Online TestTamil

Group 4 VAO General Tamil Model Test 17

Group 4 VAO General Tamil Model Test 17

Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 17. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனியொரு மொழிக்குடும்பத்தை சேர்ந்தவை என்ற கருத்தை முன் வைத்தவர்?
A
குமரிலபட்டர்
B
ஈராஸ் பாரதியார்
C
ஹோக்கன்
D
பிரான்சிஸ் எல்லிஸ்
Question 2
இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்"  என்று கூறும் இலக்கண நூல்?
A
தொல்காப்பியம்
B
சேந்தன் திவாகரம்
C
பிங்கல நிகண்டு
D
தண்டி அலங்காரம்
Question 3
புலவர்கள் கண்டடைந்த குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக தமிழ் எத்தனை வண்ணங்களைக் கொண்டுள்ளது
A
பத்து
B
நூறு
C
ஐம்பது
D
ஒன்பது
Question 4
தூது இலக்கியத்தின் பா வகை?
A
நேரிசை வெண்பா
B
இன்னிசை சிந்தியல் வெண்பா
C
வஞ்சிப்பா
D
கலி வெண்பா
Question 5
அன்பரசன் நல்ல பையன் - இத்தொடரில் நல்ல என்பது?
A
வினையடை
B
பெயரடை
C
பெயர்ப்பயனிலை
D
வினைப்பயனிலை
Question 6
அண்ணனோடு வருவான் -என்பது எவ்வகை தொடர்?
A
எழுவாய்த்தொடர்
B
தெரிநிலை பெயரெச்சத்தொடர்
C
வேற்றுமைத்தொடர்
D
விளித்தொடர்
Question 7
Morpheme என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை தேர்க.
A
ஒலியன்
B
புற அமைப்பு
C
உள்ளமைப்பு
D
உருபன்
Question 8
திடலில் மிதி வண்டியை ஓட்டினேன் என்பது எவ்வகை வினை?
A
தன் வினை
B
பிற வினை
C
காரண வினை
D
செயப்பாட்டு வினை
Question 9
குளிர்த்தல் என்பதே குளித்தல் என்றாயிற்று என்று விளக்கம் தந்தவர்?
A
தொ. பரமசிவன்
B
ந.மு. வேங்கடசாமி நாட்டார்
C
பண்டிதமணி கதிரேச செட்டியார்
D
வில்லியம் ஜோன்ஸ்
Question 10
கந்தம் என்ற சொல்லின் பொருள் யாது?
A
மணம்
B
கவலை
C
வேல்
D
மேல்
Question 11
மாதவி காவியத்தை இயற்றியவர் யார்?
A
ஈரோடு தமிழன்பன்
B
தமிழ் ஒளி
C
அப்துல் ரகுமான்
D
ஆலந்தூர் கோ.மோகன ரங்கன்
Question 12
சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ அற்று. - இக்குறட்பாவில் பயின்று வரும் அணி எது?
A
உருவக அணி
B
ஏகதேச உருவக அணி
C
எடுத்துக்காட்டு உவமை அணி
D
உவமை அணி
Question 13
செருக்கினால் துன்பம் தந்தவரை எதனால் வெல்ல வேண்டும்?
A
அறிவு
B
செல்வம்
C
வீரம்
D
பொறுமை
Question 14
தமிழில் எழுதப்பட்ட உலகப்பனுவல் எது?
A
தேவாரம்
B
தமிழ் மூவாயிரம்
C
நாலாயிர திவ்விய பிரபந்தம்
D
திருக்குறள்
Question 15
உலகில் முதன் முதலில் இணைய வழி மளிகைக்கடை எந்த நாட்டில் தொடங்கப்பட்டது?
A
இத்தாலி
B
ஜெர்மனி
C
அமெரிக்கா
D
இங்கிலாந்து
Question 16
  • "அறிவியல்  என்னும் வாகனம் மீதில்
  • ஆளும் தமிழை நிறுத்துங்கள்" என்று  கூறியவர் யார்?
A
ஈரோடு தமிழன்பன்
B
தமிழ் ஒளி
C
அப்துல் ரகுமான்
D
வைர முத்து
Question 17
நண்டு எத்தனை அறிவுடைய உயிரிக்கு எடுத்துக்காட்டு?
