Online TestTamil
8th Std Tamil Notes – Part 7
எட்டாம் வகுப்பு தமிழ் - ஏழாம் பாடம்
Congratulations - you have completed எட்டாம் வகுப்பு தமிழ் - ஏழாம் பாடம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
விடுபட்டதை தேர்வு செய்க.
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
--------------- ------------------- ----------------- ?
பண்புடைமை என்னும் வழக்கு | |
பண்புபா ராட்டும் உலகு | |
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு | |
பண்புள பாடறிவார் மாட்டு |
Question 2 |
விடுபட்டதை தேர்வு செய்க.
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
--------------- ------------------- ----------------- ?
பண்புடைமை என்னும் வழக்கு | |
பண்புபா ராட்டும் உலகு | |
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு | |
பண்புள பாடறிவார் மாட்டு |
Question 3 |
விடுபட்டதை தேர்வு செய்க.
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
--------------- ------------------- ----------------- ?
பண்புடைமை என்னும் வழக்கு | |
பண்புபா ராட்டும் உலகு | |
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு | |
பண்புள பாடறிவார் மாட்டு |
Question 4 |
விடுபட்டதை தேர்வு செய்க.
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
--------------- ------------------- ----------------- ?
பண்புடைமை என்னும் வழக்கு | |
பண்புபா ராட்டும் உலகு | |
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு | |
பண்புள பாடறிவார் மாட்டு |
Question 5 |
விடுபட்டதை தேர்வு செய்க.
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
--------------- ------------------- ----------------- ?
பண்புடைமை என்னும் வழக்கு | |
பண்புபா ராட்டும் உலகு | |
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு | |
பண்புள பாடறிவார் மாட்டு |
Question 6 |
விடுபட்டதை தேர்வு செய்க.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
--------------- ------------------- ----------------- ?
மண்புக்கு மாய்வது மன் | |
மக்கட்பண்(பு) இல்லா தவர் | |
பண்பாற்றா ராதல் கடை | |
பகலும்பாற் பட்டன் றிருள் |
Question 7 |
விடுபட்டதை தேர்வு செய்க.
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்
--------------- ------------------- ----------------- ?
மண்புக்கு மாய்வது மன் | |
மக்கட்பண்(பு) இல்லா தவர் | |
பண்பாற்றா ராதல் கடை | |
பகலும்பாற் பட்டன் றிருள் |
Question 8 |
விடுபட்டதை தேர்வு செய்க.
நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
--------------- ------------------- ----------------- ?
மண்புக்கு மாய்வது மன். | |
மக்கட்பண்(பு) இல்லா தவர் | |
பண்பாற்றா ராதல் கடை | |
பகலும்பாற் பட்டன் றிருள் |
Question 9 |
விடுபட்டதை தேர்வு செய்க.
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
--------------- ------------------- ----------------- ?
மண்புக்கு மாய்வது மன். | |
மக்கட்பண்(பு) இல்லா தவர் | |
பண்பாற்றா ராதல் கடை | |
பகலும்பாற் பட்டன் றிருள் |
Question 10 |
விடுபட்டதை தேர்வு செய்க.
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
--------------- ------------------- ----------------- ?
மண்புக்கு மாய்வது மன் | |
மக்கட்பண்(பு) இல்லா தவர் | |
கலந்தீமை யால்திரிந் தற்று | |
பகலும்பாற் பட்டன் றிருள் |
Question 11 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
வழக்கு – நன்னெறி | |
ஆன்ற – தாழ்ந்த | |
நீடிய – தீராத | |
நன்றி – உதவி |
Question 11 Explanation:
குறிப்பு :- ஆன்ற – உயர்ந்த
Question 12 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
நகையுள்ளும் – விளையாட்டாகவும் | |
பாடறிவார் – நெறியுடையார் | |
மாய்வது – அழிவது | |
அரம் – நன்மை |
Question 12 Explanation:
குறிப்பு :- அரம் – வாளைக் கூர்மையாக்கும் கருவி.
