Online TestTamil

9th Std Tamil Notes Online Test – Part 9

9th Std Tamil Notes - Part 9

Congratulations - you have completed 9th Std Tamil Notes - Part 9. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி; வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்; நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்; கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவருக்கும் - இந்த பாடல் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
புறநானூறு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
B
நான்மணிக்கடிகை, விளம்பிநாகனார்
C
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
D
இவர்களில் யாருமில்லை
Question 2
உண்பது நாழி உடுப்பவை இரண்டே; பிறவும் எல்லாம் ஓர்ஒக் கும்மே; செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே தப்புந பலவே - இந்த பாடல் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
புறநானூறு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
B
நான்மணிக்கடிகை, விளம்பிநாகனார்
C
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
D
இவர்களில் யாருமில்லை
Question 3
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
நிழற்றிய – நிழல் செய்த
B
நடுநாள் யாமம் – நள்ளிரவு
C
துஞ்சான் – துயிலான்
D
மா – மரம்.
Question 3 Explanation: 
விளக்கம் :- மா என்பதன் சரியான சொற்பொருள் விலங்கு.
Question 4
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
நாழி – அளவுப்பெயர்
B
ஈதல் – வாங்குதல்
C
துய்ப்போம் – நுகர்வோம்
D
தப்புந – இழக்க
Question 4 Explanation: 
விளக்கம் :- ஈதல் என்பதன் சரியான சொற்பொருள் கொடுத்தல்.
Question 5
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக.
A
கல்லா ஒருவற்கும் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
B
நாழி – ஆகுபெயர்
C
ஈதல் – பண்புத்தொகை
D
துய்ப்போம் – தன்மைப் பன்மை வினைமுற்று
Question 5 Explanation: 
விளக்கம் :- ஈதல் என்பதன் சரியான இலக்கணக்குறிப்பு தொழிற்பெயர்.
Question 6
வெண்குடை - இலக்கணக்குறிப்பு தருக.
A
ஆகுபெயர்
B
பண்புத்தொகை
C
தன்மைப் பன்மை வினைமுற்று
D
தொழிற்பெயர்
Question 7
------------ என்னும் இவர், இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்.
A
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
B
விளம்பிநாகனார்
C
முன்றுறை அரையனார்
D
ஒளவையார்
Question 8
பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படையையும் நெடுநல்வாடையையும் இயற்றியவர் -------------.
A
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
B
விளம்பிநாகனார்
C
முன்றுறை அரையனார்
D
ஒளவையார்
Question 9
புறநானூற்றில் ---------- பாடல்கள் உள்ளன
A
300
B
400
C
500
D
600
Question 10
புறநானூறு -------------- நூல்களுள் ஒன்று.
A
ஐம்பெருங் காப்பியம்
B
ஐஞ்சிறும் காப்பியம்
C
பத்துப்பாட்டு
D
எட்டுத்தொகை
Question 11
புறநானூற்றின் சில பாடல்களை -------------- என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
A
ஜி.யு.போப்
B
வால்ட் விட்மன்
C
வீரமாமுனிவர்
D
ஜான் பன்யன்
Question 12
விடுபட்ட இடத்தில் உரிய எழுத்தினைக் கொண்டு நிரப்புக. தெ----கடல் வளாகம் பொதுமை இ---றி; வெண்குடை நிழற்றிய ஒருமை யோ---க்கும்
A
ன், ந், ர்
B
ந், ன், ற்
C
ண், ந், ர்
D
ண், ன், ர்
Question 13
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று; நீரினும் ஆரள வின்றே சாரல் - இந்த பாடல் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
புறநானூறு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
B
நான்மணிக்கடிகை, விளம்பிநாகனார்
C
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
D
குறுந்தொகை, தேவகுலத்தார்
Question 14
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு; பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே - இந்த பாடல் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
புறநானூறு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
B
நான்மணிக்கடிகை, விளம்பிநாகனார்
C
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
D
குறுந்தொகை, தேவகுலத்தார்
Question 15
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
நீர் – கடல்
B
கருங்கோல் – கருமை நிறமுடைய கொம்பு
C
உயர்ந்தன்று – சிறியது
D
அளவின்று – அளவினையுடையது
Question 15 Explanation: 
விளக்கம் : உயர்ந்தன்று என்பதன் சரியான சொற்பொருள் உயர்ந்தது.
Question 16
இலக்கணக்குறிப்பு தருக. நிலத்தினும், வானினும், நீரினும்
A
உருவகம்
B
எண்ணும்மை
C
முற்றும்மை
D
உயர்வுச்சிறப்பும்மை
Question 17
இலக்கணக்குறிப்பு தருக. கருங்கோல், பெருந்தேன்.