A
மூன்றறிவு
B
நான்கறிவு
C
ஐந்தறிவு
D
இரண்டறிவு
Question 18
தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண  நூல் எது?
A
அகத்தியம்
B
தண்டி அலங்காரம்
C
தொல்காப்பியம்
D
பிங்கல நிகண்டு
Question 19
இஸ்ரோ வின் தலைவர் பதவி ஏற்ற முதல் தமிழர் யார்?
A
அப்துல் கலாம்
B
மயில்சாமி அண்ணாதுரை
C
சிவன்
D
வளர்மதி
Question 20
இவற்றுள்  எது தென் திராவிட மொழி?
A
கொரகா
B
கோண்டா
C
கோயா
D
கோண்டி
Question 21
யவனப்பிரியா என்று அழைக்கப்படும் பொருள் எது?
A
நெல்
B
மஞ்சள்
C
மிளகாய்
D
மிளகு
Question 22
அரேபியர் வணிகம் செய்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
A
கடை வீதி
B
பந்தர்
C
சந்தை
D
வணிக வீதி
Question 23
"நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்"  என்ற அடிகள் இடம் பெற்ற நூல் எது?
A
பதிற்றுப்பத்து
B
பரிபாடல்
C
புறநானூறு
D
அகநானூறு
Question 24
தொன்மக் கருத்துகளின் அடிப்படையில் எழுதாமல் மக்கள் வாழ்வியல் நெறிகளை வெளிப்படுத்தும்  இலக்கியம் எது?
A
சங்க இலக்கியங்கள்
B
தொல்காப்பியம்
C
சிலப்பதிகாரம்
D
மணிமேகலை
Question 25
பரிதிமாற்கலைஞர் கீழ்க்கண்ட எந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார்?
A
மூதுரை
B
தமிழ் விடு தூது
C
நீதிநெறி விளக்கம்
D
மதுரைக்கலம்பகம்
Question 26
85 என்ற எண்ணுக்கு இணையான தமிழ் எண்ணை தேர்க.
A
V
B
ருஅ
C
உரு
D
கரு
Question 27
" தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்துஎன்  ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே"  என்று வள்ளலார் யாருடைய பாடலை சுவைக்கிறார்?
A
அப்பர்
B
சுந்தரர்
C
மாணிக்கவாசகர்
D
சேக்கிழார்
Question 28
"இணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி"- இவ்வடியில் மடமொழி என்று குறிப்பிடப்படுபவர் யார்?
A
பாஞ்சாலி
B
கண்ணகி
C
கோப்பெருந்தேவி
D
சீதை
Question 29
"தமிழொளியை மாதங்களிலே சாய்க்காமை வேண்டும் இலவச நூற்கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்" என்று பாடல் எழுதியவர் யார்?
A
வைர முத்து
B
வாணி தாசன்
C
பாரதிதாசன்
D
தாராபாரதி
Question 30
"பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படா" என்று உறுதியாக எடுத்துரைத்தவர்?
A
பாரதிதாசன்
B
அம்பேத்கர்
C
பெரியார்
D
பாரதியார்
Question 31
"செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் ஆறும் தருவது வினையே" என்று கூறும் இலக்கண நூல் எது?
A
தொல்காப்பியம்
B
நன்னூல்
C
தண்டி அலங்காரம்
D
மாறன் அலங்காரம்
Question 32
மெல்லப்பேசினான் என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.
A
குறிப்பு வினையெச்சம்
B
முற்றெச்சம்
C
தெரிநிலை வினையெச்சம்
D
குறிப்பு பெயரெச்சம்
Question 33
ஒழுக்கம் இல்லாதவன் மேற்கொண்ட தவம் எதற்கு ஒப்பாக கூறப்படுகிறது?
A
புதரில் விதைத்த விதை
B
கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது
C
எலியும் பூனையும் போல
D
கயிறு திரித்தல் போன்றது
Question 34
"மாலுமி இல்லாத கட்டுமரம் போல" என்ற உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்க.
