Online TestTamil

7th Std Tamil Notes Online Test – Part 2

ஏழாம் வகுப்பு - சமச்சீர் பொதுத்தமிழ் (பாடம் 2)

Congratulations - you have completed ஏழாம் வகுப்பு - சமச்சீர் பொதுத்தமிழ் (பாடம் 2). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நெல்லும் உயிரன்றே நீரும்உயி ரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
நான்மணிக்கடிகை, விளம்பிநாகனார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
புறநானூறு, மோசிகீரனார்
D
சிறுபஞ்சமூலம், காரியாசான்
Question 2
அதனால் யான்உயிர் என்பது அறிகை; வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
நான்மணிக்கடிகை, விளம்பிநாகனார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
புறநானூறு, மோசிகீரனார்
D
சிறுபஞ்சமூலம், காரியாசான்
Question 3
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
அறிகை – அறிதல் வேண்டும்
B
தானை – படை
C
கடனே – கடமை
D
கேண்மை - பகைமை
Question 3 Explanation: 
குறிப்பு :- கேண்மை - நட்பு
Question 4
உடல் சோர்வினால் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கியபோது, ------------------------- என்ற அரசனால் கவரிவீசப் பெற்ற பெருமைக்குரியவர், மோசிகீரனார்.
A
சேரன் செங்குட்டுவன்
B
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
C
பெருமாள் பாஸ்கர ரவிவர்மா
D
சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
Question 4 Explanation: 
குறிப்பு :- மோசிகீரனார், தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரில் வாழ்ந்தவர். கீரன் என்பது குடிப்பெயராகக் குறிப்பிடபடுகிறது. இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றுள் உள்ளன.
Question 5
புறநானூறு ---------------------- நூல்களுள் ஒன்று.
A
எட்டுத்தொகை
B
பத்துப்பாட்டு
C
ஐம்பெரும் காப்பியங்கள்
D
ஐம்சிறும் காப்பியங்கள்
Question 5 Explanation: 
குறிப்பு :- புறம் என்பது மறம் செய்தலும் அறம் செய்தலும் ஆகும். இந்நூலில் உள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் வாழ்ந்த புலவர்களாலும் மன்னர்களாலும் பாடப்பெற்றவை. புறநானூற்றுப் பாடல்கள் மூலம் பண்டைய தமிழக மன்னர்களின் அற உணர்வு, வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு, கல்விப் பெருமை முதலியவற்றையும், புலவர்களின் பெருமிதம், மக்களுடைய நாகரிகம், பண்பாடு முதலியவற்றையும் அறியலாம்.
Question 6
கீழ்க்கண்டவற்றுள் அரசனைக் குறிக்காத பெயர் எது?
A
மன்னன்
B
வேந்தன்
C
அமரன்
D
கோ
Question 7
ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்; ஓதலில் சிறந்தன்(று) ஒழுக்கம் உடைமை;  காதலில் சிறந்தன்று கண்ணஞ்சப் படுத்தல் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
நான்மணிக்கடிகை, விளம்பிநாகனார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
புறநானூறு, மோசிகீரனார்
D
முதுமொழிக்காஞ்சி, மதுரைக் கூடலூர்கிழார்
Question 8
மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை; வண்மையில் சிறந்தன்று வாய்மை யுடைமை - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
நான்மணிக்கடிகை, விளம்பிநாகனார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
புறநானூறு, மோசிகீரனார்
D
முதுமொழிக்காஞ்சி, மதுரைக் கூடலூர்கிழார்
Question 9
இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை; நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
நான்மணிக்கடிகை, விளம்பிநாகனார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
புறநானூறு, மோசிகீரனார்
D
முதுமொழிக்காஞ்சி, மதுரைக் கூடலூர்கிழார்
Question 10
குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று; கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
நான்மணிக்கடிகை, விளம்பிநாகனார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
புறநானூறு, மோசிகீரனார்
D
முதுமொழிக்காஞ்சி, மதுரைக் கூடலூர்கிழார்
Question 11
செற்றாரைச் செறுத்தலில் தற்செய்கை சிறந்தன்று; முன்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
நான்மணிக்கடிகை, விளம்பிநாகனார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
புறநானூறு, மோசிகீரனார்
D
முதுமொழிக்காஞ்சி, மதுரைக் கூடலூர்கிழார்
Question 12
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
ஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல்
B
காதல் – அன்பு, விருப்பம்
C
மேதை – அறிவு நுட்பம்
D
வண்மை – தீமை
Question 12 Explanation: 
குறிப்பு :- வண்மை – ஈகை, கொடை
Question 13
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
பிணி – நோய்
B
மெய் – உடம்பு
C
நாணம் – செய்யக் கூடாதனைச் செய்ய அச்சப்படுதல்
D
கேண்மை - தீமை
Question 13 Explanation: 
குறிப்பு :- கேண்மை - நட்பு
Question 14
கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது? இவர் பிறந்த ஊர் கூடலூர். இவர்தம் பாடல்களை நச்சினார்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாகக் கையாண்டுள்ளார்கள். இவர் சங்க காலத்துக்குப்பின் வாழ்ந்தவர்.
