Online TestTamil
9th Std Tamil Notes – Part 6
9th Std Tamil Notes - Part 6
Congratulations - you have completed 9th Std Tamil Notes - Part 6.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
யாரும் சிறியர் யான்பெரியன், எதிலும் சிறந்தது என்னலமாம்; பாரில் எனக்கீ டில்லை எனப் பயனில் மொழிகள் பகர்வதும் ஏன்? - இப்பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
பாரதியார் பாடல்கள், பாரதியார் | |
குறிஞ்சித்திட்டு, பாரதிதாசன் | |
குழந்தை இலக்கியம், அழ.வள்ளியப்பா | |
உமர்கய்யாம் பாடல்கள், கவிமணி தேசிக விநாயகனார் |
Question 2 |
சேரும் உலகப் பொருளையெல்லாம் தெரிய நோக்கித் தனைநோக்காச் சீரில் அமைந்த கண்மணியின் செயலை நோக்கித் தெளிவீரே! - இப்பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
பாரதியார் பாடல்கள், பாரதியார் | |
குறிஞ்சித்திட்டு, பாரதிதாசன் | |
குழந்தை இலக்கியம், அழ.வள்ளியப்பா | |
உமர்கய்யாம் பாடல்கள், கவிமணி தேசிக விநாயகனார் |
Question 3 |
பொருந்தாதது எது ? சொற்பொருள் தருக?
பகர்வது - சொல்வது | |
தெளிவிரே - தெளியுங்கள் | |
துவ்வா - நோக்கிய | |
அகன்று - விலகி |
Question 3 Explanation:
குறிப்பு :- துவ்வா என்பதன் சொற்பொருள் நுகராத.
Question 4 |
பொருந்தாதது எது ? இலக்கணக்குறிப்பு தருக?
நோக்கி - வினையெச்சம் | |
துவ்வா விடம் - ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம் | |
வாழ்க - வியங்கோள் வினைமுற்று | |
செய்தல் - பண்புப்பெயர் |
Question 4 Explanation:
குறிப்பு :- செய்தல் என்பதன் இலக்கணக்குறிப்பு தொழிற்பெயர்.
Question 5 |
அன்பு செய்யின் அயலாரும் அண்டி நெருங்கும் உறவினராம்; அன்பு நீங்கின் உறவினரும் அகன்று நிற்கும் அயலவராம்; - இப்பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
பாரதியார் பாடல்கள், பாரதியார் | |
குறிஞ்சித்திட்டு, பாரதிதாசன் | |
குழந்தை இலக்கியம், அழ.வள்ளியப்பா | |
உமர்கய்யாம் பாடல்கள், கவிமணி தேசிக விநாயகனார் |
Question 6 |
துன்ப நோயை நீக்கிடுமேல் துவ்வா விடமும் அமுதாகும், துன்ப நோயை ஆக்கிடுமேல் தூய அமுதம் விடமாமே - இப்பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
பாரதியார் பாடல்கள், பாரதியார் | |
குறிஞ்சித்திட்டு, பாரதிதாசன் | |
குழந்தை இலக்கியம், அழ.வள்ளியப்பா | |
உமர்கய்யாம் பாடல்கள், கவிமணி தேசிக விநாயகனார் |
Question 7 |
ஆழி சூழும் உலகாளும் அரச னாக வேண்டுமெனில் வாழும் வாழ்வில் உன்னையும் நீ மறந்து வாழ வேண்டுமடா! - இப்பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
பாரதியார் பாடல்கள், பாரதியார் | |
குறிஞ்சித்திட்டு, பாரதிதாசன் | |
குழந்தை இலக்கியம், அழ.வள்ளியப்பா | |
உமர்கய்யாம் பாடல்கள், கவிமணி தேசிக விநாயகனார் |
Question 8 |
ஏழை யாகி எளியவரின் எளிய னாக வேண்டுமடா! தோழ னாகி யாவர்க்கும் தொண்ட னாக வேண்டுமடா! - இப்பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
பாரதியார் பாடல்கள், பாரதியார் | |
குறிஞ்சித்திட்டு, பாரதிதாசன் | |
குழந்தை இலக்கியம், அழ.வள்ளியப்பா | |
உமர்கய்யாம் பாடல்கள், கவிமணி தேசிக விநாயகனார் |
Question 9 |
கீழ்க்கண்ட கூற்றைப் படித்து இவர் யார் என கூறுக?
இவர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் பிறந்தவர். இவரின் பெற்றோர் சிவதாணு - ஆதிலட்சுமி அம்மையார். இவர் உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
பாரதியார் | |
கவிமணி தேசிக விநாயகனார் | |
நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் | |
பாரதிதாசன் |
Question 10 |
உமர்கய்யாம் ------------- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர். இவரது முழுப் பெயர் --------------------- என்பது. இவரின் கவிதைகள் மக்கள் அடையும் இன்ப துன்பங்களையும், இறைவனது படைப்பையும் பாடுபொருளாகக் கொண்டவை.
9, முகமது பைரோஸ் | |
10, குணங்குடி மஸ்தான் | |
11, கியாதுதீன் அபுல்பாத் உமர்கய்யாம் | |
12, காபித்தூள் காதிறு |
Question 11 |
உமர்கய்யாம் ---------------, --------------- துறைகளில் புலமைமிக்கவராய் திகழ்ந்தார்.
அறிவியல், வானவியல் | |
கணிதம், வானவியல் | |
வானவியல், சோதிடவியல் | |
கணிதம், புவியியல் |
Question 12 |
கீழ்க்கண்ட கூற்றைப் படித்து இவர் யார் என கூறுக?