Question 13 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
நண்பு – நட்பு | |
நயம்இல – தீங்கு, இனிமையற்ற | |
கடை – நட்பு | |
நயன் – நேர்மை |
Question 13 Explanation:
குறிப்பு :- கடை – இழிவு
Question 14 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
நகல்வல்லர் – சிரித்து மகிழ்பவர் | |
மாயிரு ஞாலம் – மிகப்பெரிய உலகம் | |
திரிந்தற்று – திரிந்ததுபோன்றது | |
நவ்வி - புலி |
Question 14 Explanation:
குறிப்பு :- நவ்வி – மான்
Question 15 |
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்; வாடினேன் பசியினால் இளைத்தே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் | |
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார் | |
திருவருட்பா, இராமலிங்க அடிகளார் |
Question 16 |
வீடுதோ றிரந்தும் பசியாற தயர்ந்த; வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் | |
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார் | |
திருவருட்பா, இராமலிங்க அடிகளார் |
Question 17 |
நீடிய பிணியால் வருந்திகின் றோர்என்; நேர்உறக் கண்டுளந் துடித்தேன் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் | |
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார் | |
திருவருட்பா, இராமலிங்க அடிகளார் |
Question 18 |
ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்; சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் | |
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார் | |
திருவருட்பா, இராமலிங்க அடிகளார் |
Question 19 |
இராமலிங்க அடிகளார் அவர்களின் பெற்றோர் பெயர் என்ன?
சாத்தப்பன் - விசாலாட்சி | |
இராமையா - சின்னம்மை | |
ராகவேந்திரர் - கல்பனா அம்மையார் | |
வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள் |
Question 20 |
இராமலிங்க அடிகளார் அவர்களின் ஊர்?
சிதம்பரத்துக்கு அருகிலுள்ள மருதூர் | |
தூத்துக்குடிக்கு அருகிலுள்ள கோவில்பட்டி | |
காஞ்சிபுரம் அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூர் | |
திருவாரூர் அருகிலுள்ள மன்னார்குடி |
Question 21 |
இராமலிங்க அடிகளார் அவர்களின் சிறப்புப் பெயர்?
மனிதருள் மாணிக்கம் | |
தெய்வப் புலவர் | |
திருவருட்பிரகாச வள்ளலார் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 22 |
இராமலிங்க அடிகளார் அவர்களின் காலம்?
05.10.1803 முதல் 30.01.1854 வரை | |
05.10.1813 முதல் 30.01.1864 வரை | |
05.10.1823 முதல் 30.01.1874 வரை | |
05.10.1833 முதல் 30.01.1884 வரை |
Question 23 |
கீழ்க்கண்ட கூற்று எந்தநூலைப் பற்றி கூறுகிறது?
இறைவன் திருவருளைப் பெறுவதற்காகப் பாடிய பாடல் என்றும், இறைவனின் திருவருளால் பாடிய பாடல் என்றும் இருவகையாகப் பொருள் கூறலாம். இஃது ஐயாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப் பாடல்களைக் கொண்டது. நம் பாடப்பகுதி பிள்ளைப் பெருவிண்ணப்பம் என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.
திருவருட்பா | |
மணிமேகலை | |
நற்றிணை | |
கலித்தொகை |
Question 24 |
வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய ஞானசபை, சத்திய தருமச்சாலை ஆகியவற்றை நிறுவியவர் யார்?
சீத்தலைச்சாத்தனார் | |
இளங்கோவடிகள் | |
விளம்பி நாகனார் | |
இராமலிங்க அடிகளார் |
Question 25 |
திருவருட்பா, சீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?
சீத்தலைச்சாத்தனார் | |
இளங்கோவடிகள் | |
விளம்பி நாகனார் | |
இராமலிங்க அடிகளார் |
Question 26 |
உலகில் தோன்றிய பல்வேறு அறிவியல் கல்விகளில் மிகத் தொன்மையானது, பழமையானது ----------- கல்வி.
ஜோதிடம் | |
மருத்துவம் | |
வானியல் | |
இவற்றில் ஏதுமில்லை
|
Question 27 |
உலகம், ஐம்பூதங்களாகிய நிலம், நீர், வெப்பம், காற்று, வானம் ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது எனத் ----------------- குறிப்பிடுகிறது.
