Online TestTamil
9th Tamil Part 6 Online Test – New Book
9th Tamil Questions - Part 6
Congratulations - you have completed 9th Tamil Questions - Part 6.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- " சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
- யவனர் தந்த வினைமான் நன்கலம் "
- என்னும் பாடலடி இடம்பெற்றுள்ள நூல்
புறநானூறு | |
அகநானூறு | |
கலித்தொகை | |
மணிமேகலை |
Question 2 |
அரேபியர் சேரநாட்டு மிளகை கொண்டு போய் விற்ற இடங்கள் எவை
செங்கடல் துறைமுகம், ரோம் நகர துறைமுகம் | |
செங்கடல் துறைமுகம், அலெக்சாண்டிரியா துறைமுகம் | |
ரோம் நகர துறைமுகம், அலெக்சாண்டிரியா துறைமுகம் | |
எகிப்து, ரோம் நகர துறைமுகம் |
Question 3 |
முசிறி துறைமுகத்தில் யவனர்களால் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களில் அல்லாதது எது ?
பவளம் | |
செம்பு | |
கண்ணாடி | |
இரும்பு |
Question 4 |
கிளியோபாட்ரா கொற்கை முத்தை அணிந்ததாக பதிவு செய்துள்ளவர் யார்?
மார்க்கோபோலோ | |
பிளினி | |
யுவான்சுவாங் | |
சாணக்கியர் |
Question 5 |
கீழ்க்கண்டவற்றுள் கொற்கை முத்தின் சிறப்பினை குறிப்பிடும் நூல் எது ?
அர்த்தசாஸ்திரம் | |
வர்ணசாஸ்திரம் | |
வானசாஸ்திரம் | |
மகாபாரதம் |
Question 6 |
திசையை அறிய பயன்படும் காந்தவூசி பற்றிய செய்தி எந்நூலில் உள்ளது ?
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
வளையாபதி | |
குண்டலகேசி |
Question 7 |
கீழ்க்கண்டவற்றுள் கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் அல்லாதது எது ?
- மருங்கை 2. எயிற்பட்டினம் 3. அரிக்கமேடு 4.நறவு 5. மாந்தை
1,5 | |
1,4, 5 | |
4, 5 | |
4 மட்டும் |
Question 7 Explanation:
(விளக்கம் : நறவு, மாந்தை ஆகியவை மேற்குக் கடற்கரை பகுதியில் புகழ் பெற்று விளங்கிய துறைமுகம்)
Question 8 |
கீழ்க்கண்டவற்றுள் மேற்கு கடற்கரை பகுதியில் புகழ்பெற்று விளங்கிய துறைமுகம் எது ?
வைக்கரை | |
மருங்கை | |
கொற்கை | |
கொல்லந்துரை |
Question 8 Explanation:
(விளக்கம் : மேற்கு கடற்கரை பகுதியில் புகழ்பெற்று விளங்கிய துறைமுகங்கள் மங்களூர், நறவு, தொண்டி, மாந்தை, முசிறி, வைக்கரை, விழிஞம்)
Question 9 |
மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உருவான பேரியாறு கடலில் கலக்குமிடத்தில் இயற்கையாக உருவான துறைமுகம் எது?
நறவு | |
மாந்தை | |
வைக்கரை | |
முசிறி |
Question 10 |
முசிறி – அலெக்சாண்டிரியா ஒப்பந்தம் யார் யாருக்கிடையே ஏற்பட்டது
தமிழ் – கிரேக்க வணிகர்கள் | |
தமிழ் – உரோமானிய வணிகர்கள் | |
தமிழ் – சீன வணிகர்கள் | |
தமிழ் – யவன வணிகர்கள் |
Question 11 |
முசிறி – அலெக்சாண்ட்ரியா ஒப்பந்தம் ஏற்பட்ட காலம்
பொ.ஆ.பி 130 | |
பொ. ஆ. மு. 130 | |
பொ.ஆ.பி. 150 | |
பொ. ஆ.மு. 150 |
Question 12 |
" பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம் " எனும் வரி இடம்பெற்றுள்ள நூல்
அகநானூறு | |
பதிற்றுப்பத்து | |
புறநானூறு | |
கலித்தொகை |
Question 13 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- பந்தர் பெயரிய பேரிசை மூதூர் – பாடல் 67, அடி 2
- பந்தர் பயந்த பலர்புகழ் முத்தம் - பாடல் 74, அடி 6
- நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் – பாடல் 55, அடி 4
3 மட்டும் சரி | |
3 மட்டும் தவறு | |
அனைத்தும் சரி | |
அனைத்தும் தவறு |
Question 14 |
காவிரிப்பூம்பட்டினம் எத்தனை கூறுகளாக பிரிக்கப்பட்டிருந்தது ?
இரண்டு | |
மூன்று | |
நான்கு | |
ஐந்து |
Question 15 |
காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தில் ____ கரையில் காவிரிப்பூம்பட்டினம் இருந்தது .
வடகரை | |
தென்கரை | |
துறைமுகம் | |
பட்டினப்பாக்கம் |
Question 16 |
காவிரிப்பூம்பட்டினத்தின் இரண்டு கூறுகள் எவை ?
வடகரை, தென்கரை | |
பட்டினப்பாக்கம், முத்துப்பாக்கம் | |
மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாலை | |
பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் |
Question 17 |
துறைமுகத்தின் செயல்திறனை கணக்கிடுவதற்கு தற்போது பயன்படுத்தும் முறை _____ .