மலரும் மாலையும், மருமக்கள்வழி மான்மியம், குழந்தைச்செல்வம், ஆசிய ஜோதி முதலிய நூல்களின் ஆசிரியர் இவர். இவரது காலம் 1876 முதல் 1954 ஆம் ஆண்டுவரை.
பாரதியார் | |
கவிமணி தேசிக விநாயகனார் | |
நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் | |
பாரதிதாசன் |
Question 13 |
உமர்கய்யாம் பாடல்கள் இம்மை மறுமை பற்றி ----------------------- என்னும் பெயரில் உமர்கய்யாம் எழுதிய செய்யுள்களின் மொழிபெயர்ப்பு. இதனையே கவிமணி மொழிபெயர்த்துள்ளார். இதில், நூற்றுப் பதினைந்து பாடல்கள் உள்ளன.
தவவாழ்வு | |
சொற்புதினம் | |
ரூபாயத் | |
கலியுகம் |
Question 14 |
ரூபாயத் - என்பதன் பொருள் என்ன?
இரண்டடிச் செய்யுள் | |
மூன்றடிச் செய்யுள் | |
நான்கடிச் செய்யுள் | |
ஐந்தடிச் செய்யுள் |
Question 15 |
மணிமேகலையை இயற்றியவர் யார்?
சீத்தலைச் சாத்தனார் | |
நாகுத்தனார் | |
இளங்கோவடிகள் | |
சயங்கொண்டர் |
Question 16 |
கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் பெயர் என்ன?
பல்லவி | |
அரசமாதேவி | |
மணிமேகலை | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 17 |
முற்பிறப்பின் வினைப்பயன் காரணமாக அரசகுமாரனாகிய --------------- என்பவன், மணிமேகலையை மணம்புரிய விரும்பினான்.
தனஞ்செயன் | |
உதயகுமரன் | |
விஜயேந்திரன் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 18 |
மணிமேகலையை, மணிபல்லவத் தீவிற்கு வான்வழியே தூக்கிச் சென்றது யார்?
மலைக்கோவில் தெய்வம் | |
மணிமேகலா தெய்வம் | |
பளிக்கரை தெய்வம் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 19 |
மணிமேகலை பசியற்றிருக்கவும் விரும்பும் உருவம் எடுக்கவும் வான்வழிச் செல்லவும் தேவையான மூன்று மந்திரங்களைத் தெரிவித்து மறைந்தது யார்?
மலைக்கோவில் தெய்வம் | |
மணிமேகலா தெய்வம் | |
பளிக்கரை தெய்வம் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 20 |
------------------ என்பவரின் உதவியால், மணிமேகலை அமுதசுரபியைப் பெற்றுப் புகார் நகரை அடைகிறாள்.
மாதவி | |
கண்ணகி | |
தீவதிலகை | |
இவர்களில் யாருமில்லை |
Question 21 |
மணிமேகலை, --------------- என்பவரின் அறிவுரைப்படி ஆதிரையிடம் முதன் முதலில் பிச்சையேற்றாள். அதன்மூலம் அமுதசுரபியில் அள்ள அள்ளக் குறையாத அன்னம் பெருகியது. அதனைக்கொண்டு பசிப்பிணிநீக்கும் அறப்பணியை மேற்கொள்கிறாள்.
தீவதிலகை | |
மணிமேகலை தெய்வம் | |
அறவணவடிகள் | |
இவர்களில் யாருமில்லை |
Question 22 |
அமுதசுரபி, முற்பிறப்பில் ------------- என்பவரிடம் இருந்தது என்பதை அறிந்த மணிமேகலை அவனைக் காணும் பொருட்டு ஆபுத்திரன் நாட்டிற்குச் செல்கிறாள்
தீவதிலகை | |
தீவதிலகை | |
ஆபுத்திரன் | |
இவர்களில் யாருமில்லை |
Question 23 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
ஆயம் – தோழியர் கூட்டம் | |
ஆசனம் – இருக்கை | |
நாத்தொலைவில்லை – சொல் சோர்வின்மை | |
யாக்கை – இருப்பிடம் |
Question 23 Explanation:
குறிப்பு :- யாக்கை என்பதன் சரியான பொருள் உடம்பு.
Question 24 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
பேதைமை – அறியாமை | |
செய்கை – இருவினை | |
அரு – உருவமற்றது | |
உரு – உருகுதல் |
Question 24 Explanation:
குறிப்பு :- உரு என்பதன் சரியான பொருள் வடிவம்.
Question 25 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
வாயில் – ஐம்பொறிகள் | |
ஊறு – புலன்களின் இயல்பு | |
நுகர்வு – இன்பதுன்ப நுகர்ச்சி | |
வேட்கை – வெறுத்தல் |
Question 25 Explanation:
குறிப்பு :- வேட்கை என்பதன் சரியான பொருள் விருப்பம்.
Question 26 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
பெரும்பேறு – வீடுபேறு | |
கோடு – மலை | |
அலகில – அளவற்ற | |
குறளை – புறம்பேசுதல் |
Question 27 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
வெஃகல் – கோபம் | |
வெகுளல் – கடுஞ்சினம் கொள்ளுதல் | |
பொல்லாக் காட்சி – மாயத் தோற்றம் | |
சீலம் – ஒழுக்கம் |
Question 27 Explanation:
குறிப்பு :- வெஃகல் என்பதன் சரியான பொருள் பெருவிருப்பம்.
