Online TestTamil
10th Std Tamil Notes Part 3
10 ஆம் வகுப்பு - மூன்றாம் பாடம் - பொதுத்தமிழ் (சமச்சீர்)
Congratulations - you have completed 10 ஆம் வகுப்பு - மூன்றாம் பாடம் - பொதுத்தமிழ் (சமச்சீர்).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
அயோத்தி நாட்டு மன்னன் தசரதனுக்கு மக்கள் -------------------.
மூவர் | |
நால்வர் | |
ஐவர் | |
ஆறு |
Question 2 |
தசரதன், தன் மூத்த மகன் ------------------------ என்பவருக்கு முடிசூட்ட விழைந்தான்
இலட்சுமணன் | |
சத்துருக்கனன் | |
இராமன் | |
பரதன் |
Question 3 |
தசரதன் மனைவி கைகேயி; அவள் தோழி --------------------. இராமன் முடிசூடுவதனை விரும்பவில்லை.
சுதமதி | |
மாதரி | |
மந்தரை | |
ஆதிரை |
Question 4 |
கைகேயி, தசரதனிடம் எத்தனை வரங்களைப் பெற்றார்?
2 | |
3 | |
4 | |
5 |
Question 4 Explanation:
குறிப்பு :- தசரதன் மனைவி கைகேயி; அவள் தோழி மந்தரை, இராமன் முடிசூடுவதனை விரும்பவில்லை. எனவே, கைகேயியின் மனத்தை மந்தரை வஞ்சக உரைகளால் மாற்றினாள். மனம் மாறிய கைகேயி, தசரதனிடம் தான் பெற்ற இரு வரங்களைப் பயன்படுத்தி, இராமன் காடு செல்லவும், தன் மகன் பரதன் நாடாளவும் வேண்டுமெனக் கூறினாள்.
Question 5 |
மணிமுடி சூடப் புறப்பட்டு வந்த இராமனிடம் கைகேயி, "நீ ---------------------- ஆண்டுகள் காடு செல்ல வேண்டும். இது மன்னன் ஆணை” என்றாள்.
பன்னிரண்டு | |
பதின்மூன்று | |
பதினான்கு | |
பதினைந்து |
Question 6 |
இராமன் தன் மனைவி சீதையுடனும் தம்பி இலக்குவனுடனும் காட்டிற்குச் சென்றான். செல்லும் வழியில் -------------- கரையை அடைந்தான்.
மகாநதி | |
பிரம்மபுத்திரா | |
காவிரி | |
கங்கை |
Question 7 |
கங்கைக் கரையில், அன்பே வடிவான வேட்டுவத் தலைவன் -------------- என்பவன், இராமனைச் சந்தித்தான்.
கண்ணபிரான் | |
மதன் | |
இந்திரன் | |
குகன் |
Question 8 |
ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு; நாய கன்போர்க் குகன் எனும் நாமத்தான்; தூய கங்கைத் துறை விடும் தொன்மையான்; காயும் வில்லினன் கல்திரள் தோளினான் - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
பாஞ்சாலி சபதம், பாரதியார் | |
கம்பராமாயணம், கம்பர்
|
Question 9 |
துடியன், நாயினன், தோல் செருப்பு ஆர்த்தபேர்; அடியன், அல்செறிந் தன்ன நிறத்தினான்; நெடிய தானை நெருங்கலின் நீர்முகில்; இடியி னோடுஎழுந் தாலன்ன ஈட்டினான் - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
பாஞ்சாலி சபதம், பாரதியார் | |
கம்பராமாயணம், கம்பர்
|
Question 10 |
சிருங்கி பேரம் எனத்திரைக் கங்கையின்; மருங்கு தோன்றும் நகருறை வாழ்க்கையன்; ஒருங்கு தேனொடு மீன் உப காரத்தன்; இருந்த வள்ளலைக் காணவந் தெய்தினான் - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
பாஞ்சாலி சபதம், பாரதியார் | |
கம்பராமாயணம், கம்பர் |
Question 11 |
கூவா முன்னம் இளையோன் குறுகிநீ; ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினான்; தேவா நின்கழல் சேவிக்க வந்தனென்; நாவாய் வேட்டுவன் நாய் அடியேன் என்றான் - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
பாஞ்சாலி சபதம், பாரதியார் | |
கம்பராமாயணம், கம்பர் |
Question 12 |
நிற்றி ஈண்டு என்றுபுக்கு நெடியவன் தொழுது தம்பி; கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன் நிமிர்ந்த கூட்டச்; சுற்றமும், தானும்; உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்; எற்றுநீர்க் கங்கை நாவாய்க்கு இறை;குகன் ஒருவன் என்றான் - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
பாஞ்சாலி சபதம், பாரதியார் | |
கம்பராமாயணம், கம்பர் |
Question 13 |
அண்ணலும் விரும்பி என்பால் அழைத்தி நீ அவனை என்றான்; பண்ணவன் வருக என்னப் பரிவினன் விரைவில் புக்கான்; கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன் இருண்ட குஞ்சி; மண்ணுறப் பணிந்து மேனி வளைத்துவாய் புதைத்து நின்றான். - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
பாஞ்சாலி சபதம், பாரதியார் | |
கம்பராமாயணம், கம்பர் |
Question 14 |
இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன், எல்லை நீத்த; அருத்தியன், தேனும் மீனும் அமுதினுக்கு அமைவ தாகத்; திருத்தினன் கொணர்ந்தேன் என்கொல் திருவுளம் என்ன வீரன்; விருத்தமா தவரை நோக்கி முறுவலன் விளம்ப லுற்றான் - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
பாஞ்சாலி சபதம், பாரதியார் | |
கம்பராமாயணம், கம்பர் |
Question 15 |
அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்; தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த வன்றே; பரிவினில் தழீஇய என்னில் பவித்திரம் எம்ம னோர்க்கும்; உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான் - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
பாஞ்சாலி சபதம், பாரதியார் | |
கம்பராமாயணம், கம்பர் |
Question 16 |
கார்குலாம் நிறத்தான் கூறக் காதலன் உணர்த்து வான்; இப்பார்குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை; ஈர்கிலாக் கள்வ னேன்யான் இன்னலின் இருக்கை நோக்கித்; தீர்கிலேன் ஆன தைய செய்குவென் அடிமை என்றான் - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
பாஞ்சாலி சபதம், பாரதியார் | |
கம்பராமாயணம், கம்பர் |
Question 17 |
கோதைவில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான்; சீதையை நோக்கித் தம்பி திருமுகம் நோக்கித் தீராக்; காதல னாகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன்; யாதினும் இனிய நண்ப இருத்திஈண்டு எம்மொ டென்றான் - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
பாஞ்சாலி சபதம், பாரதியார் | |
கம்பராமாயணம், கம்பர் |
Question 18 |
சிந்தனை உணர்கிற்பான் சென்றனன் விரைவோடும்; தந்தனன் நெடுநாவாய் தாமரை நயனத்தான்; அந்தணர் தமையெல்லாம் அருளுதிர் விடைஎன்னா; இந்துவின் நுதலாளோடு இளவலொ டினிதேறா - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
பாஞ்சாலி சபதம், பாரதியார் | |
கம்பராமாயணம், கம்பர் |
Question 19 |
விடுநனி கடிதென்றான் மெய்உயிர் அனையானும்; முடுகினன் நெடுநாவாய் முரிதிரை நெடுநீர்வாய்க்; கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்; இடர்உற மறையோரும் எரியுறு மெழுகானார் - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
பாஞ்சாலி சபதம், பாரதியார் | |
கம்பராமாயணம், கம்பர் |
Question 20 |
அன்னவன் உரைகேளா அமலனும் உரைநேர்வான்; என்னுயிர் அனையாய் நீ, இளவல்உன் இளையான்,இந்; நன்னுத லவள்நின்கேள், நளிர்கடல் நிலமெல்லாம்; உன்னுடை யது,நான்உன் தொழில்உரி மையின்உள்ளேன் - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் | |
பாஞ்சாலி சபதம், பாரதியார் | |
கம்பராமாயணம், கம்பர் |
Question 21 |
பொருந்தாதது எது? சொற்பொருள்
ஆயகாலை – அந்த நேரத்தில் | |
அம்பி – நண்பன் | |
நாயகன் – தலைவன் | |
நாமம் – பெயர் |
Question 21 Explanation:
குறிப்பு : அம்பி என்பதன் சரியான சொற்பொருள் படகு.
