Online TestTamil

7th Std Tamil Notes Online Test – Part 9

ஏழாம் வகுப்பு - சமச்சீர் பொதுத்தமிழ் (பாடம் 9)

Congratulations - you have completed ஏழாம் வகுப்பு - சமச்சீர் பொதுத்தமிழ் (பாடம் 9). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இனிமைத் தமிழ்மொழி எமது – எமக்கு; இன்பந் தரும்படி வாய்த்தநல் அமுது ; கனியைப் பிழிந்திட்ட சாறு – எங்கள்; கதியில் உயர்ந்திடயாம் பெற்ற பேறு ! - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 1 Explanation: 
குறிப்பு :- இப்பாடல் பாரதிதாசன் கவிதைகள் என்னும் கவிதைத் தொகுதியில் எங்கள் தமிழ் என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.
Question 2
தனிமைச் சுவையுள்ள சொல்லை – எங்கள் ; தமிழினும் வேறெங்கும் யாங்கண்ட தில்லை ; நனியுண்டு நனியுண்டு காதல் – தமிழ்; நாட்டினர் யாவர்க்கு மேதமிழ் மீதில் ( இனிமைத் )  - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 2 Explanation: 
குறிப்பு :- இப்பாடல் பாரதிதாசன் கவிதைகள் என்னும் கவிதைத் தொகுதியில் எங்கள் தமிழ் என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.
Question 3
தமிழ் எங்கள் உயிர்என்ப தாலே – வெல்லுந்; தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே; தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் – இன்பத்; தமிழ்குன்று மேல்தமிழ் நாடெங்கும் இருளாம் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 3 Explanation: 
குறிப்பு :- இப்பாடல் பாரதிதாசன் கவிதைகள் என்னும் கவிதைத் தொகுதியில் எங்கள் தமிழ் என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.
Question 4
தமிழுண்டு தமிழ்மக்க ளுண்டு – இன்பத்; தமிழுக்கு நாளும்செய் வோம்நல்ல தொண்டு; தமிழ்என்று தோள்தட்டி ஆடு – நல்ல; தமிழ்வெல்க வெல்க என்றே தினம்பாடு ( இனிமைத் ) - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 4 Explanation: 
குறிப்பு :- இப்பாடல் பாரதிதாசன் கவிதைகள் என்னும் கவிதைத் தொகுதியில் எங்கள் தமிழ் என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.
Question 5
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
கதி – பகை
B
பேறு – செல்வம்
C
நனி – மிகுதி (மிக்க)
D
தரம் – தகுதி
Question 5 Explanation: 
குறிப்பு :- கதி – துணை
Question 6
சுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் உடைய கவிஞர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 6 Explanation: 
குறிப்பு :- சுப்புரத்தினம், பாரதியார்மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன் எனத் தன்பெயரை மாற்றி அமைத்துக்கொண்டார்.
Question 7
பாரதிதாசன் அவர்களின் பெற்றோர் பெயர் என்ன?
A
வெங்கட்ராமன் - அம்மணியம்மாள்
B
சாத்தப்பன் - விசாலாட்சி
C
அய்யாதுரை - மிளகாயிஅம்மாள்
D
கனகசபை - இலக்குமி அம்மாள்
Question 8
இந்த கூற்று யாருடன் தொடர்புடையது? தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை மிக்கவர். குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, சேர தாண்டவம்,இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குறிஞ்சி திட்டு, அழகின் சிறப்பு, தமிழியக்கம் முதலியன.
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 9
பாரதிதாசன் அவர்களின் காலம்?
A
29.04.1891 – 21.04.1964
B
29.04.1892 – 21.04.1965
C
29.04.1893 – 21.04.1966
D
29.04.1894 – 21.04.1967
Question 10
வீழ்ந்து வெண்மழை தவழும் விண்ணுறு பெருவரை; பெரும்பாம்பு ஊழ்ந்து தோலுரிப் பனபோல் ஒத்த மற்றவற் றருவி; - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
B
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
C
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர்
D
கம்பராமாயணம், கம்பர்
Question 11
தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின் மதுகரம் பாடச்  சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத் தனவே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
B
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
C
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர்
D
கம்பராமாயணம், கம்பர்
Question 12
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
விண் – வானம்
B
வரை – மலை
C
முழவு – காடு
D
மதுகரம் – தேன் உண்ணும் வண்டு
Question 12 Explanation: 
குறிப்பு :- முழவு – மத்தளம்
Question 13
திருத்தக்கதேவர் ------------------- அரச குலத்தில் பிறந்தவர்.