A
தொழிற்பெயர்
B
வினைத்தொகை
C
அல் ஈற்றுத் தொழிற்பெயர்
D
பண்புத்தொகை
Question 18
பொருந்தாதது எது? பிரித்தறிதல்.
A
ஆரளவு = ஆர + ளவு
B
கருங்கோல் = கருமை + கோல்
C
பெருந்தேன் = பெருமை + தேன்
D
சேவடி = செம்மை + அடி
Question 18 Explanation: 
குறிப்பு :- ஆரளவு என்பதன் சரியான பிரித்தறிதல் - அருமை + அளவு.
Question 19
குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துடன்  ---------- பாடல்கள் உள்ளன
A
301
B
401
C
501
D
601
Question 20
குறுந்தொகை -------------- நூல்களுள் ஒன்று.
A
ஐம்பெருங் காப்பியம்
B
ஐஞ்சிறும் காப்பியம்
C
பத்துப்பாட்டு
D
எட்டுத்தொகை
Question 21
குறுந்தொகை குறைந்த அளவாக ---------- அடிகளையும் அதிக அளவாக -------------- அடிகளையும் கொண்டிருக்கின்றன.
A
3, 11
B
4, 8
C
6, 11
D
5, 10
Question 22
குறுந்தொகை நூலைத் தொகுத்தவர் ----------------.
A
பூரிக்கோ
B
மதுரை உப்புரிகுடி கிழான் மகனாவான் உருத்திர சன்மன்
C
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
D
நல்லந்துவனார்
Question 23
குறுந்தொகை நூலுக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர்  --------------.
A
பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
B
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையார்
C
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
D
பாரதம் பாடிய பெருந்தேவனார்
Question 24
உயிர்கள் முதன்முதலில் ------------ இல் தோன்றின.
A
நிலம்
B
நீர்
C
காற்று
D
நெருப்பு
Question 25
--------------- உயிர்க்கோளத்தின் மையம்.
A
விலங்கு
B
தாவரம்
C
மனிதன்
D
உயிரற்ற பொருள்கள்
Question 26
காற்று மண்டலம் ஒரு கலவை. அதில் உயிர்வளி (ஆக்சிஜன்) 21% உப்புவளி (நைட்டிரசன்) ------% மற்ற வளிகள் 1% கலந்துள்ளன.
A
72
B
75
C
78
D
81
Question 27
குளிர்பதனப்பெட்டியில் பயன்படுத்தப்படும் ------------------------, உயிர் வளிப்படலத்தைச் சிதைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.  
A
குளோரோ ஃபுளுரோ கார்பன்
B
ஈத்தேன்
C
கதிரியக்கம்
D
மீத்தேன்
Question 28
சீர்கள் பல அடுத்து நடப்பது ---------- எனப்படும்.
A
அசை
B
அடி
C
தொடை
D
இவற்றில் ஏதுமில்லை
Question 29
அடி -------------- வகைப்படும்.
A
3
B
4
C
5
D
6
Question 29 Explanation: 
விளக்கம் :- சீர்கள் பல அடுத்து நடப்பது அடி எனப்படும். குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என அடி ஐவகைப்படும்.
Question 30
அடிதோறும் இருசீர்களைப் பெற்று வருவது ---------------- எனப்படும்.
A
அளவடி
B
நெடிலடி
C
கழிநெடிலடி
D
குறளடி
Question 30 Explanation: 
விளக்கம் :- அடிதோறும் இருசீர்களைப் பெற்று வருவது குறளடி எனப்படும். (எ.கா.) : முக்தி வேண்டுமேல் பக்தி வேண்டுமால் சத்தி யம்இது புத்தி நெஞ்சமே.
Question 31
அடிதோறும் முச்சீர்களைப் பெற்று வருவது ---------------- எனப்படும்.
A
சிந்தடி
B
நெடிலடி
C
கழிநெடிலடி
D
குறளடி
Question 31 Explanation: 
விளக்கம் :- அடிதோறும் முச்சீர்களைப் பெற்று வருவது சிந்தடி எனப்படும். (எ.கா.) :- பழுதி லாத பயிர்த்தொழில் பழுதி லாது பயிற்றவே பழுதி லாது பலதொழில் பழுதி லாது பயிற்றினர்
Question 32
அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வருவது ----------------- எனப்படும்.
A
அளவடி அல்லது நேரடி.
