Online TestTamil
9th Std Tamil Notes – Part 3
9th Std Tamil Notes - Part 3
Congratulations - you have completed 9th Std Tamil Notes - Part 3.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ஓய்வாக இருக்கையில் தம்பி – நீ,, ஓவியம் வரைந்து பழகு !
தூய்மையோ டமைதி சேரும் ! – நன்கு,, தோன்றிடும் உள்ள அழகு !
- என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
மீரா | |
மதுரகவி பாஸ்கரதாஸ் | |
பெருஞ்சித்திரனார் | |
சுரதா |
Question 2 |
பாக்களும் இயற்றிப் பழகு – நல்ல,, பாடலைப் பாடி மகிழ்வாய் !
தாக்குறும் துன்பம் யாவும் – இசைத் ,, தமிழினில் மாய்ந்து போகும் !
- என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
மீரா | |
மதுரகவி பாஸ்கரதாஸ் | |
பெருஞ்சித்திரனார் | |
சுரதா |
Question 3 |
அறிவியல் ஆய்வு செய்வாய் – நீ,, அன்றாடச் செய்தி படிப்பாய் !
செறிவுறும் உன்றன் அறிவு – உளச் ,, செழுமையும் வலிவும் பெறுவாய் !
என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
மீரா | |
மதுரகவி பாஸ்கரதாஸ் | |
பெருஞ்சித்திரனார் | |
சுரதா |
Question 4 |
மருத்துவ நூல்கள் கற்பாய் – உடன்,, மனநூலும் தேர்ந்து கற்பாய் !
திருத்தமெய்ந் நூல்கள் அறிவாய் – வருந்,, தீமையும் பொய்யும் களைவாய் !
என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
மீரா | |
மதுரகவி பாஸ்கரதாஸ் | |
பெருஞ்சித்திரனார் | |
சுரதா |
Question 5 |
ஏட்டுக்கல்வியுடன் கலைஅறிவும் தொழிற்கல்வியும் அறிவியற் சிந்தனையும் இருந்தால், நீங்கள் வாழ்வில் வெற்றி பெறலாம். ஆதலால், ஓய்வுநேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட்டு வாழ்வில் வளம்பெறுங்கள் - என்று கூறியவர் யார்?
மீரா | |
மதுரகவி பாஸ்கரதாஸ் | |
பெருஞ்சித்திரனார் | |
சுரதா |
Question 6 |
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
மீ.ராசேந்திரன் | |
துரை. மாணிக்கம் | |
இராசகோபாலன் | |
துரைசாமி |
Question 7 |
கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், நூறாசிரியம் ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?
மீரா | |
மதுரகவி பாஸ்கரதாஸ் | |
பெருஞ்சித்திரனார் | |
சுரதா |
Question 8 |
தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்கள் மூலம் உலகத் தமிழரிடையே தமிழுணர்வு உருவாக்க பாடுபட்டவர் யார்?
மீரா | |
மதுரகவி பாஸ்கரதாஸ் | |
பெருஞ்சித்திரனார் | |
சுரதா |
Question 9 |
மாணவர்களே! ஓய்வாக இருக்கும் நேரத்தில் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டால் தூய எண்ணங்களும் அமைதியும் சேர்ந்து, உள்ளத்தின் அழகு வெளிப்பட, அது காரணமாக அமையும் என்று கூறியவர் யார்?
மீரா | |
மதுரகவி பாஸ்கரதாஸ் | |
பெருஞ்சித்திரனார் | |
சுரதா |
Question 10 |
அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள். அன்றாட நிகழ்வுகளைச் செய்தித்தாள் வாயிலாக அறிந்துகொள்ளுங்கள். உலக நிகழ்வுகளை அறிவதன்மூலம் அறிவுத்திறன் மேம்படும். உள்ளம் வளமும் வலிமையையும் பெற்றுச் சிறக்கும். மருத்துவ நூல்களையும் மனநல நூல்களையும் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். அவை உடலையும் உள்ளத்தையும் பாதுகாக்கத் துணைபுரியும் - என்று கூறியவர் யார்?
மீரா | |
மீரா | |
பெருஞ்சித்திரனார் | |
சுரதா |
Question 11 |
பள்ளிப்பறவைகள் நூல் ---------- பிரிவுகளாக அமைந்துள்ளது?
2 | |
3 | |
4 | |
5 |
Question 11 Explanation:
விளக்கம் :- பள்ளிப்பறவைகள் பாடல்கள் பலவும் தென்மொழி, தமிழ்சிட்டு ஆகிய இதழ்களில் வெளிவந்தவை. இந்நூல் குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழிமாலை என முப்பிரிவாக அமைந்துள்ளது.
