Online TestTamil

9th Tamil Part 6 Online Test – New Book

9th Tamil Questions - Part 6

Congratulations - you have completed 9th Tamil Questions - Part 6. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • " சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
  •    யவனர் தந்த வினைமான் நன்கலம் "
  • என்னும் பாடலடி இடம்பெற்றுள்ள நூல்
A
புறநானூறு
B
அகநானூறு
C
கலித்தொகை
D
மணிமேகலை
Question 2
அரேபியர் சேரநாட்டு மிளகை கொண்டு போய் விற்ற இடங்கள் எவை
A
செங்கடல் துறைமுகம், ரோம் நகர துறைமுகம்
B
செங்கடல் துறைமுகம், அலெக்சாண்டிரியா துறைமுகம்
C
ரோம் நகர துறைமுகம், அலெக்சாண்டிரியா துறைமுகம்
D
எகிப்து, ரோம் நகர துறைமுகம்
Question 3
முசிறி துறைமுகத்தில் யவனர்களால் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களில் அல்லாதது எது ?
A
பவளம்
B
செம்பு
C
கண்ணாடி
D
இரும்பு
Question 4
கிளியோபாட்ரா கொற்கை முத்தை அணிந்ததாக பதிவு செய்துள்ளவர் யார்?
A
மார்க்கோபோலோ
B
பிளினி
C
யுவான்சுவாங்
D
சாணக்கியர்
Question 5
கீழ்க்கண்டவற்றுள் கொற்கை முத்தின் சிறப்பினை குறிப்பிடும் நூல் எது ?
A
அர்த்தசாஸ்திரம்
B
வர்ணசாஸ்திரம்
C
வானசாஸ்திரம்
D
மகாபாரதம்
Question 6
திசையை அறிய பயன்படும் காந்தவூசி பற்றிய செய்தி எந்நூலில் உள்ளது ?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
வளையாபதி
D
குண்டலகேசி
Question 7
கீழ்க்கண்டவற்றுள் கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் அல்லாதது எது ?
  1. மருங்கை                  2. எயிற்பட்டினம்           3. அரிக்கமேடு  4.நறவு 5. மாந்தை
A
1,5
B
1,4, 5
C
4, 5
D
4 மட்டும்
Question 7 Explanation: 
(விளக்கம் : நறவு, மாந்தை ஆகியவை மேற்குக் கடற்கரை பகுதியில் புகழ் பெற்று விளங்கிய துறைமுகம்)
Question 8
கீழ்க்கண்டவற்றுள் மேற்கு கடற்கரை பகுதியில் புகழ்பெற்று விளங்கிய துறைமுகம் எது ?
A
வைக்கரை
B
மருங்கை
C
கொற்கை
D
கொல்லந்துரை
Question 8 Explanation: 
(விளக்கம் : மேற்கு கடற்கரை பகுதியில் புகழ்பெற்று விளங்கிய துறைமுகங்கள் மங்களூர், நறவு, தொண்டி, மாந்தை, முசிறி, வைக்கரை, விழிஞம்)
Question 9
மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உருவான பேரியாறு கடலில் கலக்குமிடத்தில் இயற்கையாக உருவான துறைமுகம் எது?  
A
நறவு
B
மாந்தை
C
வைக்கரை
D
முசிறி
Question 10
முசிறி – அலெக்சாண்டிரியா ஒப்பந்தம் யார் யாருக்கிடையே ஏற்பட்டது
A
தமிழ் – கிரேக்க வணிகர்கள்
B
தமிழ் – உரோமானிய வணிகர்கள்
C
தமிழ் – சீன வணிகர்கள்
D
தமிழ் – யவன வணிகர்கள்
Question 11
முசிறி – அலெக்சாண்ட்ரியா ஒப்பந்தம் ஏற்பட்ட காலம்
A
பொ.ஆ.பி 130
B
பொ. ஆ. மு. 130
C
பொ.ஆ.பி. 150
D
பொ. ஆ.மு. 150
Question 12
" பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம் " எனும் வரி இடம்பெற்றுள்ள நூல்
A
அகநானூறு
B
பதிற்றுப்பத்து
C
புறநானூறு
D
கலித்தொகை
Question 13
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  1. பந்தர் பெயரிய பேரிசை மூதூர் – பாடல் 67, அடி 2
  2. பந்தர் பயந்த பலர்புகழ் முத்தம் - பாடல் 74, அடி 6
  3. நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் – பாடல் 55, அடி 4
A
3 மட்டும் சரி
B
3 மட்டும் தவறு
C
அனைத்தும் சரி
D
அனைத்தும் தவறு
Question 14
காவிரிப்பூம்பட்டினம் எத்தனை கூறுகளாக பிரிக்கப்பட்டிருந்தது ?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Question 15
காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தில் ____ கரையில் காவிரிப்பூம்பட்டினம் இருந்தது .
A
வடகரை
B
தென்கரை
C
துறைமுகம்
D
பட்டினப்பாக்கம்
Question 16
காவிரிப்பூம்பட்டினத்தின் இரண்டு கூறுகள் எவை ?
A
வடகரை, தென்கரை
B
பட்டினப்பாக்கம், முத்துப்பாக்கம்
C
மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாலை
D
பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம்
Question 17
துறைமுகத்தின் செயல்திறனை கணக்கிடுவதற்கு தற்போது பயன்படுத்தும் முறை _____ .