B
நெடிலடி
C
கழிநெடிலடி
D
குறளடி
Question 32 Explanation: 
விளக்கம் :- அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வருவது அளவடி அல்லது நேரடி எனப்படும். (எ.கா.) : தாய்மொழி தாயினும் தகவிற் போற்றுவன் ஆய்மொழி யாளர்தம் அன்புக்கு ஏற்றவன் காய்மொழி யாவதுங் கடிந்து மாற்றுவன் வாய்மொழி தப்பிடா வகையில் ஆற்றுவன்.
Question 33
அடிதோறும் ஐந்து சீர்களைப் பெற்று வருவது ------------- எனப்படும்
A
அளவடி அல்லது நேரடி
B
குறளடி
C
கழிநெடிலடி
D
நெடிலடி
Question 33 Explanation: 
விளக்கம் :- அடிதோறும் ஐந்து சீர்களைப் பெற்று வருவது நெடிலடி எனப்படும். (எ.கா.) : ஆடும் கடைமணி நாஅசை யாமல் அகிலமெங்கும் நீடும் குடையைத் தரித்த பிரானிந்த நீள்நிலத்தில் பாடும் புலவர் புகழ்ஒட்டக் கூத்தன் பதாம்புயத்தைச் சூடும் குலோத்துங்க சோழனென் றேயெனைச் சொல்லுவரே !
Question 34
அடிதோறும் ஆறு அல்லது அதற்குமேற்பட்ட பல சீர்களைப் பெற்று வருவதனைக் ---------- எனக் கூறுவர்.
A
அளவடி அல்லது நேரடி
B
குறளடி
C
சிந்தடி
D
கழிநெடிலடி
Question 34 Explanation: 
விளக்கம் :- அடிதோறும் ஆறு அல்லது அதற்குமேற்பட்ட பல சீர்களைப் பெற்று வருவதனைக் கழிநெடிலடி எனக் கூறுவர். (எ.கா.) : வாழ்வினில் செம்மை வேண்டும் வாய்மையே பேசல் வேண்டும்; பாழ்ச்செயல் விலக்கல் வேண்டும் ; பண்பினைக் காத்தல் வேண்டும்; தாழ்வினை அகற்ற வேண்டும் ; தருக்கினை விடுதல் வேண்டும்; சூழ்நிலை உணர்தல் வேண்டும் சோம்பலைப் போக்க வேண்டும். இப்பாடல் அடிதோறும் ஆறுசீர்கள் பெற்றுள்ளதனால், இதனைக் கழிநெடிலடி என்பர். பாடலிலுள்ள சீர்களை எண்ணி, இதனை அறுசீர்க்கழிநெடிலடி என்பர். இதுபோல் ஏழுசீர்கள் இருந்தால் எழுசீர்க்கழிநெடிலடி என்றும், எட்டுச் சீர்கள் இருந்தால் எண்சீர்க்கழிநெடிலடி என்றும் கூறுவர்.
Question 35
மலர்களைத் தொடுப்பது போலவே சீர்களிலும் அடிகளிலும் மோனை முதலியன அமையத் தொடுப்பது ----------------- எனப்படும்.
A
சீர்
B
தலை
C
அடி
D
தொடை
Question 35 Explanation: 
விளக்கம் :- (தொடை – தொடுக்கப்படுவது, தொடை – மாலை). பாவின் ஓசையின்பத்திற்கும் சிறப்பிற்கும் இத்தொடை வேண்டுவதாகும், தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும் என்பது பழமொழி.
Question 36
தொடை ----------------- வகைப்படும்.
A
5
B
6
C
7
D
8
Question 36 Explanation: 
விளக்கம் :- தொடை எண்வகைப்படும். அவை : 1.மோனைத்தொடை. 2.எதுகைத்தொடை. 3.முரண்தொடை. 4.இயைபுத்தொடை. 5.அளபெடைத்தொடை. 6.இரட்டைத்தொடை. 7.அந்தாதித்தொடை. 8.செந்தொடை
Question 37
செய்யுளில் அடிதோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ---------------------- எனப்படும்.
A
அடிமுரண்தொடை
B
அடிஇயைபுத்தொடை
C
அடிஎதுகைத்தொடை
D
அடிமோனைத் தொடை
Question 37 Explanation: 
விளக்கம் :- செய்யுளில் அடிதோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது அடிமோனைத் தொடை எனப்படும். எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்ப திழுக்கு - இக்குறட்பாவில் முதல் அடியின் முதற்சீரிலுள்ள முதல் எழுத்தும் (எ) இரண்டாம் அடியின் முதற்சீரிலுள்ள முதல் எழுத்தும் (எ) ஒன்றி வந்துள்ளதனால், இது மோனைத்தொடை.
Question 38
அடிதோறும் முதலெழுத்து அளவொத்து (ஓசையில்) நிற்க. இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ----------------- எனப்படும்.
