Online TestTamil
9th Std Tamil Notes – Part 4
9th Std Tamil Notes - Part 4
Congratulations - you have completed 9th Std Tamil Notes - Part 4.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
செவிக்குணவு இல்லாத போழ்து, சிறிது
--------------------------------- விடுபட்டதை தேர்வு செய்க?
ஆன்றாரோ டொப்பர் நிலத்து | |
வயிற்றுக்கும் ஈயப் படும் | |
ஒற்கத்தின் ஊற்றாந் துணை | |
தீண்டிய கேள்வி யவர் |
Question 2 |
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு :-
வயிற்றுக்கும் - இழிவுச்சிறப்பும்மை | |
அவியுணவு - இருபெயரொட்டுப் பண்புத்தொகை | |
ஊற்று - ஊன்று என்பதன் வலித்தல் விகாரம் | |
இழுக்கல், ஒழுக்கம் - வினைத்தொகை |
Question 2 Explanation:
விளக்கம் :- இழுக்கல், ஒழுக்கம் - என்பதன் இலக்கணக்குறிப்பு தொழிற்பெயர்கள்.
Question 3 |
கற்றிலன் ஆயினும் கேட்க, அஃதொருவற்(கு)
---------------------------------------- விடுபட்டதை தேர்வு செய்க?
ஆன்றாரோ டொப்பர் நிலத்து | |
வயிற்றுக்கும் ஈயப் படும் | |
ஒற்கத்தின் ஊற்றாந் துணை | |
தீண்டிய கேள்வி யவர் |
Question 4 |
பொருத்தமற்றதை தேர்வு செய்க.
ஒற்கம் - தளர்ச்சி | |
தலை - முதன்மை | |
ஊற்று - ஊன்றுகோல் | |
அற்றே - நிறைந்த |
Question 4 Explanation:
விளக்கம் :- அற்றே - என்பதன் பொருள் போன்றதே.
Question 5 |
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்
இந்த குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
ஏகதேச உருவக அணி | |
இல்பொருள் உவமையணி | |
வேற்றுமையணி | |
உவமையணி |
Question 6 |
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு :-
ஆன்ற பெருமை - பெயரெச்சம் | |
கேளாத் தகையவே - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் | |
அவியினும் வாழினும் - எண்ணும்மை | |
விடல் - வியங்கோள் வினைமுற்று |
Question 6 Explanation:
விளக்கம் :- விடல் என்பதன் இலக்கணக்குறிப்பு - தொழிற்பெயர்.
Question 7 |
பொருந்தாதது எது? பிரித்தறிதல்.
சுவையுணரா - சுவை + உணரா | |
வாயுணர்வு - வாய் + உணர்வு | |
செவிக்குணவு - செவிக்கு + உணவு | |
காடிதனை - காடி + இதனை |
Question 7 Explanation:
விளக்கம் :- காடிதனை - என்பதன் சரியான பிரித்தறிதல் = காடு + இதனை.
Question 8 |
பொருந்தாதது எது?
பிழைத்துணர்ந்தும் - தவறாக உணர்ந்திருந்தாலும் | |
பேதைமை - அறியாமையின்பாற்பட்ட தீயசொற்கள் | |
இழைத்துணர்ந்து - நுட்பமாக ஆராய்ந்து | |
ஈண்டிய - போன்றதே |
Question 8 Explanation:
விளக்கம் :- ஈண்டிய என்பதன் சரியான பொருள் ஆய்ந்தறிந்த.
Question 9 |
பகுபத உறுப்பிலக்கணம் :-
உணர்ந்து = உணர் + த் (ந்) + த் + உ . இங்கு உணர் - பகுதி; த் - சந்தி; த் - ந் ஆனது விகாரம்; த் - இறந்தகால இடைநிலை ; உ - என்பது என்ன?
பெயரெச்ச விகுதி | |
வினையெச்ச விகுதி | |
வியங்கோள் வினைமுற்று விகுதி | |
4] ஆண்பால்
|
Question 10 |
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய ------------------------------------ விடுபட்டதை தேர்வு செய்க.
வாயின ராதல் அரிது | |
வயிற்றுக்கும் ஈயப் படும் | |
ஒற்கத்தின் ஊற்றாந் துணை | |
தீண்டிய கேள்வி யவர் |
Question 11 |
செவிக்குணவாவது
புகழ் | |
கேள்வி | |
மகிழ்ச்சி | |
வருத்தம் |
Question 12 |
ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்
ஊற்றுக்கோல் | |
அளவுகோல் | |
துலாக்கோல் | |
விலைமதிப்பற்றது |
Question 13 |
திருக்குறளில் ------------- அதிகாரங்கள் உடைமை என்னும் பெயரில் அமைந்துள்ளன.
எட்டு | |
ஒன்பது | |
பத்து | |
பதினொன்று |
Question 13 Explanation:
விளக்கம் :- உடைமைகள் பத்து. திருக்குறளில் பத்து அதிகாரங்கள் உடைமை என்னும் பெயரில் அமைந்துள்ளன. 1.அன்புடைமை 2.அடக்கமுடைமை 3.ஒழுக்கமுடைமை, 4.பொறையுடைமை 5.அருளுடைமை. 6.அறிவுடைமை, 7.ஊக்கமுடைமை 8.ஆள்வினையுடைமை, 9.பண்புடைமை, 10.நாணுடைமை
Question 14 |
திருக்குறளுக்கும் ----------- என்னும் எண்ணுக்கும் பெரிதும் தொடர்புள்ளது.
நான்கு | |
ஐந்து | |
ஆறு | |
ஏழு |
Question 14 Explanation:
விளக்கம் :- திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணுக்கும் பெரிதும் தொடர்புள்ளது. திருக்குறள் ஏழுசீரால் அமைந்த குறள் வெண்பாக்களைக் கொண்டது. ஏழு என்னும் எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாவில் இடம்பெற்றுள்ளது. அதிகாரங்கள், 133. இதன் கூட்டுத்தொகை ஏழு. மொத்தக்குறட்பாக்கள் 1330. இதன் கூட்டுத்தொகையும் ஏழு.