Question 28 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
புரைதீர் – குற்றம் நீங்கிய | |
கேண்மின் – கூறுங்கள் | |
முத்தேர் நகை – முத்துச் சிரிப்பு | |
உய்ம்மின் – போற்றுங்கள், நற்கதியடையுங்கள் |
Question 28 Explanation:
குறிப்பு :- கேண்மின் என்பதன் சரியான பொருள் கேளுங்கள்.
Question 29 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
உறைதல் – தங்குதல் | |
கூற்று – எமன் | |
மாசில் – குற்றமுள்ள | |
தொழுது – வணங்கி |
Question 29 Explanation:
குறிப்பு :- மாசில் என்பதன் சரியான பொருள் குற்றமற்ற.
Question 30 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
புக்கு – புகுந்து | |
இடர் – இன்னல் | |
மேனி - உடல் | |
மருங்கு - தூரம் |
Question 30 Explanation:
குறிப்பு :- மருங்கு என்பதன் சரியான பொருள் பக்கம்.
Question 31 |
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக?
தேவியும் ஆயமும் - எண்ணும்மை | |
அருந்தவர், நல்வினை - பண்புத்தொகைகள் | |
வாழ்க - வியங்கோள் வினைமுற்று | |
செய்தவம், வீழ்கதிர் - வினைமுற்று |
Question 31 Explanation:
குறிப்பு :- செய்தவம், வீழ்கதிர் என்பதன் சரியான இலக்கணக்குறிப்பு வினைத்தொகை.
Question 32 |
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக?
ஆய்தொடி நல்லாய் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
ஆழ்நரகு, பயன்தெரி புலவர் - வினைத்தொகை | |
தெளிதல் - பண்புப்பெயர் | |
பல்லுயிர், பெரும்பேறு, நல்வினை, தீவினை, பேரின்பம் - பண்புத்தொகைகள் |
Question 32 Explanation:
குறிப்பு :- தெளிதல் என்பதன் சரியான இலக்கணக்குறிப்பு தொழிற்பெயர்.
Question 33 |
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக?
காமத்தீ - உருவகம் | |
கடுஞ்சொல், நல்லறம் - பண்புத்தொகை | |
பொல்லாக்காட்சி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் | |
அரைசன் - வியங்கோள் வினைமுற்று |
Question 33 Explanation:
குறிப்பு :- அரைசன் என்பதன் சரியான இலக்கணக்குறிப்பு இடைப்போலி.
Question 34 |
தேவியும் ஆயமும் சித்திரா பதியும், மாதவி மகளும் மாதவர்க் காண்டலும், எழுந்தெதிர் சென்றாங்கு இணைவளைக் கையால், தொழுந்தகை மாதவன் துணையடி வணங்க, அறிவுண் டாகவென் றாங்கவன் கூறலும்,.. - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர் | |
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார் |
Question 35 |
இணைவளை நல்லாள் இராசமா தேவி, அருந்தவர்க் கமைந்த ஆசனம் காட்டித், திருந்தடி விளக்கிச் சிறப்புச் செய்தபின், யாண்டுபல புக்கநும் மிணையடி வருந்தஎன், காண்டகு நல்வினை நும்மையீங்கு அழைத்தது, - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர் | |
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார் |
Question 36 |
நாத்தொலை வில்லை யாயினும் தளர்ந்து, மூத்தவிவ் யாக்கை வாழ்கபல் லாண்டெனத், தேவி கேளாய் செய்தவ யாக்கையின், மேவினே னாயினும் வீழ்கதிர் போன்றேன், பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றோர், இறந்தார் என்கை இயல்பே இதுகேள் - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர் | |
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார் |
Question 37 |
பேதைமை செய்கை உணர்வே அருவுரு, வாயில் ஊறே நுகர்வே வேட்கை, பற்றே பவமே தோற்றம் வினைப்பயன், இற்றென வகுத்த இயல்பீ ராறும், பிறந்தோ ரறியின் பெரும்பேறு அறிகுவர், அறியா ராயின் ஆழ்நரகு அறிகுவர். - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார் |
Question 38 |
பேதைமை யென்பது யாதென வினவின், ஓதிய இவற்றை உணராது மயங்கி, இயற்படு பொருளால் கண்டது மறந்து, முயற்கோ டுண்டேனக் கேட்டது தெளிதல், - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர் | |
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார் |
Question 39 |
உலகம் மூன்றினும் உயிராம் உலகம், அலகில பல்லுயிர் அறுவகைத் தாகும், மக்களும் தேவரும் பிரமரும் நரகரும், தொக்க விலங்கும் பேயும் என்றே, - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர் | |
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார் |
Question 40 |
தீவினை யென்பது யாதென வினவின், ஆய்தொடி நல்லாய் ஆங்கது கேளாய், கொலையே களவே காமத் தீவிழைவு, உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும், - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர் | |
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார் |
Question 41 |
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென்று, உள்ளந் தன்னின் உருப்பன மூன்றுமெனப், பத்து வகையால் பயன்தெரி புலவர், இத்திறம் படரார் படர்குவர் ஆயின், விலங்கும் பேயும் நரகரும் ஆகிக், கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்,. - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர் | |
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார் |
Question 42 |
நல்வினை யென்பது யாதென வினவின், சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச், சீலம் தாங்கித் தானம் தலைநின்று, மேலென வகுத்த ஒருமூன்று திறத்துத், - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர் | |