A
அடிமுரண்தொடை
B
அடிஇயைபுத்தொடை
C
அடிஎதுகைத்தொடை
D
அடிமோனைத் தொடை
Question 38 Explanation: 
விளக்கம் :- அடிதோறும் முதலெழுத்து அளவொத்து (ஓசையில்) நிற்க. இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது அடியெதுகைத்தொடை எனப்படும். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு – இக்குறட்பாவில் முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும் க என்னும் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்துள்ளது. எனவே, இஃது அடியெதுகைத்தொடை எனப்படும்
Question 39
அடிதோறும் முதற்சீர் முரண்படத் தொடுப்பது ---------------- எனப்படும்.
A
அடிமுரண்தொடை
B
அடிஇயைபுத்தொடை
C
அடிஎதுகைத்தொடை
D
அடிமோனைத் தொடை
Question 39 Explanation: 
விளக்கம் :- அடிதோறும் முதற்சீர் முரண்படத் தொடுப்பது அடிமுரண்தொடை எனப்படும். இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன் – இப்பாடலில் முதலடியில் இன்பம் என்றும், இரண்டாம் அடியில் துன்பம் என்றும் முரண்பட்ட சொற்கள் வந்துள்ளன. எனவே, இஃது அடிமுரண்தொடை எனப்படும்.
Question 40
அடிதோறும் இறுதிச்சீர் ஒன்றிவரத் தொடுப்பது ------------------------ எனப்படும்.
A
அடிமுரண்தொடை
B
அடிஇயைபுத்தொடை
C
அடிஎதுகைத்தொடை
D
அடிமோனைத் தொடை
Question 40 Explanation: 
விளக்கம் :- அடிதோறும் இறுதிச்சீர் ஒன்றிவரத் தொடுப்பது அடிஇயைபுத்தொடை எனப்படும். கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும் கண்ட பேரண்டத் தண்டலை நாடும் கனக முன்றில் அனம்விளை யாடும் - இப்பாடலில் அடிதோறும் இறுதிச்சீர் ஒன்றி வந்துள்ளதனால் அடிஇயைபுத் தொடை ஆயிற்று.
Question 41
அடிதோறும் முதல் சீர் அளபெடுத்து வருவது ----------------- எனப்படும்.
A
அடிமுரண்தொடை
B
அடிஇயைபுத்தொடை
C
அடிஎதுகைத்தொடை
D
அடியளபெடைத் தொடை
Question 41 Explanation: 
விளக்கம் :- அடிதோறும் முதல் சீர் அளபெடுத்து வருவது அடியளபெடைத் தொடை எனப்படும். கெடுப் பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்ப தூஉம் எல்லாம் மழை – இப்பாடலில் கெடுப்பதூஉம், எடுப்பதூஉம் என இரண்டடிகளிலும் அளபெடுத்து வந்துள்ளமையால், அடியளபெடைத் தொடை எனப்படும்.
Question 42
நான்குசீர்களையுடைய ஓரடியில் இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றனைக்கொண்டு தொடுப்பது --------------- எனப்படும்.
A
மோனைத்தொடை
B
எதுகைத் தொடை
C
இயைபுத்தொடை
D
தொடை விகற்பம்
Question 43
தொடை விகற்பம் ----------------- வகைப்படும்.
A
25
B
30
C
35
D
40
Question 44
நாலடி கொண்ட சீருள் முதலிரு சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ------------- எனப்படும்
A
இணை மோனை
B
பொழிப்பு மோனை
C
ஒரூஉ மோனை
D
கூழை மோனை
Question 44 Explanation: 
விளக்கம் :- இணை மோனை (1, 2) :- நாலடி கொண்ட சீருள் முதலிரு சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது இனை மோனை எனப்படும். இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது.
Question 45
ஓர் அடியுள் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் முதலெழுத்து ஒன்றி வருவது ---------------- எனப்படும்.
A
இணை மோனை
B
பொழிப்பு மோனை
C
ஒரூஉ மோனை
D
கூழை மோனை
Question 45 Explanation: 
விளக்கம் :- பொழிப்பு மோனை (1, 3) : ஓர் அடியுள் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் முதலெழுத்து ஒன்றி வருவது பொழிப்பு மோனை எனப்படும். துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
Question 46
ஓர் அடியுள் முதற்சீரிலும் நாலாம் சீரிலும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ----------------- எனப்படும்.