Question 12 |
சங்கப்புலவர் ----------- பேரின் கருத்துப்போரைத் தீர்க்க இறைவனே தலைமைப்புலவராய் எழுந்தருளினார். அவரையும் சேர்த்துச் சங்கப்புலவர் ------------ பேர் ஆயினர்.
45, 46 | |
46, 47 | |
47, 48 | |
48, 49 |
Question 13 |
இவற்றில் பொருந்தாதது எது?
வையை நாடவன் – பாண்டியன் | |
உய்ய – பிழைக்க | |
இரந்து செப்பினான் – பணிந்து வேண்டினான் | |
மருங்கு - தூரம் |
Question 14 |
உரைத்து, இரந்து, சொல்லி, இறைஞ்சி, விளக்கி, சிறந்து - இவற்றின் இலக்கணக்குறிப்பு என்ன?
தொழிற்பெயர் | |
பெயரெச்சம் | |
வினைத்தொகை | |
வினையெச்சம் |
Question 14 Explanation:
விளக்கம் :- வினையெச்சம் :- வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம். இது கால வகையால் மூன்று வகைப்படும்.
[1] இறந்தகால வினையெச்சம் - ஓடி வந்தான்
[2] நிகழ்கால வினையெச்சம் - ஓடி வருகின்றான்.
[3] எதிர்கால வினையெச்சம் - ஓடி வருவான்
குறிப்பு : இவை ‘உ’கர, ‘இ’கர, மற்றும் ‘ய’கர இறுதியுடன் ஒரு எச்சச்சொல்லில் நிற்கும்.
வினையெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?
(எ.கா) படித்து முடித்தான், வந்து சென்றான், ஓடி மறைந்தான், பாடி முடித்தான், சென்று வந்தான்.
படித்து முடித்தான், வந்து சென்றான், ஓடி மறைந்தான், பாடி முடித்தான், சென்று வந்தான் போன்ற வாக்கியங்களைக் கொடுத்து இதன் இலக்கண வகை என்ன என்று வினா வரும்போது முதலில் உள்ள படித்து, வந்து, ஓடி, பாடி, சென்று போன்றவற்றை கணக்கிட்டுதான் அவைவினையெச்சம் என எண்ண வேண்டும்.
முதலில் படித்து, வந்து, சென்று போன்ற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள். அவ்வார்த்தைகள 'உ' என்னும் சத்தத்தோடு முடியும்.
Question 15 |
இரந்து = இர + த்(ந்) + த் + உ. இர – பகுதி; த் – சந்தி; த் – ந் ஆனது விகாரம்; த் – இறந்தகால இடைநிலை; உ – ?. இங்கு உ என்பது எதனைக் குறிக்கும்?
பெயரெச்ச விகுதி | |
வினையெச்ச விகுதி | |
இறந்தகால இடைநிலை | |
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி |
Question 16 |
"கொங்குதேர் வாழ்க்கை" எனத் தொடங்கும் பாடலைச் சொல்லினிமை தோன்ற இயற்றித் தருமிக்கு வழங்கியவர் யார்?
பரஞ்சோதி முனிவர் | |
சண்பகப் பாண்டியன் | |
நக்கீரன் | |
சொக்கநாதர் |
Question 17 |
இவற்றில் பொருந்தாதது எது?
தென்னவன் குலதெய்வம் – சொக்கநாதன் (அ) சுந்தரபாண்டியன் | |
இன்னல் – இன்பம் | |
நல்கினார் – அளித்தார் | |
இறைஞ்சி – பணிந்து |
Question 17 Explanation:
விளக்கம் :- இன்னல் என்றால் துன்பம் என்று பொருள்.
Question 18 |
மகிழ்ச்சி - என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
உவமைத்தொகை | |
வினைத்தொகை | |
வினையெச்சம் | |
தொழிற்பெயர் |
Question 19 |
கழகத்தின் வெளியில் தொங்கிய சிறந்த பொன் முடிப்பினை அறுத்தெடுக்கும் தருமியை, ‘நில்’ எனத் தடுத்தவர் யார்?
பரஞ்சோதி முனிவர் | |
சண்பகப் பாண்டியன் | |
நக்கீரன் | |
சொக்கநாதர் |
Question 20 |
பொருந்தாதது எது?
விபுதர் – புலவர் | |
தூங்கிய – தொங்கிய | |
நம்பி – நக்கீரன் | |
புறம்பு – வெளியில் |
Question 20 Explanation:
விளக்கம் :- நம்பி என்ற பெயர் தருமியை குறிக்கும்.