A
ஒற்றைச் சாளர முறை
B
இரட்டை வழிப் பாதை
C
ஏற்றுமதி, இறக்குமதி
D
கப்பல்களின் எண்ணிக்கை
Question 18
காவிரி பூம்பட்டின துறைமுகங்களில் பொருள்களுக்கு சுங்கத்தீர்வைகள் வசூலிக்கப்பட்டன என தெரிவிக்கும் நூல்
A
புறனாநூறு
B
பட்டினப்பாலை
C
பதிற்றுப்பத்து
D
கலித்தொகை
Question 19
புகார் நகரத்தில், சுங்கத் தீர்வை பெற்றுக் கொண்டு புலிச்சின்னம் அடையாளம் வைத்த பொருள்கள், ஏற்றுமதி செய்ய மலைபோல் குவிந்திருந்தன என கூறும் பட்டிப்பாலை அடிகள் எவை ?
A
அடி 125 – 134
B
அடி 145 – 152
C
அடி 120 – 135
D
அடி 124 – 135
Question 20
கோவலன் ,கண்ணகி, மாதவி, மணிமேகலை முதலானோர் ____ ஆட்சிக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தனர் .
A
நலங்கிள்ளி
B
நெடுங்கிள்ளி
C
கிள்ளிவளவன்
D
நெடுஞ்செழியன்
Question 21
கீழ்க்கண்டவற்றள் காவிரி பூம்பட்டினத்தில் வணிகத்தில் ஈடுபடாதவர்கள் யார் ?
A
சாவகர்கள்
B
சீனர்கள்
C
யவனர்கள்
D
வட இந்தியர்கள்
Question 22
சோழ நாட்டு வணிகர்கள் வணிகம் செய்த இடங்கள் எவை ?
A
சாவக நாடு ,காழகம், கங்கை துறைமுகம்
B
எகிப்து, காழகம், கங்கை துறைமுகம்
C
சீனா, காழகம், எகிப்து
D
சீனா, காழகம், கங்கை துறைமுகம்
Question 23
முசிறி துறைமுகத்தில் ______ ஏற்றுமதி சிறப்பு பெற்றிருந்தது .
A
முத்து
B
தந்தம்
C
பொன்
D
மிளகு
Question 24
கீழ்க்கண்டவற்றுள் ' யவனப்பிரியா ‘ என்பது _____ .
A
முத்து
B
தந்தம்
C
பொன்
D
மிளகு
Question 25
மிளகிற்கு மாற்றாக யவனர்கள் தந்த பொருள் எது ?
A
பொன்
B
தந்தம்
C
வெள்ளி
D
வைரம்
Question 26
கீழ்க்கண்டவற்றுள் ' பந்தர் ‘ என்பதன் பொருள் ______ .
A
அரச வீதி
B
வணிகர்கள் வீதி
C
கடைவீதி
D
அந்தணர்கள் வீதி
Question 27
தீழ்க்கண்டவற்றுள் சேரர்களின் புகழ்பெற்ற துறைமுகம் எது ?
A
முசிறி
B
கொற்கை
C
காவிரி பூம்பட்டினம்
D
தொண்டி
Question 28
கீழ்க்கண்டவற்றுள் பேரியாறு உருவான மலை எது ?
A
மேற்கு தொடர்ச்சி மலை
B
கிழக்கு தொடர்ச்சி மலை
C
இமயமலை
D
ஆரவல்லி மலை
Question 29
தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மேற்குக்கரையில் அமைந்த துறைமுகம் எது ?
A
முசிறி
B
கொற்கை
C
தொண்டி
D
காவிரிப்பூம்பட்டினம்
Question 30
பாண்டியர்களின் கப்பற்படைத் தளமாக விளங்கிய இடம் எது?
A
கொற்கை
B
முசிறி
C
தொண்டி
D
காவிரிப்பூம்பட்டினம்
Question 31
பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் துறந்த பின் அறியணை ஏறியவர் யார்?
A
அதிவீரராம பாண்டியன்
B
சடையவர்மன் வீரபாண்டியன்
C
வீரகேசரி
D
வெற்றிவேற்செழியன்
Question 32
பாண்டிய வம்சத்தில் ஆளும் மன்னரை அடுத்து அரசாளும் இளவரசர்கள் எந்நகரில் தங்கி நிருவாகம் கற்றனர்
A
கொற்கை
B
முசிறி
C
தொண்டி
D
காவிரி பூம்பட்டினம்
Question 33
" மாலை திங்கள் வழியோன் ஏறினான் " எனும் பாடலடி இடம்பெற்றுள்ள நூல்
A
பட்டினப்பாலை
B
பதிற்றுப்பத்து
C
சிலப்பதிகாரம்
D
மணிமேகலை
Question 34
" கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் " என்பது சிலப்பதிகாரத்தின் எந்த காதையிலுள்ள பாடலடி
A
வழக்குரை காதை
B
வரந்தரு காதை
C
மங்கல வாழ்த்துப்பாடல்
D
நீர்ப்படைக் காதை
Question 35
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  1. கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் - அடி 127
  2. மாலைத் திங்கள் வழியோன் ஏறினன் - அடி 134
  3. மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின் - அடி 138
A
1 மட்டும் சரி
B
2, 3 சரி
C
அனைத்தும் சரி
D
அனைத்தும் தவறு.