A
இணை மோனை
B
பொழிப்பு மோனை
C
ஒரூஉ மோனை
D
கூழை மோனை
Question 46 Explanation: 
விளக்கம் :- ஒரூஉ மோனை (1, 4) : ஓர் அடியுள் முதற்சீரிலும் நாலாம் சீரிலும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ஒரூஉ மோனை எனப்படும். நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்
Question 47
ஓர் அடியுள் முதல், இரண்டு, மூன்றாம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ------------- எனப்படும்.
A
இணை மோனை
B
பொழிப்பு மோனை
C
ஒரூஉ மோனை
D
கூழை மோனை
Question 47 Explanation: 
விளக்கம் :- கூழை மோனை (1, 2, 3) :- ஓர் அடியுள் முதல், இரண்டு, மூன்றாம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது கூழை மோனை எனப்படும். தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்
Question 48
ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ---------------- எனப்படும்.
A
மேற்கதுவாய் மோனை
B
கீழ்க்கதுவாய் மோனை
C
முற்று மோனை
D
ஒரூஉ மோனை
Question 48 Explanation: 
விளக்கம் :- மேற்கதுவாய் மோனை (1, 3, 4) :- ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மேற்கதுவாய் மோனை எனப்படும். விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துள்நின்று டற்றும் பசி.
Question 49
ஓர் அடியுள் முதல், இரண்டு, நாலாம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது --------------- எனப்படும்.
A
மேற்கதுவாய் மோனை
B
கீழ்க்கதுவாய் மோனை
C
முற்று மோனை
D
ஒரூஉ மோனை
Question 49 Explanation: 
விளக்கம் :- கீழ்க்கதுவாய் மோனை (1, 2, 4) :- ஓர் அடியுள் முதல், இரண்டு, நாலாம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது கீழ்க்கதுவாய் மோனை எனப்படும். இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
Question 50
ஓர் அடியின் நாலு சீர்களிலும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது --------------- எனப்படும்.
A
மேற்கதுவாய் மோனை
B
கீழ்க்கதுவாய் மோனை
C
முற்று மோனை
D
ஒரூஉ மோனை
Question 50 Explanation: 
விளக்கம் :- முற்று மோனை (1, 2, 3, 4) :- ஓர் அடியின் நாலு சீர்களிலும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது முற்று மோனை எனப்படும். கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக. குறிப்பு : நாலு சீர்களில் மோனைக்குரிய விகற்பகங்கள் இணை. பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என ஏழிற்கும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது போலவே எதுகையும் வரும்.
Question 51
முதலிரு சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க (ஓசையளவில்) இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ------------------ எனப்படும்.
A
இணை எதுகை
B
பொழிப்பு எதுகை
C
ஒரூஉ எதுகை
D
கூழை எதுகை
Question 51 Explanation: 
விளக்கம் :- முதலிரு சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க (ஓசையளவில்) இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது இணை எதுகை எனப்படும். ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்.
Question 52
ஓர் அடியுள் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது -------------------- எனப்படும்
A
இணை எதுகை
B
பொழிப்பு எதுகை
C
ஒரூஉ எதுகை
D
கூழை எதுகை
Question 52 Explanation: 
விளக்கம் :- பொழிப்பு எதுகை (1, 3) :ஓர் அடியுள் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது பொழிப்பு எதுகை எனப்படும். அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி
Question 53
ஓர் அடியுள் முதல் சீரிலும் நாலாம் சீரிலும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது தொடுப்பது ----------------------- எனப்படும்.
A
இணை எதுகை
B
பொழிப்பு எதுகை
C
ஒரூஉ எதுகை
D
கூழை எதுகை
Question 53 Explanation: 
விளக்கம் :- ஒரூஉ எதுகை (1, 4) :- ஓர் அடியுள் முதல் சீரிலும் நாலாம் சீரிலும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ஒரூஉ எதுகை எனப்படும். அருளிலார்க் கவ்வுலகம் இல்லை பொருளிலார்க் கிவ்வுலகம் இல்லாகி யாங்கு
Question 54
ஓர் அடியுள் முதல், இரண்டு, மூன்றாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது -------------- எனப்படும்.
A
இணை எதுகை
B
பொழிப்பு எதுகை
C
ஒரூஉ எதுகை
D
கூழை எதுகை
Question 54 Explanation: 
விளக்கம் :- கூழை எதுகை (1, 2, 3) :- ஓர் அடியுள் முதல், இரண்டு, மூன்றாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது கூழை எதுகை எனப்படும். பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு
Question 55
ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ------------------ எனப்படும்.
A
மேற்கதுவாய் எதுகை
B
கீழ்க்கதுவாய் எதுகை
C
முற்றெதுகை
D
கூழை எதுகை
Question 55 Explanation: 
விளக்கம் :- மேற்கதுவாய் எதுகை (1, 3, 4) :- ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மேற்கதுவாய் எதுகை எனப்படும். அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை
Question 56
ஓர் அடியுள் முதல், இரண்டு, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ---------------- எனப்படும்.