A
விளம்பிநாகனார்
B
முன்றுறை அரையனார்
C
மோசிகீரனார்
D
மதுரைக் கூடலூர்கிழார்
Question 15
முதுமொழிக்காஞ்சி என்பது ------------------திணையின் துறைகளுள் ஒன்று.
A
வஞ்சி
B
நொச்சி
C
தும்பை
D
காஞ்சி
Question 16
முதுமொழிக்காஞ்சி ----------------------- நூல்களுள் ஒன்று.
A
பதினெண்கீழ்க்கணக்கு
B
பதினெண் மேல்க்கணக்கு
C
ஐம்பெரும் காப்பியங்கள்
D
ஐஞ்சிறும் காப்பியங்கள்
Question 17
--------------------------- நூல், அறவுரைக்கோவை எனவும் வழங்கப்படுகிறது.
A
நான்மணிக்கடிகை
B
பழமொழி நானூறு
C
புறநானூறு
D
முதுமொழிக்காஞ்சி
Question 18
முதுமொழிக்காஞ்சி நூலில் ------------------- பாடல்கள் உள்ளன.
A
10
B
40
C
80
D
100
Question 18 Explanation: 
குறிப்பு :- முதுமொழிக்காஞ்சி நூலில் பத்து அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துச் செய்யுள்கள் உள்ளன. இந்நூல் நூறு பாடல்களால் ஆனது.
Question 19
--------------------------- நூல் கற்போரின் குற்றங்களை நீக்கி, அறம், பொருள், இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை அறவுரைகளாகக் கூறி நல்வழிப்படுத்தும்.
A
நான்மணிக்கடிகை
B
பழமொழி நானூறு
C
புறநானூறு
D
முதுமொழிக்காஞ்சி
Question 20
யார் காப்பர் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தார் ஒருவர் அவர்தாம் ----------------.
A
திரு.வி.க
B
மறைமலையடிகள்
C
உ.வே.சாமிநாதர்
D
பாவாணர்
Question 21
கீழ்க்கண்டவர்களுள் யார் தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படுகிறார்?
A
திரு.வி.க
B
மறைமலையடிகள்
C
உ.வே.சாமிநாதர்
D
பாவாணர்
Question 22
கீழ்க்கண்டவர்களுள் யார் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனாரின் மாணவர்?
A
திரு.வி.க
B
மறைமலையடிகள்
C
உ.வே.சாமிநாதர்
D
பாவாணர்
Question 23
கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது? இவர், நயமும் சுவையும் மிக்க பாடல்களை இயற்றிப் புதுப்புது நூல்களைப் படைத்தளித்தார். தமிழ்ப்பாடம் சொல்லிச்சொல்லி மாணவர்களைத் தமிழின்பால் ஈர்த்தார். அதனால், மாணவர்கள் தமிழின்மீது தீராக்காதல் கொண்டு தமிழை ஈடுபாட்டுடன் கற்றார்கள். அம்மாணவர்கள் தேமதுரத் தமிழை உலகெலாம் பரவச் செய்தார்கள்.
A
வேங்கட மகாலிங்கம்
B
மறைமலையடிகள்
C
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
D
பாவாணர்
Question 24
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் அவர்கள் பிறந்த ஆண்டு?
A
06.04.1805
B
04.06.1815
C
06.04.1815
D
04.06.1850
Question 25
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் அவர்கள் பிறந்த ஊர்?
A
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வத்தலக்குண்டு
B
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நாகலாபுரம்
C
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நீடாமங்கலம்
D
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணெய்க்கிராமம்
Question 26
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் அவர்கள் பெற்றோர் பெயர்?
A
முத்தையா - விசாலாட்சி
B
வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள்
C
சிதம்பரம் – அன்னத்தாச்சியார்
D
இவர்களில் யாருமில்லை
Question 27
மீனாட்சிசுந்தரனார் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் -------------------- ஊரில் வாழ்ந்தார்.
A
சைதாப்பேட்டை (சைதை)
B
மன்னார்குடி (மன்னை)
C
மயிலாடுதுறை (மயிலை)
D
திரிசிரபுரத்தில் ( திருச்சிராப்பள்ளி )
Question 27 Explanation: 
குறிப்பு :- மீனாட்சிசுந்தரனார் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் திரிசிரபுரத்தில் ( திருச்சிராப்பள்ளி ) வாழ்ந்தார். அதனால், அவரைத் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார் என்றே அழைத்தனர். அவரிடம், கற்க வேண்டும் என்ற வேட்கை தணியாததாக இருந்தது.