Question 21 |
இலக்கணக்குறிப்பு - பொருந்தாதது எது?
ஆய்ந்த பொற்கிழி – பெயரெச்சம் | |
நோக்கி - வியங்கோள் வினைமுற்று | |
கிளத்தினேன் - தன்மை ஒருமை வினைமுற்று | |
தேராக் கீரன் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் |
Question 22 |
பொருத்தமற்றதை தேர்வு செய்க?
பையுள் – வருத்தம் | |
பனவன் – அந்தணன் | |
கண்டம் – கழுத்து | |
வழுவு பாடல் – குற்றமற்ற பாடல் |
Question 22 Explanation:
விளக்கம் :- வழுவு பாடல் – குற்றமுள்ள பாடல்.
Question 23 |
"மலர்கள் முதலியவற்றால் சாரும் மணம் அன்றி, இருளையொத்த கூந்தலுக்கு இயற்கையில் மணம் இல்லை" - என்று கூறியவர் யார்?
பரஞ்சோதி முனிவர் | |
சண்பகப் பாண்டியன் | |
நக்கீரன் | |
சொக்கநாதர் |
Question 24 |
இவற்றில் பொருந்தாதது எது?
வேணி - செஞ்சடை | |
அற்குற்ற (அல்கு+உற்ற) - இருளையொத்த | |
குழல் - கூந்தல் | |
அல்கு - பகல் |
Question 24 Explanation:
விளக்கம் :- அல்கு - என்பதன் பொருள் இரவு.
Question 25 |
இவற்றில் பொருந்தாதது எது?
ஞானப்பூங்கோதை - உமையம்மை | |
கற்றைவார் சடையான் - சிவபெருமான் | |
உம்பரார் பதி - தேவர் தலைவன் (இந்திரன்) | |
நாவலன் - இறைவன் |
Question 25 Explanation:
விளக்கம் :- நாவலன் - என்பதன் பொருள் புலவர்.
Question 26 |
தேய்ந்த, பாய்ந்த, ஆய்ந்த, காய்ந்த - என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
வினையெச்சம் | |
முற்றெச்சம் | |
பண்புத்தொகை | |
பெயரெச்சம் |
Question 27 |
செந்தீ, வெம்மை - என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
வினையெச்சம் | |
முற்றெச்சம் | |
பண்புத்தொகை | |
பெயரெச்சம் |
Question 28 |
இவற்றில் பொருந்தாதது எது?
பரஞ்சோதி முனிவர் துறவியாகிச் சிவாலயங்கள் தோறும் சென்று இறைவனை வழிபட்டு வந்தார், அவ்வாறு மதுரை நகரினை அடைந்து மீனாட்சி அம்மனையும், சோமசுந்தர கடவுளையும் வணங்கினார். அந்நகரிலேயே சிலகாலம் தங்கியிருந்தார். | |
அந்நகரத்தார், இவரைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, திருவிளையாடற் புராணத்தை இயற்றினார். | |
அந்நூலைச் சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் யாவரும் போற்ற அரங்கேற்றினார்.
| |
இவர் திருவிளையாடற் போற்றிக்கலிவெண்பா, மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். |
Question 28 Explanation:
விளக்கம் :- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர். மீதமுள்ள இரு நூல்களும் (திருவிளையாடற் போற்றிக்கலிவெண்பா, மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி ) பரஞ்சோதி முனிவர் எழுதியது.
Question 29 |
திருவிளையாடற் புராணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன?
3 | |
4 | |
5 | |
6 |
Question 29 Explanation:
விளக்கம் :- திருவிளையாடற் புராணம், மதுரைக்காண்டம் ( 18 படலம் ), கூடற்காண்டம் ( 30 படலம் ), திருவாலவாய்க்காண்டம் ( 16 படலம் ) என்னும் முப்பெரும் பகுதிகளையும், படலம் என்னும் 64 உட்பிரிவுகளையும் உடையது. இதில் 3363 விருத்தப்பாக்கள் உள்ளன. மதுரையில் இறைவன் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களை இப்படலங்கள் விளக்குகின்றன. தொடை நயமும் பத்திச்சுவையும் மிக்க இந்நூலுக்கு ந.மு.வேங்கடசாமி உரையெழுதியுள்ளார்.
Question 30 |
" திரைகடல் ஓடியும் திரவியம் தேடு " - என்று கூறியவர் யார்?
ஒளவையார் | |
பாரதியார் | |
பாரதிதாசன் | |
கணியன் பூங்குன்றனார் |
Question 31 |
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" - என்று கூறியவர் யார்?