A
மேற்கதுவாய் எதுகை
B
கீழ்க்கதுவாய் எதுகை
C
முற்றெதுகை
D
கூழை எதுகை
Question 57
ஓர் அடியுள் உள்ள நாற்சீர்களிலும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது -------------- எனப்படும்.
A
மேற்கதுவாய் எதுகை
B
கீழ்க்கதுவாய் எதுகை
C
முற்றெதுகை
D
கூழை எதுகை
Question 57 Explanation: 
விளக்கம் :- ஓர் அடியுள் உள்ள நாற்சீர்களிலும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது முற்றெதுகை எனப்படும். துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை
Question 58
பொருந்தாதது எது?
A
இணை (சீர்கள்) – 1, 2
B
பொழிப்பு (சீர்கள்) – 1, 3
C
ஒரூஉ (சீர்கள்) – 1, 3,
D
கூழை (சீர்கள்) – 1, 2, 3
Question 58 Explanation: 
குறிப்பு :- ஒரூஉ (சீர்கள்) – 1, 4
Question 59
பொருந்தாதது எது?
A
கூழை (சீர்கள்) – 1, 2, 3
B
மேற்கதுவாய் (சீர்கள்) – 1, 3, 4
C
கீழ்க்கதுவாய் (சீர்கள்) – 1, 2, 4
D
முற்று (சீர்கள்) – 1, 2, 4
Question 59 Explanation: 
குறிப்பு :- முற்று (சீர்கள்) – 1, 2, 3, 4.
Question 60
கவிஞர், தாம் எடுத்துக்கொண்ட பல பொருள்களை உருவகப்படுத்திக் கூறும்போது, ஒன்றனை மட்டும் உருவகப்படுத்தி, அதனோடு தொடர்புடைய மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது, ------------------------ அணி எனப்படும்.
A
வேற்றுமையணி
B
நிரல்நிறை அணி
C
ஏகதேச உருவக அணி
D
வேற்றுப்பொருள் வைப்பணி
Question 60 Explanation: 
விளக்கம் :- ஏகதேச உருவக அணி :- கவிஞர், தாம் எடுத்துக்கொண்ட பல பொருள்களை உருவகப்படுத்திக் கூறும்போது, ஒன்றனை மட்டும் உருவகப்படுத்தி, அதனோடு தொடர்புடைய மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது, ஏகதேச உருவக அணி எனப்படும். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். - இக்குறட்பாவில் பிறவியைக் கடலாக உருவகப்படுத்திவிட்டு, அதனைக் கடக்க உதவும் இறைவனைடியைத் தெப்பமாக உருவகப்படுத்தாமையால், இஃது ஏகதேச உருவாக அணி ஆயிற்று
Question 61
சொல்லையும் பொருளையும் வரிசையாக(நிரலாக) நிறுத்தி, நேரே பொருள் கொள்வது -------------------- அணியாகும்.
A
வேற்றுமையணி
B
நிரல்நிறை அணி
C
ஏகதேச உருவக அணி
D
வேற்றுப்பொருள் வைப்பணி
Question 62
அறிவன், கணியன், நாழிகைக் கணக்கர் என அழைக்கப்படுபவர் யார்?
A
கணிதத்தை பற்றி கணித்துக் கூறுபவர்கள்
B
அறிவியலைப் பற்றி கணித்துக் கூறுபவர்கள்
C
கடலைப் பற்றி கணித்துக் கூறுபவர்கள்
D
வானியலைப் பற்றி கணித்துக் கூறுபவர்கள்
Question 63
பண்டைத் தமிழர் சூரியன் முதலான ஒன்பது கோள்களைக் --------------- எனவும், அசுவினி முதலான இருபத்தேழு விண்மீன்களை -------------எனவும் பகுத்துக் கூறினர்.
A
அண்டம், உலகம்
B
சக்கரம், சாஸ்திரம்
C
கோள்மீன், நாள்மீன்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 64
அறிவன் - என்று அழைக்கப்படும் கோள் எது?
A
வியாழன்
B
வெள்ளி
C
புதன்
D
செவ்வாய்
Question 65
வெளித்தோற்றம் கொண்டு ஒருவரை அளவிடுதல் தவறானது. அவரின் உள்ளப் பண்பைக் கொண்டே அளவிடுதல் நலம். பலாப்பழம் முள்ளு முள்ளாகத் தோற்றமளிக்கும். ஆனால், உள்ளுக்குள் சுவைமிகுந்த சுளைகள் காணப்படும். - என்று கூறியவர் யார்?