மணிமேகலை | |
தொல்காப்பியம் | |
அகத்தியம் | |
அகநானூறு |
Question 27 Explanation:
குறிப்பு :- தொல்காப்பியப் பாடல் :- நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்; கலந்த மயக்கம் ஆதலின்;
Question 28 |
மண்திணிந்த நிலனும்; நிலன் ஏந்திய விசும்பும் ; விசும்பு தைவரு வளியும் ; வளித்தலை இய தீயும்; தீ முரணிய நீரும் என்றாங்கு; ஐம்பெரும்பூதத்து இயற்கை போல்… இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
மணிமேகலை | |
தொல்காப்பியம் | |
அகத்தியம் | |
புறநானூறு |
Question 28 Explanation:
குறிப்பு :- தொல்காப்பியப் பாடல் :- நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்; கலந்த மயக்கம் ஆதலின்;
Question 29 |
பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முன்புவரை, உலகம் தட்டையானது என்றே நம்பி வந்தனர். பதினைந்தாம் நூற்றாண்டில்தான் போலந்து நாட்டைச் சார்ந்த ------------------------ என்பவர் உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என முறையாகக் கணித்து கூறினார்.
காரல் மார்க்ஸ் | |
நிக்கோலஸ்கிராப்ஸ் | |
கலிலியோ | |
ஐசக் நியூட்டன் |
Question 30 |
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ------------------- என்பவர், உலகம் உருண்டையானது என்பதனைத் தம் தொலைநோக்கியால் கண்டுபிடித்துச் சொன்ன பிறகுதான் மக்கள் ஏற்றுக்கொண்டனர்
காரல் மார்க்ஸ் | |
நிக்கோலஸ்கிராப்ஸ் | |
கலிலியோ | |
ஐசக் நியூட்டன் |
Question 31 |
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை - என்னும் பாடலில் உலகம் சுழல்கிறது எனக் கூறியவர்?
இராமலிங்க அடிகளார் | |
நல்லாதனார் | |
திருவள்ளுவர் | |
விளம்பி நாகனார் |
Question 32 |
வானவெளியில் மிகப்பெரிய விண்மீன் ------------------?
சனி | |
ஞாயிறு | |
செவ்வாய் | |
புதன் |
Question 33 |
--------------------- நூலில் -------------------- என்பவர் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என ஞாயிற்றைப் போற்றியுள்ளமையைக் காணலாம்.
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் | |
திருவருட்பா, இராமலிங்க அடிகள் | |
புறநானூறு, கண்ணகனார்
|
Question 34 |
ஞாயிற்றைச் சுற்றியுள்ள பாதையை ஞாயிற்று வட்டம் என்றனர் பழந்தமிழர், என ------------------ குறிப்பிடுகிறது.
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
திருவருட்பா | |
புறநானூறு |
Question 34 Explanation:
குறிப்பு :- செஞ்ஞாயிற்றுச் செலவும், அந்ஞாயிற்றுப், பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் - இப்பாடலின் வழியாக ஞாயிற்று வட்டம், அதன் இயக்கம், அந்தரமாய் நிற்கும் வான்வெளி மண்டலம் என்பன பற்றிய வானியல் அறிவை அறிய முடிகிறது.
Question 35 |
தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை நாள்மீன் எனவும், ஞாயிற்றிடமிருந்து ஒளிபெற்று ஒளிவிடக்கூடியவற்றைக் கோள்மீன் எனவும் பண்டைத்தமிழர் குறிப்பிட்டுள்ளனர். -------------- தானாக ஒளிவீசுவதில்லை.
திங்கள் | |
செவ்வாய் | |
புதன் | |
வியாழன் |
Question 35 Explanation:
குறிப்பு :- மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி - இந்த வானியல் உண்மையைத் திருக்குறள் வெளிப்படுத்துகிறது.
Question 36 |
திங்களைப் பாம்பு கொண்டற்று - என்று கூறும் நூல் எது?
திருக்குறள் | |
புறநானூறு | |
கலித்தொகை | |
நற்றிணை |
Question 36 Explanation:
குறிப்பு :- திங்களைப் பாம்பு கொண்டற்று (குறள் 1146) என்னும் குறள் தொடர், திங்கள் மறைப்புப் (சந்திரகிரகணம்) பற்றியதாகும் . திங்களின் நிலையைக் கருதித் தேய்பிறை, வளர்பிறை எனவும் குறித்துள்ளனர்.