ஒற்றைச் சாளர முறை | |
இரட்டை வழிப் பாதை | |
ஏற்றுமதி, இறக்குமதி | |
கப்பல்களின் எண்ணிக்கை |
Question 18 |
காவிரி பூம்பட்டின துறைமுகங்களில் பொருள்களுக்கு சுங்கத்தீர்வைகள் வசூலிக்கப்பட்டன என தெரிவிக்கும் நூல்
புறனாநூறு | |
பட்டினப்பாலை | |
பதிற்றுப்பத்து | |
கலித்தொகை |
Question 19 |
புகார் நகரத்தில், சுங்கத் தீர்வை பெற்றுக் கொண்டு புலிச்சின்னம் அடையாளம் வைத்த பொருள்கள், ஏற்றுமதி செய்ய மலைபோல் குவிந்திருந்தன என கூறும் பட்டிப்பாலை அடிகள் எவை ?
அடி 125 – 134 | |
அடி 145 – 152 | |
அடி 120 – 135 | |
அடி 124 – 135 |
Question 20 |
கோவலன் ,கண்ணகி, மாதவி, மணிமேகலை முதலானோர் ____ ஆட்சிக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தனர் .
நலங்கிள்ளி | |
நெடுங்கிள்ளி | |
கிள்ளிவளவன் | |
நெடுஞ்செழியன் |
Question 21 |
கீழ்க்கண்டவற்றள் காவிரி பூம்பட்டினத்தில் வணிகத்தில் ஈடுபடாதவர்கள் யார் ?
சாவகர்கள் | |
சீனர்கள் | |
யவனர்கள் | |
வட இந்தியர்கள் |
Question 22 |
சோழ நாட்டு வணிகர்கள் வணிகம் செய்த இடங்கள் எவை ?
சாவக நாடு ,காழகம், கங்கை துறைமுகம் | |
எகிப்து, காழகம், கங்கை துறைமுகம் | |
சீனா, காழகம், எகிப்து | |
சீனா, காழகம், கங்கை துறைமுகம் |
Question 23 |
முசிறி துறைமுகத்தில் ______ ஏற்றுமதி சிறப்பு பெற்றிருந்தது .
முத்து | |
தந்தம் | |
பொன் | |
மிளகு |
Question 24 |
கீழ்க்கண்டவற்றுள் ' யவனப்பிரியா ‘ என்பது _____ .
முத்து | |
தந்தம் | |
பொன் | |
மிளகு |
Question 25 |
மிளகிற்கு மாற்றாக யவனர்கள் தந்த பொருள் எது ?
பொன் | |
தந்தம் | |
வெள்ளி | |
வைரம் |
Question 26 |
கீழ்க்கண்டவற்றுள் ' பந்தர் ‘ என்பதன் பொருள் ______ .
அரச வீதி | |
வணிகர்கள் வீதி | |
கடைவீதி | |
அந்தணர்கள் வீதி |
Question 27 |
தீழ்க்கண்டவற்றுள் சேரர்களின் புகழ்பெற்ற துறைமுகம் எது ?
முசிறி | |
கொற்கை | |
காவிரி பூம்பட்டினம் | |
தொண்டி |
Question 28 |
கீழ்க்கண்டவற்றுள் பேரியாறு உருவான மலை எது ?
மேற்கு தொடர்ச்சி மலை | |
கிழக்கு தொடர்ச்சி மலை | |
இமயமலை | |
ஆரவல்லி மலை |
Question 29 |
தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மேற்குக்கரையில் அமைந்த துறைமுகம் எது ?
முசிறி | |
கொற்கை | |
தொண்டி | |
காவிரிப்பூம்பட்டினம் |
Question 30 |
பாண்டியர்களின் கப்பற்படைத் தளமாக விளங்கிய இடம் எது?
கொற்கை | |
முசிறி | |
தொண்டி | |
காவிரிப்பூம்பட்டினம் |
Question 31 |
பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் துறந்த பின் அறியணை ஏறியவர் யார்?
அதிவீரராம பாண்டியன் | |
சடையவர்மன் வீரபாண்டியன் | |
வீரகேசரி | |
வெற்றிவேற்செழியன் |
Question 32 |
பாண்டிய வம்சத்தில் ஆளும் மன்னரை அடுத்து அரசாளும் இளவரசர்கள் எந்நகரில் தங்கி நிருவாகம் கற்றனர்
கொற்கை | |
முசிறி | |
தொண்டி | |
காவிரி பூம்பட்டினம் |
Question 33 |
" மாலை திங்கள் வழியோன் ஏறினான் " எனும் பாடலடி இடம்பெற்றுள்ள நூல்
பட்டினப்பாலை | |
பதிற்றுப்பத்து | |
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை |
Question 34 |
" கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் " என்பது சிலப்பதிகாரத்தின் எந்த காதையிலுள்ள பாடலடி
வழக்குரை காதை | |
வரந்தரு காதை | |
மங்கல வாழ்த்துப்பாடல் | |
நீர்ப்படைக் காதை |
Question 35 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் - அடி 127
- மாலைத் திங்கள் வழியோன் ஏறினன் - அடி 134
- மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின் - அடி 138
1 மட்டும் சரி | |
2, 3 சரி | |
அனைத்தும் சரி | |
அனைத்தும் தவறு. |
Question 35 Explanation:
( விளக்கம் : 2.மாலைத் திங்கள் வழியோன் ஏறினன் - அடி 138
3.மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின் - அடி 134)
Question 36 |
கொற்கை துறைமுகத்தில் செல்வர் ஏறி வரும் குதிரையின் குளம்புகளுக்குள் மாட்டிக் கொள்ளும் அளவிற்கு கரையோரங்களில் பொருள்கள் குவிந்திருந்ததாக கூறும் நூல்
புறநானூறு | |
அகநானூறு | |
சிலப்பதிகாரம் | |
பட்டினப்பாலை |
Question 37 |
' வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர் ‘ என்பது எந்நூலில் உள்ள பாடலடி
புறநானூறு | |
அகநானூறு | |
சிலப்பதிகாரம் | |
பட்டினப்பாலை |
Question 38 |
- " திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
- கவர் நடைப்புரவிக் கால்வடுத் தபுக்கும்
- நற்றேர் வழுதி கொற்கை முன்துறை " என்ற பாடலை பாடியவர் யார்
அகநானூறு – வெண்கண்ணனார் | |
புறநானூறு – வெண்கண்ணனார் | |
சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் | |
அகநானூறு – இளங்கோவடிகள் |
Question 39 |
கொற்கையில் ஆடவர்கள் முத்துக் குளிக்கவும், வலம்புரி சங்கு எடுக்கவும் கடலில் மூழ்கினர் என கூறும் அகநானூற்றின் பாடல்
300 வது பாடல் | |
530 வது பாடல் | |
350 வது பாடல் | |
325 வது பாடல் |
Question 40 |
இராமநாதபுரம் அழகன் குளத்தில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடு எக்காலத்திற்கு முற்பட்டது
1000 ஆண்டுகள் | |
2000 ஆண்டுகள் | |
3000 ஆண்டுகள் | |
4000 ஆண்டுகள் |
Question 41 |
பொருத்துக
- வடமலை i) பொன், மணிக்கற்கள்
- மேற்கு மலை ii) சந்தனம், ஆரம்
- தென்கடல் iii) முத்து
- கீழ்க்கடல் iv) பவளம்
- தரைவழி v) கறி
iii i ii v iv | |
iii ii i iv v | |
ii i iii v iv | |
i ii iii iv v |
Question 42 |
கொற்கை துறைமுகத்தில் பொருள்கள் குதிரையின் குளம்புகளுக்குள் மாட்டிக் கொள்ளும் அளவிற்கு கரையோரங்களில் குவிந்திருந்தன எனும் செய்தி அகநானூற்றின் எத்தனையாவது பாடலில் இடம்பெற்றுள்ளது
130 | |
310 | |
131 | |
132 |
Question 43 |
பொ.ஆ.பி முதல் நூற்றாண்டில் யவனர் – தமிழர் வணிகத்தை விரிவுப்படுத்தியவர் யார் ?
ஹிப்பல்ஸ் | |
அகஸ்தஸ் சீஸர் | |
நெடுஞ்செழியன் | |
யவனர் |
Question 44 |
கொற்கை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் சார்ந்த காலம்
இரும்பு காலம் | |
உலோகக்காலம் | |
செம்பு கற்காலம் | |
பெருங்கற்காலம் |
Question 45 |
“ சங்ககாலம் முதல் பிற்கால பாண்டியர் காலம் வரை பாண்டிய நாட்டு முத்துக்களை உரோம் நகரத்தினர் விரும்பி வாங்கினர்" என்று கூறிய வரலாற்று அறிஞர்
அகஸ்டஸ் | |
ஸ்டிராபோ | |
ஹிப்பல்ஸ் | |
சீஸர் |
Question 46 |
பாண்டிய மன்னர்கள் அகஸ்டஸ் மன்னன் அரசவைக்கு பரிசாக அளித்த பொருள் எது?
வலம்புரி சங்கு | |
வைரம் | |
முத்து | |
பவளம் |
Question 47 |
பாண்டிய மன்னனின் குதிரைப்படைக்காக
எத்தனை அரேபியக் குதிரைகள் ஆண்டுதோறும் கொற்கை துறைமுகத்தில் வந்திறங்கின .
15,000 | |
14,000 | |
17,000 | |
16,000 |
Question 48 |
பாண்டிய நாட்டு நாணயங்களை அச்சிடுவதற்கான பட்டறைகள் நிறைந்த தெருவின் பெயர் _____ .
அஃகசாலை | |
எஃகு சாலை | |
நாணயசாலை | |
பட்டறை சாலை |
Question 49 |
பருவக்காற்றின் உதவியினால் முசிறித் துறைமுகத்துக்கு நடுக்கடல் வழியாக விரைவில் பயணம் செய்யும் வழியை கண்டறிந்தவர் யார் ?
அகஸ்தஸ் | |
ஸ்டிரோபா | |
ஹிப்பல்ஸ் | |
சீஸர் |
Question 50 |
_____ பருவக்காற்று வழியாக யவனக் கடல் வணிகம் பெருகியது.
வியாபாரக்காற்று | |
தென் மேற்கு பருவக்காற்று | |
வடகிழக்கு பருவக்காற்று | |
ஹிப்பல்ஸ் காற்று |
Question 51 |
______ அரசர்களின் உருவ முத்திரை இடப்பட்ட நாணய புதையல்கள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன.
எகிப்திய | |
யவனர் | |
உரோமபுரி | |
சீனர் |
Question 52 |
கீழ்க்கண்ட பாடல் வரிகளை ஆராய்க .
- சுள்ளியம் பேர்யாற்று வெண்னுரை கலங்க – அகநானூறு
- நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் – பதிற்றுப்பத்து
- மாலைத் திங்கள் வழியோன் ஏறினான் – சிலம்பு
- பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – அகநானூறு
அனைத்தும் தவறு | |
1, 3, 4 சரி | |
3, 4 சரி | |
அனைத்தும் சரி |
Question 53 |
மதுரை குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது
- தமிழகத்தின் தொன்மையான நகரம் .
- இரண்டாயிரம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வரும் நகரங்களுள் ஒன்று .
- கௌடில்யர், கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டு பயணிகளால் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்கது.
- செவ்விலக்கியத்தின் தலைநகராக திகழ்கிறது .