A
திரு.வி.க
B
அண்ணா
C
பெரியார்
D
கிருபானந்த வாரியார்
Question 66
வீணை கோணலாக இருப்பினும் இனிய இசை வெளிப்படும். எட்டிப்பழம் மேலே பளபளவென இருந்தாலும் தொட்டாலே கசக்கும். நாவற்பழம் கருமை. ஆனால் இனிக்கும். பாம்புக்குட்டி பளபளவென இருக்கும். ஆனால், கொடிய நஞ்சைக் கக்கும். ஆகவே, உருவு கண்டு எள்ளாமை வேண்டும். - என்று கூறியவர் யார்?
A
திரு.வி.க
B
அண்ணா
C
பெரியார்
D
கிருபானந்த வாரியார்
Question 67
------------ என்னும் இடைச்சொல் எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, எண், தெரிநிலை, ஆக்கம் ஆகிய பொருள்கள் குறித்து வரும்.
A
போல
B
ஒப்ப
C
உம்
D
Question 68
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை ; பண்பும் பயனும் அது - இந்த குறளில் பயின்று வந்துள்ள அணி?
A
வேற்றுமையணி
B
நிரல்நிறை அணி
C
ஏகதேச உருவக அணி
D
வேற்றுப்பொருள் வைப்பணி
Question 69
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் ; இறைவன் அடிசேரா தார் - இந்த குறளில் பயின்று வந்துள்ள அணி?
A
வேற்றுமையணி
B
நிரல்நிறை அணி
C
ஏகதேச உருவக அணி
D
வேற்றுப்பொருள் வைப்பணி
Question 70
வியா என்றால் ------------ எனப் பொருள்படும். எனவே, வானில் ------------ கோளாக வலம் வருவதனை வியாழன் என அழைத்தனர்.
A
சிறிய
B
பெரிய
C
அகலமான
D
நீளமான
Question 71
வெண்மை நிறமுடைய கோள் ------------.
A
செவ்வாய்
B
புதன்
C
வியாழன்
D
வெள்ளி
Question 72
கெடுப் பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்ப தூஉம் எல்லாம் மழை - இதில் ------------------ அளபெடுத்து வந்துள்ளது
A
அடிமுரண்தொடை
B
அடிஇயைபுத்தொடை
C
அடிஎதுகைத்தொடை
D
அடியளபெடைத் தொடை
Question 73
கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும் கண்ட பேரண்டத் தண்டலை நாடும் கனக முன்றில் அனம்விளை யாடும் - இதில் ------------------ அளபெடுத்து வந்துள்ளது.
A
அடிமுரண்தொடை
B
அடிஇயைபுத்தொடை
C
அடிஎதுகைத்தொடை
D
அடிமோனைத் தொடை
Question 74
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன் - இதில் ------------------ அளபெடுத்து வந்துள்ளது.
A
அடிமுரண்தொடை
B
அடிஇயைபுத்தொடை
C
அடிஎதுகைத்தொடை
D
அடிமோனைத் தொடை
Question 75
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது - இந்த குறளில் வருவது?
A
இணை மோனை
B
பொழிப்பு மோனை
C
ஒரூஉ மோனை
D
கூழை மோனை
Question 76
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை எண்ணிக்கொண் டற்று. - இந்த குறளில் வருவது?
A
இணை மோனை
B
பொழிப்பு மோனை
C
ஒரூஉ மோனை
D
கூழை மோனை
Question 77
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்  - இந்த குறளில் வருவது?
A
இணை மோனை
B
பொழிப்பு மோனை
C
ஒரூஉ மோனை
D
கூழை மோனை
Question 78
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின் - இந்த குறளில் வருவது?
A
இணை மோனை
B
பொழிப்பு மோனை
C
ஒரூஉ மோனை
D
கூழை மோனை
Question 79
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துள்நின்று டற்றும் பசி. - இந்த குறளில் வருவது?
A
மேற்கதுவாய் மோனை
B
கீழ்க்கதுவாய் மோனை
C
முற்று மோனை
D
ஒரூஉ மோனை
Question 80
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. - இந்த குறளில் வருவது?
A
மேற்கதுவாய் மோனை
B
கீழ்க்கதுவாய் மோனை
C
முற்று மோனை
D
ஒரூஉ மோனை
Question 81
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக - இந்த குறளில் வருவது?
A
மேற்கதுவாய் மோனை
B
கீழ்க்கதுவாய் மோனை
C
முற்று மோனை
D
ஒரூஉ மோனை
Question 82
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - இந்த குறளில் வருவது?