Question 35 Explanation: 
( விளக்கம் : 2.மாலைத் திங்கள் வழியோன் ஏறினன் - அடி 138 3.மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின் - அடி 134)
Question 36
கொற்கை துறைமுகத்தில் செல்வர் ஏறி வரும் குதிரையின் குளம்புகளுக்குள் மாட்டிக் கொள்ளும் அளவிற்கு கரையோரங்களில் பொருள்கள் குவிந்திருந்ததாக கூறும் நூல்
A
புறநானூறு
B
அகநானூறு
C
சிலப்பதிகாரம்
D
பட்டினப்பாலை
Question 37
' வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர் ‘ என்பது எந்நூலில் உள்ள பாடலடி
A
புறநானூறு
B
அகநானூறு
C
சிலப்பதிகாரம்
D
பட்டினப்பாலை
Question 38
  • " திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
  • கவர் நடைப்புரவிக் கால்வடுத் தபுக்கும்
  • நற்றேர் வழுதி கொற்கை முன்துறை " என்ற பாடலை பாடியவர் யார்
A
அகநானூறு – வெண்கண்ணனார்
B
புறநானூறு – வெண்கண்ணனார்
C
சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
D
அகநானூறு – இளங்கோவடிகள்
Question 39
கொற்கையில் ஆடவர்கள் முத்துக் குளிக்கவும், வலம்புரி சங்கு எடுக்கவும் கடலில் மூழ்கினர் என கூறும் அகநானூற்றின் பாடல்
A
300 வது பாடல்
B
530 வது பாடல்
C
350 வது பாடல்
D
325 வது பாடல்
Question 40
இராமநாதபுரம் அழகன் குளத்தில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடு எக்காலத்திற்கு முற்பட்டது
A
1000 ஆண்டுகள்
B
2000 ஆண்டுகள்
C
3000 ஆண்டுகள்
D
4000 ஆண்டுகள்
Question 41
பொருத்துக
  • வடமலை                 i) பொன், மணிக்கற்கள்
  • மேற்கு மலை ii) சந்தனம், ஆரம்
  • தென்கடல்       iii) முத்து
  • கீழ்க்கடல்                 iv) பவளம்
  • தரைவழி                   v) கறி
A
iii i ii v iv
B
iii ii i iv v
C
ii i iii v iv
D
i ii iii iv v
Question 42
கொற்கை துறைமுகத்தில் பொருள்கள் குதிரையின் குளம்புகளுக்குள் மாட்டிக் கொள்ளும் அளவிற்கு கரையோரங்களில்  குவிந்திருந்தன எனும் செய்தி அகநானூற்றின் எத்தனையாவது பாடலில் இடம்பெற்றுள்ளது
A
130
B
310
C
131
D
132
Question 43
பொ.ஆ.பி முதல் நூற்றாண்டில் யவனர் – தமிழர் வணிகத்தை விரிவுப்படுத்தியவர் யார் ?
A
ஹிப்பல்ஸ்
B
அகஸ்தஸ் சீஸர்
C
நெடுஞ்செழியன்
D
யவனர்
Question 44
கொற்கை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் சார்ந்த காலம்
A
இரும்பு காலம்
B
உலோகக்காலம்
C
செம்பு கற்காலம்
D
பெருங்கற்காலம்
Question 45
“ சங்ககாலம் முதல் பிற்கால பாண்டியர் காலம் வரை பாண்டிய நாட்டு முத்துக்களை உரோம் நகரத்தினர் விரும்பி வாங்கினர்" என்று கூறிய வரலாற்று அறிஞர்
A
அகஸ்டஸ்
B
ஸ்டிராபோ
C
ஹிப்பல்ஸ்
D
சீஸர்
Question 46
பாண்டிய மன்னர்கள் அகஸ்டஸ் மன்னன் அரசவைக்கு பரிசாக அளித்த பொருள் எது?
A
வலம்புரி சங்கு
B
வைரம்
C
முத்து
D
பவளம்
Question 47
பாண்டிய மன்னனின் குதிரைப்படைக்காக எத்தனை அரேபியக் குதிரைகள் ஆண்டுதோறும் கொற்கை துறைமுகத்தில் வந்திறங்கின .
A
15,000
B
14,000
C
17,000
D
16,000
Question 48
பாண்டிய நாட்டு நாணயங்களை அச்சிடுவதற்கான பட்டறைகள் நிறைந்த தெருவின் பெயர் _____ .
A
அஃகசாலை
B
எஃகு சாலை
C
நாணயசாலை
D
பட்டறை சாலை
Question 49
பருவக்காற்றின் உதவியினால் முசிறித் துறைமுகத்துக்கு நடுக்கடல் வழியாக விரைவில் பயணம் செய்யும் வழியை கண்டறிந்தவர் யார் ?
A
அகஸ்தஸ்
B
ஸ்டிரோபா
C
ஹிப்பல்ஸ்
D
சீஸர்
Question 50
_____ பருவக்காற்று வழியாக யவனக் கடல் வணிகம் பெருகியது.
A
வியாபாரக்காற்று
B
தென் மேற்கு பருவக்காற்று
C
வடகிழக்கு பருவக்காற்று
D
ஹிப்பல்ஸ் காற்று
Question 51
______ அரசர்களின் உருவ முத்திரை இடப்பட்ட நாணய புதையல்கள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன.
A
எகிப்திய
B
யவனர்
C
உரோமபுரி
D
சீனர்
Question 52
கீழ்க்கண்ட பாடல் வரிகளை ஆராய்க .
  1. சுள்ளியம் பேர்யாற்று வெண்னுரை கலங்க – அகநானூறு
  2. நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் – பதிற்றுப்பத்து
  3. மாலைத் திங்கள் வழியோன் ஏறினான் – சிலம்பு
  4. பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – அகநானூறு
A
அனைத்தும் தவறு
B
1, 3, 4 சரி
C
3, 4 சரி
D
அனைத்தும் சரி
Question 53
மதுரை குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது
  1. தமிழகத்தின் தொன்மையான நகரம் .
  2. இரண்டாயிரம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வரும் நகரங்களுள் ஒன்று .
  3. கௌடில்யர், கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டு பயணிகளால் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்கது.
  4. செவ்விலக்கியத்தின் தலைநகராக திகழ்கிறது .
A
3, 4
B
2, 4
C
3 மட்டும்
D
எதுவுமில்லை
Question 53 Explanation: 
(விளக்கம்: கௌடில்யர் – பொ.ஆ.மு.370 மெகஸ்தனிஸ் - பொ.ஆ.மு.350)
Question 54
  • “ எல்லா இனமும் மதமும் உண்டு – இங்கு
  • இறையருள் ஆலயம் ஏகமுண்டு!