ஒளவையார் | |
பாரதியார் | |
பாரதிதாசன் | |
கணியன் பூங்குன்றனார் |
Question 32 |
பழங்காலத்தில், தமிழர் பிற நாடுகளுக்குக் கடற்பயணம் மேற்கொண்ட செய்தி முந்நீர் வழக்கம் என --------------- நூல் குறிப்பிடுகிறது?
பட்டினப்பாலை | |
முதுமொழிக்காஞ்சி | |
நற்றிணை | |
தொல்காப்பியம் |
Question 33 |
பழந்தமிழர் பொருளீட்டுதலைத் தம் கடமையாகக் கருதினர். இதனைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பொருள்வயிற் பிரிவு விளக்குகிறது. இப்பிரிவு எத்தனை வகைப்படும்?
2 | |
3 | |
4 | |
5 |
Question 33 Explanation:
விளக்கம் :- காலில் (தரைவழிப்பிரிதல்) பிரிவு, கலத்தில் (நீர்வழிப் பிரிதல்) பிரிவு என இருவகைப்படும்.
Question 34 |
பழந்தமிழர், கிரேக்கரையும் உரோமானியரையும் --------------- என அழைத்தனர்?
கலம்செய் கம்மியர் | |
யவனர் | |
நண்பர் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 35 |
பழங்காலத்திலேயே தமிழகத்தில் பலவகையான கப்பல்கள் கட்டப்பட்டன. ஒவ்வொரு பெரிய கப்பலும், மதில்சூழ்ந்த கோட்டைபோலத் தோன்றுமாம். அஃதாவது, நான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள், அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய மருதநில அரசனது கோட்டை. அக்கோட்டையின் தோற்றமானது, நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாக எந்த நூலில் கூறப்பட்டுள்ளது?
அகநானூறு | |
குறுந்தொகை | |
புறநானூறு | |
கலித்தொகை |
Question 36 |
ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பெளவம், பரவை, புணரி என்பவை ---------------- என்பதை குறிக்கும் தமிழ்சொற்கள்.
மரக்கலம் | |
ஆறு | |
கடல் | |
கேணி |
Question 37 |
கப்பல், கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம் என்பவை ---------------- என்பதை குறிக்கும் தமிழ்சொற்கள்.
மரக்கலம் | |
ஆறு | |
கடல் | |
கேணி |
Question 38 |
கடலில் செல்லும் பெரிய கலம் (கப்பல்) நாவாய் எனப்படும். புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள், அலைகளால் அலைப்புண்டு கட்டுத்தறியில் கட்டப்பட்ட யானை அசைவதுபோல் அசைந்தன. அவற்றின் உச்சியில் கொடிகள் அசைந்து ஆடின என கூறும் நூல் எது?
அகநானூறு | |
குறுந்தொகை | |
புறநானூறு | |
பட்டினப்பாலை |
Question 39 |
கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனைப் ------------------ பாடல் கூறுகிறது?
அகநானூறு | |
குறுந்தொகை | |
புறநானூறு | |
பட்டினப்பாலை |
Question 40 |
முசிறி, சேர மன்னனுக்குரிய துறைமுகம், அங்குச் சுள்ளி என்னும் பெரிய ஆற்றில் யவனர்களின் மரக்கலங்கள், ஆற்றுத்துறைகள் கலங்கிப் போகும்படி வந்து நின்றன. அக்கலங்களுக்கு உரிய யவனர்கள், பொன்னைச் சுமந்து வந்து, அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றார்கள். இச்செய்தியை, கூறும் நூல் எது?
அகநானூறு | |
குறுந்தொகை | |
புறநானூறு | |
பட்டினப்பாலை |
Question 41 |
பாண்டிய நாட்டு வளத்தைப் பெருக்கியது கொற்கைத் துறைமுகம், இத்துறைமுகத்தில் முத்துக்குளித்தல் மிகச் சிறப்பாக நடந்ததனை வெனிசு நாட்டறிஞரான ------------------ என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
யுவான் சுவாங் | |
பாணர் | |
மார்க்கோபோலோ | |
மெகஸ்தனீசு |
Question 42 |
கொற்கை துறைமுகத்தில் சங்க காலத்தும் முத்துக்குளித்தல் நடந்தது. ஏற்றுமதிப் பொருள்களில் முத்தே முதலிடம் பெற்றது. மதுரைக்காஞ்சியும் சிறுபாணாற்றுப்படையும் கொற்கை முத்தினைச் சிறப்பிக்கின்றன. விளைந்து முதிர்ந்த விழுமுத்து என ------------------------- நூல் குறிப்பிடுகிறது.