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார் |
Question 43 |
அரைசன் தேவியொ டாயிழை நல்லீர், புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின், மறுபிறப் புணர்ந்த மணிமே கலைநீ, பிறவறங் கேட்ட பின்னாள் வந்துனக்கு, - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர் | |
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார் |
Question 44 |
நன்றறி மாதவன் நல்லடி வணங்கித், தேவியும் ஆயமும் சித்திரா பதியும், மாதவர் நன்மொழி மறவா துய்ம்மின், இந்நகர் மருங்கின்யா னுறைவேன் ஆயின், மன்னவன் மகற்கிவள் வருங்கூற்று என்குவர், - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர் | |
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார் |
Question 45 |
ஆபுத் திரனா டடைந்ததற் பின்னாள், மாசில் மணிபல் லவம்தொழு தேத்தி, வஞ்சியுட் புக்கு மாபத் தினிதனக்கு, எஞ்சா நல்லறம் யாங்கணுஞ் செய்குவல், எனக்கிடர் உண்டென்று இரங்கல் வேண்டா, மனக்கினி யீர்.. ….- இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர் | |
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார் |
Question 46 |
நல்வினை தீவினை என்றிரு வகையாற், சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி வினைப்பயன் விளையுங் காலை உயிர்கட்கு, மனப்பே ரின்பமும் கவலையும் காட்டும் - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர் | |
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார் |
Question 47 |
பொருந்தாதது எது ? பிரித்தறிதல்
எழுந்தெதிர் = எழுந்தே + எதிர் | |
அறிவுண்டாக = அறிவு + உண்டாக | |
நாத்தொலைவில்லை = நா + தொலைவு + இல்லை | |
பிணிநோயுற்றோர் = பிணி + நோய் + உற்றோர் |
Question 47 Explanation:
குறிப்பு :- எழுந்தெதிர் என்பதன் சரியான பிரித்தறிதல் எழுந்து + எதிர்.
Question 48 |
பொருந்தாதது எது ? பிரித்தறிதல்
இயல்பீராறு = இயல்பு + ஈர் (இரண்டு) + ஆறு | |
எனக்கிடர் = எனக்கி+ இடர் | |
தொழுதேத்தி = தொழுது + ஏத்தி | |
உண்டென்று = உண்டு + என்று |
Question 48 Explanation:
குறிப்பு :- எனக்கிடர் என்பதன் சரியான பிரித்தறிதல் எனக்கு + இடர்.
Question 49 |
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றியது மணிமேகலை. சாத்தன் என்பது இவரது இயற்பெயர் | |
இவர், திருச்சிராப்பள்ளியை சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர். இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவராவர். தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன் என்று இளங்கோவடிகள் சாத்தனாரைப் பாராட்டியுள்ளார். | |
கூலவாணிகம் (கூலம் – தானியம்) செய்தவர். இக்காரணங்களினால், இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று வழங்கப்பெற்றார். இவர், கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர். | |
இவரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு என்பர். |
Question 49 Explanation:
குறிப்பு:- இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.
Question 50 |
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
மணிமேகலை, ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வெவ்வேறு நூல்களாயினும் ஒரே கதைத் தொடர்புடையன. எனவே, இவை இரட்டைக்காப்பியங்கள் என வழங்கப்பெறுகின்றன. | |
மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதனால், இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு. | |
இந்நூல் சொற்சுவையும் பொருட்சுவையும், இயற்கை வருணனைகளும் நிறைந்தது. | |
இந்நூல் சமண சமயச் சார்புடையது. நாற்பது காதைகளைக் கொண்டது. |
Question 50 Explanation:
குறிப்பு :- பெளத்தமதச் சார்புடையது. முப்பது காதைகளைக் கொண்டது.
Question 51 |
வஞ்சிமாநகருக்குச் சென்று பத்தினித் தெய்வமாகிய கண்ணகிக்குக் குறைவற்ற நல்லறத்தைச் செய்துகொண்டிருப்பேன். 'என் மனத்துக்கு இனியவர்களே, எனக்கு இன்னல் உண்டாகுமென்று யாரும் வருந்தேவேண்டா’ - என்று கூறியவர் யார்?
சித்திராபதி | |
ஆயமகளிர் | |
அறவண அடிகள் | |
மணிமேகலை |
Question 52 |
அரசமாதேவியுடன் இருக்கும் நங்கையரே! நான் கூறும், குற்றம் நீங்கிய நல்லறத்தைப் போற்றிக் கேளுங்கள்! எனக் கூறியவர் யார்?
சித்திராபதி | |
ஆயமகளிர் | |
அறவண அடிகள் | |
மணிமேகலை |
Question 53 |
“முத்துச்சிரிப்பினையுடைய மணிமேகலையே! நீ உனது முற்பிறப்பினை உணர்ந்திருக்கிறாய். மேலும், பிற்சமயங்கள் கூறும் அறங்களையும் நீ கேட்டறிந்துகொள். அதன் பின்னர், ஒரு நாள் மீண்டும் வந்து உனக்குப் பல்வேறு அறங்களையும் அவற்றின் பகுதிகளையும் கூறுவேன்” - எனக் கூறியவர் யார்?
சித்திராபதி | |
ஆயமகளிர் | |
அறவண அடிகள் | |
அரசமாதேவி |
Question 54 |
தீவினை என்பது என்னவெனில் --------, ------------, ------------- கொடிய விருப்பம் ஆகிய உடலில் தோன்றும் மூன்றும்.
பொய்பேசுதல், புறங்கூறுதல், கடுஞ்சொல் | |
பெருவிருப்பம், கடுஞ்சினங்கொள்ளுதல், மாயத்தோற்றம் | |
கொலை, களவு, காமம் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 55 |
தீவினை என்பது என்னவெனில் --------------, ----------------, ----------------, --------------- எனச் சொல்லில் தோன்றும் நான்குமாம்.