Question 15 |
பழந்தமிழ் கற்றல் இன்பம், பலநாடு சுற்றல் இன்பம், எழுந்திடு புதுமை தன்னை ஏற்றிடல் வாழ்வுக் கின்பம், குழந்தையின் தளிர்க்கை பட்ட கூழினை உண்ப தின்பம், இழந்ததைப் பெறுதல் இன்பம், இசைபட வாழ்தல் இன்பம். - என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
தாராபாரதி | |
முடியரசன் | |
சுரதா | |
வாணிதாசன் |
Question 16 |
கற்றவர் முன் தாம் கற்ற கல்வியைக் கூறல் இன்பம், வெற்றியை வாழ்வில் சேர்க்கும் வினை பல புரிதல் இன்பம், சிற்றினக் கயவ ரோடு சேராது வாழ்தல் இன்பம், பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம் - என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
தாராபாரதி | |
முடியரசன் | |
சுரதா | |
வாணிதாசன் |
Question 17 |
கற்றோர் அவையில், தான் கற்ற கல்வியை எடுத்துரைப்பதும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான செயல்களில் ஈடுபடுவதும் மகிழ்ச்சி தரும். கீழ்க்குணம் உடைய தீயோரின் நட்பை விலக்கி வாழ்தலும், தாம் பெற்ற செல்வத்தைப் பிறருக்கு வழங்கும் சிறந்த குணம் பெறுதலும் வாழ்விற்கு மகிழ்ச்சி தரும். - என்று கூறியவர் யார்?
தாராபாரதி | |
முடியரசன் | |
சுரதா | |
வாணிதாசன் |
Question 18 |
குழந்தை, தன் பிஞ்சுக்கையால் கூழ்போலப் பிசைந்த உணவை ஒருவன் உண்ணும் போதும், தான் இழந்த பொருளை மீண்டும் அடையும்போதும், பிறர் புகழுமாறு வாழும்போதும் மகிழ்ச்சி ஏற்படும். - என்று கூறியவர் யார்?
தாராபாரதி | |
முடியரசன் | |
சுரதா | |
வாணிதாசன் |
Question 19 |
பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்பது மகிழ்ச்சி தரும். பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது மனத்துக்கு மகிழ்ச்சி தரும். காலந்தோறும் மாறிவரும் தேவையான புதுமைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெறுதல் வாழ்வுக்கு மகிழ்ச்சி தரும். - என்று கூறியவர் யார்?
தாராபாரதி | |
முடியரசன் | |
சுரதா | |
வாணிதாசன் |
Question 20 |
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு :
தளிர்க்கை - உவமைத் தொகை | |
பழந்தமிழ், சிற்றினம், பெருங்குணம் - பண்புத்தொகைகள் | |
வழங்கி - பெயரெச்சம் | |
கற்றல், பெறுதல், வாழ்தல் - தொழிற்பெயர்கள் |
Question 20 Explanation:
விளக்கம் :- வழங்கி என்பதற்கு சரியான இலக்கணக்குறிப்பு வினையெச்சம்.
Question 21 |
உவமைக் கவிஞர் சுரதாவின் இயற்பெயர் என்ன?
துரை மாணிக்கம் | |
இராசகோபாலன் | |
இராசேந்திரன் | |
இராமச்சந்திரன் |
Question 22 |
உவமைக் கவிஞர் சுரதா ----------------- மாவட்டத்திலுள்ள பழையனூரில் 23.11.1921 அன்று பிறந்தார்.
மதுரை | |
நாமக்கல் | |
திருவாரூர் | |
தஞ்சாவூர் |
Question 23 |
------------- என்பவரின் பெற்றோர் திருவேங்கடம் -செண்பகம் ஆவர்.
உவமைக் கவிஞர் சுரதா | |
துரை மாணிக்கம் | |
இராசேந்திரன் | |
இராமச்சந்திரன் |
Question 24 |
பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டவர் யார்?
உவமைக் கவிஞர் சுரதா | |
துரை மாணிக்கம் | |
இராசேந்திரன் | |
இராமச்சந்திரன் |
Question 25 |
தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும் முதலிய கவிதை நூல்களை இயற்றியவர் யார்?
உவமைக் கவிஞர் சுரதா | |
தாராபாரதி | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் |
Question 26 |
உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் எந்த கவிதை நூல், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றுள்ளது.
தேன்மழை | |
துறைமுகம் | |
துறைமுகம் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 26 Explanation:
விளக்கம் :- உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் தேன்மழை என்ற கவிதை நூல், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றுள்ளது. தமிழக இயலிசை நாடக மன்றத்தின் கலைமாமணிப்பட்டத்தையும், தமிழக அரசின் பாவேந்தர் விருதையும் இவர் பெற்றுள்ளார். தேன்மழை நூலில் இயற்கையெழில் முதலாக ஆராய்ச்சி ஈறாகப் பதினாறு பகுதிகளாகக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
Question 27 |
தன்னலமற்ற தலைவர்; கர்மவீரர்; கல்விக்கண் திறந்த முதல்வர்; ஏழைப்பங்காளர் என்னும் புகழுரைகளுக்கெல்லாம் உரியவர் யார்?
எம்.ஜி.ஆர் | |
அண்ணாதுரை | |
காமராசர் | |
பெரியார் |
Question 28 |
------------------ என்பவர் விருதுநகரில் குமாரசாமி, சிவகாமி இணையர்க்கு மகனாய் 1903 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் பதினைந்தாம் நாளன்று தோன்றினார்.
எம்.ஜி.ஆர் | |
அண்ணாதுரை | |
காமராசர் | |
பெரியார் |
Question 29 |
---------------- என்பவர் திண்ணைப் பள்ளியில் தமிழ் எழுத்துகளைக் கற்று, அதன் பிறகு ஓர் ஆண்டு தமிழ்ப்பாடம் கற்றார்.
எம்.ஜி.ஆர் | |
அண்ணாதுரை | |
காமராசர் | |
பெரியார் |
Question 30 |
---------------- என்பவர் தமது ஏழுவயதில் வந்தேமாதரம் என்று சுவரொட்டியில் எழுதப்பட்டிருப்பதனைக் கண்டார். அந்தச் சொல், அவரது மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அவரது உள்ளத்தில் மெல்ல மெல்ல விடுதலைப் போராட்ட உணர்வும் சுடர்விட்டுக் கொண்டிருந்தது. அவருக்குப் பன்னிரண்டு வயதிலேயே பள்ளிக்குச் செல்லவியலா நிலை ஏற்பட்டது.