3, 4 | |
2, 4 | |
3 மட்டும் | |
எதுவுமில்லை |
Question 53 Explanation:
(விளக்கம்: கௌடில்யர் – பொ.ஆ.மு.370
மெகஸ்தனிஸ் - பொ.ஆ.மு.350)
Question 54 |
- “ எல்லா இனமும் மதமும் உண்டு – இங்கு
- இறையருள் ஆலயம் ஏகமுண்டு!
- பல்லாயிரம் ஆண்டு வரலாறு – இதைப்
- பாடாத நாவில்லை பண்பாடு! "
- என்ற பாடலில் சிறப்பிக்கப்படும் நகரம்
தஞ்சாவூர் | |
கும்பகோணம் | |
மதுரை | |
திருச்சி |
Question 55 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- செங்கோல், பேரழகு
வினைத் தொகை | |
பண்புத்தொகை | |
உவமை தொகை | |
உம்மை தொகை |
Question 55 Explanation:
(விளக்கம் : இரு சொற்களுக்கிடையில் 'மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்)
Question 56 |
இலக்கணக் குறிப்புத் தருக
- எழுந்த, பாடு
பெயரெச்சம், ஏவல்வினைமுற்று | |
வினையெச்சம், பெயரெச்சம் | |
வினைத் தொகை, பெயரெச்சம் | |
வினையெச்சம், ஏவல்வினைமுற்று |
Question 56 Explanation:
(விளக்கம் : பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும்.
முன்னிலையில் ஒருவனை, ஒருத்தியை அல்லது ஒன்றினை ஆணையிட்டு ஏவும் வினையே ஏவல் வினைமுற்று என்பதாகும்.இது எதிர்காலத்தைக் காட்டி வரும். ஒருமை, பன்மையை உணர்த்தும்.)
Question 57 |
இலக்கணக் குறிப்புத் தருக – பாடாத
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் | |
எதிர்மறைப் பெயரெச்சம் | |
வினைத்தொகை | |
ஏவல்வினை முற்று |
Question 58 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – வாழ்ந்திருக்கும்
வாழ்ந்து + இருக்கும் | |
வாழ்ந்து + இரு + க் + க் + உம் | |
வாழ்ந்திரு + க் + க் + உம் | |
வாழ்ந்திரு + க் + உம் |
Question 59 |
" வாழ்ந்திருக்கும் >> வாழ்ந்திரு + க் + க் + உம் " இதில் ‘ க்+க் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
சந்தி, எதிர்மறை இடைநிலை | |
சந்தி, எதிர்கால இடைநிலை | |
எதிர்கால இடைநிலை, சந்தி | |
சந்தி, இறந்தகால இடைநிலை |
Question 60 |
சிந்து என்னும் பாவகை _____ பாடல் அமைப்பிலிருந்து தோன்றியது .
தெம்மாங்கு | |
ஆனந்தகளிப்பு | |
சந்தப் பாடல் | |
நாட்டுப்புறப் பாடல் |
Question 60 Explanation:
( விளக்கம் : சிந்து என்பது ஓசைநயத்துடன் பாடக் கூடிய பாவகை .)
Question 61 |
சிந்து வகை பாடல்கள் ______,______ அமைந்த கண்ணிகளை கொண்டவை .
இலக்கணம், சந்தம் | |
பாவகை, இலக்கணம் | |
சந்தம், இயைபுத் தொடை | |
சந்தம், பாவகை |
Question 62 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த வகை பாடல் வடிவங்கள் சிந்து பாவகை வழக்கிலிருந்த காலத்தில் புதிய பாவடிவங்களாக தோன்றின .
- 1.ஆனந்தக்களிப்பு 2 . தெம்மாங்கு 3. வழிநடைச் சிந்து
- நொண்டிச்சிந்து 5. கும்மிப் பாடல்கள்
அனைத்தும் | |
1, 2 | |
1, 2, 5 | |
3, 4 |
Question 63 |
ஓரெதுகை பெற்ற இரண்டு அடிகள் அளவொத்து வருவது _____ பாவகை ஆகும் .
வெண்பா | |
ஆசிரியப்பா | |
சிந்து | |
கலிப்பா |
Question 64 |
கீழ்க்கண்டவர்களுள் சிந்து வகையினை அதிகமாக கையாண்டவர் யார் ?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
கடுவெளி சித்தர் | |
கம்பர் |
Question 65 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது ?
- சிந்து என்பது இசைத்தமிழ்ப் பாகுபாடுகளில் ஒன்று .
- பல்லவி, அனுப்பல்லவி, இன்றி சரணங்களுக்குரிய கண்ணிகளுடன் உடைய பாக்கள் சில வகைச் சிந்துகளில் காணப்படுகின்றன.
- சித்தர் பாடல்கள் பல சிந்து வகையில் அமைந்துள்ளன.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1, 3 சரி | |
2, 3 சரி |
Question 66 |
"பாபம் செய்யாதிரு மனமே " என்னும் சிந்து வகைப் பாடல் யாருடையது ?
திருமூலர் | |
அகத்தியர் | |
கடுவெளிச் சித்தர் | |
தொல்காப்பியர் |
Question 67 |
' சிந்துக்குத் தந்தை ‘ என போற்றப்படுபவர் யார் ?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
கடுவெளி சித்தர் | |
கம்பர் |
Question 68 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
- பல்லவி – எடுப்பு
- அனுபல்லவி – தொடுப்பு
- சரணம் – முடிப்பு
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1, 3 சரி | |
2, 3 சரி |
Question 69 |
மதுரைக் காஞ்சி என்பது எவ்வகை நூல்களுள் ஒன்று ?