Question 28
மீனாட்சிசுந்தரனார் எப்பொழுதும் நூல்களைப் படித்துக்கொண்டே இருப்பார். அவர் தமிழ் இலக்கியத்திலும் ------------- சமய நூல்களிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.
A
சைவம்
B
வைணவம்
C
பௌத்தம்
D
சமண
Question 29
கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது? இவர், தமிழ் கற்கவேண்டுமென்று விரும்பியவர்களுக்கெல்லாம் கற்றுக் கொடுத்து வந்தார்; சாதி, சமயம் பாராது அனைவருக்கும் கல்வி கற்பித்து வந்தார். இவர், பெருஞ் செல்வராக இல்லை என்றாலும், மாணவர் சிலருக்கு உண்டியும் உறையுளும் அளித்துக் கற்பித்திருக்கிறார். அதன் காரணமாக அவருடைய புகழ் எங்கும் பரவியது. குலாம்காதர் நாவலர், சவரிராயலு, தியாகராசர், சாமிநாதர் ஆகியோர், அவர்களுள் குறிப்பிடத்தக்க மாணவர்கள்.
A
வேங்கட மகாலிங்கம்
B
மறைமலையடிகள்
C
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
D
பாவாணர்
Question 30
------------------- என்ற ஊரில் ஆதீன வித்துவானாக இருக்க வேண்டும் என்று  ஆதீனத் தலைவர், மீனாட்சிசுந்தரனாருக்கு அழைப்பு விடுத்தார். மீனாட்சிசுந்தரனார் அப்பதவியில் சிலகாலம் இருந்து அரும்பணி ஆற்றினார்
A
திருத்துறைப்பூண்டி
B
திருச்செந்தூர்
C
திருத்தணி
D
திருவாவடுதுறை
Question 31
------------------- என்ற ஊரில் வாழ்ந்த காலத்தில் தான் உ.வே.சாமிநாதருக்கு ஆசிரியராக இருந்தார், மீனாட்சிசுந்தரனார்.
A
திருத்துறைப்பூண்டி
B
திருச்செந்தூர்
C
திருத்தணி
D
திருவாவடுதுறை
Question 32
இந்த கூற்று யாருடன் தொடர்புடையது?  இவர், தம்வாழ்வின் பெரும்பகுதியை, மாணவர்களுக்குக் கற்பிப்பதிலேயே செலவழித்தார். கற்பித்ததால் அவருடைய அறிவும் வளந்தது. மாணவர்களுக்குப் பாடம் சொல்லும் போது அவர் ஏடுகளைப் பார்க்கவே மாட்டார். அவற்றிலுள்ள அனைத்தும் அவருக்கு மனப்பாடமாகவே இருந்தன.
A
வேங்கட மகாலிங்கம்
B
மறைமலையடிகள்
C
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
D
பாவாணர்
Question 33
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார், -------------------- க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். தமிழகத்திலுள்ள பல்வேறு கோவில்களுக்கு நடைப்பயணம் மேற் கொண்டு அக்கோவில்களைப் பற்றித் தலபுராணங்கள் பல இயற்றியுள்ளர். அத்தல புராணங்களில் கோவில் வரலாறு, சிறப்புகள், இறைவனின் பெருமைகள் முதலியன இடம்பெற்றுள்ளன.
A
80
B
800
C
1800
D
8000
Question 34
இந்த கூற்று யாருடன் தொடர்புடையது? ஒருமுறை இவருடைய நண்பர் ஆறுமுகம் என்பவர், தம்முடைய குடும்பத் தொடர்பாகக் கும்பகோணத்தில் ஒருவருக்குப் பத்திரம் ஒன்று எழுதிக் கொடுத்தார். அதில், சாட்சிக் கையொப்பமிட வந்த ஒருவருடைய இருப்பிடம் கும்பகோணத்திலுள்ள சுண்ணாம்புக்காரன் தெரு என்பது. அதனை நீற்றுக்காரத் தெரு எனவும் வழங்குவர். இந்த இரண்டில் எதனைப் பெயருக்கு முன்னால் சேர்க்கலாம் என்று அவர் கேட்டபொழுது , --------------- என்பவர் இரண்டும் வேண்டாம், மூன்றாவது தெரு என்று போட்டுவிடும் என்று சொன்னார். மூன்றாவது என்பது சுண்ணாம்பைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். (வெற்றிலை + பாக்கு +சுண்ணாம்பு )
A
வேங்கட மகாலிங்கம்
B
மறைமலையடிகள்
C
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
D
பாவாணர்
Question 35
இந்த கூற்று யாருடன் தொடர்புடையது? ஒருநாள் இவர், காய்ச்சலுற்றுத் துன்புற்றார். அப்பொழுது மாணவர் ஒருவரை நூல் முழுவதனையும் தொடர்ந்து படிக்குமாறு கேட்டார். உடல்நிலை சரியில்லாதபோது சற்று ஓய்வெடுத்தால் நல்லதென்று மற்றவர் கூற, நோய்க்கு மருந்து இலக்கியம் என்றார்.
