Online TestTamil

8th Std Tamil Notes – Part 5

எட்டாம் வகுப்பு தமிழ் - ஐந்தாம் பாடம்

Congratulations - you have completed எட்டாம் வகுப்பு தமிழ் - ஐந்தாம் பாடம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் ?
A
புறநானூறு, கண்ணகனார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
D
திருமந்திரம், திருமூலர்
Question 2
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் ?
A
புறநானூறு, கண்ணகனார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
D
திருமந்திரம், திருமூலர்
Question 3
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
திடம் – உறுதி
B
மெய்ஞ்ஞானம் – மெய்யறிவு
C
உபாயம் – வழிவகை
D
நவ்வி - கரடி
Question 3 Explanation: 
குறிப்பு :- நவ்வி - மான்
Question 4
மூலன் என்னும் பெயர், திரு என்னும் பெயரடை பெற்று, அதனுடன் அர் என்னும், மரியாதைப் பன்மையும் பெற்றுத் திருமூலர் என ஆயிற்று. இவர் காலம் -------------------- முற்பகுதி.
A
இரண்டாம் நூற்றாண்டின்
B
மூன்றாம் நூற்றாண்டின்
C
நான்காம் நூற்றாண்டின்
D
ஐந்தாம் நூற்றாண்டின்
Question 5
சைவத் திருமுறைகளில் ------------------ திருமுறை திருமந்திரம்
A
முதலாவது
B
நான்காவது
C
ஏழாவது
D
பத்தாவது
Question 6
------------------- என்னும், இந்நூலுக்கு தமிழ் மூவாயிரம் என்னும் வேருபெயரும் உண்டு. இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
A
புறநானூறு
B
நான்மணிக்கடிகை
C
பழமொழி நானூறு
D
திருமந்திரம்
Question 6 Explanation: 
குறிப்பு :- சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறை திருமந்திரம். இதற்குத் தமிழ் மூவாயிரம் என்னும் வேருபெயரும் உண்டு. இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. நம் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பாடல், மூன்றாம் தந்திரத்தில் எழுநூற்று இருபத்து நான்காவது பாடலாகும்.
Question 7
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது -------------------- நூலின் புகழ்மிக்க தொடராகும்.
A
புறநானூறு
B
நான்மணிக்கடிகை
C
பழமொழி நானூறு
D
திருமந்திரம்
Question 8
நகைசெய் தன்மையி னம்பெழீ இத் தாய்துகள் பகைசெய் நெஞ்சமும் பற்றலு மொன்றுற - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் ?
A
புறநானூறு, கண்ணகனார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
D
தேம்பாவணி, வீரமாமுனிவர் (மகவருள் படலம்)
Question 9
முகைசெய் மேனி தழுவிமுத் திட்டலுங் குகைசெய் யின்பெழக் கோலமிட்ட டொத்ததே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் ?
A
புறநானூறு, கண்ணகனார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
D
தேம்பாவணி, வீரமாமுனிவர் (மகவருள் படலம்)
Question 10
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
நகை – புன்னகை
B
முகை – மொட்டு
C
மேனி – உடல்
D
குருதி - அருகில்
Question 10 Explanation: 
குறிப்பு :- குருதி - இரத்தம்
Question 11
கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி - இது யாருடைய இயற்பெயர்?
A
ஜி யு போப்
B
கால்டுவெல்
C
வீரமாமுனிவர்
D
எல்லிஸ்
Question 12
கொண்டல் போபெஸ்கி – எலிசபெத், இது யாருடைய பெற்றோர் பெயர்?
A
ஜி யு போப்
B
கால்டுவெல்
C
வீரமாமுனிவர்
D
எல்லிஸ்
Question 13
வீரமாமுனிவர் பிறந்த ஊர்?
A
பிரான்சு
B
இத்தாலி
C
இங்கிலாந்து
D
ஆசுதிரேலியா
Question 14
இத்தாலியம், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் - ஆகிய அனைத்து மொழிகளையும் சரளமாக அறிந்தவர் யார்?
A
ஜி யு போப்
B
கால்டுவெல்
C
வீரமாமுனிவர்
D
எல்லிஸ்
Question 15
வீரமாமுனிவர் ----------------- வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தார்?