பதினெண் கீழ்க்கணக்கு | |
பதினெண் மேற்கணக்கு | |
சிந்துப் பாடல் | |
எட்டுத்தொகை |
Question 70 |
- “ பாரதி போதிச்ச பாடசாலை – திருப்
- பரங்குன்ற முருகன் நின்னசோலை "
- என்ற வரிகள் எந்த கவிதையில் இடம்பெற்றுள்ளன
மதுரைக் காஞ்சி | |
நான்மாடக்கூடல் | |
காவடிச் சிந்து | |
நொண்டிச்சிந்து |
Question 71 |
மதுரைக் காஞ்சியில் கீழ்க்கண்ட எந்தெந்த காட்சிகள் கவித்துவமாய் விரிந்துள்ளன .
- 1.கோட்டை கொத்தளம் 2. திருவிழாக்கள்
- பலவகைப் பள்ளிகள்
- நாற்பெருங்குழு
- அந்தி வணிகம்
அனைத்தும் | |
1, 3, 5 | |
2, 3 | |
1, 2, 3 |
Question 72 |
- "மண்உற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்
- விண்உற ஓங்கிய பல் படைப்புரிசைத் தொல்வலி நிலைஇய "
- என்னும் வரிகளை இயற்றியவர் யார் ?
பாரதியார் | |
கடுவெளி சித்தர் | |
மாங்குடி மருதனார் | |
பாரதிதாசன் |
Question 73 |
- " ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்
- பல்வேறு குழாஅத்து இசைஎழுந்து ஒலிப்ப”
- இவ்வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன ?
நான்மாடக்கூடல் | |
மதுரைக் காஞ்சி | |
பதிற்றுப்பத்து | |
புறநானூறு |
Question 74 |
- " பொறிமயிர் வாரணம் ...
- கூட்டுறை வயமாப் புலியொடு குழும "
- என்ற வரிகள் மதுரையில் ______ இருந்ததை உணர்த்துகின்றன .
வாரணங்கள் | |
புலிகள் | |
மாடங்கள் | |
வனவிலங்கு சரணாலயம் |
Question 75 |
மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்த செய்தியை கூறும் மதுரைக் காஞ்சியின் அடிகள் _____ .
637 – 639 | |
693 – 697 | |
673 – 677 | |
637 – 677 |
Question 76 |
பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் நூலை இயற்றியவர் யார் ?
இராசவேல் | |
இராசமாணிக்கனார் | |
இராசேந்திரன் | |
அரவிந்த் குப்தா |
Question 77 |
சரியான பொருளை தேர்ந்தெடு
- புரிசை, பணை
மதில், பனைமரம் | |
சாளரம், பனைமரம் | |
நீர்நிலை ,சாளரம் | |
மதில், முரசு |
Question 78 |
சரியான பொருளை தேர்ந்தெடு
- சில்காற்று, மாகால்
பெருங்காற்று, புயல் | |
தென்றல், புயல் | |
தென்றல், பெருங்காற்று | |
தென்றல், சாளரம் |
Question 79 |
சரியான பொருளை தேர்ந்தெடு
- முந்நீர், கயம்
மூன்று வகையான நீர், கடல் | |
கடல், நீர்நிலை | |
கடல்,முரசு | |
கடல், சாளரம் |
Question 80 |
சரியான பொருளை தேர்ந்தெடு
- அணங்கு, புழை
ஒழுங்கு, சாளரம் | |
தெய்வம், மதில் | |
தெய்வம், சாளரம் | |
மதில், சாளரம் |
Question 81 |
சரியான பொருளை தேர்ந்தெடு
- ஓவு, நியமம்
ஓய்வு, நியமனம் | |
ஓய்வு, அங்காடி | |
ஓவியம், அங்காடி | |
ஓவியம், நியமனம் |
Question 82 |
இலக்கணக் குறிப்புத் தருக
- நெடுநிலை, முந்நீர்
வினைத் தொகை | |
பண்புத்தொகை | |
உவமை தொகை | |
உம்மை தொகை |
Question 82 Explanation:
(விளக்கம் : இரு சொற்களுக்கிடையில் 'மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்)
Question 83 |
இலக்கணக் குறிப்புத் தருக
- முழங்கிசை, இமிழிசை
வினைத் தொகை | |
பண்புத்தொகை | |
உவமை தொகை | |
உம்மை தொகை |
Question 83 Explanation:
(விளக்கம் : வினைத் தொகை என்பது மூன்று கால வினைகளையும் தொகுத்து ஒரு சேரக் குறிக்குமாறு வரும் பெயர்ச்சொல் ஆகும். இச்சொல் முக்காலத்தையும் உணர்த்தும் .)
Question 84 |
இலக்கணக் குறிப்புத் தருக – மகிழ்ந்தோர்
வினையாலணையும் பெயர் | |
எதிர்மறைப் பெயரெச்சம் | |
வினைத்தொகை | |
ஏவல்வினை முற்று |
Question 84 Explanation:
(விளக்கம் : வினைமுற்று, வினைசெய்த கருத்தாவைக் குறிக்க வருவது வினையாலணையும் பெயர் ஆகும்.)
Question 85 |
இலக்கணக் குறிப்புத் தருக – மாகால்
உரிச்சொல் தொடர் | |
பண்புத்தொகை | |
உவமை தொகை | |
ஏவல்வினை முற்று |
Question 86 |
இலக்கணக் குறிப்புத் தருக – ஓங்கிய, வாயில்
பெயரெச்சம், ஏவல்வினைமுற்று | |
வினையெச்சம், பெயரெச்சம் | |
பெயரெச்சம், இலக்கணப் போலி | |
வினையெச்சம், ஏவல்வினைமுற்று |
Question 86 Explanation:
(விளக்கம் : பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும்.