மதுரைக்காஞ்சி | |
குறுந்தொகை | |
புறநானூறு | |
பட்டினப்பாலை |
Question 43 |
சோழநாட்டின் துறைமுகமாகிய ---------------------------- என்ற இடத்தில், சுங்கச்சாலையும் கலங்கரை விளக்கமும் இருந்தன.
காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) | |
கொற்கை | |
முசிறி | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 44 |
இவற்றில் பொருந்தாதது எது?
இமயத்திலுண்டான - மணிகளும் பொன்னும் | |
குடகு மலையிற் பிறந்த - சந்தனமும் அகிலும் | |
கொற்கை - ஏலக்காய் | |
ஈழ நாட்டிலிருந்து வந்த - உணவுப் பொருள்கள் |
Question 44 Explanation:
விளக்கம் :- கொற்கைத்துறையிற் பிறந்த முத்தும்.
Question 45 |
பழந்தமிழகத்தின் வாணிகப்பொருள்களைப் பற்றிய குறிப்புகள் எந்த நூலில் காணப்படுகின்றன?
அகநானூறு, புறநானூறு | |
பதிற்றுப்பத்து, கலித்தொகை | |
பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 45 Explanation:
விளக்கம் :- பழந்தமிழகத்தின் வாணிகப்பொருள்களைப் பற்றிய குறிப்புகள் பட்டினப்பாலையிலும் மதுரைக்காஞ்சியிலும் காணப்படுகின்றன. இங்கிருந்து ஏற்றுமதியான பொருள்களுள் இரத்தினம், முத்து, வைரம், மிளகு, கருங்காலி, கருமருது, தேக்கு, சந்தனம், வெண்துகில், அரிசி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி முதலியன குறிப்பிடத்தக்கவை. தமிழகப் பொருள்கள் சீனத்தில் விற்கப்பட்டன. சீனத்துப் பட்டும் சருக்கரையும் தமிழகத்துக்கு இறக்குமதி ஆயின. கரும்பு, அதியமானின்முன்னோர் காலத்தில் சீனாவிலிருந்து கொண்டுவந்து பயிரிடப்பட்டது.
Question 46 |
-------------- என்பவர் அமெரிக்காவின், புகழ்பெற்ற எழுத்தாளராகவும் அரசியல் ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார்.
சாக்ரடீசு | |
கெலன் கெல்லர் | |
சேக்சுபியர் | |
முசோலினி |
Question 47 |
"உங்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்றனைப் பெற விரும்பினால், அஃது என்னவாக இருக்க வேண்டுமெனக் கேட்பீர்கள்" என்று கேட்க - "இந்த உலகத்தில் அமைதி மலரவேண்டும் எனக் கேட்பேன்" - என்று கூறியவர் யார்?
சாக்ரடீசு | |
கெலன் கெல்லர் | |
சேக்சுபியர் | |
முசோலினி |
Question 48 |
கெலன் கெல்லர், ஆறு வயதானபோது அலெக்சாண்டர் கிரகாம்பெல் உதவியால் ------------ பள்ளியில் சேர்ந்தார்.
ஹோரஸ்மான் | |
ரைட்ஹுமாசன் | |
கேம்ப்ரிட்ஜ் | |
பெர்கின்ஸ் |
Question 48 Explanation:
விளக்கம் :- ஆறு வயதான போது அலெக்சாண்டர் கிரகாம்பெல் உதவியால் பெர்கின்ஸ் பள்ளியில் (பெர்கின்ஸ் பள்ளி என்பது பார்வையற்றோருக்கான பள்ளி. அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் அமைந்துள்ளது.) சேர்ந்தார். அங்குப் பணிபுரிந்த அன்னிசல்லிவான் என்பவர் ஹெலனுக்கு ஆசிரியராக வாய்த்தார்.
கெலன் கெல்லர் பாஸ்டனில் உள்ள ஹோரஸ்மான் காதுகேளாதோருக்கான பள்ளியிலும், நியூயார்க்கில் உள்ள ரைட் ஹூமாசன் பள்ளியிலும் முறைப்படி பயின்றார்.
Question 49 |
பார்வையற்றோருக்கெனத் தேசிய நூலகம் ஒன்றனை உருவாக்கி, உலகம் முழுவதிலும் இருந்து நூல்கள் வந்து குவிய ஏற்பாடு செய்தவர் யார்?
சாக்ரடீசு | |
கெலன் கெல்லர் | |
சேக்சுபியர் | |
முசோலினி |
Question 50 |
"வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை; ஒன்றுபோனால் இன்னொன்று வரும். அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது" - என்று கூறியவர் யார்?