A
பதினெட்டாம்
B
இருபதாம்
C
முப்பதாம்
D
நாற்பதாம்
Question 16
ஞானோபதேசம், பரமார்த்த குரு கதை, திருக்காவலூர்க் கலம்பகம், தொன்னூல் விளக்கம், கித்தேரியம்மாள் அம்மானை - ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?
A
ஜி யு போப்
B
கால்டுவெல்
C
வீரமாமுனிவர்
D
எல்லிஸ்
Question 17
08.11.1680 முதல் 04.02.1747 வரை - இது யாருடைய காலத்தைக் குறிக்கிறது?
A
ஜி யு போப்
B
கால்டுவெல்
C
வீரமாமுனிவர்
D
எல்லிஸ்
Question 18
கிறித்துவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படும் நூல்?
A
இரட்சணிய யாத்திரிகம்
B
பெத்தலகேம் குறவஞ்சி
C
தேம்பாவணி
D
இவற்றில் ஏதுமில்லை
Question 19
கீழ்க்கண்ட கூற்று எந்நூலைப் பற்றியது? இந்நூலில் மூன்று காண்டங்களும், முப்பத்தாறு பாடல்களும் உள்ளன. பாடல்களின் எண்ணிக்கை மூவாயிரத்து அறுநூற்றுப் பதினைந்து.
A
இரட்சணிய யாத்திரிகம்
B
பெத்தலகேம் குறவஞ்சி
C
தேம்பாவணி
D
இவற்றில் ஏதுமில்லை
Question 20
கீழ்க்கண்டவற்றில் எந்நூல், இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக்கொண்டு பாடப்பட்டது?
A
இரட்சணிய யாத்திரிகம்
B
பெத்தலகேம் குறவஞ்சி
C
தேம்பாவணி
D
இவற்றில் ஏதுமில்லை
Question 20 Explanation: 
குறிப்பு :- தேம்பாவணி = தேம்பா + அணி = வாடாதமாலை என்றும், தேம்பாவணி = தேன் + பா + அணி = தேன்போன்ற இனிய பாடல்களாலான மாலை என்றும் பொருள்படும்.
Question 21
நாடகம் என்னும் சொல் ------------------------ எனப் பிரியும்.
A
நா + டகம்
B
நாடு + கம்
C
நாடு + அகம்
D
நாட + கம்
Question 21 Explanation: 
குறிப்பு :- நாட்டை அகத்தில் கொண்டது நாடகம். நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதனால், நாடகம் எனப் பெயர் பெற்றது என்பர். அகம் - நாடு; உன்னுள் நோக்கு; உன்னை உணர்;
Question 22
கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டுவதும், கூத்தாக ஆடிக்காட்டுவதும் நாடகம் என்பர். இதற்கு ------------------------- என்னும் பெயரும் உண்டு.
A
திரைப்படம்
B
எடுத்துக் கூறுதல்
C
கூத்துக்கலை
D
இவற்றில் ஏதுமில்லை
Question 23
தமிழின் தொன்மையான கலை வடிவம் நாடகம் ஆகும். நாடகம் தோற்றம் பெற்றதன் வரலாற்றை அறியப் புகும்போது, ---------------------- என்னும் பண்பு அடிப்படையாக அமைதலைக் காணலாம்.
A
போலச் செய்தல்
B
நடைமுறைப் படுத்துவது
C
எடுத்துக் கூறுவது
D
இவற்றில் ஏதுமில்லை
Question 23 Explanation: 
குறிப்பு :- பண்டைய மரப்பாவைக்கூத்து, பொம்மலாட்டமாக வளர்ச்சியடைந்த பின்னர், தோல்பாவைக் கூத்து, நிழற்பாவைக் கூத்து ஆகியன முறையே பாவைக்கூத்தின் வளர்ச்சி நிலைகளாக மக்களிடையே வழக்கிலிருந்தன.
Question 24
--------------------------, நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்து இருக்கிறது.
A
நற்றிணை
B
கலித்தொகை
C
புறநானூறு
D
தொல்காப்பிய மெய்ப்பாட்டியல்
Question 25
--------------------------- என்பவர்,  நாடகமேத்தும், நாடகக் கணிகை என்று நாட்டியமாடும் மாதவியைக் குறிப்பிடுகிறார்.