Question 87 |
இலக்கணக் குறிப்புத் தருக
- நிலைஇய, குழாஅத்து
செய்யுளிசை அளபெடை, சொல்லிசை அளபெடை | |
சொல்லிசை அளபெடை, செய்யுளிசை அளபெடை | |
எதிர்மறைப் பெயரெச்சம், செய்யுளிசை அளபெடை | |
பெயரெச்சம், சொல்லிசை அளபெடை |
Question 87 Explanation:
(விளக்கம் : செய்யுளிசை அளபெடை செய்யுளில் இசையைக் கூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும்.
ஒரு பெயர்ச் சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும்)
Question 88 |
பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக – ஆழ்ந்த
ஆழ்ந்து + அ | |
ஆழ் + த் + அ | |
ஆழ் + த்(ந்) + த் + அ | |
ஆழ் + ந் + அ |
Question 89 |
பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக – ஓங்கிய
ஓங்கு + இய | |
ஓங்கு + இ + அ | |
ஓங்கு + ய் + அ | |
ஓங்கு + இ(ன்) + ய் + அ |
Question 90 |
பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக – மகிழ்ந்தோர்
மகிழ்ந்து + ஓர் | |
மகிழ்ந்து +ய் + ஓர் | |
மகிழ்+த்(ந்) +த் + ஓர் | |
மகிழ் + த் + ஓர் |
Question 91 |
‘ ஆழ்ந்த ‘ என்ற சொல்லின் பகுபத உறுப்புகளில் ' அ ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
வினையெச்ச விகுதி | |
பெயரெச்ச விகுதி | |
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி | |
பலர்பால் வினை முற்று விகுதி |
Question 91 Explanation:
(விளக்கம் : பெயரெச்ச விகுதிகள் – அ, (உம்))
Question 92 |
‘ ஓங்கிய ‘என்ற சொல்லின் பகுபத உறுப்புகளில் ' ய் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
சந்தி | |
சாரியை | |
உடம்படுமெய் | |
இறந்தகால இடைநிலை |
Question 93 |
' மகிழ்ந்தோர் ‘என்ற சொல்லின் பகுபத உறுப்புகளில் ' ஓர் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
பலர்பால் வினைமுற்று விகுதி | |
ஆண்பால் வினைமுற்று விகுதி | |
பெண்பால் வினைமுற்று விகுதி | |
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி |
Question 93 Explanation:
(விளக்கம் : பலர்பால் வினைமுற்று விகுதிகள் - அர், ஆர், ப, மார்)
Question 94 |
மதுரைக் காஞ்சி மொத்தம் எத்தனை அடிகளைக் கொண்டது ?
872 | |
782 | |
354 | |
534 |
Question 95 |
மதுரைக் காஞ்சியிலுள்ள பாடல்களில் எத்தனை அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன?
872 | |
782 | |
354 | |
534 |
Question 96 |
மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் யார் ?
சேரன் செங்குட்டுவன் | |
இளம்பெருவழுதி | |
தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் | |
நலங்கிள்ளி |
Question 97 |
மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் யார் ?
கணிமேதாவியர் | |
மாங்குடி மருதனார் | |
ஒளவையார் | |
பாண்டியன் நெடுஞ்செழியன் |
Question 98 |
மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்?
11 | |
12 | |
13 | |
14 |
Question 99 |
கீழக்கண்ட கூற்றுகளுள் சரியானது எது ?
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று மதுரைக் காஞ்சி .
- காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள் .
- மதுரையின் சிறப்புகளை பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக் காஞ்சி எனப்பட்டது .
- இதை 'பெருகுவள மதுரைக்காஞ்சி ‘ எனவும் அழைக்கப்படுகிறது .
அனைத்தும் சரி | |
2, 3, 4 சரி | |
1, 3, 4 சரி | |
3, 4 சரி |
Question 99 Explanation:
(விளக்கம் : பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக் காஞ்சி .)
Question 100 |
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது ?
- மால் என்பதன் தமிழ்ச் சொல் பல்லங்காடியகம் .
- பகலில் செயல்படும் கடை வீதிகள் ‘ நாளங்காடி ‘ எனப்படும் .
- இரவில் செயல்படும் கடை வீதிகள் ‘ அல்லங்காடி ‘ எனப்படும்
அனைத்தும் சரி | |
2, 3 சரி | |
2, 3 தவறு | |
1, 3 சரி |
Question 100 Explanation:
(விளக்கம் : நாள் – பகல், அல் – இரவு)
Question 101 |
உள்ளுர்த் தேவைக்கு ஏற்றார் போல், அங்கு விளைகிற உணவுப் பொருள்களையும் விவசாயம், சமையல், வீடு ஆகியவற்றுக்குத் தேவையான பொருள்களையும் சிறிய அளவில் விற்கும் சிறு வணிக செயல்பாடு ____ எனப்படும் .
சந்தை | |
கிராமச் சந்தை | |
வியாபாரம் | |
சிறு வியாபாரம் |
Question 102 |
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளிச் சந்தை எத்தனை கடைகளுடன் எவ்வளவு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
1000, 18 ஏக்கர் | |
8000, 81 ஏக்கர் | |
8000, 18 ஏக்கர் | |
1000, 81 ஏக்கர் |
Question 103 |
போச்சம்பள்ளிச் சந்தை வாரந்தோறும் எந்தக் கிழமைகளில் கூடுகிறது ?
சனி | |
ஞாயிறு | |
திங்கள் | |
செவ்வாய் |
Question 104 |
போச்சம்பள்ளிச் சந்தை எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது ?
152 | |
251 | |
125 | |
215 |
Question 104 Explanation:
(விளக்கம் : இச்சந்தையில் நான்கு தலைமுறை நட்பு நிலவுகிறது .)
Question 105 |
தவறான இணையைத் தேர்ந்தெடு .