A
இணை எதுகை
B
பொழிப்பு எதுகை
C
ஒரூஉ எதுகை
D
கூழை எதுகை
Question 83
அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி - இந்த குறளில் வருவது?
A
இணை எதுகை
B
பொழிப்பு எதுகை
C
ஒரூஉ எதுகை
D
கூழை எதுகை
Question 84
அருளிலார்க் கவ்வுலகம் இல்லை பொருளிலார்க் கிவ்வுலகம் இல்லாகி யாங்கு - இந்த குறளில் வருவது?
A
இணை எதுகை
B
பொழிப்பு எதுகை
C
ஒரூஉ எதுகை
D
கூழை எதுகை
Question 85
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு - இந்த குறளில் வருவது?
A
இணை எதுகை
B
பொழிப்பு எதுகை
C
ஒரூஉ எதுகை
D
கூழை எதுகை
Question 86
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை - இந்த குறளில் வருவது?
A
மேற்கதுவாய் எதுகை
B
கீழ்க்கதுவாய் எதுகை
C
முற்றெதுகை
D
கூழை எதுகை
Question 87
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். - இந்த குறளில் வருவது?
A
மேற்கதுவாய் எதுகை
B
கீழ்க்கதுவாய் எதுகை
C
முற்றெதுகை
D
கூழை எதுகை
Question 88
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை - இந்த குறளில் வருவது?
A
மேற்கதுவாய் எதுகை
B
கீழ்க்கதுவாய் எதுகை
C
முற்றெதுகை
D
கூழை எதுகை
Question 89
a wolf in sheep's clothing - என்பதற்கு இணையான தமிழ்ப்பழமொழி எது?
A
பசுத்தோல் போர்த்திய புலி
B
ஒற்றுமையே வலிமை
C
நெருப்பில்லாமல் புகையாது
D
வல்லான் வகுத்ததே வாய்க்கால்
Question 90
union is strength - என்பதற்கு இணையான தமிழ்ப்பழமொழி எது?
A
பசுத்தோல் போர்த்திய புலி
B
ஒற்றுமையே வலிமை
C
நெருப்பில்லாமல் புகையாது
D
வல்லான் வகுத்ததே வாய்க்கால்
Question 91
no smoke without fire. - என்பதற்கு இணையான தமிழ்ப்பழமொழி எது?
A
பசுத்தோல் போர்த்திய புலி
B
ஒற்றுமையே வலிமை
C
நெருப்பில்லாமல் புகையாது
D
வல்லான் வகுத்ததே வாய்க்கால்
Question 92
might is right - என்பதற்கு இணையான தமிழ்ப்பழமொழி எது?
A
பசுத்தோல் போர்த்திய புலி
B
ஒற்றுமையே வலிமை
C
நெருப்பில்லாமல் புகையாது
D
வல்லான் வகுத்ததே வாய்க்கால்
Question 93
many things fall between the cup and the lip - என்பதற்கு இணையான தமிழ்ப்பழமொழி எது?
A
பசுத்தோல் போர்த்திய புலி.
B
ஒற்றுமையே வலிமை
C
நெருப்பில்லாமல் புகையாது
D
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
Question 94
கீழ்க்காணும் தொடரில் சரியான விடையை தேர்வு செய்க.
A
யானையின் கண் சிறியது
B
யானையின் கண்கள் சிறியது
C
யானையின் கண்கள் சிறியன
D
யானையின் கண் சிறியன
Question 95
Refrigerator - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க
A
குளிர் பதனப் பெட்டி
B
குளிரூட்டும் பெட்டி
C
குளிர்சாதனப் பெட்டி
D
குளிர் காக்கும் பெட்டி
Question 96
பகுபதத்தில் குறைந்தளவு இருக்க வேண்டிய உறுப்புகள்?
A
பகுதி, சந்தி
B
இடைநிலை, சாரியை
C
பகுதி, விகுதி
D
விகுதி, சாரியை
Question 97
மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
A
குணநலம் நலனே சான்றோர் பிறநலம்
B
சான்றோர் நலனே குணநலம் பிறநலம்
C
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
D
சான்றோர் குணநலம் நலனே பிறநலம்
Question 98
மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க
A
கலம், தோணி, புணரி, மிதவை
B
கலம், பரிசில், ஓடம், பரவை
C
கலம், வங்கம், புணை, அம்பி
D
கலம், பரிசில், ஆழி, பஃறி
Question 99
மதுரையில் உலகத்தமிழ் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
A
1981
B
1982
C
1983
D
1984
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 99 questions to complete.

One Comment

Leave a Reply to Saravana Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!