to complete.