Question 37 |
புதிதாகக் கண்டறிந்த கோளைப் ------------ என அழைத்தனர். புதிதாக அறிந்ததனால் அதற்கு ‘அறிவன்’ எனவும் பெயருண்டு.
செவ்வாய் | |
புளுட்டோ | |
புதன் | |
வெள்ளி |
Question 38 |
வியா என்றால் --------------, ------------ எனப் பொருள்படும். வானில் பெரிய கோளாக வலம் வருவதனையே வியாழன் என்றனர்.
பெரிய, நிறைய | |
சிறிய, குறைய | |
சிறந்த, பரந்த | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 39 |
----------------- கோளை காரிக்கோள் என அழைத்தனர். இக்கோளில் கந்தகம் இருப்பதாக இன்றைய அறிவியல் ஆய்வு கூறுகிறது
செவ்வாய் | |
வெள்ளி | |
புதன் | |
சனி |
Question 40 |
'வலவன் ஏவா வானூர்தி' - என்னும் ----------------- பாடல் வரி சங்க காலத்திலேயே ஓட்டுநர் இல்லா வானூர்தி இருந்தது என்னும் செய்தியைக் கூறுகிறது.
புறநானூறு | |
கலித்தொகை | |
நற்றிணை | |
மணிமேகலை |
Question 40 Explanation:
குறிப்பு :- வானூர்தி ஓட்டுகிறவனைத் தமிழில் வலவன் என அழைக்கிறோம்.
Question 41 |
--------------, -------------- நூல்களில் வான்வழிப் பயணங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
சிலப்பதிகாரம், மணிமேகலை | |
திருக்குறள், கலித்தொகை | |
நற்றிணை , குறுந்தொகை | |
ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து |
Question 42 |
------------------------ என்னும் நூல் மயிற்பொறி விமானத்தின் செயல்திறனைப் பற்றி கூறுகிறது.
சீவகசிந்தாமணி | |
கலித்தொகை | |
நற்றிணை | |
மணிமேகலை |
Question 43 |
---------------- நூலில், இராவணன் செலுத்திய புட்பக விமானத்தைப் பற்றிய செய்தி உள்ளது.
சீவகசிந்தாமணி | |
கலித்தொகை | |
கம்பராமாயணம் | |
மணிமேகலை |
Question 44 |
----------------- நூலில், வானூர்தி வடிவமும், அதனை இயக்கும் முறைமையும் பற்றிய வான் பயணச் செய்திகள் காணப்படுகின்றன.
பெருங்கதை | |
கலித்தொகை | |
கம்பராமாயணம் | |
மணிமேகலை |
Question 45 |
கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது?
இத்தாலி நாட்டின் பைசா நகரத்தின் ஒரு மாலைப்பொழுதில் தலைமைக் கிறித்தவக் கோவிலில் வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அனைவரின் பார்வையும் ஆண்டவனை நோக்கி இருந்தது. ஆனால், ஒரு சிறுவனின் பார்வை மட்டும் அங்கு ஊசலாடிக் கொண்டிருந்த தொடர்விளக்கின் மீது இருந்தது. அச்சிறுவனின் வயது 17 மட்டும் தான். அச்சிறுவனின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பே மருத்துவத்துறையில் நாடித்துடிப்பைக் கணக்கிடும் கருவியைக் கண்டுபிடிக்கத் தூண்டுகோலாய் அமைந்தது. கடிகாரத்தின் பெண்டுலத்தை - ஊசலை - அமைத்து நேரத்தைக் கணக்கிடவும் உதவியது
ஐசக் நியூட்டன் | |
தாமசு ஆல்வா எடிசன் | |
கலீலியோ கலிலி | |
இவர்களில் யாருமில்லை |
Question 46 |
இவர், ஊசல் விதியை கண்டுபிடித்தார் மற்றும் வானியல் ஆய்வுக்கு முன்னோடியாகவும் விளங்கினார். அவர் யார்?
ஐசக் நியூட்டன் | |
தாமசு ஆல்வா எடிசன் | |
கலீலியோ கலிலி | |
இவர்களில் யாருமில்லை |
Question 47 |
கலீலியோ கலிலி பிறந்த நாடு?