A
வேங்கட மகாலிங்கம்
B
மறைமலையடிகள்
C
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
D
பாவாணர்
Question 36
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் அவர்கள் மறைந்த வருடம்?
A
01.02.1786
B
10.12.1886
C
10.02.1786
D
01.02.1876
Question 37
தொப்புள்கொடி உறவுகள் அறுந்து போகாமல் காப்பது தாய்மொழி மாத்திரமே. பிற மொழிகள் பிழைபதற்கு; தாய் மொழி ஒன்றே வாழ்வதற்கு! - என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வால்ட் விட்மன்
B
சேக்சுபியர்
C
ஜி.யு.போப்
D
உருசிய கவிஞர் ரசூல் கம்சதேவ்
Question 38
நாளை என் மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன்!" - என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வால்ட் விட்மன்
B
சேக்சுபியர்
C
ஜி.யு.போப்
D
உருசிய கவிஞர் ரசூல் கம்சதேவ்
Question 39
சொல்லத் துடிக்குது மனசு - என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
ராஜம் கிருஷ்ணன்
B
சுஜாதா
C
வீ.கே.டி. பாலன்
D
நவநீதன்
Question 40
அறம் பெருகும் தமிழ் படித்தால்! அகத்தில் ஒளி பெருகும்! திறம் பெருகும்! உரம் பெருகும்! தீமைக் கெதிர் நிற்கும்! - என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
B
தாரா பாரதி
C
வாணிதாசன்
D
அப்துல் ரகுமான்
Question 41
அறம் பெருகும் ஆண்மை வரும் ; மருள் விலகிப் போகும்! புறம் பெயரும் பொய்மை எலாம்! புதுமை பெரும் வாழ்வே - என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
B
தாரா பாரதி
C
வாணிதாசன்
D
அப்துல் ரகுமான்
Question 42
நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, திருவள்ளுவமாலை ஆகியவற்றில் கோவூர்கிழார் அவர்களின் -------------------பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
A
8
B
10
C
18
D
20
Question 43
பனம்பூ மாலை ---------- என்பவருடன் தொடர்புடையது.
A
சேரர்
B
பாண்டியர்
C
சோழர்
D
பல்லவர்
Question 44
வேப்பம்பூ மாலை ---------- என்பவருடன் தொடர்புடையது.
A
சேரர்
B
பாண்டியர்
C
சோழர்
D
பல்லவர்
Question 45
ஆத்திமாலை  ---------- என்பவருடன் தொடர்புடையது.
A
சேரர்
B
பாண்டியர்
C
சோழர்
D
பல்லவர்
Question 46
இளந்தத்தனாரைச் சிறை மீட்ட செம்மல் யார்?
A
நச்சினார்க்கினியர்
B
வள்ளல் சீதக்காதி
C
கோவூர்கிழார்
D
இவர்களில் யாருமில்லை
Question 47
இந்த கூற்று எந்த எழுத்துடன் தொடர்புடையது?  அஃகேனம், முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, ஆய்தம் - என்று கூறப்படும் எழுத்து. ஒரு சொல்லின் இடையில் மட்டுமே வரும். அவ்வெழுத்தின் முன் குறிலும் அதன்பின் வல்லின உயிர்மெய்க் குறிலும் வரும்.
A
B
C
D
Question 48
சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூர், திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள பண்டைய நகரமாகும். இவ் உறையூர் முற்காலத்தில் ----------------- என்று அழைக்கப்பட்டது.
A
கொங்கு மண்டலம்
B
கோழிமாநகரம்
C
சோழமண்டலம்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 49
தாயுமானவருக்கு ஞானநெறி காட்டியவர் ?
A
நச்சினார்க்கினியர்
B
போகர்
C
காலங்கிநாதர்
D
மௌனகுரு
Question 50
தமிழின் முதல் சிறுகதை எழுத்தாளர்?
A
ஜெயகாந்தன்
B
சுஜாதா
C
ராஜம் கிருஷ்ணன்
D
வ.வே.சுப்பிரமணியம்
Question 51
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
A
சீவகசிந்தாமணி
B
மணிமேகலை
C
புறநானூறு
D
அகநானூறு
Question 52
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே, - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
A
சீவகசிந்தாமணி
B
மணிமேகலை
C
புறநானூறு
D
அகநானூறு
Question 53
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி, களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
A
சீவகசிந்தாமணி
B
மணிமேகலை
C
புறநானூறு
D
அகநானூறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 53 questions to complete.

6 Comments

Leave a Reply to Tnpsctricks Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!