A
சீத்தலைச்சாத்தனார்
B
இளங்கோவடிகள்
C
ஒளவையார்
D
விளம்பிநாகனார்
Question 25 Explanation: 
குறிப்பு :- தனிப்பாடல்களுக்கு மெய்ப்பாடு தோன்ற ஆடுவதனை நாட்டியம் என்றும், ஏதேனும் ஒரு கதையைத் தழுவி வேடம்புனைந்து ஆடுவதனை நாடகம் என்றும் குறிப்பிட்டு வந்துள்ளனர். 'நாட்டியம்', 'நாடகம்' இரண்டிற்கும் பொதுவாகக் கூத்து என்னும் சொல்லே வழக்கில் இருந்தது. சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் கூத்துவகைகளைப் பற்றியும், நாடகநூல்கள் பற்றியும் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
Question 26
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதெனக் கருதப்படும் தமிழ் நூல்களில், முறுவல், சயந்தம்,  செயிற்றியம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து, குணநூல், கூத்து நூல் முதலிய பல நாடக நூல்கள் நாட்டியத்திற்கும் நாடகத்திற்கும் இலக்கணம் வகுத்துள்ளன. -----------------------------, நாடகக் கலையைப் பற்றியும் காட்சித் திரைகளைப் பற்றியும் நாடக அரங்கின் அமைப்புப் பற்றியும் விரிவாகக் கூறியுள்ளது
A
மணிமேகலை
B
சிலப்பதிகாரம்
C
புறநானூறு
D
கலித்தொகை
Question 27
------------------------ என்பவர், செய்யுள் வடிவில் இயற்றிய தம் நாடகவியல் என்னும் நூலில், நாடகம் அதன் விளக்கம், வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள், நடிப்புக்குரிய இலக்கணம், நடிப்பவர்களுக்குரிய இலக்கணம் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
A
மறைமலையடிகள்
B
பரிதிமாற்கலைஞர்
C
விபுலானந்தர்
D
பம்மல் சம்பந்தனார்
Question 28
சுவாமி விபுலானந்தர் எழுதிய மதங்க சூளாமணியும், -------------------- எழுதிய சாகுந்தலமும் நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்களாகும்.
A
பரிதிமாற் கலைஞர்
B
சங்கரதாசு சுவாமிகள்
C
பம்மல் சம்பந்தனார்
D
மறைமலையடிகள்
Question 29
நாடகப் பேராசிரியர் -----------------------------, நாடகத்தமிழ் என்னும் தம்நூலில் தொழில்முறை நாடக அரங்குகளைப்பற்றிய செய்திகளை நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளார்
A
பரிதிமாற் கலைஞர்
B
சங்கரதாசு சுவாமிகள்
C
பம்மல் சம்பந்தனார்
D
மறைமலையடிகள்
Question 30
------------------ நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் மத்தவிலாசம் என்னும் நாடக நூலை எழுதியுள்ளான்.
A
இரண்டாம்
B
மூன்றாம்
C
ஆறாம்
D
ஏழாம்
Question 31
----------------- நூற்றாண்டில் இராசராசாசோழன் ஆட்சிக் காலத்தில் இராசராசேச்சுவர நாடகம் நடைபெற்றதாகக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
A
ஆறாம்
B
எட்டாம்
C
பத்தாம்
D
பதினோராம்
Question 31 Explanation: 
குறிப்பு :- தஞ்சாவூரை ஆண்டபோது கோவிலில் நாடகங்கள் மராத்திய மன்னர்களால் நடத்தப்பெற்றன. நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகங்கள் தோன்றின. பள்ளு நாடகவகை, உழவர்களின் வாழ்க்கையைச் சித்தரித்துள்ளன
Question 32
-------------------- நூற்றாண்டின் பிற்பகுதியில், நொண்டி நாடகங்கள் தோன்றின. செல்வக்குடியில் பிறந்த ஒருவன், ஒழுக்கங்கெட்டு, நோயும் வறுமையும் உற்று இறுதியில் திருந்தி வாழ்வதாக இவ்வகை நாடகங்கள் அமைந்தன.