A
ஓடுதல்
B
மூழ்குதல்
C
துன்பப்படுதல்
D
அழிதல்
Question 35
பொருந்தச்சொல்லைக் கண்டறிக.
A
பாணன், பாடினி
B
ஆயர், ஆய்ச்சியர்
C
பரதர், உழைத்தி
D
குறவர், குறத்தி
Question 36
  • "மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
  • பூவோடு புரையுஞ் சீரூர் பூவில்"  என்று பரிபாடல் வரிகள் கூறுவது போலவே இன்றும் கோவிலும்  தெருக்களும் எங்கு காணப்படுகின்றன?
A
கும்பகோணம்
B
மதுரை
C
காஞ்சி
D
மாமல்லபுரம்
Question 37
முட்டு என்பதன் பொருள் யாது?
A
குவியல்
B
நெற்றி
C
மழை
D
நலம்
Question 38
சுவாமிநாத தேசிகர்  யாரிடம் கல்வி பெற்றார்?
A
ஈசான தேசிகர்
B
மயிலேறும் பெருமாள்
C
தாண்டவ மூர்த்தி
D
மகாலிங்கம்
Question 39
  • " நீ  தந்த நீர் இது; நீ தந்த சீர் இது;
  • நீ தந்த ஒளியும் இஃதே" என்ற வரிகள் இடம் பெற்ற கவிதை எது?
A
பொங்கல் வழிபாடு
B
உழவின் சிறப்பு
C
சச்சிதானந்தன்
D
முடியரசன்
Question 40
பறம்பு மலையில் நடந்த விழாவில் முடியரசனுக்கு கவியரசு பட்டம் வழங்கியவர்  யார்?
A
குன்றக்குடி அடிகளார்
B
மறைமலை அடிகள்
C
திரு.வி.க
D
மு.வரதராசனார்
Question 41
மல்லிகைப்பூ என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.
A
அன்மொழித்தொகை
B
இருபெயரொட்டு பண்புத்தொகை
C
குறிப்பு பெயரெச்சம்
D
ஏழாம் வேற்றுமைத்தொகை
Question 42
ஜி.யூ.போப் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதிய ஏடு எது?
A
நியூ இந்தியா
B
இந்தியன் சஞ்சிகை
C
இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு
D
B) மற்றும் C)
Question 43
அஞ்சலையம்மாள் எந்த இயக்கத்தில் கலந்துகொண்டு தமது பொது     வாழ்க்கையை தொடங்கினார்?
A
சுதேசி இயக்கம்
B
உப்புச் சத்தியாகிரகம்
C
ஒத்துழையாமை இயக்கம்
D
சட்ட மறுப்பு இயக்கம்
Question 44
வை.மு.கோதை நாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்பு கொண்டு பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தவர்?
A
அம்புஜத்தம்மாள்
B
அசலாம்பிகை அம்மையார்
C
அஞ்சலையம்மாள்
D
முத்துலட்சுமி ரெட்டி
Question 45
பகுத்தறிவுக்கவிராயர் வாழ்ந்த காலம்?
A
25.09.1899 - 23.05.1981
B
22.07.1915 - 07.08.1974
C
07.10.1920 - 03.12.1998
D
07.02.1902 - 15.01.1981
Question 46
" புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னார் புண்ணியனார் மண்சுமந்தார் என்றுரு குவார்." இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?
A
பெரிய புராணம்
B
திருவிளையாடற்புராணம்
C
தேவாரம்
D
திருவாரூர் நான்மணி மாலை
Question 47
  • நற்பெயர் எடுத்திட வேண்டும்! நாளும்
  • நன்றாக படித்து நீ முன்னேற வேண்டும்!"  என்ற வரிகளின் படைப்பாளி?
A
தாரா பாரதி
B
முடியரசன்
C
வாணிதாசன்
D
கண்ணதாசன்
Question 48
கரியமால் கோவில் இடம்பெற்றுள்ள நகரம்?
A
மதுரை
B
சென்னை
C
திருநெல்வேலி
D
தஞ்சாவூர்
Question 49
'அகனமர்ந்து ஈதலின் நன்றே' என்ற தொடரில் அடிக்கோடிட்ட சொல்லுக்கு     இலக்கணக்குறிப்பு தருக.