  • பல்லாயிரம் ஆண்டு வரலாறு – இதைப்
  • பாடாத நாவில்லை பண்பாடு! "
  • என்ற பாடலில் சிறப்பிக்கப்படும் நகரம்
A
தஞ்சாவூர்
B
கும்பகோணம்
C
மதுரை
D
திருச்சி
Question 55
இலக்கணக் குறிப்புத் தருக .
  • செங்கோல், பேரழகு
A
வினைத் தொகை
B
பண்புத்தொகை
C
உவமை தொகை
D
உம்மை தொகை
Question 55 Explanation: 
(விளக்கம் : இரு சொற்களுக்கிடையில் 'மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்)
Question 56
இலக்கணக் குறிப்புத் தருக
  • எழுந்த, பாடு
A
பெயரெச்சம், ஏவல்வினைமுற்று
B
வினையெச்சம், பெயரெச்சம்
C
வினைத் தொகை, பெயரெச்சம்
D
வினையெச்சம், ஏவல்வினைமுற்று
Question 56 Explanation: 
(விளக்கம் : பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். முன்னிலையில் ஒருவனை, ஒருத்தியை அல்லது ஒன்றினை ஆணையிட்டு ஏவும் வினையே ஏவல் வினைமுற்று என்பதாகும்.இது எதிர்காலத்தைக் காட்டி வரும். ஒருமை, பன்மையை உணர்த்தும்.)
Question 57
இலக்கணக் குறிப்புத் தருக – பாடாத
A
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
B
எதிர்மறைப் பெயரெச்சம்
C
வினைத்தொகை
D
ஏவல்வினை முற்று
Question 58
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – வாழ்ந்திருக்கும்
A
வாழ்ந்து + இருக்கும்
B
வாழ்ந்து + இரு + க் + க் + உம்
C
வாழ்ந்திரு + க் + க் + உம்
D
வாழ்ந்திரு + க் + உம்
Question 59
" வாழ்ந்திருக்கும் >> வாழ்ந்திரு + க் + க் + உம் " இதில் ‘ க்+க் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
சந்தி, எதிர்மறை இடைநிலை
B
சந்தி, எதிர்கால இடைநிலை
C
எதிர்கால இடைநிலை, சந்தி
D
சந்தி, இறந்தகால இடைநிலை
Question 60
சிந்து என்னும் பாவகை _____ பாடல் அமைப்பிலிருந்து தோன்றியது .
A
தெம்மாங்கு
B
ஆனந்தகளிப்பு
C
சந்தப் பாடல்
D
நாட்டுப்புறப் பாடல்
Question 60 Explanation: 
( விளக்கம் : சிந்து என்பது ஓசைநயத்துடன் பாடக் கூடிய பாவகை .)
Question 61
சிந்து வகை பாடல்கள் ______,______ அமைந்த கண்ணிகளை கொண்டவை .
A
இலக்கணம், சந்தம்
B
பாவகை, இலக்கணம்
C
சந்தம், இயைபுத் தொடை
D
சந்தம், பாவகை
Question 62
கீழ்க்கண்டவற்றுள் எந்த வகை பாடல் வடிவங்கள் சிந்து பாவகை வழக்கிலிருந்த  காலத்தில் புதிய பாவடிவங்களாக தோன்றின .
  • 1.ஆனந்தக்களிப்பு                  2 . தெம்மாங்கு     3. வழிநடைச் சிந்து
  1. நொண்டிச்சிந்து 5. கும்மிப் பாடல்கள்
A
அனைத்தும்
B
1, 2
C
1, 2, 5
D
3, 4
Question 63
ஓரெதுகை பெற்ற இரண்டு அடிகள் அளவொத்து வருவது _____ பாவகை ஆகும் .
A
வெண்பா
B
ஆசிரியப்பா
C
சிந்து
D
கலிப்பா
Question 64
கீழ்க்கண்டவர்களுள் சிந்து வகையினை அதிகமாக கையாண்டவர் யார் ?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கடுவெளி சித்தர்
D
கம்பர்
Question 65
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது ?
  1. சிந்து என்பது இசைத்தமிழ்ப் பாகுபாடுகளில் ஒன்று .
  2. பல்லவி, அனுப்பல்லவி, இன்றி சரணங்களுக்குரிய கண்ணிகளுடன் உடைய பாக்கள் சில வகைச் சிந்துகளில் காணப்படுகின்றன.
  3. சித்தர் பாடல்கள் பல சிந்து வகையில் அமைந்துள்ளன.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1, 3 சரி
D
2, 3 சரி
Question 66
"பாபம் செய்யாதிரு மனமே " என்னும் சிந்து வகைப் பாடல் யாருடையது ?
A
திருமூலர்
B
அகத்தியர்
C
கடுவெளிச் சித்தர்
D
தொல்காப்பியர்
Question 67
' சிந்துக்குத் தந்தை ‘ என போற்றப்படுபவர் யார் ?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கடுவெளி சித்தர்
D
கம்பர்
Question 68
சரியான இணையைத் தேர்ந்தெடு
  1. பல்லவி – எடுப்பு
  2. அனுபல்லவி – தொடுப்பு
  3. சரணம் – முடிப்பு
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1, 3 சரி
D
2, 3 சரி
Question 69
மதுரைக் காஞ்சி என்பது எவ்வகை நூல்களுள் ஒன்று ?
A
பதினெண் கீழ்க்கணக்கு
B
பதினெண் மேற்கணக்கு
C
சிந்துப் பாடல்
D
எட்டுத்தொகை
Question 70
  • “ பாரதி போதிச்ச பாடசாலை – திருப்
  • பரங்குன்ற முருகன் நின்னசோலை "
  • என்ற வரிகள் எந்த  கவிதையில்  இடம்பெற்றுள்ளன
A
மதுரைக் காஞ்சி
B
நான்மாடக்கூடல்
C
காவடிச் சிந்து
D
நொண்டிச்சிந்து
Question 71
மதுரைக் காஞ்சியில் கீழ்க்கண்ட எந்தெந்த காட்சிகள் கவித்துவமாய் விரிந்துள்ளன .