பொய்பேசுதல், புறங்கூறுதல், கடுஞ்சொல், பயனற்றசொல் | |
பெருவிருப்பம், கடுஞ்சினங்கொள்ளுதல், மாயத்தோற்றம், உதவி செய்யாமை | |
கொலை, களவு, காமம், வறியவர்க்கு உதவாதிருத்தல் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 56 |
தீவினை என்பது என்னவெனில் --------------, ----------------, ---------------- என உள்ளத்தில் தோன்றும் மூன்றும்.
பொய்பேசுதல், புறங்கூறுதல், கடுஞ்சொல் | |
பெருவிருப்பம், கடுஞ்சினங்கொள்ளுதல், மாயத்தோற்றம். | |
கொலை, களவு, காமம் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 57 |
மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது -----------.
உணவு | |
உடை | |
இருப்பிடம் | |
பணம் |
Question 58 |
தமிழர் மருத்துவத்தில் ---------- என்பது அனைத்து நோய்களையும் தீர்க்ககூடிய சஞ்சீவி மருந்தாகக் கருதப்படுகிறது.
உணவு | |
காற்று | |
நீர் | |
உடற்பயிற்சி |
Question 59 |
பசியின் கொடுமையைப் பசிப்பிணி என்னும் பாவி என்றது ------------ காப்பியம்
சிலப்பதிகாரம் | |
சீவகசிந்தாமணி | |
மணிமேகலை | |
மணிமேகலை |
Question 60 |
பிணிக்கு மருந்து உணவே. ஆதலால்தான், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே என ----------------, --------------- நூல்கள் கூறுகின்றன.
கலித்தொகை, திருக்குறள் | |
சிலப்பதிகாரம், சீவசிந்தாமணி | |
புறநானூறு, மணிமேகலை | |
மதுரைக்காஞ்சி, முதுமொழிக்காஞ்சி
|
Question 61 |
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் - என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
இளங்கோவடிகள் | |
முன்றுறை அரையனார் | |
நாகுத்தனார் | |
திருவள்ளுவர் |
Question 62 |
பொருந்தாதது எது?
மஞ்சள் - நெஞ்சிலுள்ள சளியை நீக்கும் | |
கொத்தமல்லி - பித்தத்தைப் போக்கும் | |
சீரகம் - தலை வலியைப் போக்கும் | |
மிளகு - தொண்டைக் கட்டைத் தொலைக்கும் |
Question 62 Explanation:
குறிப்பு :- சீரகம் - வயிற்றுச் சூட்டைத் தணிக்கும்.
Question 63 |
பொருந்தாதது எது?
பூண்டு - வளியகற்றி வயிற்றுப்பொருமலை நீக்கிப் பசியை மிகுவிக்கும் | |
வெங்காயம் - குளிர்ச்சி உண்டாக்கிக் குருதியைத் தூய்மைபடுத்தும் | |
பெருங்காயம் - பித்தத்தைப் போக்கும் | |
இஞ்சி - பித்தத்தை ஒடுக்கிக் காய்ச்சலைக் கண்டிக்கும் |
Question 64 |
பொருந்தாதது எது?
தேங்காய் - வளியை வெளியேற்றும் | |
கறிவேப்பிலை - மணமூட்டி உணவிருப்பை உண்டாக்கும். உடலுக்குக் குளிர்ச்சி ஏற்படவும் பித்தம் போக்கவும் எலுமிச்சை ஊறுகாயை மோர்ச் சோற்றுடன் உண்ணலாம் | |
நல்லெண்ணெய் - கண் குளிர்ச்சியும் அறிவுத்தெளிவும் உண்டாக்கும் | |
சீரகம் பூண்டு கலந்த மிளகு நீர், சூட்டைத் தணித்துச் செரிமான ஆற்றலை மிகுவிக்கும். உடலுக்கு வலுவூட்டவும் கழிவு அகலவும் கீரை நல்லது. |
Question 64 Explanation:
குறிப்பு :- தேங்காய் - நீர்க்கோவையை நீக்கும்.
Question 65 |
நோய்க்கு முதல் காரணம், -------------.
காரம் | |
துவர்ப்பு | |
இனிப்பு | |
உப்பு |
Question 66 |
மீதூண் விரும்பேல்" - என்று கூறியவர்?
திருவள்ளுவர் | |
ஒளவையார் | |
பாரதியார் | |
காக்கைப் பாடியனார் |
Question 67 |
‘நாள்தோறும் தவிராமல் நடந்தால் நோய் நம்மைவிட்டு நடக்கும், ஓடினால் நோய் நம்மைவிட்டு ஓடும், எப்போதும் படுத்துக் கிடந்தால் நோய் நம்மீது படுத்துக்கொள்ளும்.
"காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத்தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிப் போவானே" - என்று கூறியவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
நாமக்கல் கவிஞர் | |
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை |
Question 68 |
உடம்பார் அழியின் உயிரார் அழிவர், திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார், உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே - என்று கூறியவர் யார் ?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
நாமக்கல் கவிஞர் | |
திருமூலர் |
Question 69 |
பொருந்தாதது எது ? அறுசுவையின் பயன்கள்.
இனிப்பு – வளம்; துவர்ப்பு – ஆற்றல் | |
கைப்பு – மென்மை; கார்ப்பு – உணர்வு | |
உவர்ப்பு – தெளிவு; புளிப்பு – இனிமை | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 69 Explanation:
குறிப்பு :- அனைத்துமே சரியாக பொருந்தியுள்ளது.