எம்.ஜி.ஆர் | |
அண்ணாதுரை | |
காமராசர் | |
பெரியார் |
Question 31 |
------------- என்பவர் மெய்கண்டான் புத்தகச்சாலை என்னும் நூல் நிலையத்திற்குச் சென்று இலெனின், கரிபால்டி, நெப்போலியன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்துத் திறமையாகப் பேசவும் வாதம் புரியவும் தொடங்கினார். அவர், இளமையில் தேசிய இயக்கமான காங்கிரசில் சேர்ந்து, அதன் தொண்டராகத் தம் அரசியல் வாழ்வினைத் தொடங்கினார்;
எம்.ஜி.ஆர் | |
அண்ணாதுரை | |
காமராசர் | |
பெரியார் |
Question 32 |
கீழ்க்கண்டவர்களில் சைமன் குழு எதிர்ப்பு, உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு முதலிய போராட்டங்களில் கலந்துகொண்டவர் யார்?
ராஜாஜி | |
பெரியார் | |
மபொ சிவஞானம் | |
காமராசர் |
Question 32 Explanation:
விளக்கம் :- காமராசர் சைமன் குழு எதிர்ப்பு, உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு முதலிய போராட்டங்களில் கலந்துகொண்டார்; சிறை சென்றார். பதினோராண்டுகள் சிறையில் கழித்தார். அவரது தன்னலமற்ற உழைப்பைக்கண்ட தலைவர் சத்தியமூர்த்தி, காமராசரைக் கட்சியின் செயலாளராக நியமித்தார். சத்தியமூர்த்தியைக் காமராசர், தம் அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார். இவர், 1937இல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Question 33 |
1939ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக் காங்கிரசுக் கட்சியின் தலைவராகக் ------------------- என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பதவியில் பன்னிரண்டு ஆண்டுகள் இருந்தார்.
ராஜாஜி | |
பெரியார் | |
மபொ சிவஞானம் | |
காமராசர் |
Question 34 |
1945இல் பிரகாசம், 1947இல் ஓமந்தூர் இராமசாமி மற்றும் 1949இல் குமாரசாமி ஆகியோர் முதலமைச்சராகப் பதவியேற்பதற்குக் ---------------- என்பவர் காரணமாக இருந்தார்.
ராஜாஜி | |
பெரியார் | |
மபொ சிவஞானம் | |
காமராசர் |
Question 35 |
நேருவின் மறைவுக்குப்பின் லால் பகதூர் சாஸ்திரியையும், லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப்பின் இந்திரா காந்தியையும் நாட்டின் முதன்மையமைச்சராக ஆக்கியதில் ----------------- என்பவர் பெரும்பங்காற்றினார். அதனால், தலைவர்களை உருவாக்குபவர் என இவர் அழைக்கப்பட்டார்.
ராஜாஜி | |
பெரியார் | |
மபொ சிவஞானம் | |
காமராசர் |
Question 36 |
1954இல் இராஜாஜி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதும், ----------------- என்பவர் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1963இல் தாமாகப் பதவி விலகும் வரை அப்பதவியில் திறம்படச் செயல்பட்டார்.
எம்.ஜி.ஆர் | |
கருணாநிதி | |
அண்ணா | |
காமராசர் |
Question 37 |
------------- என்பவர் ஆட்சிக் காலத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் தொழிலமைச்சராகவும், சி.சுப்பிரமணியம் கல்வியமைச்சராகவும் இருந்து அவருக்கு உறுதுணையாகப் பணியாற்றினர்
எம்.ஜி.ஆர் | |
கருணாநிதி | |
அண்ணா | |
காமராசர் |
Question 38 |
------------- என்பவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் இரண்டாவது, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
எம்.ஜி.ஆர் | |
கருணாநிதி | |
அண்ணா | |
காமராசர் |
Question 38 Explanation:
விளக்கம் :- காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில் இரண்டாவது, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது, தமிழகத்தில் பொருளியல் தொழில்துறைத் திட்டங்கள் பல தொடங்கப்பட்டன; மின் திட்டங்கள் மிகுந்தன; சாலைகள் போடப்பட்டன; கிண்டி, அம்பத்தூர், இராணிப்பேட்டை முதலிய இடங்களில் பெரிய தொழிற்பேட்டைகளும் அமைக்கப்பெற்றன.
Question 39 |
இவர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் இல்லாத சிற்றூர்களே இல்லை என்னும் நிலை உருவனது. நெசவுத்தொழில் வளர்ச்சிக்காக இவர் பல திட்டங்களை தீட்டியுள்ளார். இவர் யார்?
எம்.ஜி.ஆர் | |
கருணாநிதி | |
அண்ணா | |
காமராசர் |
Question 40 |
நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை, உதகை இந்துஸ்தான் போட்டோ பிலிம்தொழிற்சாலை, கிண்டி அறுவை சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை, சருக்கரை ஆலை, சோடா உப்புத் தொழிற்சாலை, சிமெண்ட் தொழிற்சாலை, பெரம்பூர்த் தொடர்வண்டிப் பெட்டித் தொழிற்சாலை, மேட்டூர்க் காகிதத் தொழிற்சாலை முதலியன -------------- என்பவரது ஆட்சியில் தொடங்கப் பெற்றன.
எம்.ஜி.ஆர் | |
கருணாநிதி | |
அண்ணா | |
காமராசர் |
Question 41 |
------------- என்பவர் காலத்தில் கட்டாயக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது. தெருதோறும் தொடக்கப்பள்ளி, ஊர்தோறும் உயர்நிலைப் பள்ளி என்பதே அவரது நோக்கமாக அமைந்தது.
எம்.ஜி.ஆர் | |
கருணாநிதி | |
அண்ணா | |
காமராசர் |
Question 42 |
பள்ளி வேலை நாள்களை நூற்றெண்பதிலிருந்து (180) இருநூறாக (200) உயர்த்தியவர் யார்?