Question 22 |
பொருந்தாதது எது? சொற்பொருள்
துறை – தோணித்துறை | |
தொன்மை – தொன்றுதொட்டு | |
கல் – மணல் | |
திரள் – திரட்சி |
Question 22 Explanation:
குறிப்பு :- கல் என்பதன் சரியான சொற்பொருள் மலை.
Question 23 |
பொருந்தாதது எது? சொற்பொருள்
துடி - பறை | |
அல் - இருள் | |
சிருங்கி பேரம் - கங்கைக் கரையோர நகரம் | |
திரை - அலை |
Question 23 Explanation:
குறிப்பு :- அல் என்பதன் சரியான சொற்பொருள் இருள்
Question 24 |
பொருந்தாதது எது? சொற்பொருள்
மருங்கு - தூரம் | |
உபகாரத்தன் - பயன் கருதாது உதவுபவன் | |
கூவா முன்னர் – அழைக்கும் முன்னர் | |
குறுகி – நெருங்கி |
Question 24 Explanation:
குறிப்பு :- மருங்கு என்பதன் சரியான சொற்பொருள் பக்கம்
Question 25 |
பொருந்தாதது எது? சொற்பொருள்
இறைஞ்சி – வணங்கி | |
சேவிக்க – வணங்க | |
நாவாய் – கடல் | |
நெடியவன் - உயர்ந்தவனாகிய இராமன் |
Question 25 Explanation:
குறிப்பு :- நாவாய் என்பதன் சரியான சொற்பொருள் படகு
Question 26 |
பொருந்தாதது எது? சொற்பொருள்
குறுகினன் - வந்துள்ளான் | |
இறை - தலைவன் | |
பண்ணவன் - நற்குணங்கள் பல உடைய இராமன் | |
பரிவு - இரக்கம் |
Question 26 Explanation:
குறிப்பு :- பண்ணவன் என்பதன் சரியான சொற்பொருள் நற்குணங்கள் பல உடைய இலக்குவன்
Question 27 |
பொருந்தாதது எது? சொற்பொருள்
குஞ்சி - தலைமுடி | |
மேனி - உடல் | |
அருத்தியன் - அன்பு உடையவன் | |
மாதவர் - முனிவர் |
Question 27 Explanation:
குறிப்பு :- மாதவர் என்பதன் சரியான சொற்பொருள் முனிவர்
Question 28 |
பொருந்தாதது எது? சொற்பொருள்
முறுவல் - கோபம் | |
விளம்பல் - கூறுதல் | |
சீர்த்த - சிறந்த | |
பவித்திரம் - தூய்மையானது |
Question 28 Explanation:
குறிப்பு :- முறுவல் என்பதன் சரியான சொற்பொருள் புன்னகை
Question 29 |
பொருந்தாதது எது? சொற்பொருள்
கார்குலாம் - மேகக்கூட்டம் | |
பார்குலாம் - உலகம் முழுதும் | |
இன்னல் - இன்பம் | |
ஈர்கிலா - எடுக்க இயலாத |
Question 29 Explanation:
குறிப்பு :- இன்னல் என்பதன் சரியான சொற்பொருள் துன்பம்
Question 30 |
பொருந்தாதது எது? சொற்பொருள்
தீர்கிலேன் - நீங்கமாட்டேன் | |
அடிமைசெய்குவென் - பணிசெய்வேன் | |
குரிசில் - படகு | |
இருத்தி - இருப்பாயாக |
Question 30 Explanation:
குறிப்பு : குரிசில் என்பதன் சரியான சொற்பொருள் தலைவன்
Question 31 |
பொருந்தாதது எது? சொற்பொருள்
நயனம் - கண்கள் | |
இந்து - நிலவு | |
நுதல் - கால் | |
கடிது - விரைவாக |
Question 31 Explanation:
குறிப்பு :- நுதல் என்பதன் சரியான சொற்பொருள் நெற்றி
Question 32 |
பொருந்தாதது எது? சொற்பொருள்
முடுகினன் - செலுத்தினன் | |
முரிதிரை - மடங்கிவிழும்அலை | |
இடர் - இன்பம் | |
அமலன் - குற்றமற்றவன் |
Question 32 Explanation:
குறிப்பு :- இடர் என்பதன் சரியான சொற்பொருள் துன்பம்
Question 33 |
பொருந்தாதது எது? சொற்பொருள்
நுதல் - நெற்றி | |
இளவல் - தம்பி | |
மருங்கு - தூரம் | |
கேழல் - பன்றி |
Question 33 Explanation:
குறிப்பு :- மருங்கு என்பதன் சரியான சொற்பொருள் பக்கம்.
Question 34 |
பொருந்தாதது எது? இலக்கணக் குறிப்பு தருக.