  • 1.கோட்டை கொத்தளம்                  2. திருவிழாக்கள்
  1. பலவகைப் பள்ளிகள்
  2.  நாற்பெருங்குழு
  3. அந்தி வணிகம்
A
அனைத்தும்
B
1, 3, 5
C
2, 3
D
1, 2, 3
Question 72
  • "மண்உற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்
  • விண்உற ஓங்கிய பல் படைப்புரிசைத் தொல்வலி நிலைஇய "
  • என்னும் வரிகளை இயற்றியவர் யார் ?
A
பாரதியார்
B
கடுவெளி சித்தர்
C
மாங்குடி மருதனார்
D
பாரதிதாசன்
Question 73
  • " ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்
  • பல்வேறு குழாஅத்து இசைஎழுந்து ஒலிப்ப”
  • இவ்வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன ?
A
நான்மாடக்கூடல்
B
மதுரைக் காஞ்சி
C
பதிற்றுப்பத்து
D
புறநானூறு
Question 74
  • " பொறிமயிர் வாரணம் ...
  • கூட்டுறை வயமாப் புலியொடு குழும "
  • என்ற வரிகள் மதுரையில் ______ இருந்ததை உணர்த்துகின்றன .
A
வாரணங்கள்
B
புலிகள்
C
மாடங்கள்
D
வனவிலங்கு சரணாலயம்
Question 75
மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்த செய்தியை கூறும் மதுரைக் காஞ்சியின் அடிகள் _____ .
A
637 – 639
B
693 – 697
C
673 – 677
D
637 – 677
Question 76
பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் நூலை இயற்றியவர் யார் ?
A
இராசவேல்
B
இராசமாணிக்கனார்
C
இராசேந்திரன்
D
அரவிந்த் குப்தா
Question 77
சரியான பொருளை தேர்ந்தெடு
  • புரிசை, பணை
A
மதில், பனைமரம்
B
சாளரம், பனைமரம்
C
நீர்நிலை ,சாளரம்
D
மதில், முரசு
Question 78
சரியான பொருளை தேர்ந்தெடு
  • சில்காற்று, மாகால்
A
பெருங்காற்று, புயல்
B
தென்றல், புயல்
C
தென்றல், பெருங்காற்று
D
தென்றல், சாளரம்
Question 79
சரியான பொருளை தேர்ந்தெடு
  • முந்நீர், கயம்
A
மூன்று வகையான நீர், கடல்
B
கடல், நீர்நிலை
C
கடல்,முரசு
D
கடல், சாளரம்
Question 80
சரியான பொருளை தேர்ந்தெடு
  • அணங்கு, புழை
A
ஒழுங்கு, சாளரம்
B
தெய்வம், மதில்
C
தெய்வம், சாளரம்
D
மதில், சாளரம்
Question 81
சரியான பொருளை தேர்ந்தெடு
  • ஓவு, நியமம்
A
ஓய்வு, நியமனம்
B
ஓய்வு, அங்காடி
C
ஓவியம், அங்காடி
D
ஓவியம், நியமனம்
Question 82
இலக்கணக் குறிப்புத் தருக
  • நெடுநிலை, முந்நீர்
A
வினைத் தொகை
B
பண்புத்தொகை
C
உவமை தொகை
D
உம்மை தொகை
Question 82 Explanation: 
(விளக்கம் : இரு சொற்களுக்கிடையில் 'மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்)
Question 83
இலக்கணக் குறிப்புத் தருக
  • முழங்கிசை, இமிழிசை
A
வினைத் தொகை
B
பண்புத்தொகை
C
உவமை தொகை
D
உம்மை தொகை
Question 83 Explanation: 
(விளக்கம் : வினைத் தொகை என்பது மூன்று கால வினைகளையும் தொகுத்து ஒரு சேரக் குறிக்குமாறு வரும் பெயர்ச்சொல் ஆகும். இச்சொல் முக்காலத்தையும் உணர்த்தும் .)
Question 84
இலக்கணக் குறிப்புத் தருக – மகிழ்ந்தோர்
A
வினையாலணையும் பெயர்
B
எதிர்மறைப் பெயரெச்சம்
C
வினைத்தொகை
D
ஏவல்வினை முற்று
Question 84 Explanation: 
(விளக்கம் : வினைமுற்று, வினைசெய்த கருத்தாவைக் குறிக்க வருவது வினையாலணையும் பெயர் ஆகும்.)
Question 85
இலக்கணக் குறிப்புத் தருக – மாகால்
A
உரிச்சொல் தொடர்
B
பண்புத்தொகை
C
உவமை தொகை
D
ஏவல்வினை முற்று
Question 86
இலக்கணக் குறிப்புத் தருக – ஓங்கிய, வாயில்
A
பெயரெச்சம், ஏவல்வினைமுற்று
B
வினையெச்சம், பெயரெச்சம்
C
பெயரெச்சம், இலக்கணப் போலி
D
வினையெச்சம், ஏவல்வினைமுற்று
Question 86 Explanation: 
(விளக்கம் : பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும்.