A
கடைப்போலி
B
முதற்போலி
C
இடைப்போலி
D
அகம் என்பதன் மரூஉ
Question 50
'வசன நடை கைவந்த வல்லாளர்' என்று பரிதிமாற்கலைஞரால் பாராட்டப்பட்டவர்?
A
திருவாவடுதுறை ஆதீனத்தார்
B
ஆறுமுக நாவலர்
C
மீனாட்சி சுந்தரனார்
D
திரு.வி.க
Question 51
"கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு: நானோர் தும்பி!" என்று தமிழ்க்காதல் கொண்டவர்?
A
பாரதிதாசன்
B
பாரதியார்
C
அப்துல் ரகுமான்
D
ஈரோடு தமிழன்பன்
Question 52
யாருடைய பாடல்களில் கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் ஒருமித்து காணலாம்?
A
தமிழொளி
B
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
C
இராமலிங்கனார்
D
சச்சிதானந்தன்
Question 53
பேராசிரியர் சுந்தரனார் மனோன்மணியம் என்னும் கவிதை நாடகக் காப்பியத்தை வெளியிட்ட ஆண்டு?
A
1899
B
1892
C
1891
D
1894
Question 54
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய நாடகங்கள்?
A
குறவஞ்சி நாடகம்
B
பள்ளு நாடகம்
C
ஓரங்க நாடகம்
D
நொண்டி நாடகம்
Question 55
திசம்பர் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக.
A
சினையாகுபெயர்
B
இருபெயரொட்டுப்பண்புத்தகை
C
காலவாகுபெயர்
D
இடவாகுபெயர்
Question 56
கமலா சிரித்தாய் என்பது என்ன வழு?
A
பால்வழு
B
இடவழு
C
காலவழு
D
மரபு வழு
Question 57
பாசவலை என்பதன் பொருள்?
A
மாயவலை
B
ஒருவகை நோய்
C
முழுமை பெறாத பாடல்
D
இலக்கணப்பிழை
Question 58
மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும் ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே." -இப்பாடல் அடிகள் இடம்பெற்ற நூல்?
A
பெரிய புராணம்
B
நாலாயிர திவ்வியபிரபந்தம்
C
நந்திக்கலம்பகம்
D
கம்பராமாயணம்
Question 59
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் எத்தனை காட்சியகங்கள் உள்ளன?
A
12
B
10
C
8
D
13
Question 60
  • "புகழெனின்  உயிரும் கொடுக்குவர்
  • பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" என்ற அடிகள் இடம் பெற்ற நூல்?
A
அகநானூறு
B
நற்றிணை
C
பட்டினப்பாலை
D
புறநானூறு
Question 61
நன்னூலுக்கு காண்டிகையுரை கண்டவர்?
A
இராமச்சந்திரக்கவிராயர்
B
ஆறுமுக நாவலர்
C
இராமானுசக்கவிராயர்
D
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
Question 62
பறப்பதனைவிட நிலத்தில் நடப்பதனையே மிகவும் விரும்பும் பறவை எது?
A
காகம்
B
மயில்
C
மரகதப்புறா
D
மைனா
Question 63
யாரால் இவ்வுலகம் அழிந்து போகாமல் நிலைபெற்றிருக்கிறது?
A
பொறுமையுடையவர்கள்
B
நன்றி மறவாதவர்கள்
C
பயன் கருதாது உதவுபவர்
D
பண்புடையவர்கள்
Question 64
"நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்" என்பது யார் கூற்று?
A
தாயுமானவர்
B
மாணிக்கவாசகர்
C
வள்ளலார்
D
அருணகிரி நாதர்
Question 65
"திங்களை பாம்பு கொண்டற்று" - என்று அறிவியல் செய்தி கூறும் இலக்கியம் எது?
A
திருக்குறள்
B
புறநானூறு
C
திருவாசகம்
D
தொல்காப்பியம்
Question 66
கலிலியோ எதைப் படிப்பதில் தமக்கிருக்கும் விருப்பத்தை தந்தையாரிடம் தெரிவித்தார்?