போர்க்குகன் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை | |
கல்திரள்தோள் – உவமைத்தொகை | |
இருந்த வள்ளல் - பெயரெச்சம் | |
வந்து எய்தினான் - வினைத்தொகை |
Question 34 Explanation:
குறிப்பு :- வந்து எய்தினான் என்பதன் சரியான இலக்கணக் குறிப்பு வினையெச்சம்.
Question 35 |
திரைக்கங்கை - இலக்கணக் குறிப்பு தருக.
உவமைத்தொகை | |
பெயரெச்சம் | |
வினைத்தொகை | |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை |
Question 36 |
நீர்முகில் - இலக்கணக் குறிப்பு தருக.
உவமைத்தொகை | |
பெயரெச்சம் | |
வினைத்தொகை | |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை |
Question 37 |
பொருந்தாதது எது? இலக்கணக் குறிப்பு தருக.
கூவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் | |
குறுகி, சேவிக்க – பெயரெச்சம் | |
கழல் – தானியாகுபெயர் | |
வந்தனென் – தன்மை ஒருமை வினைமுற்று |
Question 37 Explanation:
குறிப்பு :- குறுகி, சேவிக்க என்பதன் சரியான இலக்கணக் குறிப்பு வினையெச்சம்.
Question 38 |
பொருந்தாதது எது? இலக்கணக் குறிப்பு தருக.
அழைத்தி (அழைப்பாய்), இருத்தி – முன்னிலை ஒருமை வினைமுற்று | |
வருக – வியங்கோள் வினைமுற்று | |
பணிந்து, வளைத்து, – வினையெச்சம் | |
தேனும் மீனும் - உயர்வு சிறப்பும்மை |
Question 38 Explanation:
குறிப்பு :- தேனும் மீனும் - என்பதன் சரியான இலக்கணக் குறிப்பு எண்ணும்மை.
Question 39 |
பொருந்தாதது எது? இலக்கணக் குறிப்பு தருக.
மாதவர் - உரிச்சொற்றொடர் | |
அமைந்த காதல் - வினையெச்சம் | |
சீர்த்த - ஒன்றன்பால் வினைமுற்று | |
தழீஇய (தழுவிய) - சொல்லிசை அளபெடை |
Question 39 Explanation:
குறிப்பு :- அமைந்த காதல் என்பதன் சரியான இலக்கணக் குறிப்பு பெயரெச்சம்.
Question 40 |
பொருந்தாதது எது? இலக்கணக் குறிப்பு தருக.
கார்குலாம் (காரது குலாம்) – ஆறாம் வேற்றுமைத்தொகை | |
கார்குலாம் (காரது குலாம்) – ஆறாம் வேற்றுமைத்தொகை | |
பார்த்த கண்ணை – வினையெச்சம் | |
தீர்கிலேன், செய்குவேன் – தன்மை ஒருமை வினைமுற்று |
Question 40 Explanation:
குறிப்பு :- பார்த்தகண்ணை என்பதன் சரியான இலக்கணக் குறிப்பு பெயரெச்சம்.
Question 41 |
பொருந்தாதது எது? இலக்கணக் குறிப்பு தருக.
தீராக்காதலன் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் | |
மலர்ந்த கண்ணன் – பெயரெச்சம் | |
இனிய நண்ப – குறிப்புப் பெயரெச்சம் | |
நெடுநாவாய் – வினைத்தொகை |
Question 41 Explanation:
குறிப்பு :- நெடுநாவாய் என்பதன் சரியான இலக்கணக் குறிப்பு பண்புத்தொகை
Question 42 |
பொருந்தாதது எது? இலக்கணக் குறிப்பு தருக.
தாமரை நயனம் - உவமைத் தொகை | |
நனி கடிது - உரிச்சொற்றொடர் | |
நெடுநீர் - வினைத்தொகை | |
என்னுயிர் - ஆறாம் வேற்றுமைத்தொகை |
Question 42 Explanation:
குறிப்பு :- நெடுநீர் என்பதன் சரியான இலக்கணக் குறிப்பு பண்புத்தொகை.
Question 43 |
நன்னுதல் - இலக்கணக் குறிப்பு தருக.
பண்புத்தொகை | |
உவமைத் தொகை | |
வினைத்தொகை | |
ஆறாம் வேற்றுமைத்தொகை |
Question 44 |
நின்கேள் – இலக்கணக் குறிப்பு தருக.
நான்காம் வேற்றுமைத்தொகை | |
உவமைத் தொகை | |
வினைத்தொகை | |
ஆறாம் வேற்றுமைத்தொகை
|
Question 45 |
கம்பர் தேரழுந்தூரில் பிறந்தார். இவ்வூர் --------------- மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.
தேனி | |
ராமநாதபுரம் | |
நாகப்பட்டினம் | |
விருதுநகர் |
Question 46 |
கம்பரின் தந்தையார் -------------------.
ராஜசிம்மன் | |
ஆதித்தன் | |
செங்கணான் | |
இவர்களில் யாருமில்லை |
Question 47 |
கம்பர் ------------------ காலத்தில் வாழ்ந்தவர்.
கரிகாலன் | |
ராஜேந்திரன் | |
ராஜராஜன் | |
இரண்டாம் குலோத்துங்கன் |
Question 48 |
------------ என்பவரை திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் ஆதரித்தார்.
ஒளவையார் | |
புகழேந்திப் புலவர் | |
கம்பர் | |
சீத்தலைச் சாத்தனார் |
Question 49 |
கம்பர் காலம் ------------------- நூற்றாண்டு.
கி.பி. பத்தாம் | |
கி.பி. பதினொன்றாம் | |
கி.பி. பன்னிரண்டாம் | |
கி.பி. பதிமூன்றாம் |
Question 50 |
கம்பர் செய்நன்றி மறவா இயல்பினர். தம்மை ஆதரித்த வள்ளல் சடையப்பரை --------------------- பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் பாடிச் சிறப்பித்துள்ளார்.
பத்து | |
நூறு | |
ஆயிரம் | |
பத்தாயிரம் |
Question 51 |
சடகோபரந்தாதி, ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம், சிலையெழுபது ஆகியன ----------------- இயற்றிய நூல்கள்.
ஒளவையார் | |
புகழேந்திப் புலவர் | |
கம்பர் | |
சீத்தலைச் சாத்தனார் |
Question 52 |
-------------------- வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும். விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் ---------------. கல்வியிற் பெரியவர் -------------.என்னும் தொடர்களால் ------------ என்பவரைப் பற்றி அறியலாம்.
ஒளவையார் | |
புகழேந்திப் புலவர் | |
கம்பர் | |
சீத்தலைச் சாத்தனார் |
Question 53 |
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் என்று -------------- கம்பரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
உ.வே.சா |
Question 54 |
கீழ்க்கண்ட கூற்றில் தவறானது எது?
இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது. | |
அகத்திய முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தைத் தழுவிக் கம்பர் அதனைத் தமிழில் இயற்றினார். | |
கம்பர் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம் எனப்பட்டது | |
கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமவதாரம் எனப் பெயரிட்டார் |
Question 55 |
கீழ்க்கண்ட கூற்றில் தவறானது எது?
கம்பராமாயணத்தில் ஆறு காண்டங்கள் உள்ளன. அவை 1.பாலகாண்டம், 2.அயோத்தியா காண்டம், 3.ஆரண்ய காண்டம், 4.கிட்கிந்தா காண்டம், 5.சுந்தர காண்டம், 6.யுத்த காண்டம். | |
காண்டம் என்பது பெரும்பிரிவையும் படலம் என்பது அதன் உட்பிரிவையும் குறிக்கும் | |
தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பினால் உச்சநிலையை அடைந்தது. | |
இந்நூலின் சிறப்புக் கருதியும் திருவாசகத்தின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் தமிழுக்குக் கதி என்பர் பெரியோர். |
Question 55 Explanation:
குறிப்பு :- இந்நூலின் சிறப்புக் கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் தமிழுக்குக் கதி என்பர் பெரியோர்.
Question 56 |
கீழ்க்கண்ட கூற்றில் தவறானது எது?
கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. பொருள், அணி, நடை ஆகியவற்றால் சிறந்தது. கற்போர்க்கு இனிமை தரும் கவிச்சுவை நிறைந்தது. சொற்சுவையும் பொருட்சுவையும் தமிழ்ப் பண்பாடும் மிளிர்ந்துள்ளது | |
கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் இரண்டாம் காண்டமாகும். | |
அயோத்தியா காண்டத்தில் பன்னிரண்டு படலங்கள் உள்ளன. | |
குகப்படலம் ஏழாம் படலமாகும். இதனைக் கங்கைப் படலம் எனவும் கூறுவர். |
Question 56 Explanation:
குறிப்பு :- அயோத்தியா காண்டத்தில் பதின்மூன்று படலங்கள் உள்ளன.
Question 57 |
வடசொல் கிளவி வடஎழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே - என்று கூறும் நூல்?
தொல்காப்பியம் (எச்சவியல்) | |
திருக்குறள் | |
திருவாசகம் | |
இனியவை நாற்பது |
Question 58 |
தொல்காப்பிய நெறி நின்றவர் -------------?
திருவள்ளுவர் | |
கம்பர் | |
ஒளவையார் | |
புகழேந்திப் புலவர் |
Question 59 |
வடசொல்லைப் பயன்படுத்தும் போது வடஎழுத்தை நீக்கித் தமிழ்ப்படுத்த வேண்டும் என்னும் தொல்காப்பிய இலக்கணப்படி ராமன், ஹனுமன், லஷ்மணன், விபீஷணன் என்னும் பெயர்களை இராமன், அனுமன், இலக்குவன், வீடணன் என நெறிப்படுத்திய தமிழ் வேந்தர் --------------------. வடமொழி எழுத்தையும் பிறமொழிக் கலப்பையும் தடுத்தவர் இவரே.
திருவள்ளுவர் | |
கம்பர் | |
ஒளவையார் | |
புகழேந்திப் புலவர் |
Question 60 |
உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடாலாம் - என்று கூறியவர் யார்?
ஜி.யு.போப் | |
கால்டுவெல் | |
கால்டுவெல் | |
கமில் சுவலபில் |
Question 61 |
மராட்டிய --------------- மாவட்டத்தில் தபோலி என்னும் சிற்றூர் உள்ளது.
அமராவதி | |
கொங்கண் | |
அவுரங்காபாத் | |
நாக்பூர் |
Question 62 |
கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது?
அவர் சமுதாய மறுமலர்ச்சியின் முன்னோடி; சமத்துவக் காவலர்; உலகச் சாதனையாளர் வரிசையில் முன்னிற்பவர்; அரசியல் சட்டமேதை; தேசியத் தலைவராகவும் திகழ்ந்தவர்; பல்வேறு மத இன மொழி சமூகப் பழக்க வழக்கங்கள் கொண்ட இந்நாட்டை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஒருங்கிணைத்தவர்.
அண்ணா | |
பெரியார் | |
காந்தி | |
அம்பேத்கர் |
Question 63 |
மராட்டிய மாநிலத்தில் கொங்கண் மாவட்டத்தில் உள்ள அம்பவாடே என்னும் சிற்றூரில் 1891ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் பதினான்காம் நாள் (14.04.1891) -------------- என்பவர் பிறந்தார்.
அண்ணா | |
பெரியார் | |
காந்தி | |
அம்பேத்கர் |
Question 64 |
கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது?
அவர்தம் தந்தையார் இராம்ஜி சக்பால், தாயார் பீமாபாய். செல்வம் நிறைந்த குடும்பத்தில் பதினான்காவது பிள்ளையாகப் பிறந்தார் அவர். ------------------- இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி. மகாபாரதப் பீமனைப் போலவே தன் மகனும் எவருமே அசைக்க முடியாத வீரனாக வருங்காலத்தில் வரவேண்டும் என்ற எண்ணத்தில் பீம் எனப் பெயர் சூட்டினார் தந்தை இராம்ஜி சக்பால்.
அண்ணா | |
பெரியார் | |
காந்தி | |
அம்பேத்கர் |
Question 65 |
பீமாராவின் ஆசிரியர் பெயர்?
சிவாஜிராவ் | |
ராமராவ் | |
அம்பேத்கர் | |
இவர்களில் யாருமில்லை |
Question 65 Explanation:
குறிப்பு :- ஆசிரியர் என்பவர் அறிவுக்கடலாக மட்டுமன்றி அறத்தின் ஆழியாகவும் விளங்க வேண்டும். சாதி மதங்களைப் பாரோம் - உயர் சென்மம் இத்தேசத்தில் எய்தினர் ஆயின் வேதியர் ஆயினும் ஒன்றே - அன்றி | வேறு குலத்தினர் ஆயினும் ஒன்றே என்னும் உயரிய நோக்குடன் செயல்பட்டவர் பீமாராவின் ஆசிரியர் அம்பேத்கர்.காலத்தினால் செய்த இவ்வுதவியை ஞாலத்தினும் பெரிதெனக் கருதினார் பீமாராவ். அவ்வாசிரியர் பெயரையே தம்பெயராகக் கொண்டார்.
Question 66 |
அம்பேத்கர் ------------- ஆம் ஆண்டு எல்பின்ஸ்டன் பள்ளியில் தம்முடைய உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார்.
1908 | |
1918 | |
1905 | |
1915 |
Question 67 |
பரோடா மன்னர் பொருளுதவியுடன் --------------- ஆம் ஆண்டு பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார், அம்பேத்கர்.