Question 87
இலக்கணக் குறிப்புத் தருக
  • நிலைஇய, குழாஅத்து
A
செய்யுளிசை அளபெடை, சொல்லிசை அளபெடை
B
சொல்லிசை அளபெடை, செய்யுளிசை அளபெடை
C
எதிர்மறைப் பெயரெச்சம், செய்யுளிசை அளபெடை
D
பெயரெச்சம், சொல்லிசை அளபெடை
Question 87 Explanation: 
(விளக்கம் : செய்யுளிசை அளபெடை செய்யுளில் இசையைக் கூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும். ஒரு பெயர்ச் சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும்)
Question 88
பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக – ஆழ்ந்த
A
ஆழ்ந்து + அ
B
ஆழ் + த் + அ
C
ஆழ் + த்(ந்) + த் + அ
D
ஆழ் + ந் + அ
Question 89
பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக – ஓங்கிய
A
ஓங்கு + இய
B
ஓங்கு + இ + அ
C
ஓங்கு + ய் + அ
D
ஓங்கு + இ(ன்) + ய் + அ
Question 90
பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக – மகிழ்ந்தோர்
A
மகிழ்ந்து + ஓர்
B
மகிழ்ந்து +ய் + ஓர்
C
மகிழ்+த்(ந்) +த் + ஓர்
D
மகிழ் + த் + ஓர்
Question 91
‘ ஆழ்ந்த  ‘ என்ற சொல்லின்  பகுபத உறுப்புகளில் ' அ ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
வினையெச்ச விகுதி
B
பெயரெச்ச விகுதி
C
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
D
பலர்பால் வினை முற்று விகுதி
Question 91 Explanation: 
(விளக்கம் : பெயரெச்ச விகுதிகள் – அ, (உம்))
Question 92
‘ ஓங்கிய ‘என்ற சொல்லின்  பகுபத உறுப்புகளில் ' ய் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
சந்தி
B
சாரியை
C
உடம்படுமெய்
D
இறந்தகால இடைநிலை
Question 93
' மகிழ்ந்தோர்  ‘என்ற சொல்லின்  பகுபத உறுப்புகளில் ' ஓர் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
பலர்பால் வினைமுற்று விகுதி
B
ஆண்பால் வினைமுற்று விகுதி
C
பெண்பால் வினைமுற்று விகுதி
D
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
Question 93 Explanation: 
(விளக்கம் : பலர்பால் வினைமுற்று விகுதிகள் - அர், ஆர், ப, மார்)
Question 94
மதுரைக் காஞ்சி மொத்தம் எத்தனை அடிகளைக் கொண்டது ?
A
872
B
782
C
354
D
534
Question 95
மதுரைக் காஞ்சியிலுள்ள பாடல்களில் எத்தனை அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன?
A
872
B
782
C
354
D
534
Question 96
மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் யார் ?
A
சேரன் செங்குட்டுவன்
B
இளம்பெருவழுதி
C
தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
D
நலங்கிள்ளி
Question 97
மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் யார் ?
A
கணிமேதாவியர்
B
மாங்குடி மருதனார்
C
ஒளவையார்
D
பாண்டியன் நெடுஞ்செழியன்
Question 98
மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்?
A
11
B
12
C
13
D
14
Question 99
கீழக்கண்ட கூற்றுகளுள் சரியானது எது ?
  1. எட்டுத்தொகை  நூல்களுள் ஒன்று மதுரைக் காஞ்சி .
  2. காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள் .
  3. மதுரையின் சிறப்புகளை பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக் காஞ்சி எனப்பட்டது .
  4. இதை 'பெருகுவள  மதுரைக்காஞ்சி ‘ எனவும் அழைக்கப்படுகிறது .
A
அனைத்தும் சரி
B
2, 3, 4 சரி
C
1, 3, 4 சரி
D
3, 4 சரி
Question 99 Explanation: 
(விளக்கம் : பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக் காஞ்சி .)
Question 100
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது ?
  1. மால் என்பதன் தமிழ்ச் சொல் பல்லங்காடியகம் .
  2. பகலில் செயல்படும் கடை வீதிகள் ‘ நாளங்காடி ‘ எனப்படும் .
  3. இரவில் செயல்படும் கடை வீதிகள் ‘ அல்லங்காடி ‘ எனப்படும்
A
அனைத்தும் சரி
B
2, 3 சரி
C
2, 3 தவறு
D
1, 3 சரி
Question 100 Explanation: 
(விளக்கம் : நாள் – பகல், அல் – இரவு)
Question 101
உள்ளுர்த் தேவைக்கு ஏற்றார் போல், அங்கு விளைகிற உணவுப் பொருள்களையும் விவசாயம், சமையல், வீடு ஆகியவற்றுக்குத் தேவையான பொருள்களையும் சிறிய அளவில் விற்கும் சிறு வணிக செயல்பாடு ____ எனப்படும் .
A
சந்தை
B
கிராமச் சந்தை
C
வியாபாரம்
D
சிறு வியாபாரம்
Question 102
கிருஷ்ணகிரி  மாவட்டம் போச்சம்பள்ளிச் சந்தை எத்தனை கடைகளுடன் எவ்வளவு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
A
1000, 18 ஏக்கர்
B
8000, 81 ஏக்கர்
C
8000, 18 ஏக்கர்
D
1000, 81 ஏக்கர்
Question 103
போச்சம்பள்ளிச் சந்தை வாரந்தோறும் எந்தக் கிழமைகளில் கூடுகிறது ?
A
சனி
B
ஞாயிறு
C
திங்கள்
D
செவ்வாய்
Question 104
போச்சம்பள்ளிச் சந்தை எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது ?
A
152
B
251
C
125
D
215
Question 104 Explanation: 
(விளக்கம் : இச்சந்தையில் நான்கு தலைமுறை நட்பு நிலவுகிறது .)
Question 105
தவறான இணையைத் தேர்ந்தெடு .
A
மணப்பாறை – மாட்டுச்சந்தை
B
அய்யலூர் – ஆட்டுச்சந்தை
C
ஒட்டன்சத்திரம் – காய்கறிச்சந்தை
D
நாகர்கோவில் தோவாளை - கருவாட்டுச் சந்தை
Question 105 Explanation: 
( விளக்கம் : நாகர்கோவில் தோவாளை – பூச்சந்தை)
Question 106
சரியான இணையைத் தேர்ந்தெடு .