எம்.ஜி.ஆர் | |
கருணாநிதி | |
அண்ணா | |
காமராசர் |
Question 43 |
--------------- என்பவர் ஆட்சி காலத்தில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தப்பட்டுப் பள்ளிகளுக்கான அடிப்படை பொருள்களும் கருவிகளும் பெறப்பட்டன?
எம்.ஜி.ஆர் | |
கருணாநிதி | |
அண்ணா | |
காமராசர் |
Question 44 |
-------------- என்பவர் ஈராண்டுகளில் நூற்று முப்பத்து மூன்று (133) மாநாடுகள் கூட்டினார். இவ்வாறு கூட்டப்பட்ட மாநாடுகள் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நன்கொடைகள் கிடைத்தன; உயர்நிலைப் பள்ளிவரை இலவசக் கல்வி கொண்டு வரப்பட்டது.
எம்.ஜி.ஆர் | |
கருணாநிதி | |
அண்ணா | |
காமராசர் |
Question 45 |
--------------- என்பவரால், ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. மேலும், உடற்பயிற்சிக் கல்லூரிகளும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. மருத்துவக் கல்லூரி முதலான தொழிற் கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடனளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
எம்.ஜி.ஆர் | |
கருணாநிதி | |
அண்ணா | |
காமராசர் |
Question 46 |
------------- என்பவர் தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்திச் சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு அறுபது (60) விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தார். நிலச்சீர்திருத்தம் இவரால் கொண்டுவரப்பட்டது; நில உச்சவரம்பு முப்பது ஏக்கர் எனக் குறைக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர் | |
கருணாநிதி | |
அண்ணா | |
காமராசர் |
Question 47 |
மீனவர், கருப்புக்கட்டி காய்ச்சுபவர், கைத்தறியாளர், குயவர் முதலிய சிறுதொழிலாளர் நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் நலத்திட்டங்களில் ஓய்வூதியம் குறிப்பிடத்தக்கது. நகர்ப்புற வீடுகட்டும் திட்டம், இலவச மருத்துவ வசதி முதலியனவும் -------------- என்பவரால் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
எம்.ஜி.ஆர் | |
கருணாநிதி | |
அண்ணா | |
காமராசர் |
Question 48 |
1962 ஆம் ஆண்டு சீனப் படையெடுப்புக்குப் பின், காங்கிரசுக் கட்சியின் செல்வாக்குச் சரியத் தொடங்கியது. இடைத்தேர்தல்கள் சிலவற்றில் காங்கிரசுக் கட்சி தோல்வியடைந்தது. எனவே, கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியவர் யார்?
ராஜாஜி | |
குமாரசாமி | |
காமராசர் | |
பெரியார் |
Question 49 |
1963ஆம் ஆண்டில் எங்கு காங்கிரசு மாநாடு கூடியது?
புனே | |
சென்னை | |
கல்கத்தா | |
புவனேசுவர் |
Question 49 Explanation:
விளக்கம் :- புவனேசுவர் நகரில் 1963ஆம் ஆண்டில் கூடிய காங்கிரசு மாநாட்டில், காமராசர் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவராகப் பதவியேற்றார். அப்பொழுது நாடெங்கும் சுற்றுப்பயணம்மேற்கொண்டு கட்சிப்பூசல்களைப் போக்கி, மக்களிடம் நேரடித் தொடர்புகொண்டார். இரஷ்யாவிற்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று அந்நாட்டுத் தொழில்முன்னேற்றங்களை நேரில் கண்டார்.
Question 50 |
இந்தியப் பிரதமர் நேரு காலமான ஆண்டு?
1962 | |
1963 | |
1964 | |
1965 |
Question 51 |
லால் பகதூர் சாஸ்திரி எதிர்பாராத முறையில் 1966 ஆம் ஆண்டு ---------------- என்ற இடத்தில் உயிரிழந்தார்?
மும்பை | |
டெல்லி | |
சிம்லா | |
தாஸ்கண்ட் |
Question 52 |
லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கு அடுத்து பிரதமர் ஆனவர் யார்?
இந்திரா காந்தி | |
தேவகவுடா | |
ராஜிவ் காந்தி | |
ஐ.கே.குஜ்ரால் |
Question 53 |
காமராசருக்கு நடுவணரசு ---------------- விருது அளித்துச் சிறப்பித்தது?
பத்ம ஸ்ரீ | |
பத்ம பூஷன் | |
பத்ம விபூஷண் | |
பாரத ரத்னா (இந்திய மாமணி) |
Question 54 |
தமிழக அரசு, காமராசரின் கல்விப்பணியை சிறப்பிக்கும் வகையில் -------------- பல்கலைக் கழகத்திற்கு அவரின் பெயரை சூட்டியுள்ளது.
தஞ்சாவூர் பல்கலைக் கழகம் | |
மதுரை பல்கலைக் கழகம் | |
சென்னை பல்கலைக் கழகம் | |
திருச்சி பல்கலைக் கழகம் |
Question 55 |
----------------- என்னும் இடத்தில் காமராசருக்கு மணிமண்டபம் உள்ளது.
சென்னை | |
கன்னியாகுமரி | |
மதுரை | |
திருச்சி |
Question 55 Explanation:
விளக்கம் :- தமிழக அரசு, கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் கட்டியது; சென்னை மெரீனா கடற்கரைச் சாலையில் சிலையமைத்துச் சிறப்பித்தது. காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் நினைவு இல்லமாக ஆக்கப்பட்டது. விருதுநகரிலிருந்த காமராசரின் இல்லமும் அரசுடைமையாக்கி நினைவு இல்லமாக்கப்பட்டது. தேனாம்பேட்டையில் காமராசர் அரங்கம் நிறுவப்பட்டது.
Question 56 |
தமிழக அரசு, காமராசர் பிறந்த நாளான சூலைப் பதினைந்தாம் நாளை (ஜூலை 15) ஆண்டு தோறும் ------------ நாளாக அறிவித்துள்ளது. இவரைக் கல்விக் கண் திறந்தவர் எனத் தமிழுலகம் போற்றுகிறது.