A
ஆறாம்
B
எட்டாம்
C
பத்தாம்
D
பதினேழாம்
Question 32 Explanation: 
குறிப்பு :- தஞ்சாவூரை ஆண்டபோது கோவிலில் நாடகங்கள் மராத்திய மன்னர்களால் நடத்தப்பெற்றன. நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகங்கள் தோன்றின. பள்ளு நாடகவகை, உழவர்களின் வாழ்க்கையைச் சித்தரித்துள்ளன
Question 33
----------------- நூற்றாண்டில் அருணாசலக் கவிராயரின் இராம நாடகம், கோபால கிருட்டின பாரதியாரின் நந்தனார் சரித்திரம் ஆகியன கட்டியங்காரன் உரையாடல்களோடு முழுவதும் பாடல்களாக அமைந்தன.
A
ஆறாம்
B
எட்டாம்
C
பத்தாம்
D
பதினெட்டாம்
Question 34
------------------- நூற்றாண்டில் சமுதாயச் சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்றன.
A
பத்தாம்
B
பன்னிரண்டாம்
C
பதினாறாம்
D
பத்தொன்பதாம்
Question 35
டம்பாச்சாரி விலாசம் - ஆசிரியர்?
A
மனோன்மணியம் சுந்தரனார்
B
மறைமலையடிகள்
C
பரிதிமாற்கலைஞர்
D
காசி விசுவநாதர்
Question 36
மனோன்மணியம் என்னும் கவிதை நாடகக் காப்பியத்தின் ஆசிரியர் யார்?
A
பேராசிரியர் சுந்தரனார்
B
மறைமலையடிகள்
C
பரிதிமாற்கலைஞர்
D
காசி விசுவநாதர்
Question 37
பேராசிரியர் சுந்தரனார் மனோன்மணியம் என்னும் கவிதை நாடகக் காப்பியத்தை -------------- ஆம் ஆண்டில் வெளியிட்டார்?
A
1855
B
1861
C
1887
D
1891
Question 38
பேராசிரியர் சுந்தரனார் மனோன்மணியம் என்னும் கவிதை நாடகக் காப்பியத்தை 1891  ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்நூல் -------------- எழுதிய மறைவழி என்னும் ஆங்கிலக் கதையைத் தழுவியதாக இருந்தாலும் வடிவத்தாலும், பாத்திர அமைப்பாலும், சூழலாலும் தமிழ்ப்பண்பு ஓங்கியிருந்தது.
A
டல்கௌசி பிரபு
B
வில்லியம் பெண்டிங்
C
ராபர்ட் கிளைவ்
D
லார்ட் லிட்டன்
Question 39
------------------ நாடகம்தான் தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகமாகும்.
A
தேசியம்
B
வந்தே மாதரம்
C
கதரின் வெற்றி
D
நாளை நமதே
Question 39 Explanation: 
குறிப்பு:- கதரின் வெற்றி நாடகம்தான் தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகமாகும். இதனைத் தொடர்ந்து தேசியக்கொடி, தேசபக்தி முதலிய நாடகங்கள் நடத்தப்பட்டன.
Question 40
குறிப்பு:- கதரின் வெற்றி நாடகம்தான் தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகமாகும். இதனைத் தொடர்ந்து தேசியக்கொடி, தேசபக்தி முதலிய நாடகங்கள் நடத்தப்பட்டன.
A
மறைமலையடிகள்
B
திரு.வி.க
C
பரிதிமாற்கலைஞர்
D
சங்கரதாசு சுவாமிகள்
Question 40 Explanation: 
குறிப்பு :- இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகத்துறைக்குப் பெருந்தொண்டு புரிந்தவர் சங்கரதாசு சுவாமிகள்.
Question 41
பிரகலாதன், சிறுத்தொண்டர், இலவகுசா, பவளக்கொடி, அபிமன்யு, சுந்தரி முதலான நாற்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளவர் யார்?
A
மறைமலையடிகள்
B
திரு.வி.க
C
பரிதிமாற்கலைஞர்
D
சங்கரதாசு சுவாமிகள்
Question 42
தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்பட்டவர் யார்?