  1. ஈரோடு – ஜவுளிச்சந்தை
  2. காராமணி குப்பம் (கடலூர்) - கருவாட்டுச் சந்தை
  3. நாகப்பட்டினம் - மீன் சந்தை
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 107
சரியான இணையை தேர்ந்தெடு .
  1. ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் ஆகும் .
  2. தொல்காப்பியர் ஆகுபெயர்களை பதினைந்தாகவும் நன்னூலார் ஏழாகவும் வகைப்படுத்தி இலக்கணம் வகுத்துள்ளனர் .
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 107 Explanation: 
(விளக்கம் : தொல்காப்பியர் ஆகுபெயர்களை ஏழாகவும் நன்னூலார் பதினைந்தாகவும் வகைப்படுத்தி இலக்கணம் வகுத்துள்ளனர் .)
Question 108
‘ முல்லையைத் தொடுத்தாள் ‘ எவ்வகை ஆகுபெயர்
A
பொருளாகு பெயர்
B
இடவாகு பெயர்
C
காலவாகு பெயர்
D
சினையாகுபெயர்
Question 109
' வகுப்பறை சிரித்தது ‘ எவ்வகை ஆகுபெயர்
A
பொருளாகு பெயர்
B
இடவாகு பெயர்
C
காலவாகு பெயர்
D
சினையாகுபெயர்
Question 110
கீழ்க்கண்டவற்றுள் சினையாகுபெயரை குறிக்கும் தொடர் எது ?
A
கார் அறுத்தான்
B
மருக்கொழுந்து நட்டான்
C
மஞ்சள் பூசினாள்
D
வற்றல் தின்றான்
Question 111
கீழ்க்கண்டவற்றுள் பண்பாகு பெயரை குறிக்கும் தொடர் எது ?
A
கார் அறுத்தான்
B
மருக்கொழுந்து நட்டான்
C
மஞ்சள் பூசினாள்
D
வற்றல் தின்றான்
Question 112
' கார் அறுத்தான் ' எவ்வகை ஆகுபெயர்
A
பொருளாகு பெயர்
B
இடவாகு பெயர்
C
காலவாகு பெயர்
D
சினையாகுபெயர்
Question 112 Explanation: 
( விளக்கம் : கார் என்னும் காலப் பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்தது)
Question 113
கீழ்க்கண்டவற்றுள் தொழிலாகுபெயரை குறிக்கும் தொடர் எது ?
A
கார் அறுத்தான்
B
மருக்கொழுந்து நட்டான்
C
மஞ்சள் பூசினாள்
D
வற்றல் தின்றான்
Question 113 Explanation: 
( விளக்கம் : வற்றல் என்னும் தொழில் பெயர் வற்றிய உணவுப் பொருளுக்கு ஆகி வந்தது.)
Question 114
சரியான இணையைத் தேர்ந்தெடு .
  1. வானொலி கேட்டு மகிழ்ந்தனர் - கருவியாகு பெயர்
  2. பைங்கூழ் வளர்ந்தது - காரியவாகு பெயர்
  3. அறிஞர் அண்ணாவை படித்திருக்கிறேன் – கருத்தாவாகுபெயர்
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2, 3 சரி
D
2 மட்டும் சரி
Question 114 Explanation: 
(விளக்கம் : வானொலி கேட்டு மகிழ்ந்தனர் - வானொலி என்னும் கருவி, அதன் காரியமாகிய நிகழ்ச்சிகளுக்கு ஆகி வந்தது. பைங்கூழ் வளர்ந்தது – கூழ் என்னும் காரியம் அதன் கருவியாகிய பயிருக்கு ஆகி வந்தது . அறிஞர் அண்ணாவை படித்திருக்கிறேன் – அறிஞர் அண்ணா என்னும் கருத்தாவின் பெயர், அவர் இயற்றிய நூல்களுக்கு ஆகி வருகிறது .)
Question 115
தவறான இணையைத் தேர்ந்தெடு
  1. ஒன்று பெற்றால் ஒளிமயம் – எண்ணலளவை ஆகுபெயர்
  2. இரண்டு கிலோ கொடு – முகத்தலளவை ஆகுபெயர்
  3. அரை லிட்டர் வாங்கு – எடுத்தலளவை ஆகுபெயர்
  4. ஐந்து மீட்டர் வெட்டினான் – நீட்டலளவை ஆகுபெயர்
A
அனைத்தும்
B
2, 3
C
1,4
D
எதுவுமில்லை
Question 115 Explanation: 
(விளக்கம் : 2. இரண்டு கிலோ கொடு – எடுத்தலளவை ஆகுபெயர் 3. அரை லிட்டர் வாங்கு – முகத்தலளவை ஆகுபெயர்)
Question 116
  • கூற்று 1 : காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் துறைமுகமாகும் .
  • கூற்று 2 : வண்டியூர் என்னும் ஊர் காஞ்சி மாநகரத்தில்  அமைந்துள்ளது .
A
கூற்று 1,2 சரி
B
கூற்று 1, 2 தவறு
C
கூற்று 2 சரி, 1 தவறு
D
கூற்று 1 சரி, 2 தவறு
Question 117
ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் சங்க நூல்கள்
A
பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு
B
குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து
C
மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு
D
மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை
Question 118
  • விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க
  • காவிரியாற்றின் கழிமுகம் ஆழமாகவும், அகலமாகவும் இருந்தது.
  • பகலில் இயங்கும் கடைகள் நாளங்காடிகள்.
A
காவிரியாற்றின் கழிமுகம் எதற்காக அமைந்திருந்தது ? – பகலில் இயங்கும் கடைகள் எவ்விதம் அழைக்கப்பட்டன ?