கல்வி தொண்டு நாள் | |
கல்வி கற்கும் நாள் | |
கல்வி வளர்ச்சி நாள் | |
கல்வி கற்பிக்கும் நாள் |
Question 57 |
காந்தியடிகள் மீது அளவற்ற அன்பு கொண்ட காமராசர், ------------- ஆம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் இரண்டாம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். அவர் மறைந்தாலும், இன்றைய தலைவர்களுக்கு முன்னோடியாக நின்று பெருந்தலைவர் என்னும் பொருத்தமான புகழுரையால் நிலைத்து வாழ்கிறார்.
1970 | |
1973 | |
1975 | |
1978 |
Question 58 |
தமிழரிலே தனித்தனியே இவர் இவர் இப்படி உயர்ந்தார் என்று சொல்வது பழைமை. தமிழர்கள் கூடிக்கூடி இன்னது செய்து உயர்ந்தார்கள் என்று சொல்லும் நற்சொல்லே இனி வேண்டும். - என்ற தம்பிக்கு என்ற கடிதத்தில் இடம்பெற்றுள்ள வரிகள் யாருடையது?
அண்ணா | |
பெரியார் | |
மு.வரதராசனார் | |
திரு.வி.க |
Question 59 |
தமிழ்ச்சமுதாயம் உயர வேண்டுமா? தனி ஒருவன் அதோ ஒரு தொழிற்சாலையைத் திறமையாக நடத்துகிறான் என்று சொல்லும் நிலை போதாது. தமிழர் பலர் கூடி நடத்தும் தொழிற்சாலை அதோ! திறமையாக நடத்தப்படுகிறது என்ற புகழ்நிலை வரவேண்டும்; வளர வேண்டும். அன்று தான் தமிழர் சமுதாயம் உயர வழிபிறக்கும். - என்ற தம்பிக்கு என்ற கடிதத்தில் இடம்பெற்றுள்ள வரிகள் யாருடையது?
அண்ணா | |
பெரியார் | |
மு.வரதராசனார் | |
திரு.வி.க |
Question 60 |
தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப்படுத்த வல்லது. தமிழ் ஆட்சிமொழியாகவும் கல்வி மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு. ஆட்சிமொழி என்றால் சட்டசபை முதல் நீதிமன்றம் வரையில் தமிழ் வழங்க வேண்டும். - என்ற தம்பிக்கு என்ற கடிதத்தில் இடம்பெற்றுள்ள வரிகள் யாருடையது?
அண்ணா | |
பெரியார் | |
மு.வரதராசனார் | |
திரு.வி.க |
Question 61 |
கடிதம், பணவிடை, விளம்பரப்பலகை, விற்பனைச்சீட்டு முதலிய எல்லாம் தமிழிலேயே எழுதுக. இவற்றைத் தமிழில் எழுதினால் அஞ்சல் ஊழியர், வணிகர்கள், வாங்கும் மக்கள் முதலியவர்களைத் தமிழில் படிக்கச் செய்வது போல் ஆகும். இல்லையானால் அவர்கள் தமிழை மறக்கும்படி செய்வது போல் ஆகும். - என்ற தம்பிக்கு என்ற கடிதத்தில் இடம்பெற்றுள்ள வரிகள் யாருடையது?
அண்ணா | |
பெரியார் | |
மு.வரதராசனார் | |
திரு.வி.க |
Question 62 |
நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் உடையவர் நடத்தும் உணவு விடுதி, மருந்துக்கடை, துணிக்கடை முதலியன சிறிது தொலைவில் இருந்தாலும், விலை சிறிது கூடுதலாக இருந்தாலும், வேறு குறையிருந்தாலும், அங்கேயே சென்று வாங்கு. அவசரத்தின் காரணமாகவோ, வேறு காரணத்தாலோ, தவற நேர்ந்தால், தவறு என்று உணர்ந்து வருந்து. - என்ற தம்பிக்கு என்ற கடிதத்தில் இடம்பெற்றுள்ள வரிகள் யாருடையது?
அண்ணா | |
பெரியார் | |
தேவநேயபாவாணர் | |
வரதராசனார் |
Question 63 |
உன் மொழியையும் நாட்டையும் போற்றுவதற்காக மற்றவர்களின் மொழியையும் நாட்டையும் தூற்றாதே; பழிக்காதே; வெறுக்காதே; அயலானின் தாயைப் பழித்து வெறுக்காதே. அயலானின் தாயைப் பழித்து வெறுக்காமலே நம் தாயிடம் அன்பு செலுத்த முடியும். அத்தகைய அன்புதான் நிலையானது ; நீடிப்பது. - என்ற தம்பிக்கு என்ற கடிதத்தில் இடம்பெற்றுள்ள வரிகள் யாருடையது?
அண்ணா | |
பெரியார் | |
தேவநேயபாவாணர் | |
வரதராசனார் |
Question 64 |
தமிழர்களிடையே உள்ள பகை, பிரிவுகளை மேலும் வளர்க்கும் செயல்களைச் செய்யாதே; அத்தகைய சொற்களைச் சொல்லாதே; அவ்வாறான எண்ணங்களை எண்ணாதே. தமிழரிடையே ஒற்றுமை வளர்க்கும் சிந்தை, சொல், செயல்களையே போற்று. சுவையாக இருந்தாலும் முன்னவையை நாடாதே. சுவையற்றிருந்தாலும் பின்னவையைப் போற்று. - என்ற தம்பிக்கு என்ற கடிதத்தில் இடம்பெற்றுள்ள வரிகள் யாருடையது?
அண்ணா | |
பெரியார் | |
தேவநேயபாவாணர் | |
வரதராசனார் |
Question 65 |
கொள்கைகளும் கட்சிகளும் இயக்கங்களும் நாட்டுமக்களின் நன்மைக்காகத் தோன்றியவை. ஆகவே கொள்கைகள், கட்சிகள், இயக்கங்களைவிட நாட்டு மக்களின் நன்மையே பெரிது என்று உணர். - என்ற தம்பிக்கு என்ற கடிதத்தில் இடம்பெற்றுள்ள வரிகள் யாருடையது?