A
மறைமலையடிகள்
B
பம்மல் சம்பந்தனார்
C
பரிதிமாற்கலைஞர்
D
சங்கரதாசு சுவாமிகள்
Question 43
கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது? தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். சேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்களை மொழிபெயர்த்துள்ளார். இவரது மனோகரன் நாடகம் எழுபது ஆண்டுகளாகத் தமிழ் நாடகமேடையில் புகழ்பெற்று விளங்கியது. தமது நாடக அனுபவங்களையெல்லாம், நாடகமேடை நினைவுகள் என்னும் தலைப்பிலும் நடிப்புக்கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி? என்னும் தலைப்பிலும் எழுதியுள்ளார்.
A
மறைமலையடிகள்
B
பம்மல் சம்பந்தனார்
C
பரிதிமாற்கலைஞர்
D
சங்கரதாசு சுவாமிகள்
Question 44
மதுரையில் 1942 ஆம் ஆண்டில் புலமைக்கடலான தமிழ் மூதாட்டி ஒளவையார் நாடகம் அரங்கேறியது. நாடகம் முழுவதும் ஒளவையாராக நடிக்கும் வாய்ப்பைப் பெற்று சிறந்தமுறையில் நடித்தவர் ----------------------?
A
தி.க.சண்முகனார்
B
பம்மல் சம்பந்தனார்
C
பரிதிமாற்கலைஞர்
D
சங்கரதாசு சுவாமிகள்
Question 44 Explanation: 
குறிப்பு :- இவரை ஒளவை சண்முகனார் என்றே அழைத்தனர்.
Question 45
"நாடகச் சாலையொத்த நற்கலா சாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து" - என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
D
வாணிதாசன்
Question 46
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர்?
A
நச்சினார்க்கினியர்
B
அடியார்க்கு நல்லார்
C
சுந்தரனார்
D
விபுலானந்தர்
Question 47
ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல்,  தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வந்துள்ளது. இவ்வாறு வருவதற்கு --------------- என்பது பெயர்.
A
புணர்ச்சி
B
வழு
C
ஆகுபெயர்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 48
ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?
A
14
B
15
C
16
D
17
Question 48 Explanation: 
குறிப்பு :- ஆகுபெயர் பதினாறு வகைபெறும். அவையாவன: பொருளாகு பெயர், இடவாகு பெயர், காலவாகு பெயர், சினையாகு பெயர், பண்பாகு பெயர், தொழிலாகு பெயர், எண்ணல் அளவையாகு பெயர், எடுத்தல் அளவையாகு பெயர், முகத்தல் அளவையாகு பெயர், நீட்டல் அளவையாகு பெயர், சொல்லாகு பெயர், தானியாகு பெயர், கருவியாகு பெயர், காரியவாகு பெயர், கருத்தாவாகு பெயர், உவமையாகு பெயர்.
Question 49
அளவைக் குறிக்கும் பெயர்களை அளவைப் பெயர்கள் என்பர். அவை எத்தனை வகைப்படும். அவை யாவை?
A
1
B
2
C
3
D
4
Question 50
ஒன்று பெற்றால் ஒளி மயம் - இது எந்த ஆகுபெயருக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
A
எண்ணல் அளவை ஆகுபெயர்
B
எண்ணல் அளவை ஆகுபெயர்
C
எடுத்தல் அளவை ஆகுபெயர்
D
நீட்டல் அளவை ஆகுபெயர்
Question 50 Explanation: 
விளக்கம் :- ஒன்று பெற்றால் ஒளி மயம். இத்தொடரில் ஒன்று என்னும் எண்ணுப்பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்குப் பெயராகி வந்தது. இஃது எண்ணல் அளவை ஆகுபெயர்.
Question 51
ஐந்து கிலோ என்ன விலை? - இது எந்த ஆகுபெயருக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
A
எண்ணல் அளவை ஆகுபெயர்
B
எண்ணல் அளவை ஆகுபெயர்
C
எடுத்தல் அளவை ஆகுபெயர்
D
நீட்டல் அளவை ஆகுபெயர்
Question 51 Explanation: 
விளக்கம் :- ஐந்து கிலோ என்ன விலை? இத்தொடரில் கிலோ என்னும் எடுத்தல் அளவைப் பெயர், அவ்வளவைக் குறிக்காமல், அவ்வளவுடைய பொருளுக்கு (அரிசி, பருப்பு..) ஆகிவந்தது. எனவே, இஃது எடுத்தல் அளவை ஆகுபெயர்.