B
காவிரியாற்றின் கழிமுகம் எவ்வாறு அமைந்திருந்தது ? – பகலில் இயங்கும் கடைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன ?
C
காவிரியாற்றின் கழிமுகம் எங்கு அமைந்துள்ளது - பகலில் கடைகள் எவ்வாறு இயங்கின
D
காவிரியாற்றின் கழிமுகம் எதனால் அமைந்திருந்தது ? – பகலில் இயங்கும் கடைகள் எப்படி அழைக்கப்பட்டன ?
Question 119
" மாகால் எடுத்த முந்நீர் போல் " இவ்வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன.
A
நான்மாடக்கூடல்
B
மதுரைக்காஞ்சி
C
புறநானூறு
D
அகநானூறு
Question 120
சோழநாட்டின் தலைநகராகிய காவிரி பூம்பட்டினத்திலும், பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையிலும் " கூலங் குவித்த கூல வீதிகள் “ இருந்தன எனக் கூறும் நூல் எது ?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
புறநானூறு
D
மதுரைக் காஞ்சி
Question 121
சரியான தொடரை தேர்ந்தெடு .
A
மலையேறிய மக்கள் மாலையின் வேகவேகமாய்க் கீழிறங்கின .
B
எங்கள் ஊர் சந்தையில் காய்கறிகள் கிடைக்கும் .
C
பண்டை துறைமுகங்களில் ஏற்றுமதிச் செய்யப்பட்டது.
D
சிட்டுக்கு சிறகுகள் முளைத்தது .
Question 121 Explanation: 
( விளக்கம் : மலையேறிய மக்கள் மாலையில் வேகவேகமாய்க் கீழிறங்கின . பண்டை துறைமுகங்களில் ஏற்றுமதி செய்யப்பட்டது. சிட்டுக்கு சிறகுகள் முளைத்தன .)
Question 122
கீழ்வருவனவற்றுள் கூலம் எனக் குறிப்பிடப்படுபவை எவை
  • 1.நெல்லும் புல்லும்                        2. வரகும் தினையும்
  1. எள்ளும் கொள்ளும்
  2.  அவரையும் துவரையும்
  3. பயறும் உளுந்தும்
A
அனைத்தும் சரி
B
1, 3,5
C
1, 2, 3
D
3, 4, 5
Question 123
பொருத்துக.
  1. கழிமுகங்கள்            i) Estuaries
  2. கலங்கரை விளக்கம்          ii) Light house
  3. துறைமுகங்கள்                  iii) Ports
  4. பண்டமாற்றுமுறை iv) Commodity Exchange
A
i ii iii iv
B
iii ii i iv
C
iv iii ii i
D
iv ii i iii
Question 124
பொருத்துக
  1. இளநீர்                       i) Vegetable Soup
  2. அகழி                        ii) Sugar Cane juice
  3. கரும்புச்சாறு             iii) Moat
  4. காய்கறி வடிச் சாறு   iv) Tender coconut
A
i ii iii iv
B
iii ii i iv
C
iv iii ii i
D
iv ii i iii
Question 125
சரியான இணையைத் தேர்ந்தெடு .
  1. நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம் – முனைவர் சு. சக்திவேல்
  2. தரங்கம்பாடி தங்கப் புதையல் - பெ.தூரன்
  3. இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) - ச.தமிழ்ச்செல்வன்
A
அனைத்தும் சரி
B
2, 3 சரி
C
1, 3 சரி
D
1, 2 சரி
Question 126
  • "அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
  • ஐந்துசால்பு ஊன்றிய தூண் “
  • இக்குறளில் பயின்று வரும் அணி
A
உவமை அணி
B
எடுத்துக்காட்டுவமை அணி
C
ஏகதேச உருவக அணி
D
உருவக அணி
Question 127
  1. " ஊழிபெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
  2. ஆழி எனப்படு வார் “
  3. இக்குறளில் பயின்று வரும் அணி
A
உவமை அணி
B
எடுத்துக்காட்டுவமை அணி
C
ஏகதேச உருவக அணி
D
உருவக அணி
Question 128
  1. " உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
  2. எழுவாரை எல்லாம் பொறுத்து "
  3. இக்குறளில் பயின்று வரும் அணி
A
உவமை அணி
B
எடுத்துக்காட்டுவமை அணி
C
ஏகதேச உருவக அணி
D
உருவக அணி
Question 129
பொருளுக்கேற்ற அடியை சரியாக பொருந்தியுள்ளதா என ஆராய்க.
  1. கண்டானாம் தான்கண்டவாறு – தெரிந்த அளவில் அறிவுடையவனாகத் தோன்றுவான் .
  2. அறம் நாணத்தக்கது உளடைத்து - அறம் வெட்கப்பட்ட அவனை விட்டு விலகிப் போகும் .
  3. மாற்றாரை மாற்றும் படை – பகைவரையும் நட்பாக்கும் கருவி
A
அனைத்தும் சரி
B
2, 3 சரி
C
1, 3 சரி
D
1, 2 சரி
Question 130
ஐந்து சால்புகளில் இரண்டு ____ .
A
வானமும் நாணமும்
B
நாணமும் இணக்கமும்
C
இணக்கமும் சுணக்கமும்
D
இணக்கமும் பிணக்கமும்
Question 131
  • அன்புநாண் ஒப்புரவு ___ வாய்மையொடு
  • ஐந்துசால்பு ஊன்றிய ____.
A
பணிதல், படை
B
பணிதல், தூண்
C
கண்ணோட்டம், தூண்
D
கண்ணோட்டம், படை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 131 questions to complete.

2 Comments

  1. Hello sir how to join this all test series pls reply… And mention the fee details… ASAP…

Leave a Reply to Sivaranjaniravi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!