A
சேரர்
B
சோழர்
C
பாண்டியர்
D
பல்லவர்
Question 14
திருத்தக்கதேவர் ----------------------- சமயத்தைச் சார்ந்தவர்.
A
சமணம்
B
புத்தம்
C
கிறித்துவம்
D
ஜொராஸ்டிரியம்
Question 15
திருத்தக்கதேவர் அவர்களின் காலம்?
A
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
B
கி.பி. பத்தாம் நூற்றாண்டு
C
கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டு
D
கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
Question 16
நரி விருத்தம் - என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
இளங்கோவடிகள்
B
சீத்தலைச்சாத்தனார்
C
திருத்தக்கதேவர்
D
கம்பர்
Question 17
----------------- நூல்களுள் ஒன்று சீவகசிந்தாமணி.
A
எட்டுத்தொகை
B
பத்துப்பாட்டு
C
ஐம்பெரும் காப்பியங்கள்
D
ஐம்சிறும் காப்பியங்கள்
Question 18
கீழ்க்கண்ட நூல்களுள் 'மணநூல்' - என வழங்கப்படும் நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
சீவகசிந்தாமணி
D
கம்பராமாயணம்
Question 19
திருத்தக்கதேவர் இயற்றிய வேறு நூல்?
A
கரி விருத்தம்
B
நரி விருத்தம்
C
பரி விருத்தம்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 20
காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்தகலை ------------?
A
பேச்சுக்கலை
B
நடிப்புக்கலை
C
ஓவியக்கலை
D
இவற்றில் ஏதுமில்லை
Question 21
தமிழ்நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன. தாம் வரைந்த ஓவியங்களை முதலில் கண்ணெழுத்து என்றே வழங்கியுள்ளனர். தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொருள் இருந்ததனை ---------------- மற்றும் ----------------- செய்யுள் அடிகள் தெளிவுபடுத்துகின்றன.
A
பரிபாடல், குறுந்தொகை
B
புறநானூறு, அகநானூறு
C
நற்றிணை, கலித்தொகை
D
ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து
Question 22
------------- மொழியிலும் எழுத்துகள் உருவங்களாக உள்ளன.
A
எகிப்து
B
சீன
C
ஆப்பிரிக்க
D
ஆங்கில
Question 23
ஓவியம் வரைவதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படையாகும். இவ்வாறு வரையப்படுபவை ------------------------ எனப்படும்.
A
காலஓவியங்கள்
B
கைஓவியங்கள்
C
கோட்டோவியங்கள்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 24
--------------------- நடுகல் வணக்கம் பற்றிக் கூறுகிறது.
A
அகத்தியம்
B
தொல்காப்பியம்
C
திருக்குறள்
D
இராமாயணம்
Question 25
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது? ஓவியக்கலை ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், பாடம், படாம், வட்டிகைச்செய்தி எனப் பல பெயர்களால் வழங்கப்பெற்றது.
A
படம்
B
பாடம்
C
படாம்
D
வட்டிகைச்செய்தி
Question 26
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது? ஓவியக் கலைஞர் ஓவியர், ஓவியப்புலவன், ஓவிய விசித்திரன், கண்ணுள் வினைஞன், சித்திரக்காரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன் என அழைக்கப்பட்டார்.
A
ஓவியப்புலவன்
B
ஓவிய விசித்திரன்
C
கண்ணுள் வினைஞன்
D
சித்திரக்காரர்
Question 27
ஓவியர் எண்ணங்களின் எழுச்சியைப் பல வண்ணங்களின் துணைகொண்டு எழுதுவோராதலின் ----------------------- எனப் புகழ்பெற்றார்.
A
ஓவியப்புலவன்
B
ஓவிய விசித்திரன்
C
கண்ணுள் வினைஞர்
D
சித்திரக்காரர்
Question 28
--------------- என்பவர், தம் உரையில் ஓவியருக்கு, 'நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்' என இலக்கணம் வகுத்திருப்பது எத்துணைப் பொருத்தம் பார்த்தீர்களா?
A
கம்பர்
B
சடையப்ப வள்ளல்
C
நச்சினார்க்கினியர்
D
உமறுப்புலவர்
Question 29
ஓவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்றுப் புலமைபெற்ற ஆசிரியர் ------------------ எனப் போற்றப்பட்டார்.