Question 52
நான்கு லிட்டர் தேவை - இது எந்த ஆகுபெயருக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
A
எண்ணல் அளவை ஆகுபெயர்
B
முகத்தல் அளவை ஆகுபெயர்
C
எடுத்தல் அளவை ஆகுபெயர்
D
நீட்டல் அளவை ஆகுபெயர்
Question 53
மூன்று மீட்டர் கொடு - இது எந்த ஆகுபெயருக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
A
எண்ணல் அளவை ஆகுபெயர்
B
முகத்தல் அளவை ஆகுபெயர்
C
எடுத்தல் அளவை ஆகுபெயர்
D
நீட்டல் அளவை ஆகுபெயர்
Question 54
வள்ளுவர்சொல் வாழ்க்கைக்கு இனிது - இது எந்த ஆகுபெயருக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
A
தானியாகுபெயர்
B
சொல்லாகுபெயர்
C
இடவாகுபெயர்
D
கருவியாகு பெயர்
Question 55
பாலை இறக்கு - இது எந்த ஆகுபெயருக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
A
தானியாகுபெயர்
B
சொல்லாகுபெயர்
C
இடவாகுபெயர்
D
கருவியாகு பெயர்
Question 55 Explanation: 
விளக்கம் :- பாலை இறக்கு. பாலின் பெயர், பாலைக் குறிக்காமல் பாத்திரத்தைக் குறிக்கிறது. ஓர் இடத்தில் உள்ள ஒரு பொருளின் பெயர் (தானி), அது சார்ந்திருக்கும் இடத்திற்குப் (தானத்திற்கு) பெயராகி வருவது தானியாகுபெயர் . பொருள், இடத்திற்கு ஆகி வருவது தானியாகுபெயர். இடவாகுபெயர் :- இடம், பொருளுக்கு ஆகி வருவது இடவாகுபெயர்.
Question 56

யாழ் கேட்டு மகிழ்ந்தாள் - இது எந்த ஆகுபெயருக்கு சிறந்த எடுத்துக்காட்டு?

A
தானியாகுபெயர்
B
சொல்லாகுபெயர்
C
இடவாகுபெயர்
D
கருவியாகு பெயர்
Question 56 Explanation: 
விளக்கம் :- யாழ் கேட்டு மகிழ்ந்தாள். இத்தொடரில், யாழ் என்னும் கருவி இசைக்கு ஆகி வந்ததால் கருவியாகு பெயர். கருவியாகு பெயர் : கருவிப் பொருளைக் குறிக்காமல், அதனின் தோன்றிய காரியத்திற்கு ஆகிவரும். (எ-டு) : வீணை கேட்டு மெய்ம்மறந்தேன்
Question 57
நான் சமையல் கற்றேன் - இது எந்த ஆகுபெயருக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
A
தானியாகுபெயர்
B
சொல்லாகுபெயர்
C
இடவாகுபெயர்
D
காரியவாகு பெயர்
Question 57 Explanation: 
விளக்கம் :- நான் சமையல் கற்றேன். இங்குச் சமையல் என்னும் காரியத்தின் பெயர் அதன் காரணத்திற்குப் (கருவிக்கு) பெயராகி வருவது காரியவாகு பெயர். காரியவாகு பெயர் : காரியப்பொருள் கருவிப்பொருளுக்கு ஆகிவருவது. (எ-டு) : நன்னூல் கற்றேன்..
Question 58
திருவள்ளுவரைப் படித்துப்பார் - இது எந்த ஆகுபெயருக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
A
தானியாகுபெயர்
B
சொல்லாகுபெயர்
C
இடவாகுபெயர்
D
காரியவாகு பெயர்
Question 58 Explanation: 
விளக்கம் :- திருவள்ளுவரைப் படித்துப்பார். இத்தொடரில் திருவள்ளுவர் என்பது, அவரால் இயற்றப் பெற்ற நூலுக்கு ஆகிவந்ததனால், கருத்தாவாகு பெயராயிற்று.