A
அறிவியல்
B
வானியல்
C
மருத்துவம்
D
இசை
Question 67
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப்பழகியவர் யார்?
A
வாணிதாசன்
B
உடுமலை நாராயண கவி
C
மருதகாசி
D
முடியரசன்
Question 68
'தனிக்குறில் முன் உயிர் வரின் இரட்டும்' என்னும் நூற்பாவின்படி புணர்ந்துள்ளதை தேர்க.
A
பலாச்சுளை
B
நூலாடை
C
மாவிலை
D
கண்ணழகு
Question 69
நீலாம்பிகை யாருடைய மகள் ஆவார்?
A
குன்றக்குடி அடிகளார்
B
மறைமலையடிகளார்
C
கிருபானந்தவாரியார்
D
உ.வே.சா
Question 70
குமர குருபரர் பிறந்த ஊர் எது?
A
செங்கப்படுத்தான் காடு
B
திருவெண்காடு
C
திருவைகுண்டம்
D
திருப்பனந்தாள்
Question 71
  • "நாடா கொன்றோ காடா கொன்றோ
  • அவலா கொன்றோ மிசையா கொன்றோ" இப்பாடலில்  எப்பாவகை வந்துள்ளது?
A
கலிப்பா
B
வஞ்சிப்பா
C
ஆசிரியப்பா
D
நேரிசை வெண்பா
Question 72
சீறாப்புராணத்தில் உள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கை
A
5027
B
3615
C
3363
D
5047
Question 73
மாலை வாங்கி வா என்று கூறும் இலக்கியம் எது?
A
பள்ளு
B
தூது
C
குறவஞ்சி
D
பிள்ளைத்தமிழ்
Question 74
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுபவர் யார்?
A
திரு.வி.க
B
மு.வரதராசனார்
C
பெருஞ்சித்திரனார்
D
அறிஞர் அண்ணா
Question 75
மாங்குடி மருதநாரை ஆதரித்தவர்?
A
குமணன்
B
பாரி
C
நன்னன்
D
நெடுஞ்செழியன்
Question 76
இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு எது?
A
துர்க்கை
B
பிடாரி
C
காளி
D
சூலி
Question 77
போற்றுதல் என்பது?
A
பெருமை அறிந்து ஒழுகல்
B
சுற்றத்தாரைக் கோபிக்காமை
C
அன்பால் சேர்ந்தவரைப் பிரியாமை
D
அறிவில்லார் பேச்சைப்பொறுத்தல்
Question 78
முதன் முதலாக நூல்நிலையம் அமைத்தவர்கள்?
A
இத்தாலியர்கள்
B
ஆங்கிலேயர்கள்
C
அமெரிக்கர்கள்
D
கிரேக்கர்கள்
Question 79
உங்களுடைய தருமமும் கருமமும் உங்களைக்காக்கும் என்று கூறியவர்?
A
அயோத்திதாசப்பண்டிதர்
B
வள்ளலார்
C
அம்பேத்கர்
D
கவிமணி
Question 80
காமராசர் ஆட்சிக்காலத்தில் கல்வி அமைச்சராய் இருந்தவர்?
A
ஆர். வெங்கட்ராமன்
B
சி.சுப்பிரமணியன்
C
மு. ஏழுமலை
D
ந.மணிவண்ணன்
Question 81
கொத்துக்கறி என்ற சொல்லை பிரித்து எழுதுக.
A
கொத்து+கறி
B
கொந்து+கறி
C
கொண்டு+கறி
D
கோதி + கறி
Question 82
ஞாயிறு என்ற சொல்லின் எதிர்ச்சொல் தருக.
A
இருள்
B
நீர்
C
ஞாலம்
D
திங்கள்
Question 83
வழூஉச்சொல் நீக்கி எழுதுக.
A
அலமேலு
B
அலர்மேல்
C
அலகுமேழ்
D
அளர்மேல்
Question 84
தவறாக பொருந்தியுள்ள இணையைத் தேர்க.
A
குருகு - நாரை
B
உரி - பண்டம் வைக்க உதவும் தொங்கு கயிறு
C
இரை - ஒலி
D
உறை - நீர்த்துளி
Question 85
பொதி என்ற சொல்லின் எதிர்மறை வினையெச்சம்?