எகிப்து | |
பிரான்சு | |
இத்தாலி | |
பிரேசில் |
Question 48 |
கலீலியோ கலிலி இத்தாலி நாட்டிலுள்ள பைசா நகரத்தில் ----------------- ஆம் ஆண்டு பிறந்தார்?
1562 | |
1563 | |
1564 | |
1565 |
Question 49 |
கலீலியோ கலிலி பிறந்த வருடம்?
15.03.1564 | |
15.04.1564 | |
15.01.1564 | |
15.02.1564 |
Question 50 |
கலீலியோ கலிலி அவர்களின் தந்தை பெயர்?
வின்சென்சோ கலீவீ | |
தாமசு ஆல்பிரட் | |
ஜான்சன் கலீலி | |
இவர்களில் யாருமில்லை |
Question 51 |
கலீலியோ கலிலி, தம் இளமைக்காலத்திலிருந்தே இயற்கை மீதும், அறிவியல் மீதும் மிகுந்த ஆர்வம் உடையவராய் விளங்கினார். ----------------- படிப்பதில் தமக்கிருக்கும் விருப்பத்தைத் தந்தையாரிடம் வெளிப்படுத்தினார்.
வணிகம் | |
மருத்துவம் | |
வானியல் | |
கணிதம் |
Question 52 |
கலீலியோ, பைசா நகரப் பல்கலைக்கழகத்தில் ------------------- துறையில் மாணவராய்ச் சேர்ந்த குறுகிய காலத்திற்குள் அறிவியலில் அவர்தம் முதல் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. அதுதான் ஊசல்விதி.
வணிகம் | |
மருத்துவம் | |
வானியல் | |
கணிதம் |
Question 53 |
இந்த கூற்று யாருடன் தொடர்புடையது?
பல்கலைக்கழகத்தில் கலீலியோ பயிலும் துறையில் கணக்குப் பாடமாக அமையவில்லை. ஒருமுறை கணக்கு வல்லுநர் ஒருவர் சுவையாகக் கணக்கு நடத்திக் கொண்டிருந்ததனைத் தற்செயலாக அவர் கேட்டார். பல நாள், அவர் கணக்கியல் விரிவுரையாளரின் அறையில் மறைந்திருந்து கணக்குப் பாடங்களைப் கேட்டார். ஆகவே, கணக்கில் மிகவும் நாட்டம் கொண்டு, சிறந்த பல ஆய்வுகளை வெளியிட்டார். அதனால், தம்முடைய ------------------ ஆம் அகவையிலேயே பைசாநகரப் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் பேராசிரியராகப் பணியமர்த்தப்படார்.
23 | |
24 | |
25 | |
26 |
Question 54 |
ஒரே நேரத்தில் உயரத்திலிருந்து எறியப்படும் பொருள்களுள் எடை மிகுந்த பொருள் விரைவாகவும், எடை குறைந்த பொருள் மெதுவாகவும் நிலத்தை வந்தடையும் - இது யாருடைய கண்டுபிடிப்பு?
கலீலியோ | |
ஐசக் நியூட்டன் | |
அரிஸ்டாட்டில் | |
இவர்களில் யாருமில்லை |
Question 55 |
அரிஸ்டாட்டிலின் கருத்துப்படி, ஒரே நேரத்தில் உயரத்திலிருந்து எறியப்படும் பொருள்களுள் எடை மிகுந்த பொருள் விரைவாகவும், எடை குறைந்த பொருள் மெதுவாகவும் நிலத்தை வந்தடையும் என்றிருந்தது. பல ஆண்டாக அரிஸ்டாட்டில் கூறிய இக்கருத்துச் சரியானதுதான் என்று பொதுமக்களும் நம்பி வந்தனர். ஆனால், ---------------------- என்பவர், இக்கருத்தை ஒப்புக் கொள்ளவில்லை. எனவே, தம்முடைய கருத்தை ஆய்வின்மூலம் மெய்பித்துக் காட்ட விரும்பினார். பொதுமக்கள் முன்னிலையில் பைசா கோபுரத்தில் தாமே ஏறி நூறு பவுண்டு (கிலோ) எடையும். ஒரு பவுண்டு (கிலோ) எடையும் கொண்ட இரு இரும்புக்குண்டுகளை ஒரே நேரத்தில் மேலிருந்து கீழே விழச்செய்தார். அவை இரண்டும் ஒரே நேரத்தில் தரையைத் தொட்டன.