Question 59
நாரதர் வருகிறார் - இது எந்த ஆகுபெயருக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
A
தானியாகுபெயர்
B
சொல்லாகுபெயர்
C
இடவாகுபெயர்
D
உவமையாகு பெயர்
Question 59 Explanation: 
விளக்கம் :- ஒருவரைப் பார்த்து, நாரதர் வருகிறார் எனல். இத்தொடரில் நாரதர் என்னும் பெயர் அவரைக் குறிக்காமல், அவரைபோன்ற (கலகமூட்டுபவர்) வேறொருவர்க்கு ஆகிவந்தது. அதனால், இஃது உவமையாகுபெயராயிற்று. பொருள்முதல் ஆறோடு அளவை சொல்தானி கருவி காரியம் கருத்தன் ஆதியுள் ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத் தொன்முறை உரைப்பன ஆகு பெயரே. – நன்னூல் 290...
Question 60
நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி - இத்தொடர் ----------------- ஆகும்?
A
முகத்தலளவையாகு பெயர்
B
நீட்டலளவையாகு பெயர்
C
எண்ணலளவையாகு பெயர்
D
எடுத்தலளவையாகு பெயர்
Question 61
தயிரை இறக்கு. இத்தொடர் ----------------- ஆகுபெயர் ஆகும்?
A
இடவாகு பெயர்
B
தானியாகு பெயர்
C
உவமையாகு பெயர்
D
கருவியாகு பெயர்
Question 62
'மல்லிகை சூடினாள்' - என்பது ---------------- ஆகுபெயர்?
A
முதலாகு பெயர் (பொருளாகு பெயர்)
B
இடவாகு பெயர்
C
காலவாகு பெயர்
D
சினையாகு பெயர்
Question 62 Explanation: 
குறிப்பு:- பொருளாகு பெயர் :- 'மல்லிகை’ என்பது ‘பூ’ இல்லை, அது கொடி. ‘மல்லிகை சூடினாள்’ எனச்சொன்னால், அங்கு மல்லிகை என்பது கொடியாகிய முதற்பொருளைக் குறிக்காமல் பூ என்னும் சினையைக் குறிக்கிறது. இவ்வாறு முதற்பொருள் சினைக்கு (உறுப்புக்கு) ஆகி வருவது, முதலாகு பெயர் எனப்படும். இதனைப் பொருளாகுபெயர் எனவும் கூறுவர்.
Question 63
'பள்ளி' - என்பது ---------------- ஆகுபெயர்?
A
முதலாகு பெயர் (பொருளாகு பெயர்)
B
இடவாகு பெயர்
C
காலவாகு பெயர்
D
சினையாகு பெயர்
Question 63 Explanation: 
குறிப்பு :- நேற்றுப் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்ற பள்ளி, எது? பூண்டிப்பள்ளி. பூண்டிப் பள்ளியா வந்து பேசியது? பள்ளி எப்படிப் பேசும்? பூண்டியிலுள்ள பள்ளியில் பயின்ற மாணவி பேசினாள், ‘பள்ளி’ என்னும் இடப்பெயர், அப்பள்ளியில் பயிலும் மாணவிக்கு ஆகி வந்தது. அதனால், இஃது இடவாகு பெயர்
Question 64
திசம்பர் பூ - என்பது எந்த ஆகுபெயர்?
A
முதலாகு பெயர் (பொருளாகு பெயர்)
B
இடவாகு பெயர்
C
காலவாகு பெயர்
D
சினையாகு பெயர்
Question 64 Explanation: 
குறிப்பு :- காலவாகு பெயர் :- உன் தலையில் வைத்திருக்கும் பூவின் பெயரென்ன? திசம்பர் பூ. திசம்பர் என்பது என்ன? மாதத்தின் பெயர். திசம்பர் என்னும் மாதப்பெயர், அம்மாதத்தில் பூக்கும் பூவிற்கு ஆகி வந்தது. அதனால், இது காலவாகுபெயர்
Question 65
'வெற்றிலை நட்டான்' - என்பது ------------ ஆகுபெயர்?