A
பொதியாமை
B
பொதியாத
C
பொதியாது
D
பொதியான்
Question 86
கயல்விழி வந்தாள் இலக்கணக்குறிப்பு தருக.
A
அன்மொழித்தொகை
B
இருபெயரொட்டுப்பண்புத்தொகை
C
எழுவாய் வேற்றுமை
D
மூன்றாம் வேற்றுமை
Question 87
ஒரு பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாற்ற அளபெடுப்பது
A
இன்னிசையளபெடை
B
செய்யுளிசையளபெடை
C
சொல்லிசையளபெடை
D
ஒற்றளபெடை
Question 88
எதற்கும் அஞ்சாமல் ஏறுபோல் நடக்க வேண்டும் - விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.
A
ஏறு என்ன செய்தது?
B
என்ன செய்ய வேண்டும்?
C
எப்படி நடக்க வேண்டும்?
D
எப்படி எதுபோல் நடக்க வேண்டும்?
Question 89
இறைவா நீ எனக்கு அருளாகவே - எவ்வகைத்தொடர்?
A
பிறவினைத்தொடர்
B
உடன்பாட்டுத்தொடர்
C
செய்வினைத்தொடர்
D
வியங்கோள் தொடர்
Question 90
  • "வானூர் மதியம் போல் வைகலும் தேயுமே
  • தானே சிறியோர் தொடர்பு." இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?
A
நான்மணிக்கடிகை
B
நாலடியார்
C
முதுமொழிக்காஞ்சி
D
மூதுரை
Question 91
ஐந்திணை எழுபது என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
மூவாதியார்
B
மாறன் பொறையனார்
C
பொய்கையார்
D
கண்ணன் சேந்தனார்
Question 92
பதினெண் மேற்கணக்கு என்ற பெயர் கொண்ட நூல் எது?
A
சங்க இலக்கியம்
B
அற இலக்கியம்
C
பக்தி இலக்கியம்
D
தொல்காப்பியம்
Question 93
வஞ்சி நெடும்பாட்டு என்ற வேறு பெயர் கொண்ட நூல் எது?
A
திருமுருகாற்றுப்படை
B
பட்டினப்பாலை
C
மலைபடுகடாம்
D
முல்லைப்பாட்டு
Question 94
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான வளையாபதி  எச்சமயத்தைச் சார்ந்தது?
A
பௌத்தம்
B
சைவம்
C
வைணவம்
D
சமணம்
Question 95
உலகெலாம் என்று இறைவன் அடியெடுத்துக்கொடுக்கப் பாடப்பட்ட நூல்?
A
திருவிளையாடற்புராணம்
B
திருவாசகம்
C
பெரிய புராணம்
D
திருவாரூர் நான்மணி மாலை
Question 96
கண்ணி நுண் சிறுதாம்பு - என்ற அடிகளைவுடைய பாடலை இயற்றியவர்?
A
நம்மாழ்வார்
B
பெரியாழ்வார்
C
திருமங்கையாழ்வார்
D
மதுரகவியாழ்வார்
Question 97
திருவிளையாடற் புராணத்தின் மதுரைக்காண்டம் எத்தனை படலங்களை உடையது?
A
18
B
30
C
16
D
13
Question 98
வீரைப்பிள்ளைத்தமிழ் என்ற நூலை இயற்றியவர்
A
அண்ணாமலை ரெட்டியார்
B
கதிரேசஞ்செட்டியார்
C
குமரகுருபரர்
D
சென்னவர்
Question 99
வேதாரண்யபுராணம் என்ற மொழிபெயர்ப்பு நூலை எழுதியவர் யார்?
A
ந.மு வேங்கடசாமி நாட்டார்
B
ஆறுமுக நாவலர்
C
பரஞ்சோதி முனிவர்
D
அசலாம்பிகை அம்மையார்
Question 100
"நீராரும் கடலுடுத்த" எனத்தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்ற நூல்?
A
ஆனந்த மடம்
B
இரகசிய வழி
C
மனோன்மணியம்
D
பாரதத்தாய்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!