கலீலியோ | |
ஐசக் நியூட்டன் | |
அரிஸ்டாட்டில் | |
இவர்களில் யாருமில்லை |
Question 56 |
கலீலியோ, --------------- ஆம் ஆண்டில் பதுவா பல்கலைக்கழகத்தில் கணக்கியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
1580 | |
1582 | |
1590 | |
1592 |
Question 57 |
கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது?
இவர், கணக்கும் வானியலும் பற்றி விரிவுரை ஆற்றினாலும், நிலை இயக்கவியலிலும் பொறியியலிலும் ஆய்வு நிகழ்த்திக் கொண்டிருந்தார். இவர், காற்று மற்றும் வெப்ப அளவியை முதன்முதலாக உருவாக்கினார். இராணுவப் பொறியாளர்களும் துப்பாக்கி வீரர்களும் எளிதாகக் கணக்கிடுவதற்குக் கணக்குக் கருவியை வடிவமைத்தார்.
கலீலியோ | |
ஐசக் நியூட்டன் | |
தாமசு ஆல்வா எடிசன் | |
இவர்களில் யாருமில்லை |
Question 58 |
சூரியனைச் சுற்றியே புவி நகர்கிறது என்பது வானியல் அறிஞர் ---------------- என்பவரின் வானியல் கொள்கையாகும்.
கலீலியோ | |
ஐசக் நியூட்டன் | |
தாமசு ஆல்வா எடிசன் | |
கோபர் நிகசு |
Question 59 |
கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது?
வானியல் ஆய்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது இவரின் தொலைநோக்கி.தொலைவில் உள்ள பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிரைக் கோள ஆடியின் மூலம் ஒருங்குதிரட்டிக் கருவிழிக்குக் கொடுத்தால், அதன் திறன் மிகும் என்பதனை உணர்ந்தார்.இதனடிப்படையில் 1610 ஆம் ஆண்டில் தொலைநோக்கியை அமைத்து விண்வெளியை ஆய்வு செய்தார். பால்வீதி என்பது பலகோடி விண்மீன்களின் தொகுதி என மெய்ப்பித்தார். 'நிலவின் மேற்பரப்புக் கரடுமுரடானது என்றும், மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்தது' என்றும் தொலைநோக்கி மூலம் கண்டறிந்து கூறினார்.
கலீலியோ | |
ஐசக் நியூட்டன் | |
தாமசு ஆல்வா எடிசன் | |
கோபர் நிகசு |
Question 60 |
கலீலியோ கலிலி அவர்கள் , வீட்டில் சிறை வைக்கப்பட்ட ஆண்டு?
1601 | |
1610 | |
1616 | |
1661 |
Question 61 |
பல்வேறு துன்பங்களுக்கு இடையில் ------------- ஆம் ஆண்டில் உலகத்தின் முதன்மையான இரு முறைமைகளைப் பற்றிய உரையாடல் என்னும் தலைப்பிலும், அவரது கண்பார்வை பெரிதும் மங்கிய நிலையில், ----------------- ஆம் ஆண்டில் புதிய அறிவியலைச் சார்ந்த இரு உரையாடல் என்னும் தலைப்பிலும் மிகச்சிறந்த நூல்களை எழுதி வெளியிட்டார். அந்நூல்களை அடிப்படையாகக்கொண்டே அறிவியல் அறிஞர் ஐசக் நியூட்டன் தம்முடைய கொள்கைகளை உருவாக்கினர்.
1632, 1638 | |
1633, 1637 | |
1631, 1636 | |
1630, 1635 |
Question 62 |
கலீலியோ கலிலி அவர்கள், -------------- ஆம் ஆண்டு சனவரித் திங்களன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.
1630 | |
1632 | |
1640 | |
1642 |
Question 63 |
நிலைமொழியும் வருமொழியும் சேரும்போது மாற்றங்கள் ஏற்படுமானால் அதனை விகாரப்புணர்ச்சி என்பர். விகாரப்புணர்ச்சி -------------- வகைப்படும்.
1 | |
2 | |
3 | |
4 |
Question 63 Explanation:
குறிப்பு :- விகாரப்புணர்ச்சி :- நிலைமொழியும் வருமொழியும் சேரும்போது மாற்றங்கள் ஏற்படுமானால் அதனை விகாரப்புணர்ச்சி என்பர்.