A
ஓவிய விசித்திரன்
B
ஓவியக் கவி
C
ஓவியச் சக்கரவர்த்தி
D
ஓவியப் புலவன்
Question 30
ஓவியக் கலைஞர் குழுவை ----------------- என்றழைத்தனர்.
A
ஓவிய தாசர்கள்
B
ஓவிய சித்திரர்கள்
C
ஓவிய குருக்கள்
D
ஓவிய மாக்கள்
Question 31
ஆண் ஓவியர் ------------------------ என அழைக்கப்பெற்றார்.
A
சித்திராங்கதன்
B
சிம்ம சித்திரன்
C
சித்திர தாசன்
D
சித்திர வினைஞன்
Question 32
பெண் ஓவியர் ------------------------ என அழைக்கப்பெற்றார்.
A
சித்திரசேனா
B
ஓவியா
C
விசித்திரகை
D
விசித்திரா
Question 33
ஆடல் மகள் மாதவி, 'ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள்' என ----------------- நூல் கூறுகிறது
A
மணிமேகலை
B
சீவகசிந்தாமணி
C
சிலப்பதிகாரம்
D
பெரியபுராணம்
Question 34
பல்வகைக் காட்சிகள், உருவகங்கள் வரைய ஓவியர் அக்காலத்தில் பல்வகைக் கருவிகளைப் பயன்படுத்தினர். வண்ணந்தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை, வட்டிகை எனப்பட்டது. வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு -------------------- எனப் பெயரிட்டிருந்தனர்.
A
வட்டிகை புத்தகம்
B
வட்டிகை இடம்
C
வட்டிகை தூண்
D
வட்டிகைப் பலகை
Question 35
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது? அக்காலத்தில் ஓவியங்கள் வரைவதற்கென்று தனியே இடங்கள் அமைந்து இருந்தன. இங்கனம் ஓவியம் வரையப்பட்ட இடங்கள் சித்திரக்கூடம், சித்திரைச் சாலை, சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம் என வழங்கப்பட்டன.
A
சித்திரக்கூடம்
B
சித்திரைச் சாலை
C
சித்திரமாடம்
D
எழுதுநிலை மண்டபம்
Question 36
அக்காலத்தில் நடனம் புரிவதற்கே -------------- ஒன்றனை ஏற்படுத்தியுள்ளனர்.
A
நடன புரி
B
நடனச் சாலை
C
சித்திர சபை
D
நடனக் கூடம்
Question 37
----------------- நூலில், 'ஓவத்தனைய இடனுடை வனப்பு' என வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஒப்ப வைத்துக் கவிஞர் போற்றுகிறார்.
A
சிலப்பதிகாரம்
B
சீவகசிந்தாமணி
C
புறநானூறு
D
கலித்தொகை
Question 38
சுடுமண் சுவர்மீது வெண்சுதை பூசிச் செஞ்சாந்து கொண்டு ஓவியங்கள் தீட்டினர். - இங்கு 'வெண்சுதை' என்பது எதனைக் குறிக்கிறது?
A
களிமண்
B
வண்டல் மண்
C
சுண்ணாம்பு
D
செங்கல்
Question 39
மரப்பலகை, துணிச்சீலை, திரைச்சீலைகளில் ஓவியம் எழுதினர். நாடகமேடைகளில் பல வண்ணங்களில் கவின்மிகு காட்சிகள் தீட்டப்பட்ட திரைச்சீலைகள் தொங்கினவற்றை ---------------- கொண்டு அறிகிறோம்.
A
நாடகக் காட்சிகள்
B
முன்னோர் கதைகள்
C
ஓவிய எழினி
D
பாறைகள்
Question 40
வண்ணங்கலவாமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதனை ------------------ என்றழைத்தனர்.
A
கோட்டோவியம்
B
சுவரோவியம்
C
புனையா ஓவியம்
D
வண்ண ஓவியம்
Question 40 Explanation: 
குறிப்பு - வண்ணங்கலவாமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதனைப் புனையா ஓவியம் என்றழைத்தனர். இன்றும், இது மென்கோட்டு ஓவியமாக நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Question 41
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது? இயற்கைக் காட்சிகள், நினைவுகள், கற்பனைக் காட்சிகள், சமுதாய வாழ்க்கை முறைமை, இதிகாச புராணக்கதைகள் என்பன ஓவியத்திற்குரிய கருப்பொருள்களாயின.