Question 70 |
கீழே உள்ள கூற்று, எந்த மூலிகைச் செடியைக் குறிக்கிறது?
1] --------------செடியின் இலைகளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் மார்புச்சளி, நீர்க்கோவை, தலைவலி நீங்கும்.
2] இதன் இலைகளை எலுமிச்சம்பழச் சாற்றுடன் அரைத்துப்போடப் படை நீங்கும்.
3] விதைகளைப் பொடி செய்து ஒன்று அல்லது இரண்டு கிராம் அளவு உண்டால் உடற்சூடு, நீரெரிச்சல் ஆகியன அடங்கும்.
கீழாநெல்லி | |
அகத்திக்கீரை | |
துளசி | |
வேப்பிலை |
Question 71 |
மஞ்சட்காமாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வருகிற மூலிகைச் செடி எது?
கீழாநெல்லி (கீழ்க்காய்நெல்லி, கீழ்வாய்நெல்லி ) | |
அகத்திக்கீரை | |
துளசி | |
வேப்பிலை |
Question 72 |
----------------- இலைகளைக் கற்கண்டுடன் சேர்த்து அரைத்து மூன்றுகிராம் அளவு காலை மாலை இருவேளை நாலுநாள் தொடர்ந்து உட்கொள்ள சிறுநீர்த் தொடர்பான நோய்கள் நீங்கும்.
கீழாநெல்லி (கீழ்க்காய்நெல்லி, கீழ்வாய்நெல்லி ) | |
அகத்திக்கீரை | |
துளசி | |
வேப்பிலை |
Question 73 |
கீழே உள்ள கூற்று, எந்த மூலிகைச் செடியைக் குறிக்கிறது?
1] ---------------- என்பது செடியில்லை. ஒருவகைக் கொடி. --------------- என்பது இதன் பெயர்.
2] தோட்டங்களிலும், வேலியோரங்களிலும் இயல்பாக வளரும். இக்கொடியிலும் இலைகளிலும் கொக்கிபோன்ற சிறு முள்கள் உண்டு.
கீழாநெல்லி | |
தூதுவளை | |
துளசி | |
வேப்பிலை |
Question 74 |
கீழே உள்ள கூற்று, எந்த மூலிகைச் செடியைக் குறிக்கிறது?
தூதுளை, சிங்கவல்லி என வேறுபெயர்களிலும் வழங்கப்படும். இதன் இலைகளை நல்லெண்ணையில் சமைத்து உணவோடு சேர்த்து 21 நாள் உண்டு வந்தால், சுவாசகாசம் அகலும். இளைப்பு இருமல் போகும்.
கீழாநெல்லி | |
தூதுவளை | |
துளசி | |
வேப்பிலை |
Question 75 |
கீழே உள்ள கூற்று, எந்த மூலிகைச் செடியைக் குறிக்கிறது?
இதனை ஞானப்பச்சிலை என வள்ளலார் போற்றுவார். இவ்விலை குரல் வளத்தை மேம்படுத்தும், வாழ்நாளை நீட்டிக்கும்.
கீழாநெல்லி | |
தூதுவளை | |
துளசி | |
வேப்பிலை |
Question 76 |
கீழே உள்ள கூற்று, எந்த மூலிகைச் செடியைக் குறிக்கிறது?
நச்சுக்கடிகளுக்கு நல்ல மருந்தாக விளங்கும். மூலிகைச் செடியாகும். இதன் இலைகளைக் காயவைத்துப் பொடியாக்கிப் பூசினால், படுக்கைப் புண் குணமாகும்.
கீழாநெல்லி | |
தூதுவளை | |
துளசி | |
குப்பைமேனி |
Question 77 |
கீழே உள்ள கூற்று, எந்த மூலிகைச் செடியைக் குறிக்கிறது?
குழந்தைகளின் வயதுக்கேற்ற அளவில் உண்ணக் கொடுத்தால் மலப்புழுக்கள் வெளியேறும். வயிறு தூய்மையாகும். பசியைத் தூண்டும்.
கீழாநெல்லி | |
தூதுவளை | |
துளசி | |
குப்பைமேனி |
Question 78 |
கீழே உள்ள கூற்று, எந்த மூலிகைச் செடியைக் குறிக்கிறது?
------------ இலைகளுடன் மஞ்சள், உப்புச் சேர்த்து அரைத்துப் பூசினால் சொறி, சிரங்கு நீங்கும். மேனி துலங்க ------------- என்பது பழமொழி.
கீழாநெல்லி | |
தூதுவளை | |
துளசி | |
குப்பைமேனி |
Question 79 |
"குமரி" - என்னும் பெயரால் அழைக்கப்படும் மூலிகை எது?
கீழாநெல்லி | |
தூதுவளை | |
துளசி | |
கற்றாழை |
Question 80 |
கீழே உள்ள கூற்று, எந்த மூலிகைச் செடியைக் குறிக்கிறது?
1] மஞ்சள் சேர்த்துக் காயம்பட்ட இடத்தில் பூசினால் காயம் குணமாகும்.
2] இதனைப் பசும்பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் மூலச்சூடு குறையும்.
3] பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதனால் ‘குமரி கண்ட நோய்க்குக் குமரி கொடு’ என்னும் வழக்கு ஏற்பட்டது.
கீழாநெல்லி | |
தூதுவளை | |
துளசி | |
கற்றாழை |
Question 81 |
கீழே உள்ள கூற்று, எந்த மூலிகைச் செடியைக் குறிக்கிறது?