1912 | |
1918 | |
1905 | |
1915 |
Question 68 |
அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ------------------- ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார், அம்பேத்கர்.
1912 | |
1918 | |
1905 | |
1915 |
Question 69 |
-------------------- ஆம் ஆண்டு இலண்டனில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார், அம்பேத்கர்.
1912 | |
1916 | |
1905 | |
1915 |
Question 70 |
மும்பையில் சிறிது காலம் ------------------ பேராசிரியராகப் பணியாற்றினார், அம்பேத்கர்.
அரசியல் அறிவியல் | |
வணிகவியல் | |
பொருளியல் | |
கணிதம் |
Question 71 |
அம்பேத்கர், மீண்டும் --------------------- சென்று அறிவியல் முதுகலைப் பட்டமும் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.
பாரிசு | |
ஜப்பான் | |
இலண்டன் | |
தென் ஆப்பிரிக்கா |
Question 72 |
கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது?
----------------------- என்பவர், இந்தியா திரும்பியபின் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார்; கட்டணமின்றி ஏழைகளுக்கு வழக்காடி நீதியைப் பெற்றுத் தந்தார். அவர் அரசியல், சட்டம், சமூகம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, வாணிகம், கல்வி, சமயம் என அனைத்துத் துறைகளிலும் நிகரற்ற அறிஞராகத் திகழ்ந்தார்; ஒரு நாளில் பதினெட்டு மணி நேரத்தைக் கல்வி கற்பதற்காகவே செலவழித்தார்; நூலகத்தில் காலையில் முதல் ஆளாக நுழைவார்; மாலையில் இறுதி ஆளாக வெளியேறுவார்.
அண்ணா | |
பெரியார் | |
காந்தி | |
அம்பேத்கர் |
Question 73 |
தந்தை பெரியார் ----------------------- ஆம் ஆண்டு கேரளாவில் வைக்கத்தில் நடத்திய ஒடுக்கப்பட்டோர் ஆலய நுழைவு முயற்சியும், -------------------------- ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் இருபதாம் நாள் அம்பேத்கர் மராட்டியத்தில் மகாத்துக் குளத்தில் நடத்திய தண்ணீர் எடுக்கும் போராட்டமும் மனித உரிமைக்காக முதலில் நடத்தப் பெற்ற போராட்டங்கள் எனலாம்.
1924, 1927 | |
1922, 1928 | |
1925, 1929 | |
1923, 1926 |
Question 74 |
'இங்கிலாந்து சொல்வதற்கெல்லாம் இந்தியா தலையசைக்கும் என்பது தவறு; இந்தநிலை எப்போதோ மாறிவிட்டது; இந்திய மக்களின் எண்ணங்களை நீங்கள் ஈடேற்றவேண்டும்' என ஆங்கிலேயரிடம் அச்சமின்றி ஆணித்தரமாகக் கூறியவர் யார்?
அண்ணா | |
பெரியார் | |
காந்தி | |
அம்பேத்கர் |
Question 75 |
வட்டமேசை மாநாடு 1930ஆம் ஆண்டு நடைபெற்றது. அம்மாநாட்டில் ------------------- கலந்துகொண்டார். அம்மாநாட்டில் “அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன்" என்று, தனது கருத்தைத் தொடங்கினார். - இவர் யார்?
அண்ணா | |
பெரியார் | |
காந்தி | |
அம்பேத்கர் |
Question 76 |
மாற்றார் ஆதிக்கத்தை நீக்கி, மக்களால் ஆளப்படும் மக்களாட்சியையே நாங்கள் விரும்புகிறோம்; வெறும் எஜமான மாற்றத்தை நாங்கள் விரும்பவில்லை; எங்கள் கைகளில் அரசியல் அதிகாரம் வந்தாலொழிய, எங்கள் குறைகள் நீங்கா என மொழிந்தவர் யார்?
அண்ணா | |
பெரியார் | |
காந்தி | |
அம்பேத்கர் |
Question 77 |
விடுதலைக்குப் பிறகு இந்திய அமைச்சரவையில் அண்ணல் அம்பேத்கரையும் இடம்பெறச் செய்ய வேண்டுமென்று பெரிதும் விரும்பியவர் யார்?
அண்ணா | |
ராஜாஜி | |
காந்தி | |
நேரு |
Question 78 |
கீழ்க்கண்ட கூற்று யாரைப் பற்றியது?
இவர், சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வகுக்க எழுவர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பலரும் செயல்படாமல் விலகினர். இறுதியில், இவர் ஒருவரே அந்த ஒப்பற்ற பணியைச் செய்து முடித்தார். 1950ஆம் ஆண்டு சனவரித் திங்கள் இருபத்தாறாம் நாள், இந்தியா முழுமையான குடியரசு நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்டது.
அண்ணா | |
ராஜாஜி | |
காந்தி | |
அம்பேத்கர் |
Question 79 |
கீழ்க்கண்ட கூற்று யாருடையது?
அறியாமைதான் அனைத்திற்கும் மூலகாரணம் என்பதை இவர், நன்குணர்ந்தார். எனவே, “ஒவ்வொருவரும் முழுமனித நிலையை அடைய கல்வி, செல்வம்,உழைப்பு ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது. செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வி களர்நிலம். உழைப்பும் கல்வியும் அற்ற செல்வம் மிருகத்தனம்” என்றார்.
அண்ணா | |
அம்பேத்கர் | |
காந்தி | |
நேரு |
Question 80 |
'கற்பித்தல், அறிவியல் முறைக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்; விருப்பு வெறுப்பற்ற முறையில் கற்பித்தல் நிகழ்தல் வேண்டும். மாணவனுக்குள் தகவல்களைத் திணிப்பதாகக் கல்வி இருத்தல்கூடாது; அஃது, அவனது ஊக்கத்தைத் தூண்டுவதுடன் தனித்தன்மையை வெளிக்கொணர்வதாக இருத்தல் வேண்டும்' என்றும் கற்றல், கற்பித்தலின் உயர்ந்த குறிக்கோள் பற்றி கூறியவர் யார்?
அண்ணா | |
அம்பேத்கர் | |
காந்தி | |
நேரு |
Question 81 |
----------------- ஆம் ஆண்டு, மக்கள் கல்விக்கழகத்தைத் தோற்றுவித்தார், அம்பேத்கர்.
1940 | |
1943 | |
1946 | |
1949 |
Question 82 |
மும்பையில், ----------------------- என்பவரின் அரிய முயற்சியால் உருவான சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தில் இன்றைய அறிவு வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.