A
இயற்கைக் காட்சிகள்
B
நினைவுகள்
C
கற்பனைக் காட்சிகள்
D
சமுதாய வாழ்க்கை முறைமை
Question 42
ஓவியர்கள் சோதிடக்கலை, வானநூல், கதைகள் முதலியவற்றைக் கற்றுணர்ந்து செவ்வனே சித்திரம் தீட்டினர். ஆடு முதலான பன்னிரண்டு இராசிகளையும், விண்மீன்களையும் வரைந்த செய்தி -------------------- என்னும் சங்க நூல் தரும் அரிய செய்தியாகும்.
A
பரிபாடல்
B
பதிற்றுப்பத்து
C
கலித்தொகை
D
நெடுநல்வாடை
Question 42 Explanation: 
குறிப்பு :- ஓவியங்களில் நிற்றல், இருத்தல், கிடத்தல் ஆகிய மனித இயல்புகளையும் வீரம், அமைதி, சினம், வியப்பு, உவகை முதலிய மெய்ப்பாடுகளையும் உத்தமம், மத்திமம், அதமம் மற்றும் தசதாளம், நவதாளம், பஞ்சதாளம் முதலிய அளவுகளையும் வலியுறுத்துவது தமிழருக்கே உரிய ஓவிய மரபுகளாக விளங்குகின்றன.
Question 43
சங்க காலத்தில் செழித்திருந்த ஓவியக்கலை இடைக்காலத்தில் சிதைந்து மறைந்து போகத் தொடங்கியது. மறைந்து கொண்டிருந்த ஓவியக்கலைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டியவர்கள் ----------------- பேரரசர்களாவர்.
A
சேரர்
B
சோழர்
C
பாண்டியர்
D
பல்லவர்
Question 44
----------------- ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட முதலாம் மகேந்திரவர்ம பல்லவன், கலையார்வம்  மிக்கவன்.
A
கி.பி. 7
B
கி.பி. 8
C
கி.பி. 9
D
கி.பி. 10
Question 45
கீழ்க்கண்ட கூற்று எந்த மன்னனைப் பற்றியது? இவர் காலத்தில் ஓவியக்கலை எழுச்சியுற்று உயர்நிலையை எட்டியது. இம்மன்னனே சிறந்த ஓவியனாகப் புகழ்பெற்றிருந்தான். கல்வெட்டுகள் இம்மன்னனைச் சித்திரக்காரப்புலி எனப் புகழ்கின்றன. தட்சிணசித்திரம் என்னும் ஓவிய நூலுக்கு இம்மன்னன் உரை எழுதியுள்ளான்.
A
முதலாம் மகேந்திரவர்மன்
B
இரண்டாம் மகேந்திரவர்மன்
C
முதலாம் நரசிம்மவர்மன்
D
இரண்டாம் நரசிம்மவர்மன்
Question 46
பனமலை, திருமலை, மாமல்லபுரக் குகைக்கோவில், மாமண்டூர், காஞ்சிக் கைலாசநாதர் கோவில் முதலிய இடங்களில் ---------------------- கால ஓவியங்கள் சிதைந்த தோற்றத்துடன் காணப்படுகின்றன.
A
சேரர்
B
சோழர்
C
பாண்டியர்
D
பல்லவர்
Question 46 Explanation: 
குறிப்பு :- பார்வதி உருவம், கின்னரர், கின்னரி, கந்தர்வர் ஓவியங்கள் காண்போரை மயக்குவன.
Question 47
திருநந்திக்கரையில் --------------- கால ஓவியங்கள் கிடைத்துள்ளன.
A
சேரர்
B
சோழர்
C
பாண்டியர்
D
பல்லவர்
Question 48
புதுக்கோட்டைக்கு அருகே சித்தன்னவாசல் என்னும் குகைக்கோவில் ஓவியங்கள், ஓவியக் கருவூலங்களாக வைத்துப் போற்றத்தகுந்தன. ------------------------- அவனிப சேகர ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய மன்னன் காலத்தில், மதுரை ஆசிரியர் இளம்கௌதமன் இவ்வோவியங்களை வரைந்தார் எனக் கல்வெட்டுச் செய்தி அறிவிக்கின்றது. அங்குள்ள தாமரைத்தடாகம், ஆடல் அணங்குகள், அரசன், அரசி ஓவியங்கள் நம் கண்ணைக் கவர்வன.