-------------- பட்டையை அரைத்துத் தடவினால் முறிந்த எலும்பு விரைவில் கூடும் வீக்கத்தைக் குறைக்கும். கண்பார்வையை ஒழுங்குபடுத்தும். உடலை வலுவாக்கும், இரும்புச்சத்து நிறைந்துள்ளதனால் கூந்தலை வளரச் செய்வதில் இதற்குப் பெரும் பங்குண்டு.
கீழாநெல்லி | |
தூதுவளை | |
முருங்கைக்கீரை | |
கற்றாழை |
Question 82 |
விடுபட்ட இடத்தை நிரப்புக..
காலை, மாலை என இருவேளையும் ஐந்து கிராம் ---------------- கழுவிச் சிறிது சிறிதாக வாயிலிட்டு மென்று விழுங்கினால், சீதபேதி இருநாளில் குணமாகும். உணவில் சேரும் சிறுநச்சுத்தன்மையை முறிக்கும்தன்மை ---------------க்கு உண்டு
கறிவேப்பிலை | |
தூதுவளை | |
முருங்கைக்கீரை | |
கற்றாழை |
Question 83 |
வேடு கட்டுதல் - என்பதன் பொருள் யாது?
வீட்டின் மேல் கூரை கட்டுதல் | |
சட்டியின் வாயை மெல்லிய துணியால் மூடிக் கட்டுதல் | |
காட்டின் ஓரத்தில் கிணறு கட்டுதல் | |
அடிபட்ட இடத்தில் மருந்து கட்டுதல் |
Question 84 |
இரத்தசோகை, செரிமானக்கோளாறு, மஞ்சட்காமாலை முதலிய நோய்களுக்குக் --------------------- நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. அது, கண்பார்வையைத் தெளிவாக்கும், நரையைப் போக்கும்.
கரிசலாங்கண்ணி | |
தூதுவளை | |
முருங்கைக்கீரை | |
கற்றாழை |
Question 85 |
-------------- என்பதற்கு வழங்கப்படும் வேறுபயர்கள் – கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம்.
கரிசலாங்கண்ணி | |
தூதுவளை | |
முருங்கைக்கீரை | |
கற்றாழை |
Question 86 |
பொருந்தாதது எது?
மணத்தக்காளிக் கீரை வாய்ப்புண், குடற்புண்ணைக் குணமாக்கும். | |
முசுமுசுக்கைக் கொடியின் வேரைப் பசுவின் பாலில் ஊறவைத்து, உலர்த்திப் பொடியாக்கிப் பசும்பால், மிளகுப்பொடி, சருக்கரையுடன் உண்டு வந்தால் இருமல் நீங்கும். | |
அகத்திக்கீரை, பல் சார்ந்த நோய்களைக் குணமாக்கும். வல்லாரை நினைவாற்றல் பெருக உதவும். | |
வேப்பங்கொழுந்தைக் காலையில் உண்டு வந்தால், மார்புச் சளி நீங்கும். முருங்கைக்கீரையை அரைத்துத் தடவினால் அம்மையால் வந்த வெப்பு நோய் அகலும். |
Question 86 Explanation:
குறிப்பு :- வேப்பிலையை அரைத்துத் தடவினால் அம்மையால் வந்த வெப்பு நோய் அகலும்.
Question 87 |
நின்றசீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் ஒன்றியும் ஒன்றாமலும் வருவது ----------------- எனப்படும்.
அடி | |
தொடை | |
தளை | |
புணர்ச்சி |
Question 87 Explanation:
விளக்கம் :- (தளை – கட்டுதல்).
ஒன்றி வருதலாவது : நேர் முன் நேரும், நிரை முன் நிரையும் வருதல்.
ஒன்றாமல் வருதலாவது : நேர் முன் நிரையும், நிரை முன் நேரும் வருதல்.
(எ.கா.) :
கண் -ணா மன் – னா
நேர் நேர் நேர் நேர் – நேர் அசைகள் ஒன்றி வந்தன.
உயர் + வற உயர் + நலம்
நிரை நிரை நிரை நிரை – நிரை அசைகள் ஒன்றி வந்தன.
அக + ர முத + ல
நிரை நேர் நிரை நேர் – ஒன்றாமல் வந்தன
மலர் + மிசை ஏ + கினான்
நிரை நிரை நேர் நிரை – ஒன்றாமல் வந்தன
Question 88 |
தளை எத்தனை வகைப்படும்?
5 | |
6 | |
7 | |
8 |
Question 88 Explanation:
விளக்கம் :- தளை ஏழு வகைப்படும். அவை,
நேரொன்றாசிரியத்தளை
நிரையொன்றாசிரியத்தளை
இயற்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை
கலித்தளை
ஒன்றிய வஞ்சித்தளை
ஒன்றாத வஞ்சித்தளை
Question 89 |
மாமுன் நேர் வருவது ------------ ?
நேரொன்றாசிரியத்தளை | |
நிரையொன்றாசிரியத்தளை | |
இயற்சீர் வெண்டளை | |
வெண்சீர் வெண்டளை |
Question 89 Explanation:
விளக்கம் :- மாமுன் நேர் வருவது நேரொன்றாசிரியத்தளை.
(எ.கா.) :-
பா + ரி பா + ரி.
நேர் நேர் நேர் நேர்.
தேமா தேமா மாமுன் நேர்.
Question 90 |
விளம்முன் நிறை வருவது ------------?