(எ.கா.):- பலா + சுளை = பலாச்சுளை – மெய் தோன்றியது.
படம் + கட்சி = படக்காட்சி – நிலைமொழி ஈறுகெட்டு மெய் தோன்றியது. ( ம் மறைந்து க் தோன்றியது)
பொன் + சிலை = பொற்சிலை – நிலைமொழி ஈறு திரிந்தது (ன் -ற்) ஆனது.
இவ்வாறு விகாரப்புணர்ச்சி தோன்றல், கெடுதல், திரிதல் என மூவகைப்படும்.
(எ.கா.) -
தோன்றல் : திரு + குறள் = திருக்குறள் (க்)
கெடுதல் : மரம் + வேர் = மரவேர் (ம்)
திரிதல் : பல் + பொடி = பற்பொடி (ற்)
விகாரப்புணர்சிக்கு மேலும் சில எடுத்துக்காட்டுகள் கூறுங்கள்.
மா + பழம் = மாம்பழம்.
வடக்கு + திசை = வடதிசை.
மணம் + கோலம் = மணக்கோலம்.
அல் + திணை = அஃறிணை
Question 64 |
பொருந்தாதது எது?
இயல்பு புணர்ச்சி - தமிழ் + மண் = தமிழ்மண் | |
தோன்றல் - வாழை + குலை = வாழைக்குலை | |
திரிதல் - பொன் + குடம் = பொன்குடம் | |
கெடுதல் - பாடம் + வேளை = பாடவேளை |
Question 64 Explanation:
குறிப்பு :- திரிதல் - பொன் + குடம் = பொற்குடம்
Question 65 |
நிலைமொழி ஈற்றெழுத்தும் வருமொழி முதலெழுத்தும் சேர்வதற்கு ----------------- என்று பெயர்.
வழு | |
பொருள்கோள் | |
புணர்ச்சி | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 66 |
வாழை + தோட்டம் என்பது ----------------- புணர்ச்சி.
இயல்பு | |
விகாரப் | |
திசைப்பெயர் | |
பண்புப்பெயர் |
Question 67 |
நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இல்லாமல் புணர்வது ----------------?
இயல்பு புணர்ச்சி | |
விகார புணர்ச்சி | |
பண்புப்பெயர் புணர்ச்சி | |
திசைபெயர் புணர்ச்சி |
Question 68 |
விகாரப் புணர்ச்சி -------------- வகைப்படும்.
ஐந்து | |
ஆறு | |
மூன்று | |
நான்கு |
Question 69 |
பொருந்தாதது எது? வல்லினம் மிகும்.
அ, இ, எ என்னும் சுட்டெழுத்துக்களின் பின் வல்லொற்று மிகும் | |
அந்த, இந்த, அப்படி, எப்படி, அவ்வகை, இவ்வகை என்னும் சொற்களின் பின் வல்லொற்று மிகும் | |
இனி, தனி, மற்று, மற்ற, மற்றை என்னும் சொற்களின் பின் வல்லொற்று மிகும் | |
இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரியின் பின் வல்லொற்று மிகாது |
Question 70 |
பொருந்தாதது எது? வல்லினம் மிகும்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையின் பின் வல்லொற்று மிகும் | |
நான்காம் வேற்றுமையில் அஃறிணைப் பெயர்களின் பின் வல்லொற்று மிகாது | |
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையின் பின் வல்லொற்று மிகும் | |
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையின் பின் மற்றும் ஏழாம் வேற்றுமைத்தொகையின் பின் வல்லொற்று மிகும் |
Question 70 Explanation:
குறிப்பு :- நான்காம் வேற்றுமையில் அஃறிணைப் பெயர்களின் பின் வல்லொற்று மிகும்
Question 71 |
பொய் சொல்லா மாணிக்கம்" - என்று பெருமையோடு அழைக்கப்பட்டவர்?
வயிரவன் கோவில் சுப்பிரமணியார் மகனார் மாணிக்கம் (வ.சுப.மா) | |
ராஜம் கிருஷ்ணன் | |
சுஜாதா | |
வேங்கட மகாலிங்கம் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 71 questions to complete.