அண்ணா | |
பெரியார் | |
தேவநேயபாவாணர் | |
வரதராசனார் |
Question 66 |
தமிழ்நாடு உயரவேண்டும் என்றால் இங்குள்ள மலையும், காடும், நிலமும், நீரும் உயர்தல் அல்ல. இங்கு வாழும் யாவரும் ஒன்று என்று கருது. ஆகவே இந்நாட்டில் உள்ள வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பிச்சை எடுத்தல் முதலிய கொடுமைகள் ஒழியவேண்டும் என்று கருது. ஏழை என்றும் அடிமை என்றும் இல்லை என்றுபாரதியார் கண்ட கனவைப் போற்று. - என்ற தம்பிக்கு என்ற கடிதத்தில் இடம்பெற்றுள்ள வரிகள் யாருடையது?
அண்ணா | |
பெரியார் | |
தேவநேயபாவாணர் | |
வரதராசனார் |
Question 67 |
ஊர்க்கெல்லாம் பொதுக் காவல் சிறந்த முறையில் ஏற்படும் வரையில் ஒவ்வொருவரும் தம் வீட்டைத் தாழிட்டுக் காத்துக் கொள்ள வேண்டும் அல்லவா? அதுபோல, உலகத்திற்குப் பொதுவான ஒரு சிறந்த ஆட்சி முறை ஏற்படும் வரையில், நம் நாட்டைநாம் தவறாமல் காத்துக் கொள்ளவேண்டும். - என்ற தம்பிக்கு என்ற கடிதத்தில் இடம்பெற்றுள்ள வரிகள் யாருடையது?
அண்ணா | |
பெரியார் | |
தேவநேயபாவாணர் | |
வரதராசனார் |
Question 68 |
உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர். உன் உயர்வை விட, நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர், உன் நலத்தைவிட நாட்டின் நலம் சிறந்தது என்று உணர். நெருக்கடி நேரும்போது உன் நலம், உயர்வு, மானம் ஆகியவற்றை நாட்டுக்காக விட்டுக்கொடு. - என்ற தம்பிக்கு என்ற கடிதத்தில் இடம்பெற்றுள்ள வரிகள் யாருடையது?
அண்ணா | |
பெரியார் | |
தேவநேயபாவாணர் | |
வரதராசனார் |
Question 69 |
தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும். நீ அதைத் தேடிக் கொண்டு போய் அலையாதே. நீ தேடவேண்டுவது தொண்டு. தலைமை தாங்குவதும் ஒருவகைத் தொண்டுதான்……----- தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும். - என்ற தம்பிக்கு என்ற கடிதத்தில் இடம்பெற்றுள்ள வரிகள் யாருடையது?
அண்ணா | |
பெரியார் | |
தேவநேயபாவாணர் | |
வரதராசனார் |
Question 70 |
இந்த நாட்டில் சொன்னபடி செய்ய ஆள் இல்லை. ஆனால், கண்டபடி சொல்ல ஆள் ஏராளம். ஒவ்வொருவரும் ஆணை இடுவதற்கு விரும்புகிறார். 'அடக்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது' - என்று கூறுபவர் யார்?
அண்ணா | |
பெரியார் | |
விவேகானந்தர் | |
வரதராசனார் |
Question 71 |
மாதவி ஆடல் கண்டு கோவலன் மகிழ்ந்தான். மாதவி, கோவலன் - இவை பெயர்ச்சொற்கள். கண்டு, மகிழ்ந்தான் - இவை வினைச்சொற்கள்; ஆடல் - என்பது --------------.
காலப்பெயர் | |
காலப்பெயர் | |
தொழிற்பெயர் | |
சினைப்பெயர் |
Question 71 Explanation:
விளக்கம் :- அறுவகைப் பெயர்ச்சொற்களுள் தொழிற்பெயரும் ஒன்று. ஆடல் - என்பது ஆடுதல் என்னும் தொழிலைக் குறிப்பதனால், அது தொழிற்பெயர் எனப்பட்டது. ஆடு + அல் = ஆடல். அல் - என்பது தொழிற் பெயர் விகுதி.
இவ்வாறு தொழிற்பெயரைக் குறிக்க வரும் விகுதிகள்: தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து, ஆல் என்பன. வினைப்பகுதியோடு மேற்குறித்த விகுதிகளைச் சேர்த்தால் தொழிற்பெயராகும்.
(எ.கா.) பெறுதல் = பெறு + தல் | கோடல் = கோடு + அல் | ஆட்டம் = ஆடு + அம் |
Question 72 |
தொழிற்பெயர்கள் எத்தனை வகைப்படும்?
2 | |
3 | |
4 | |
5 |
Question 72 Explanation:
விளக்கம் :- தொழிற்பெயர் வகைகள்:- தொழிற்பெயர் இருவகைப்படும். 1. முதனிலைத் தொழிற்பெயர் 2. முதனிலை திரிந்த தொழிற்பெயர்
முதனிலைத் தொழிற்பெயர்: தொழிற்பெயர் விகுதிகளே இல்லாமல், பகுதி மட்டும் வந்து, தொழிலைஉணர்த்துவதற்கு முதனிலைத் தொழிற்பெயர் எனப் பெயர். (எ.கா.) கபிலனுக்கு அடி விழுந்தது. இத்தொடரில் அடி , என்பது விகுதி பெறாமல், பகுதியாய் நின்று தொழிலை உணர்த்துகிறது.
முதனிலை திரிந்த தொழிற்பெயர்: தொழிற்பெயரின் முதனிலையாகிய பகுதி திரிந்து வருவது முதனிலை திரிந்த தொழிற்பெயராகும். (எ.கா.) அறிவறிந்த மக்கட் பேறு. அவனுக்கு என்ன கேடு. இங்குப் 'பெறு', கெடு என்னும் முதனிலைகள் 'பேறு', 'கேடு' எனத் திரிந்து 'பெறுதல்', 'கெடுதல்' என்னும் பொருளை உணர்த்துகின்றன.
Question 73 |
வினைமுற்று, வினையைக் குறிக்காமல் வினை செய்தவரைக் குறிப்பது -------------- எனப்படும்.
வினைத்தொகை | |
வினையெச்சம் | |
வினையாலணையும் பெயர் | |
வியங்கோள் வினைமுற்று |
Question 74 |
மாட்சி என்பது ----------------- ஆகும்.