விவேகானந்தர் | |
கெலன் கெல்லர் | |
ஜான் பிரிட்டோ | |
முசோலினி |
Question 51 |
நீங்கள் கண்பார்வை அற்றவராகவும், காது கேளாதவராகவும் இருந்தும் கூட எப்படி உங்களால் சாதிக்க முடிந்தது? என கெலன் கெல்லரிடம் கேட்டவர் யார்?
ஜான் பிரிட்டோ | |
முசோலினி | |
காந்தி | |
விக்டோரியா மகாராணி |
Question 52 |
கெலன் கெல்லரின் மொழிபெயர்ப்பாளர் யார்?
ஜான் ரொனால்டோ | |
சான் மைக்கேல் | |
பாலி தாம்சன் | |
விக்டர் |
Question 52 Explanation:
விளக்கம் :- ஆசிரியர் அன்னி 1930 ஆம் ஆண்டு இறந்துவிடத் தனது மொழி பெயர்ப்பாளர் பாலி தாம்சன் என்பவர் அவருக்கு உதவினார். ஜப்பான் முதலான நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஹெலன், வாஷிங்டன் நகரின் புகழ்பெற்ற பெண்மணியாகத் திகழ்ந்தார்.
Question 53 |
"மனிதர்கள் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள்; அவர்கள் எதையுமே முதன்மையாகக் கருதுவதில்லை. எதனையாவது இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்கிறார்கள்" - என்று கூறியவர் யார்?
விவேகானந்தர் | |
கெலன் கெல்லர் | |
ஜான் பிரிட்டோ | |
அம்பேத்கர் |
Question 54 |
ஒருநாள் இரவு ஹெலன் கெல்லர், கடவுளின் அருளால் ------------- நாள் மட்டுமே தமக்குப் பார்வை கிட்டியதாகக் கனவு கண்டார்.
2 | |
3 | |
4 | |
5 |
Question 54 Explanation:
விளக்கம் :- முதல் நாள், கண்ணொளி கிடைத்ததும் முதன்முதலில் பார்த்தது, அவரின் கல்விக்கண் திறந்து வைத்த ஆசிரியரின் முகத்தையே. அவரைச் சந்தித்ததற்குப் பின், பொறுமை, அன்பு, இரக்கம், துணிவு, தன்னம்பிக்கை ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாகத் தமது ஆசிரியர் திகழ்வதனை உணர்ந்தார். ஆசிரியரைப் பார்த்ததற்குப் பின் அவர், தமது உயிர்தோழிகளைச் சந்தித்தார்.
இரண்டாவது நாள், ஹெலன் கெல்லர் கதிரவன் தோன்றுவதனைக் கண்டார். அன்று நியூயார்க்கிலுள்ள அருங்காட்சியகத்தைக் கண்டு, இயற்கை வரலாற்றைத் தெரிந்து கொண்டார். அருங்காட்சியகம் அவருக்கு உலக மரபியல் வளர்ச்சியை அறிந்துகொள்ளப் பேருதவியாக இருந்ததை எண்ணி மகிழ்ந்தார். பெருநகரப் பொருட்காட்சிக் சாலையில் இடம்பெற்றிருந்த புகழ்பெற்ற கலைஞர்கள், லியனார் டோ டாவின்சி முதலானோர் ஓவியங்களையும் கலைபொருள்களையும் கண்டுமகிழ்ந்தார். பிறகு, ஹெலன், ஷேக்ஸ்ப்பியருடைய நாடகமொன்றனைப் பார்த்தார்.
மூன்றாவது நாள், நகரின் கிழக்குப் பக்கத்திலுள்ள ஆற்றுப்பாலத்தை உற்று நோக்கினார். பின்பு, நியூயார்க்கில் உள்ள வானளாவிய இரட்டைக் கோபுரக் கட்டடத்தைக் கண்டுகளித்தார். ஹெலன் மூன்றாம் நாள் சொன்னது எனது கண்கள் துக்கத்தையும் மகிழ்ச்சியையும் முதன்முதலாகக் கண்டன.
Question 55 |
உலகின் எட்டாவது அதிசயம் எனப் பாராட்டப் பெற்றவர் யார்?
திருவள்ளுவர் | |
சேக்சுபியர் | |
கெலன் கெல்லர் | |
காந்தி |
Question 56 |
செய்யுளின் உறுப்புகள் எத்தனை?
5 | |
6 | |
7 | |
8 |
Question 56 Explanation:
விளக்கம் :- யாப்பு – யாக்கப்படுவது – கட்டப்படுவது. யாப்பு என்பது செய்யுள். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் ஆறும் செய்யுளின் உறுப்புகளாகும்.