அண்ணா | |
அம்பேத்கர் | |
காந்தி | |
நேரு |
Question 83 |
'இந்தியாவின் தேசியப் பங்குவீதம்' என்னும் நூலின் ஆசிரியர் ?
அண்ணா | |
அம்பேத்கர் | |
காந்தி | |
நேரு |
Question 84 |
புதியன சிந்திப்பதும் படைப்பதுமே புத்துலகம் சமைக்கும் சிற்பிகளின் நோக்கம். இந்திய நாட்டின் சாதி என்னும் இருளை அகற்ற வந்த அறிவுக்கதிர் ----------------.
அண்ணா | |
அம்பேத்கர் | |
காந்தி | |
நேரு |
Question 85 |
சாதி என்பது எல்லாம் வல்ல ஒருவன் கட்டளையால் தோன்றியதன்று. குறிப்பிட்ட சில சூழ்நிலைக்கு ஆட்பட்ட மனித சமூக வாழ்வில் தானாகவே வேரூன்றி விட்ட வளர்ச்சியாகும். சாதி களையப்பட வேண்டிய களை என்று அவர் கருதியவர் யார்?
அண்ணா | |
அம்பேத்கர் | |
காந்தி | |
நேரு |
Question 86 |
சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது என்று கூறியவர்?
அண்ணா | |
அம்பேத்கர் | |
காந்தி | |
நேரு |
Question 87 |
'இந்தியப் பொருளாதார மேம்பாட்டிற்குச் சாதி என்பது, நன்மை தராது; இந்தியர்களின் நலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் சாதி என்னும் நோய் தீங்கு விளைவிக்கின்றது; அது மக்களிடையே ஒருமைப்பாட்டைச் சீர்குலைத்து விட்டது. இதனை அவர்கள் உணரும்படி செய்துவிட்டால் போதும்; அதுவே எனக்கு நிறைவு தரும்' - என்று கூறியவர்?
அண்ணா | |
அம்பேத்கர் | |
காந்தி | |
நேரு |
Question 88 |
“ஓர் இலட்சிய சமூகம்சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது” - என்று கூறியவர்?
அண்ணா | |
அம்பேத்கர் | |
காந்தி | |
நேரு |
Question 89 |
"சனநாயகத்தின் மறுபெயர்தான் சகோதரத்துவம்; சுதந்தரம் என்பது சுயேச்சையாக நடமாடும் உரிமை; உயிரையும் உடைமையையும் பாதுகாக்கும் உரிமை அது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதே சமத்துவமாகும்” என்று, சனநாயகத்திற்கு அரியதொரு விளக்கம் தந்தவர் யார்?
அண்ணா | |
அம்பேத்கர் | |
காந்தி | |
நேரு |
Question 90 |
சமத்துவத்தின் மறுபெயரே மனிதநேயம்; எங்கே சமத்துவம் மறுக்கப்படுகின்றதோ, அங்கே மனிதப் பண்பு மறைந்து விடுவதை அவர் அனைவருக்கும் உணர்த்தினார். - இவர் யார்?
அண்ணா | |
அம்பேத்கர் | |
காந்தி | |
பெரியார் |
Question 91 |
அம்பேத்கர் ஓர் அறிவுச் சுரங்கம். இவர், அறியாமைக்கு எதிராக ஆற்றிய மகத்தான பணி சான்றோர் நெஞ்சில் நிலைக்கச் செய்தது. "அம்பேத்கர் உலகத் தலைவர்களுள்ஒருவர், பகுத்தறிவுச் செம்மல், ஆராய்ச்சியின் சிகரம், மக்களின் மாபெரும் வழிகாட்டி,அப்பெருந்தலைவரைப் போல வேறு யாரையும் நாம் காணமுடியாது” என்று ------------------- என்பவர் புகழாரம் சூட்டினார்.
அண்ணா | |
அம்பேத்கர் | |
காந்தி | |
பெரியார் |
Question 92 |
“பகுத்தறிவுத் துறையில் அவருக்கு இணை அவரே. ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்த பெருமை இவரையே சாரும்" என்று அம்பேத்கரை ------------------- என்பவர் புகழ்ந்துரைத்தார்.
அண்ணா | |
அண்ணா | |
காந்தி | |
நேரு |
Question 93 |
“அண்ணல் அம்பேத்கர் தன்னலமற்றவர், மிகவும் ஆர்வத்துடனும் விரைந்தும் தன்னந் தனியனாகச் செயல்பட்டவர். தமக்குக் கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்தவர்" என்று ----------------- என்பவர் பாராட்டியுள்ளார்.
பெரியார் | |
ராஜாஜி | |
இந்திரா காந்தி | |
இராசேந்திர பிரசாத் |
Question 94 |
நாட்டிற்காக அயராது உழைத்த அண்ணல் அம்பேத்கர் ------------------ ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் ஆறாம் நாள் புகழுடம்பு எய்தினார்.
1956 | |
1957 | |
1958 | |
1959 |
Question 95 |
இந்திய அரசு, பாரத ரத்னா (இந்திய மாமணி) என்னும் உயரிய விருதை அண்ணல் அம்பேத்கருக்கு ------------ ஆம் ஆண்டு வழங்கிப் பெருமைப்படுத்தியது.
1989 | |
1990 | |
1991 | |
1992 |
Question 96 |
------------------------ என்பவர், இந்திய நாட்டின் ஒளிமிகுந்த எதிர்காலத்தைப் பற்றிக் கனவு கண்ட இலட்சிய மனிதர். தாம் கண்ட இலட்சியக் கனவுகளை அறிவுத் திறத்தினால் உறுதிப்படுத்தியவர். அவர், உயரிய ஆளுமைத் திறனைக் கொண்டவர், கூர்த்த அறிவுவன்மை உடையவர், மனித உரிமைக்காக உழைத்தவர்.
அண்ணா | |
அம்பேத்கர் | |
காந்தி | |
நேரு |
Question 97 |
சமுதாயமெனும் மரத்தின் வேரைச் சாதிப் புழுக்கள் அரித்து விடாமல் தடுத்த நச்சுக்கொல்லி மருந்து அவர். கல்வி அறிவின்றி நாடு முன்னேற முடியாது என்று உரைத்தவர். அவர், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காகத் தம்மை முழுயாக அர்ப்பணித்துக் கொண்டவர். - இவர் யார்?
அண்ணா | |
அம்பேத்கர் | |
காந்தி | |
நேரு |
Question 98 |
இருபெருந் தலைவர்கள் - இந்தியாவில் இருந்தார்கள். வடக்கே இருந்து --------------------- என்பவரும், தெற்கேயிருந்து ---------------- என்பவரும் இடைவிடாது உழைத்ததனால் சாதி என்னும் பாறை உடைந்து சுக்கு நூறானது.