A
கி.பி. ஆறாம் நூற்றாண்டில்
B
கி.பி. ஏழாம் நூற்றாண்டில்
C
கி.பி. எட்டாம் நூற்றாண்டில்
D
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில்
Question 49
--------------- கால வனப்பு மிக்க ஓவியங்களைத் தஞ்சைப் பெரிய கோவிலில் கண்டு மகிழலாம். அவற்றிலுள்ள கவின்மிகு கயிலைக்காட்சி கண்களுக்கு விருந்தளிப்பன. சேரமான், சுந்தரர் கயிலைசெல்லும் காட்சி, சிவபெருமான் முப்புரம் எரித்த காட்சி, சுந்தரரைத் தடுத்தாளும் கோலம், நாட்டிய மகளிர், மாமன்னன் இராசராசன், கருவூர்த்தேவர் முதலிய ஓவியங்கள் வரலாற்றுச் சிறப்பை உணர்த்துவன.
A
சேரர்
B
சோழர்
C
பாண்டியர்
D
பல்லவர்
Question 50
திருவரங்கம், திருப்பதி, தில்லை, திருவாரூர், குடந்தை, மதுரை, காஞ்சி முதலிய பல இடங்களில் -------------- மன்னர்களின் ஓவியங்கள் காணப்படுகின்றன.
A
சோழர்
B
மராட்டியர்
C
விசயநகர நாயக்கர்
D
பல்லவர்
Question 51
-------------------- நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் ஓவியக்கலை நன்கு வளர்ச்சி பெற்றது. ஓலைகளிலும், கண்ணாடிகளிலும், தந்தங்களிலும் ஓவியங்கள் தீட்டப்பெற்றன. வண்ணங்களின் வனப்புக்கேற்ப இரத்தினங்கள் பதிக்கப்பெற்றன.
A
கி.பி. பதினான்கு
B
கி.பி. பதினாறு
C
கி.பி. பதினெட்டு
D
கி.பி. பத்தொன்பது
Question 52
கொடைக்குணம் - என்ற கதையின் ஆசிரியர் யார்?
A
ராஜம் கிருஷ்ணன்
B
சி.சு.செல்லப்பா
C
பி.எம்.முத்து
D
கழனியூரன்
Question 53
தோயும் வெண்டயிர் மத்தொலி துள்ளவும்; ஆய வெள்வளை வாய்விட் டரற்றவும்; தேயும் நுண்ணிடை சென்று வணங்கவும்; ஆய மங்கையர் அங்கை வருந்துவார் - இந்த பாடலில் பயின்று வந்துள்ள அணி?
A
ஏகதேச உருவக அணி
B
வேற்றுமை அணி
C
இல்பொருள் உவமை அணி
D
இயல்பு நவிற்சியணி
Question 53 Explanation: 
குறிப்பு :- இயல்பு நவிற்சியணி:- ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளவாறு கூறுவது இயல்பு நவிற்சியணி எனப்படும்.
Question 54
உயரமான மலையை “விண்ணைத் தொடும் மலை என வருணித்தல், உயரமான வைக்கோல் போரை வானை முட்டும் வைக்கோல்போர் என உயர்த்திக் கூறுதல் - ---------------- அணியாகும்.
A
ஏகதேச உருவக அணி
B
வேற்றுமை அணி
C
இல்பொருள் உவமை அணி
D
உயர்வு நவிற்சியணி
Question 54 Explanation: 
குறிப்பு :- உயர்வு நவிற்சியணி:- ஒருபொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது உயர்வு நவிற்சியணி எனப்படும்.
Question 55
பல பொருள்களைத் தொடர்ந்து சொல்லும்போது, ஒவ்வொன்றின் பின்னும் ------------- இடுதல் வேண்டும்.
A
காற்புள்ளி
B
அரைப்புள்ளி
C
முக்காற்புள்ளி
D
முற்றுப்புள்ளி
Question 56
ஓர் எழுவாய், பல பயனிலைகளைக் (வினைமுற்றுகளை) கொண்டு முடியும்பொழுது, ஒவ்வொரு பயனிலைக்குப் பின்னரும் -------------- இடுதல் வேண்டும்.