தொழிற்பெயர் | |
பண்புப் பெயர் | |
காலப்பெயர் | |
வினையாலணையும் பெயர் |
Question 75 |
'வந்தான்' என்னும் வினைமுற்று ------------------ என வினையாலணையும் பெயராய் வரும்.
வருவான் | |
வந்தவன் | |
வருகிறவன் | |
வாரான் |
Question 76 |
இலக்கண முறைப்படி குற்றமில்லாது பேசுவதும் எழுதுவதும் ------------- எனப்படும்.
இலக்கணப் போலி | |
வழாநிலை | |
வழு | |
வழுவமைதி |
Question 76 Explanation:
விளக்கம் :- வழாநிலை : பிழையின்மை, தவறின்மை. இலக்கண முறைப்படி குற்றமில்லாது பேசுவதும் எழுதவதும் வழாநிலை எனப்படும்.
செல்வன் படித்தான் - இத்தொடரில் செல்வன் என்னும் ஆண்பால் ஒருமைப்பெயர் படித்தான் என்னும் ஆண்பால் ஒருமை வினைமுற்றைக் கொண்டே முடிகிறது. எனவே, இது வழாநிலை எனப்படும்.
வழாநிலை அறுவகைப்படும். அவை,
திணை வழாநிலை : செல்வி பாடினாள், மாடு வந்தது.
பால் வழாநிலை : கண்ணன் வந்தான், நாய் ஓடியது.
இட வழாநிலை : நான் வந்தேன், நீ வருவாய்.
கால வழாநிலை : நாளை வருவேன், நேற்றுப் படித்தேன்.
வினா வழாநிலை : தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
விடை வழாநிலை : தமிழ்நாட்டின் தலைநகரம் எது? என்னும் வினாவுக்குச் சென்னை என விடையளித்தல்.
Question 77 |
செல்வி பாடினாள், மாடு வந்தது - என்பது எந்த வழாநிலையைக் குறிக்கும்?
திணை வழாநிலை | |
பால் வழாநிலை | |
இட வழாநிலை | |
கால வழாநிலை |
Question 78 |
கண்ணன் வந்தான், நாய் ஓடியது - என்பது எந்த வழாநிலையைக் குறிக்கும்?
திணை வழாநிலை | |
பால் வழாநிலை | |
இட வழாநிலை | |
கால வழாநிலை |
Question 79 |
நான் வந்தேன், நீ வருவாய் - என்பது எந்த வழாநிலையைக் குறிக்கும்?
திணை வழாநிலை | |
பால் வழாநிலை | |
இட வழாநிலை | |
கால வழாநிலை |
Question 80 |
நாளை வருவேன், நேற்றுப் படித்தேன் - என்பது எந்த வழாநிலையைக் குறிக்கும்?
திணை வழாநிலை | |
பால் வழாநிலை | |
இட வழாநிலை | |
கால வழாநிலை |
Question 81 |
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? - என்பது எந்த வழாநிலையைக் குறிக்கும்?
வினா வழாநிலை | |
விடை வழாநிலை | |
இட வழாநிலை | |
கால வழாநிலை |
Question 82 |
தமிழ்நாட்டின் தலைநகரம் எது? என்னும் வினாவுக்குச் சென்னை என விடையளித்தல் - என்பது எந்த வழாநிலையைக் குறிக்கும்?
வினா வழாநிலை | |
விடை வழாநிலை | |
இட வழாநிலை | |
கால வழாநிலை |
Question 83 |
இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் ---------------- எனப்படும்.
இலக்கணப் போலி | |
வழாநிலை | |
வழு | |
வழுவமைதி |
Question 83 Explanation:
விளக்கம் :- வழு : பிழை, தவறு, குற்றம். இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும். வழு ஏழுவகைப்படும். அவை, திணை வழு, பால் வழு, இடவழு, காலவழு, வினா வழு, விடைவழு, மரபுவழு.
Question 84 |
என் மாமா வந்தது. மாமா என்னும் உயர்திணைப் பெயர், வந்தது என்னும் அஃறிணை வினைகொண்டு முடிந்தது. அதனால், இது ----------------------
திணைவழு | |
பால் வழு | |
இடவழு | |
காலவழு |
Question 85 |
கண்ணகி வந்தான். கண்ணகி என்னும் பெண்பாற் பெயர், வந்தான் என்னும் ஆண்பால் வினைகொண்டு முடிந்துள்ளது. அதனால், இது ---------------------.
திணைவழு | |
பால் வழு | |
இடவழு | |
காலவழு |
Question 86 |
நாங்கள் வந்தார்கள். நாங்கள் என்பது தன்மையிடத்துப் பன்மைப் பெயர். அப்பெயர், வந்தார்கள் என்னும் படர்க்கையிடத்துப் பலர்பாலொடு முடிந்துள்ளது. எனவே, இத்தொடர் ----------------.
திணைவழு | |
பால் வழு | |
இடவழு | |
காலவழு |
Question 87 |
கரிகாலன் நாளை வந்தான். இத்தொடரில் நாளை என்னும் எதிர்காலப் பெயரொடு வந்தான் என இறந்தகால வினை மயங்கி வந்துள்ளது. அதனால், இது ---------------.
திணைவழு | |
பால் வழு | |
இடவழு | |
காலவழு |
Question 88 |
முட்டையிட்டது சேவலா பெட்டையா ? சேவல் எனப் பொருத்தமில்லாத வினாவைக் கேட்டதனால் வினாவழு.
வினாவழு | |
விடை வழு | |
மரபுவழு | |
காலவழு |
Question 89 |
நாளை பள்ளி திறக்கப்படுமா? என்னும் வினாவுக்கு, என் அத்தைக்கு உடல்நலமில்லை எனக் கூறுவது ----------------- வழு ஆகும்.
வினாவழு | |
விடை வழு | |
மரபுவழு | |
காலவழு |
Question 90 |
நாய் கத்தும். இத்தொடர் ----------------- வழு. ஏனெனில், நாய் குரைக்கும் என்பதே முறையான ஒலிமரபு.