அம்பேத்கர், பெரியார் | |
பகத் சிங், வ.உ.சி | |
நேதாஜி, காமராஜர் | |
நேரு, முத்துராமலிங்கம் |
Question 99 |
ஒருமை பன்மைப் பிழை நீக்கி எழுதுக?
இப்போது அவர் கையில் கோப்புகள் இருந்தது | |
இப்போது அவர் கையில் கோப்புகள் இருந்தன | |
இப்போது அவர்கள் கையில் கோப்புகள் இருந்தன | |
இப்போது அவரின் கையில் கோப்புகள் இருந்தது |
Question 100 |
ஒருமை பன்மைப் பிழை நீக்கி எழுதுக?
வயது வந்தோர்க்கும் பெண்களுக்கும் வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டும் என அம்பேத்கர் கூறியதை நாளேடுகள் புகழ்ந்தது | |
வயது வந்தோர்க்கும் பெண்களுக்கும் வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டும் என அம்பேத்கர் கூறியதை நாளேடுகள் புகழ்ந்தன | |
வயது வந்தோர் பெண்களுக்கும் வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டும் என அம்பேத்கர் கூறியதை நாளேடுகள் புகழ்ந்தது | |
வயது வந்தோர்க்கும் பெண்கள் வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டும் என அம்பேத்கர் கூறியதை நாளேடுகள் புகழ்ந்தன |
Question 101 |
சந்திப் பிழை நீக்கி எழுதுக.
ஆசிரியர் பெயரை தம் பெயருடன் சேர்த்துப் பீமாராவ் அம்பேத்கராக மாறினார் | |
ஆசிரியர் பெயரைத் தம் பெயருடன் சேர்த்துப் பீமாராவ் அம்பேத்கராக மாறினார் | |
ஆசிரியர் பெயரைத் தம் பெயருடன் சேர்த்து பீமாராவ் அம்பேத்கராக மாறினார் | |
ஆசிரியர்ப் பெயரை தம் பெயருடன் சேர்த்து பீமாராவ் அம்பேத்கராக மாறினார் |
Question 102 |
சந்திப் பிழையை நீக்கி எழுதுக
ஏழைகளுக்கு பொருள் பெறாமல் வாதாடி நீதி பெற்றுத் தந்தார் | |
ஏழைகளுக்கு பொருள் பெறாமல் வாதாடி நீதி பெற்றுத் தந்தார் | |
ஏழைகளுக்குப் பொருள் பெறாமல் வாதாடி நீதிப் பெற்றுத் தந்தார் | |
ஏழைகளுக்குப் பொருள்ப் பெறாமல் வாதாடி நீதி பெற்று தந்தார் |
Question 103 |
சந்திப்பிழை நீக்கி எழுதுக
ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அரசுப் பணி அனைத்து துறைகளிலும் கொடுக்கவ் வேண்டும் | |
ஆண்களைப் போலவேப் பெண்களுக்கும் அரசு பணி அனைத்துத் துறைகளிலும் கொடுக்க வேண்டும் | |
ஆண்களை போலவே பெண்களுக்கும் அரசுப் பணி அனைத்துத் துறைகளிலும் கொடுக்க வேண்டும் | |
ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அரசுப் பணி அனைத்துத் துறைகளிலும் கொடுக்க வேண்டும் |
Question 104 |
சந்திப்பிழை நீக்கி எழுதுக
ஆளும் அறிவும் வளர்வதற்கும் முன்பாக வாழ்க்கை பயணமாம் | |
ஆளும் அறிவும் வளர்வதற்கு முன்பாக வாழ்க்கைப் பயணமாம் | |
ஆளும் அறிவும் வளர்வதற்கு முன்பாகவ் வாழ்க்கை பயணமாம் | |
ஆளும் அறிவும் வளர்வதற்கு முன்பாக வாழ்க்கை பயணமாம் |
Question 105 |
ஒருமைப் பன்மைப் பிழை நீக்கி எழுதுக
கல்வி நலம்பெற்ற பெண்பாற் புலவருக்கு மன்னரும் பணிந்தார் | |
கல்வி நலம்பெற்ற பெண்பாற் புலவருக்கு மன்னரும் பணிந்தனர் | |
கல்வி நலம்பெற்ற பெண்பாற் புலவருக்கு மன்னரும் பணிந்தார்கள் | |
கல்வி நலம்பெற்ற பெண்பாற் புலவருக்கு மன்னரும் பணிந்தனர்கள் |
Question 106 |
ஒருமைப் பன்மைப் பிழை நீக்கி எழுதுக
பெண்கள் பெற வேண்டியது பெண் கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை | |
பெண்கள் பெற வேண்டியன பெண் கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை | |
பெண்கள் பெற வேண்டியவை பெண் கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை | |
பெண்கள் பெற வேண்டும் பெண் கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை |
Question 107 |
சட்டம் என்பதற்குச் ------------------ என்பது பொருள்.
சான்று | |
செம்மை | |
ஆதாரம் | |
உரிமை |
Question 107 Explanation:
விளக்கம் :- செம்மை என்னும் சொல் நடுவுநிலை என்னும் பொருளிலும் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.
Question 108 |
அரசன், கொலைத்தொழில் புரியும் கொடியவர்களுக்கு மரண தண்டனை அளித்தல் குற்றமன்று, அது பயிருடன் வளர்ந்த களைகளை நீக்குதல் போன்றதாகும் எனக் கூறியவர்?
பாரதியார் | |
திரு.வி.க | |
வள்ளுவர் | |
நாமக்கல் கவிஞர் |
Question 108 Explanation:
குறிப்பு :- கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர் - குறள் 550.
Question 109 |
தண்டனை வழங்குவது பற்றிக் கூறிய ------------------- என்பவரே, அச்சட்டங்கள் மனிதநேய அடிப்படையில் நெகிழ்வுத்தன்மை உடையனவாகவும் அமைதல் வேண்டும் என்கிறார்.
பாரதியார் | |
திரு.வி.க | |
வள்ளுவர் | |
நாமக்கல் கவிஞர் |
Question 109 Explanation:
குறிப்பு :- கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர் - குறள், 562.
Question 110 |
தமிழ்நாட்டில் வேளாண்மைக் கடன் நிவாரணச் சட்டம், கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம், உள்ளாட்சித் துறைச் சட்டம், முதலியன எதற்கு சான்றாகும்?
அனைத்து நாட்டு சட்டம் | |
விவசாய சட்டம் | |
இந்தியச் சட்டம் | |
மாநில தனிச்சட்டங்கள் |
Question 111 |
கீழ்க்கண்ட கூற்றில் தவறானது எது?