A
காற்புள்ளி
B
அரைப்புள்ளி
C
முக்காற்புள்ளி
D
முற்றுப்புள்ளி
Question 57
ஓர் எழுத்தையோ சொல்லையோ சொற்றொடரையோ தனியே குறிக்கும் இடத்திலும், ஒரு சொற்றொடரில் நூலின் பெயர், பழமொழி முதலியன வருமிடத்திலும் --------------------- இடுதல் வேண்டும்.
A
ஒற்றை மேற்கோள் குறி (' ')
B
அரைப்புள்ளி
C
முக்காற்புள்ளி
D
முற்றுப்புள்ளி
Question 57 Explanation: 
குறிப்பு :- வண்ணமிடும்போதும், தடித்த எழுத்துகளில் எழுதும்போதும், அடிக்கோடு இடும்போதும் இக்குறி இடத்தேவையில்லை.
Question 58
ஒருவர் கூறியதனை நேர்கூற்றாகக் கூறும்போதும், ஒரு தொடரை மேற்கோளாகக் கூறும்போதும் -------------------- இடுதல் வேண்டும். 
A
இரட்டை மேற்கோள் குறி (" ")
B
ஒற்றை மேற்கோள் குறி (' ')
C
முக்காற்புள்ளி (;)
D
முற்றுப்புள்ளி (.)
Question 59
1901 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் பதினான்காம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று (14.09.1901) பிற்பகலில் மதுரையிலுள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ------------------- தமிழ்ச்சங்கத்தை தோற்றுவித்தார், பாண்டித்துரை.
A
இரண்டாம்
B
மூன்றாம்
C
நான்காம்
D
ஐந்தாம்
Question 60
தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை" - என்ற கூற்று யாருடையது?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
திரு.வி.க
D
மறைமலையடிகள்
Question 61
கல்லும் மலையும் குதித்து வந்தேன் - பெருங்; காடும் செடியும் கடந்து வந்தேன்; எல்லை விரிந்த சமவெளி - எங்கும் நான்; இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
திரு.வி.க
D
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
Question 62
காயும் நிலத்தழல் ஆற்றிவந்தேன்-அதில்; கண்குளிரப் பயிர் கண்டுவந்தேன்!; ஆயும் மலர்ப்பொழில் செய்துவந்தேன்-அங்கென்; ஆசை தீரவிளை யாடிவந்தேன் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
திரு.வி.க
D
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
Question 63
ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல; ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்; ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்; ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
திரு.வி.க
D
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
Question 64
முல்லைக்கொடியின் கொழுகொம்பு பெறாத திகைப்பைக் கண்ணால் கண்டபின், தன் செல்வநிலையும், வாழ்வும் மறந்து, அதற்கு உதவுதலே உணர்வாய்த் தான் ஊர்ந்து வந்த தேரை அங்கு அதற்கு உரியதாக நிறுத்தி வந்தான் பாரி என்னும் வள்ளல் - இந்த கூற்று யாருடையது?
A
பாரதிதாசன், பாண்டியன் பரிசு
B
மு.வரதராசனார் , தமிழ் நெஞ்சம்
C
திரு.வி.க, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 65
கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?
A
இரவலர்க்குக் குதிரைகளை வழங்கி நாட்டையும் நல்கியவன் ராஜேந்திர சோழன் என்னும் வள்ளல்
B
நீலநிறப் பட்டாடையை ஆலமர் செல்வனுக்குக் கொடுத்து வேண்டிய பொருள்களையும் ஊர்களையும் வந்தவர்க்கு எல்லாம் வழங்கி, எல்லாம் இழந்தவன் ஆய் என்னும் வள்ளல்
C
பெறுதற்கு அரிதாய் வாழ்நாள் வளர்ச்சிக்கு உரியதாய் பெற்ற நெல்லிக்கனியையும் தான் உண்ணக் கருதாமல், புலவர் நெடிது வாழ விழைந்து கொடுத்து மகிழ்ந்தவன் அதியமான்
D
நண்பர்தம் இல்லறம் நடத்தற்கு வேண்டுவன நல்கிப் புகழ் பெற்றவன் நள்ளி. கூத்தர் தம் கலை வாழ அவர்க்கு நாடு கொடுத்துக் களித்தவன் ஓரி
Question 65 Explanation: 
குறிப்பு :- இரவலர்க்குக் குதிரைகளை வழங்கி நாட்டையும் நல்கியவன் காரி என்னும் வள்ளல்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 65 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!