மணப்பாறை – மாட்டுச்சந்தை | |
அய்யலூர் – ஆட்டுச்சந்தை | |
ஒட்டன்சத்திரம் – காய்கறிச்சந்தை | |
நாகர்கோவில் தோவாளை - கருவாட்டுச் சந்தை |
Question 105 Explanation:
( விளக்கம் : நாகர்கோவில் தோவாளை – பூச்சந்தை)
Question 106 |
சரியான இணையைத் தேர்ந்தெடு .
- ஈரோடு – ஜவுளிச்சந்தை
- காராமணி குப்பம் (கடலூர்) - கருவாட்டுச் சந்தை
- நாகப்பட்டினம் - மீன் சந்தை
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 107 |
சரியான இணையை தேர்ந்தெடு .
- ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் ஆகும் .
- தொல்காப்பியர் ஆகுபெயர்களை பதினைந்தாகவும் நன்னூலார் ஏழாகவும் வகைப்படுத்தி இலக்கணம் வகுத்துள்ளனர் .
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 107 Explanation:
(விளக்கம் : தொல்காப்பியர் ஆகுபெயர்களை ஏழாகவும் நன்னூலார் பதினைந்தாகவும் வகைப்படுத்தி இலக்கணம் வகுத்துள்ளனர் .)
Question 108 |
‘ முல்லையைத் தொடுத்தாள் ‘ எவ்வகை ஆகுபெயர்
பொருளாகு பெயர் | |
இடவாகு பெயர் | |
காலவாகு பெயர் | |
சினையாகுபெயர் |
Question 109 |
' வகுப்பறை சிரித்தது ‘ எவ்வகை ஆகுபெயர்
பொருளாகு பெயர் | |
இடவாகு பெயர் | |
காலவாகு பெயர் | |
சினையாகுபெயர் |
Question 110 |
கீழ்க்கண்டவற்றுள் சினையாகுபெயரை குறிக்கும் தொடர் எது ?
கார் அறுத்தான் | |
மருக்கொழுந்து நட்டான் | |
மஞ்சள் பூசினாள் | |
வற்றல் தின்றான் |
Question 111 |
கீழ்க்கண்டவற்றுள் பண்பாகு பெயரை குறிக்கும் தொடர் எது ?
கார் அறுத்தான் | |
மருக்கொழுந்து நட்டான் | |
மஞ்சள் பூசினாள் | |
வற்றல் தின்றான் |
Question 112 |
' கார் அறுத்தான் ' எவ்வகை ஆகுபெயர்
பொருளாகு பெயர் | |
இடவாகு பெயர் | |
காலவாகு பெயர் | |
சினையாகுபெயர் |
Question 112 Explanation:
( விளக்கம் : கார் என்னும் காலப் பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்தது)
Question 113 |
கீழ்க்கண்டவற்றுள் தொழிலாகுபெயரை குறிக்கும் தொடர் எது ?
கார் அறுத்தான் | |
மருக்கொழுந்து நட்டான் | |
மஞ்சள் பூசினாள் | |
வற்றல் தின்றான் |
Question 113 Explanation:
( விளக்கம் : வற்றல் என்னும் தொழில் பெயர் வற்றிய உணவுப் பொருளுக்கு ஆகி வந்தது.)
Question 114 |
சரியான இணையைத் தேர்ந்தெடு .
- வானொலி கேட்டு மகிழ்ந்தனர் - கருவியாகு பெயர்
- பைங்கூழ் வளர்ந்தது - காரியவாகு பெயர்
- அறிஞர் அண்ணாவை படித்திருக்கிறேன் – கருத்தாவாகுபெயர்
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2, 3 சரி | |
2 மட்டும் சரி |
Question 114 Explanation:
(விளக்கம் :
வானொலி கேட்டு மகிழ்ந்தனர் - வானொலி என்னும் கருவி, அதன் காரியமாகிய நிகழ்ச்சிகளுக்கு ஆகி வந்தது.
பைங்கூழ் வளர்ந்தது – கூழ் என்னும் காரியம் அதன் கருவியாகிய பயிருக்கு ஆகி வந்தது .
அறிஞர் அண்ணாவை படித்திருக்கிறேன் – அறிஞர் அண்ணா என்னும் கருத்தாவின் பெயர், அவர் இயற்றிய நூல்களுக்கு ஆகி வருகிறது .)
Question 115 |
தவறான இணையைத் தேர்ந்தெடு
- ஒன்று பெற்றால் ஒளிமயம் – எண்ணலளவை ஆகுபெயர்
- இரண்டு கிலோ கொடு – முகத்தலளவை ஆகுபெயர்
- அரை லிட்டர் வாங்கு – எடுத்தலளவை ஆகுபெயர்
- ஐந்து மீட்டர் வெட்டினான் – நீட்டலளவை ஆகுபெயர்
அனைத்தும் | |
2, 3 | |
1,4 | |
எதுவுமில்லை |
Question 115 Explanation:
(விளக்கம் : 2. இரண்டு கிலோ கொடு – எடுத்தலளவை ஆகுபெயர்
3. அரை லிட்டர் வாங்கு – முகத்தலளவை ஆகுபெயர்)
Question 116 |
- கூற்று 1 : காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் துறைமுகமாகும் .
- கூற்று 2 : வண்டியூர் என்னும் ஊர் காஞ்சி மாநகரத்தில் அமைந்துள்ளது .
கூற்று 1,2 சரி | |
கூற்று 1, 2 தவறு | |
கூற்று 2 சரி, 1 தவறு | |
கூற்று 1 சரி, 2 தவறு |
Question 117 |
ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் சங்க நூல்கள்
பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு | |
குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து | |
மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு | |
மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை |
Question 118 |
- விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க
- காவிரியாற்றின் கழிமுகம் ஆழமாகவும், அகலமாகவும் இருந்தது.