Question 57 |
எழுத்தானது தனியாகவோ பல சேர்ந்தோ ஓசையுடன் அசைந்து (பிரிந்து) நிற்பது --------------- எனப்படும்?
அசை | |
சீர் | |
தளை | |
அடி |
Question 57 Explanation:
விளக்கம் :- எழுத்தானது தனியாகவோ பல சேர்ந்தோ ஓசையுடன் அசைந்து (பிரிந்து) நிற்பது அசை எனப்படும். இது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.
நேரசை , (2) நிரையசை.
நேரசை:- குறில் தனித்தும் குறில் ஒற்றடுத்தும், நெடில் தனித்தும் நெடில் ஒற்றடுத்தும் வருவது நேரசை எனப்படும்.
(எ.கா.) :
குறில் தனித்து வரல் – க.
குறில் ஒற்றுடன் வரல் – கல்.
நெடில் தனித்து வரல் – கா.
நெடில் ஒற்றுடன் வரல் – கால்.
நிரையசை :
குறில் இணைந்தும் குறில் இணைந்து ஒற்றும், குறில் நெடில் இணைந்தும், குறில் நெடில் இணைந்து ஒற்றும் வருவது நிரையசை.
(எ.கா.) :
குறில் இணைந்து வரல் – பட.
குறில் இணைந்து ஒற்றுடன் வரல் – படம்.
குறில் நெடில் இணைந்து வரல் – படா.
குறில் நெடில் இணைந்து ஒற்றுடன் வரல் – படாம்.
Question 58 |
அசைகள் தனித்தும் இணைந்தும் கூடி, அடிக்கு உறுப்பாக அமைவது சீர் எனப்படும். அஃது எத்தனை வகைப்படும்?
3 | |
4 | |
5 | |
6 |
Question 58 Explanation:
விளக்கம் :- அசைகள் தனித்தும் இணைந்தும் கூடி, அடிக்கு உறுப்பாக அமைவது சீர் எனப்படும். அஃது ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என நால்வகைப்படும்.
Question 59 |
வெண்பாவின் ஈற்றில் நேரசை, நிரையசையுள் ஏதேனும் ஒன்று தனித்து நின்று சீராய் அமையும். அவற்றை --------------- என்பர்.
ஓரசைச்சீர் | |
ஈரசைச்சீர் | |
மூவசைச்சீர் | |
நாலசைச்சீர் |
Question 59 Explanation:
விளக்கம் :- வெண்பாவின் ஈற்றில் நேரசை, நிரையசையுள் ஏதேனும் ஒன்று தனித்து நின்று சீராய் அமையும். அவற்றை ஓரசைச்சீர் என்பர். அவை நாள் (நேர்), மலர் (நிறை), காசு (நேர்பு), பிறப்பு (நிரைபு) என நால்வகை வாய்பாடுகளுள் ஒன்றனைப் பெறும்.
(எ.கா.) :
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். [ என் – நேர் (நாள்) ]
2. செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். [ படும் – நிரை (மலர்) ]
3. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு. [ நாடு – நேர்பு (காசு) ]
4. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு [ உலகு – நிரைபு (பிறப்பு) ]
Question 60 |
ஈரசை சேர்ந்து ஒரு சீர் ஆவது ------------- எனப்படும்?
ஓரசைச்சீர் | |
ஈரசைச்சீர் | |
மூவசைச்சீர் | |
நாலசைச்சீர் |
Question 60 Explanation:
விளக்கம் :- ஈரசைச்சீர் :- ஈரசை சேர்ந்து ஒரு சீர் ஆவது ஈரசைச்சீர். நேரில் முடிவது இரண்டும், நிறையில் முடிவது இரண்டுமாக ஈரசைச்சீர் நான்கு ஆகும்.
நேர் நேர் – தேமா – மாச்சீர் – 2 (தேமா, புளிமா என மாவில் முடிவடைவதனால் மாச்சீர்.)
நிரை நேர் – புளிமா – மாச்சீர் – 2 (தேமா, புளிமா என மாவில் முடிவடைவதனால் மாச்சீர்.)
நிரை நிரை – கருவிளம் – விளச்சீர் – 2 ( கருவிளம், கூவிளம் என விளத்தில் முடிவதனால் விளச்சீர்.)
நேர் நிரை – கூவிளம் – விளச்சீர் – 2 ( கருவிளம், கூவிளம் என விளத்தில் முடிவதனால் விளச்சீர்.)
(ஈரசைச்சீர் நான்கும் ஆசிரியப்பாவுக்கு உரியவை.) இவை இயற்சீர் எனவும், ஆசிரிய உரிச்சீர் எனவும் வழங்கப்படும்.