வினாவழு | |
விடை வழு | |
மரபுவழு | |
காலவழு |
Question 91 |
இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது -------------- ஆகும்.
இலக்கணப் போலி | |
வழாநிலை | |
வழு | |
வழுவமைதி |
Question 91 Explanation:
விளக்கம் :- வழுவமைதி : பிழை – ஆனால், பிழையாகக் கொள்ளாமை. இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக்கொள்ளபடுவது வழுவமைதி ஆகும்.
உவகை(மகிழ்ச்சி), சிறப்பு, உயர்வு, உறுதி, சினம் காரணமாகத் திணைவழுவும் பால்வழுவும் காலவழுவும் வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்படும்.
சான்று :-
1 . சிற்றூர்களில் சிலர், தாங்கள் வளர்க்கும் விலங்குகளுக்குப் பெயரிட்டு அழைக்கும் பழக்கம் உண்டு. வருகின்ற பசுவைப் பார்த்து, ‘என் இலட்சுமி வந்துவிட்டாள்’ எனக் கூறுவதனைக் கேட்டிருப்பீர்கள். இவ்வாறு கூறுவது, திணைவழுவாயினும் மகிழ்ச்சியின் காரணமாகத் திணைவழுவமைதியாக ஏற்றுக்கொள்கிறோம்.
குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார். – இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லையென்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை. ஏனெனில், அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் காலவழுவமைதியாக ஏற்றுக்கொள்கிறோம்.
Question 92 |
இருசொற்களைச் சேர்த்து எழுதும் போது இடையில் சில இடங்களில் எந்த வல்லின மெய் எழுத்துக்கள் ----------------- மிக்கு வரும்.
( க், ச், ட், ப் ) | |
( க், ச், ட், த் ) | |
( க், ச், த், ப் ) | |
( க், ச், த், ற் ) |
Question 93 |
பொருந்தாதது எது?
அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளை அடுத்தும், எ என்னும் வினாவை அடுத்தும் வரும் வல்லினங்களாகிய க், ச், த், ப் மிகும் | |
அந்த, இந்த, எந்த, அங்கு, இங்கு, எங்கு, அப்படி, இப்படி, எப்படி, என்னும் சுட்டு வினாச்சொற்களை அடுத்து வல்லினம் மிகும் | |
இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும் | |
ஐந்தாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும். |
Question 93 Explanation:
விளக்கம் :- நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.
Question 94 |
பொருந்தாதது எது?
இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லினம் மிகும் | |
பண்புத்தொகையில் வல்லினம் மிகும். மற்றும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும் | |
உவமைத்தொகை மற்றும் ஒரேழுத்து ஒரு மொழி, ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும் | |
மென்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும் |
Question 94 Explanation:
குறிப்பு :- வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.
Question 95 |
பொருந்தாதது எது?
ட, ற ஒற்று இரட்டிக்கும் உயிர், நெடில் தொடர்க் குற்றியலுகரங்களின் பின் வல்லினம் மிகும் | |
குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும் | |
சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும் | |
ஆய், என, இனி, ஆக முதலிய இடைச்சொற்களின் பின் வல்லினம் மிகும். |
Question 95 Explanation:
விளக்கம் :- முற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.
Question 96 |
பொருந்தாதது எது?
அது, இது, அவை, இவை என்னும் சுட்டுச் சொற்களின் பின்னும் எது, எவை என்னும் வினாச்சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது | |
ஆ, ஏ, ஓ என்னும் வினா எழுத்துகள் மற்றும் எழுவாய்த்தொடரில் வல்லினம் மிகாது | |
அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களுக்குப் பின் மற்றும் வினைத்தொகை, உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது. | |
இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும் |
Question 96 Explanation:
விளக்கம் :- இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.
Question 97 |
பொருந்தாதது எது?
மூன்றாம் வேற்றுமை உருபுகளின் பின் (ஒடு, ஓடு) வல்லினம் மிகாது | |
எட்டு, பத்து தவிரப் பிற எண்களுக்குப்பின் வல்லினம் மிகாது | |
வியங்கோள் வினைமுற்றுக்குப் பின் மற்றும் இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடர்களில் வல்லினம் மிகாது | |
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிரப் பிறபெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகும். |
Question 97 Explanation:
விளக்கம் :- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிரப் பிறபெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது.
Question 98 |
எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனைச் சொந்தக்கால்களில் நிற்கும்படி செய்கிறதோ அதுதான் உண்மையான கல்வி. சமுதாயத்திலுள்ள ஆண் பெண் அனைவருக்கும் உண்மைக் கல்வியை அளிப்பதே நமது கடமை. அந்தக் கல்வி மூலமாக அவர்கள் தங்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்பதனை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். கெட்டதனை விட்டுவிடுவார்கள். - இது யாருடைய கூற்று?
அண்ணா | |
வரதராசனார் | |
விவேகானந்தர் | |
மறைமலையடிகள் |
Question 99 |
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, அந்த நாட்டு மக்கள் பெற்றிருக்கும் கல்வி, அறிவாற்றல் ஆகியவற்றை பொருத்தே அமைகிறது. நாம் மீண்டும் உயர்வடைய வேண்டுமானால், பொதுமக்கள் எல்லாருக்கும் கல்வியைப் பரப்பியாக வேண்டும். பொதுமக்களுக்குக் கல்வியைத் தந்து அவர்களை உயர்த்திவிடுங்கள். இஃது ஒன்றே ஒன்று தான் நமது சிறப்பைப் பெறுவதற்குரிய ஒரு வழியாகும். - இது யாருடைய கூற்று?
அண்ணா | |
வரதராசனார் | |
விவேகானந்தர் | |
மறைமலையடிகள் |
Question 100 |
பொருந்தாதது எது?
காமராசர் பிறந்த ஆண்டு - 1903 | |
காமராசர் முதலமைச்சராக பதவியேற்ற ஆண்டு - 1954 | |
காமராசர் சட்டமன்ற உறுப்பினரான ஆண்டு - 1937 | |
காமராசர் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவரான ஆண்டு - 1967 |
Question 100 Explanation:
விளக்கம் :- காமராசர் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவரான ஆண்டு - 1963
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.