A
முதலாகு பெயர் (பொருளாகு பெயர்)
B
இடவாகு பெயர்
C
காலவாகு பெயர்
D
சினையாகு பெயர்
Question 65 Explanation: 
குறிப்பு :- சினையாகு பெயர் :- சினை என்றால் உறுப்பு. 'வெற்றிலை நட்டான்' - இத்தொடரில் உள்ள வெற்றிலை என்பது சினையாகிய இலையைக் குறிக்காமல், அதன் முதல் பொருளாகிய கொடிக்கு ஆகி வந்தது. அதனால், இது சினையாகு பெயர் ஆயிற்று.
Question 66
'வெள்ளை அடிப்போம்' என்பது ---------------- ஆகுபெயர்?
A
முதலாகு பெயர் (பொருளாகு பெயர்)
B
இடவாகு பெயர்
C
காலவாகு பெயர்
D
பண்பாடு பெயர் (குணவாகு பெயர்)
Question 66 Explanation: 
குறிப்பு :- குணவாகு பெயர் :- பொங்கலுக்கு முன் வீட்டுச் சுவர்களுக்கு என்ன அடிப்போம்? வெள்ளை. வெள்ளை என்பது நிறப்பண்பு ஆனால், அது நிறத்தைக் குறிக்காமல், சுண்ணாம்பைக் குறித்து வந்தது. அதனால், இது பண்பாகு பெயர். இதனைக் குணவாகுபெயர் எனவும் கூறுவர்.
Question 67
'பொங்கல்' உண்போம் - இது ------------- ஆகுபெயர்?
A
முதலாகு பெயர் (பொருளாகு பெயர்)
B
தொழிலாகு பெயர்
C
காலவாகு பெயர்
D
பண்பாடு பெயர் (குணவாகு பெயர்)
Question 67 Explanation: 
குறிப்பு :- தொழிலாகுபெயர்:- 'பொங்கல்' உண்போம், ஐயா. இங்குப் பொங்கல் என்பது பொங்குதலாகிய தொழிற்பெயர். இத்தொழிற்பெயர் தொழிலைக் குறிக்காமல், அத்தொழிலால் ஆகும் உணவைக் குறித்தது. அதனால், இது தொழிலாகு பெயர்.
Question 68
வறுவல் தின்றான் - என்பது?
A
முதலாகு பெயர்
B
இடவாகு பெயர்
C
தொழிலாகு பெயர்
D
சினையாகு பெயர்
Question 69
சித்திரை வந்தாள் - என்பது?
A
முதலாகு பெயர்
B
இடவாகு பெயர்
C
காலவாகு பெயர்
D
சினையாகு பெயர்
Question 70
'ஊர் உறங்கியது' - என்பது?
A
முதலாகு பெயர்
B
இடவாகு பெயர்
C
காலவாகு பெயர்
D
சினையாகு பெயர்
Question 71
'நீலம் சூடினாள்' - என்பது?
A
பண்பாகு பெயர் (குணவாகு பெயர்)
B
இடவாகு பெயர்
C
காலவாகு பெயர்
D
சினையாகு பெயர்
Question 72
பொருந்தாதது எது? சொற்றொடர்களில் அமைந்துள்ள வழுக்களை அறிவோம்.
A
அரசன் வந்தது - திணை வழு
B
கபிலன் பேசினாள் - பால் வழு
C
குயில்கள் கூவியது - எண் வழு
D
கமலா சிரித்தாய் - இட வழு
E
ஆந்தை கத்தியது - பால் வழு
Question 72 Explanation: 
குறிப்பு :- ஆந்தை கத்தியது - மரபு வழு
Question 73
பொருந்தாதது எது? சொற்றொடர்களில் அமைந்துள்ள வழுக்களை அறிவோம்
A
கபிலன் பேசியது - திணை வழு
B
கண்ணன் படித்தாள் - பால் வழு
C
பறவைகள் பறந்தது - எண் வழு
D
இன்று வருவான் - கால வழு
E
சிங்கம் கனைத்தது - இட வழு
Question 73 Explanation: 
குறிப்பு :- சிங்கம் கனைத்தது - மரபு வழு
Question 74
புகழெனின் உயிரும் கொடுக்குவர் ; பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
கலித்தொகை
B
அகநானூறு
C
புறநானூறு
D
நற்றிணை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 74 questions to complete.

One Comment

Leave a Reply to Rakavi R Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!