Question 61 |
மூன்று அசைகள் சேர்ந்து ஒரு சீர் ஆவது ------------ எனப்படும்?
ஓரசைச்சீர் | |
ஈரசைச்சீர் | |
மூவசைச்சீர் | |
நாலசைச்சீர் |
Question 62 |
மூவசைச்சீர் எட்டுடன் நேரசை, நிரையசைகளைத் தனித்தனியாகச் சேர்த்தால், ----------------- பதினாறு கிடைக்கும். இதனைப் பொதுச்சீர் எனக் கூறுவர்.
ஓரசைச்சீர் | |
ஈரசைச்சீர் | |
மூவசைச்சீர் | |
நாலசைச்சீர் |
Question 62 Explanation:
விளக்கம் :- மூவசைச்சீர் எட்டுடன் நேரசை, நிரையசைகளைத் தனித்தனியாகச் சேர்த்தால், நாலசைச்சீர் பதினாறு கிடைக்கும். இதனைப் பொதுச்சீர் எனக் கூறுவர். பொதுச்சீர்கள் தண்பூ, தண்நிழல், நறும்பூ, நறுநிழல் ஆகிய வாய்ப்பாடுகளைக் கொண்டு முடியும்.
Question 63 |
உலகில் இல்லாத பொருளை ஒன்றனுக்கு உவமையாக்கிக் கூறுவது ------------- எனப்படும்.
வேற்றுப்பொருள் வைப்பணி | |
வேற்றுமை அணி | |
இல்பொருள் உவமையணி | |
ஏகதேச உருவக அணி |
Question 63 Explanation:
விளக்கம் :- இல்பொருள் உவமையணி :- உலகில் இல்லாத பொருளை ஒன்றனுக்கு உவமையாக்கிக் கூறுவது இல்பொருள் உவமையணி எனப்படும்.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
இக்குறட்பாவைப் படித்துப் பாருங்கள், உள்ளத்தில் அன்பில்லாத ஒருவர் குடும்ப வாழ்க்கை நடத்துவது என்பது, பாலை நிலத்தில், பட்டமரம் தளிர்விட்டு வளர்வது போன்றது. திருவள்ளுவர், இக்குறட்பாவில் அன்பில்லாதவன் வாழ்க்கை, பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்விட்டு வளர்வதற்கு ஒப்பானது என இல்லாத பொருளை உவமித்துக் கூறுகிறார். புலவன், உலகில் இயல்பாக இல்லாத பொருளை இவ்வாறு உவமையாக்கிக் கூறுவது இல்பொருள் உவமையணி ஆகும்.
Question 64 |
புலவர் தாம் கருதிய பொருளை நிலைநாட்ட, உலகம் அறிந்த வேறொரு பொருளைச் சான்றுகாட்டிக் கூறும்போது, பொதுப் பொருளால் சிறப்புப் பொருளையும், சிறப்புப் பொருளால் பொதுப் பொருளையும் விளக்குவதனை ----------------------- என்பர்.
வேற்றுப்பொருள் வைப்பணி | |
வேற்றுமை அணி | |
இல்பொருள் உவமையணி | |
ஏகதேச உருவக அணி |
Question 65 |
சூட்டடுப்பு - என்பது கீழ்க்கண்டவற்றில் எதனைக் குறிக்கிறது?
குளிர்சாதனப்பெட்டி | |
குளிரூட்டும் பெட்டி | |
வாயுஅடுப்பு | |
கணப்புப்புரை |
Question 66 |
மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும்
வருத்தத்தை ஒருசிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
கணமும்நான் சகித்திட மாட்டேன் - என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வள்ளலார் | |
நாமக்கல் கவிஞர் |
Question 67 |
இன்றைய தோல்வி நாளைய வெற்றிக்கு அடிக்கல் என்ற நம்பிக்கையுடன், இளமை நலமிக்க ஊக்கத்துடன் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக்கொள்க - இது யாருடைய கூற்று?
இராமலிங்க அடிகளார் | |
நாமக்கல் கவிஞர் | |
குன்றக்குடி அடிகளார் | |
பாரதியார் |
Question 68 |
பிறவியிலேயே இரு கையும் இல்லாமல், தன்னிரு காலால் வானூர்தியை ஊட்டிய முதல் பெண்மணி என்னும் பெருமைக்குரியவர் யார்?
அஞ்சும் ஜார்ஜ் | |
லால் மெரி | |
ஜெசிக்கா காக்ஸ் | |
விக்டோரியா |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 68 questions to complete.