நேரொன்றாசிரியத்தளை | |
நிரையொன்றாசிரியத்தளை | |
இயற்சீர் வெண்டளை | |
வெண்சீர் வெண்டளை |
Question 90 Explanation:
விளக்கம் :- நிரையொன்றாசிரியத்தளை :- விளம்முன் நிறை வருவது நிரையொன்றாசிரியத்தளை
(எ.கா.) :
பலர் + புகழ் கபி + லர்.
நிரை நிரை நிரை நேர்.
கருவிளம் புளிமா. விளமுன் நிரை.
Question 91 |
மாமுன் நிரையும், விள முன் நேரும் வருவது ----------------?
நேரொன்றாசிரியத்தளை | |
நிரையொன்றாசிரியத்தளை | |
இயற்சீர் வெண்டளை | |
வெண்சீர் வெண்டளை |
Question 91 Explanation:
விளக்கம் :- இயற்சீர் வெண்டளை :- மாமுன் நிரையும், விள முன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளை.
(எ.கா.) : அக + ர முத + ல.
நிரை நேர் நிரை நேர்.
புளிமா புளிமா. மாமுன் நிரை.
நில + வரை நீள் + புகழ்.
நிரை நிரை நேர் நிரை.
கருவிளம் கூவிளம். விளமுன் நேர்.
Question 92 |
காய்முன் நேர் வருவது -------------?
நேரொன்றாசிரியத்தளை | |
நிரையொன்றாசிரியத்தளை | |
இயற்சீர் வெண்டளை | |
வெண்சீர் வெண்டளை |
Question 92 Explanation:
விளக்கம் :- வெண்சீர் வெண்டளை :- காய்முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை
(எ.கா.) :
யா + தா + னும் நா + டா + மால்.
நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
தேமாங்காய் தேமாங்காய் காய்முன் நேர்
வெண்பாவுக்கு உரிய தளைகள் இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையுமே. வெண்பாவில் இவ்விரு தளைகள் தவிரப் பிற தளைகள் வாரா.
Question 93 |
காய்முன் நிரை வருவது -------------?
வெண்சீர் வெண்டளை | |
கலித்தளை | |
ஒன்றிய வஞ்சித்தளை | |
ஒன்றாத வஞ்சித்தளை |
Question 93 Explanation:
விளக்கம் :- கலித்தளை :- காய்முன் நிரை வருவது கலித்தளை.
(எ.கா.) :-
தா+மரைப் + பூ குளத் + தினி + லே.
நேர் நிரை நேர் நிரை நிரை நேர்.
கூவிளங்காய் கருவிளங்காய் காய்முன்நிரை.
Question 94 |
கனிமுன் நிரை வருவது -------------?
வெண்சீர் வெண்டளை | |
கலித்தளை | |
ஒன்றிய வஞ்சித்தளை | |
ஒன்றாத வஞ்சித்தளை |
Question 94 Explanation:
விளக்கம் :- ஒன்றிய வஞ்சித்தளை :- கனிமுன் நிரை வருவது ஒன்றிய வஞ்சித்தளை.
(எ.கா.) :-
செந் + தா + மரைக் குளத் + தினி + லே.
நேர் நேர் நிரை நிரை நிரை நேர்.
தேமாங்கனி கருவிளங்காய். கனி முன் நிரை.
Question 95 |
கனிமுன் நேர் வருவது -------------?
வெண்சீர் வெண்டளை | |
கலித்தளை | |
ஒன்றிய வஞ்சித்தளை | |
ஒன்றாத வஞ்சித்தளை |
Question 95 Explanation:
விளக்கம் :- ஒன்றாத வஞ்சித்தளை :- கனிமுன் நேர் வருவது ஒன்றாத வஞ்சித்தளை.
(எ.கா.) :
வா + னில் + வளர் திங் + களன் + ன.
நேர் நேர் நிரை நேர் நிரை நேர்.
தேமாங்கனி கூவிளங்காய். கனிமுன் நேர்.
Question 96 |
செய்யுளில் இருபொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையைக் கூறிய பின்னர், அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது ------------------ அணி.
ஏகதேச உருவக அணி | |
வேற்றுமையணி | |
வேற்றுப்பொருள் வைப்பணி | |
இல்பொருள் உவமையணி |
Question 96 Explanation:
விளக்கம் :- தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு – குறள் 129
தீயினால் சுடுவதும், நாவினால் தீயசொற்களைக்கொண்டு சுடுவதும் என்பது ஒற்றுமை. தீயினால் சுட்டது ஆறும், நாவினால் சொன்னது ஆறாது என்பது வேற்றுமையாகும். எனவே, இப்பாடலில் வேற்றுமையணி இடம்பெற்றுள்ளது.
Question 97 |
பழனிப் பதிகம், குமரகுரு பதிகம், சிவகிரிப் பதிகம், திருச்செந்தில் பதிகம் ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?
குமரகுருபரர் | |
மறைமலையடிகள் | |
விபுலானந்தர் | |
மாம்பழக்கவிச் சிங்க நாவலர் (பழனி) |
Question 98 |
இத்திறம் பலவும் இவற்றின் பகுதியும், முத்தேர் நகையாய் முன்னுறக் கூறுவல், என்றவன் எழுதலும் இளங்கொடி எழுந்து, - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர் | |
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார் |
Question 99 |
தேவரும் மக்களும் பிரமரு மாகி, மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்,. - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர் | |
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார் |
Question 100 |
பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில், சொல்லெனச் சொல்லில் தோன்றுவ நான்கும் - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர் | |
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.
Question 56 wrong answer