- பகலில் இயங்கும் கடைகள் நாளங்காடிகள்.
காவிரியாற்றின் கழிமுகம் எதற்காக அமைந்திருந்தது ? – பகலில் இயங்கும் கடைகள் எவ்விதம் அழைக்கப்பட்டன ? | |
காவிரியாற்றின் கழிமுகம் எவ்வாறு அமைந்திருந்தது ? – பகலில் இயங்கும் கடைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன ? | |
காவிரியாற்றின் கழிமுகம் எங்கு அமைந்துள்ளது - பகலில் கடைகள் எவ்வாறு இயங்கின | |
காவிரியாற்றின் கழிமுகம் எதனால் அமைந்திருந்தது ? – பகலில் இயங்கும் கடைகள் எப்படி அழைக்கப்பட்டன ? |
Question 119 |
" மாகால் எடுத்த முந்நீர் போல் " இவ்வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன.
நான்மாடக்கூடல் | |
மதுரைக்காஞ்சி | |
புறநானூறு | |
அகநானூறு |
Question 120 |
சோழநாட்டின் தலைநகராகிய காவிரி பூம்பட்டினத்திலும், பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையிலும் " கூலங் குவித்த கூல வீதிகள் “ இருந்தன எனக் கூறும் நூல் எது ?
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
புறநானூறு | |
மதுரைக் காஞ்சி |
Question 121 |
சரியான தொடரை தேர்ந்தெடு .
மலையேறிய மக்கள் மாலையின் வேகவேகமாய்க் கீழிறங்கின . | |
எங்கள் ஊர் சந்தையில் காய்கறிகள் கிடைக்கும் . | |
பண்டை துறைமுகங்களில் ஏற்றுமதிச் செய்யப்பட்டது. | |
சிட்டுக்கு சிறகுகள் முளைத்தது . |
Question 121 Explanation:
( விளக்கம் :
மலையேறிய மக்கள் மாலையில் வேகவேகமாய்க் கீழிறங்கின .
பண்டை துறைமுகங்களில் ஏற்றுமதி செய்யப்பட்டது.
சிட்டுக்கு சிறகுகள் முளைத்தன .)
Question 122 |
கீழ்வருவனவற்றுள் கூலம் எனக் குறிப்பிடப்படுபவை எவை
- 1.நெல்லும் புல்லும் 2. வரகும் தினையும்
- எள்ளும் கொள்ளும்
- அவரையும் துவரையும்
- பயறும் உளுந்தும்
அனைத்தும் சரி | |
1, 3,5 | |
1, 2, 3 | |
3, 4, 5 |
Question 123 |
பொருத்துக.
- கழிமுகங்கள் i) Estuaries
- கலங்கரை விளக்கம் ii) Light house
- துறைமுகங்கள் iii) Ports
- பண்டமாற்றுமுறை iv) Commodity Exchange
i ii iii iv | |
iii ii i iv | |
iv iii ii i | |
iv ii i iii |
Question 124 |
பொருத்துக
- இளநீர் i) Vegetable Soup
- அகழி ii) Sugar Cane juice
- கரும்புச்சாறு iii) Moat
- காய்கறி வடிச் சாறு iv) Tender coconut
i ii iii iv | |
iii ii i iv | |
iv iii ii i | |
iv ii i iii |
Question 125 |
சரியான இணையைத் தேர்ந்தெடு .
- நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம் – முனைவர் சு. சக்திவேல்
- தரங்கம்பாடி தங்கப் புதையல் - பெ.தூரன்
- இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) - ச.தமிழ்ச்செல்வன்
அனைத்தும் சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி | |
1, 2 சரி |
Question 126 |
- "அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
- ஐந்துசால்பு ஊன்றிய தூண் “
- இக்குறளில் பயின்று வரும் அணி
உவமை அணி | |
எடுத்துக்காட்டுவமை அணி | |
ஏகதேச உருவக அணி | |
உருவக அணி |
Question 127 |
- " ஊழிபெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
- ஆழி எனப்படு வார் “
- இக்குறளில் பயின்று வரும் அணி
உவமை அணி | |
எடுத்துக்காட்டுவமை அணி | |
ஏகதேச உருவக அணி | |
உருவக அணி |
Question 128 |
- " உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
- எழுவாரை எல்லாம் பொறுத்து "
- இக்குறளில் பயின்று வரும் அணி
உவமை அணி | |
எடுத்துக்காட்டுவமை அணி | |
ஏகதேச உருவக அணி | |
உருவக அணி |
Question 129 |
பொருளுக்கேற்ற அடியை சரியாக பொருந்தியுள்ளதா என ஆராய்க.
- கண்டானாம் தான்கண்டவாறு – தெரிந்த அளவில் அறிவுடையவனாகத் தோன்றுவான் .
- அறம் நாணத்தக்கது உளடைத்து - அறம் வெட்கப்பட்ட அவனை விட்டு விலகிப் போகும் .
- மாற்றாரை மாற்றும் படை – பகைவரையும் நட்பாக்கும் கருவி
அனைத்தும் சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி | |
1, 2 சரி |
Question 130 |
ஐந்து சால்புகளில் இரண்டு ____ .
வானமும் நாணமும் | |
நாணமும் இணக்கமும் | |
இணக்கமும் சுணக்கமும் | |
இணக்கமும் பிணக்கமும் |
Question 131 |
- அன்புநாண் ஒப்புரவு ___ வாய்மையொடு
- ஐந்துசால்பு ஊன்றிய ____.
பணிதல், படை | |
பணிதல், தூண் | |
கண்ணோட்டம், தூண் | |
கண்ணோட்டம், படை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 131 questions to complete.
Ques no 40 ans is b .
Hello sir how to join this all test series pls reply… And mention the fee details… ASAP…