இந்தியாவில் அவரவர் பின்பற்றிய சமயத்திற்கேற்ற சட்டங்களும் உள்ளன | |
இந்துச் சமயத்தைச் சார்ந்தோருக்கு இந்துச் சட்டம் உள்ளது | |
இசுலாமியர்களுக்கான இசுலாமியர் சட்டம் உள்ளது. கிறித்தவர்களுக்கான சட்டம் உள்ளது | |
பெளத்தர்களுக்கும் சமணர்களுக்கும் தனியான மதச் சட்டங்களென தனித் தனிச் சட்டங்கள் உள்ளன. |
Question 111 Explanation:
குறிப்பு :- பெளத்தர்களுக்கும் சமணர்களுக்கும் தனியான மதச் சட்டங்களென எவையுமில்லை. இந்துச்சமயச் சட்டங்களே அவர்களுக்கும் பொருந்தும்.
Question 112 |
குற்றங்கள் ---------- வகைப்படும்.
2 | |
3 | |
3 | |
5 |
Question 112 Explanation:
குறிப்பு :- குற்றங்கள் இரு வகைப்படும். ஒன்று, சட்டம் செய்யக்கூடாது என்று வலியுறுத்திச் சொன்னதைச் செய்தல்; மற்றொன்று, சட்டம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதைச் செய்யாமல் இருத்தல்.
Question 113 |
அரசியல் சாசனத்தின் ----------------- பிரிவின் படி குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை, உண்டு.
19 (1) ஆவது | |
20 (1) ஆவது | |
21 (1) ஆவது | |
22 (1) ஆவது |
Question 114 |
இந்தியக் குடிமக்கள் தனியாகவோ ஓர் அமைப்பின் மூலமாகவோ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ---------------------- தகவல் பெறலாம்.
2005 பிரிவு 6 இன்படி | |
2006 பிரிவு 6 இன்படி | |
2011 பிரிவு 6 இன்படி | |
2012 பிரிவு 6 இன்படி |
Question 115 |
தகவல் உரிமைச் சட்டத்தின் படி மாநில, மைய அரசு சார்ந்த அதிகார அமைப்பிடமிருந்து தகவல் பெறுவதற்குப் -------------- உரூபாயை விண்ணப்பிக்க கட்டணமாகச் செலுத்துதல் வேண்டும்.
10 | |
10 | |
20 | |
25 |
Question 116 |
'ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்' - என்று கூறும் நூல்?
ஆத்திச்சூடி | |
பழமொழி நானூறு | |
திருக்குறள் | |
தொல்காப்பியம் |
Question 117 |
எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் ஆகிய இரண்டிலும் கூறப்படாத பொதுவான செய்திகள் சொல்லப்படுவது ------------------- ஆகும்.
வழு | |
ஆகுபெயர் | |
பொது | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 118 |
வெளிப்படையாகத் தன்பொருளை உணர்த்தும் சொல் ---------------- எனவும், ஒரு தொடர் முன்னும் பின்னும் வருகின்ற சொற்கள் உணர்த்தும் குறிப்பால் ஒரு பொருளைத் தருவது ------------- எனவும் கூறுவர்.
வெளிப்படை, குறிப்பு | |
பொது, ஆகுபெயர் | |
பொருள்கோள், வழாநிலை | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 119 |
உயர்திணை அஃறிணை ஆகிய இரண்டிலும் பொதுவான சொற்கள் உண்டு. ஒரு சொல், தொடரில் முன்னும், பின்னும் வரும் சொற்களின் தொடர்பாலும், குறிப்பாலும் ஒரு பாலை நீக்கி மற்றொரு பாலைச் சுட்டும். அதற்கு ---------------- என்பது பெயர்.
பொருள்கோள் | |
ஆகுபெயர் | |
ஒன்றொழி பொதுச்சொல் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 119 Explanation:
குறிப்பு :- ஒன்றொழி பொதுச்சொல்:-
உயர்திணை அஃறிணை ஆகிய இரண்டிலும் பொதுவான சொற்கள் உண்டு. ஒரு சொல், தொடரில் முன்னும், பின்னும் வரும் சொற்களின் தொடர்பாலும், குறிப்பாலும் ஒரு பாலை நீக்கி மற்றொரு பாலைச் சுட்டும். அதற்கு ஒன்றொழி பொதுச்சொல் என்பது பெயர்.
உயர்திணையில், (எ.கா.) :
1 . வீட்டின் முன் ஐவர் கோலமிட்டனர்.
2 . நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர்.
-முதல் தொடரில் வந்துள்ள ஐவர் என்னும் பொதுச் சொல் கோலமிட்டனர் என்னும் குறிப்பால் ஆண்பாலை நீக்கிப் பெண்பாலை உணர்த்தி நின்றது. இரண்டாம் தொடரிலுள்ள ஐவர் என்னும் பொதுச் சொல் போர்க்களம் என்னும் சொல்லின் குறிப்பால் பெண்பாலை விடுத்து, ஆண்பாலை மட்டும் உணர்த்தி நின்றது.
அஃறிணையில், (எ.கா.) :
1 . இம்மாடு வயலில் உழுகிறது.
2 . இம்மாடு பால் கறக்கிறது.
முதல் தொடரில் வந்துள்ள 'மாடு' என்னும் பொதுச் சொல் உழுகிறது என்னும் வினைக்குறிப்பால் காளைமாட்டையும், இரண்டாவது தொடரில் வரும் 'மாடு' என்னும் பொதுச்சொல் கறக்கிறது என்னும் வினைக்குறிப்பால், பசுமாட்டையும் குறிப்பிடுகின்றது. இவ்வாறு, ஒரு பொதுச்சொல் முன்பின் சேர்ந்து வரும் சொல்லின் குறிப்பால் ஆண்பாலையோ பென்பாலையோ உணர்த்தி வருவது ஒன்றொழி பொதுசொல் எனப்படும்.
ஒன்றொழி பொதுச்சொல் விகாரம் தகுதி
ஆகு பெயர்அன் மொழிவினைக் குறிப்பே
முதல்தொகை குறிப்போ டின்ன பிறவும்
குறிப்பின் தருமொழி அல்லன வெளிப்படை – நன்னூல்.
Question 120 |
ஒருசொல் தன் பொருளையும் குறித்துத் தனக்கு இனமான பொருளையும் குறித்து வருவது ---------------- எனப்படும்.
இனங்குறித்தல் | |
ஆகுபெயர் | |
ஒன்றொழி பொதுச்சொல் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 120 Explanation:
விளக்கம் :- இனங்குறித்தல் :-
கதிர்வேல் வெற்றிலை தின்றான்.
இத்தொடர் கதிர்வேல் வெற்றிலை மட்டுமா தின்றான். வெற்றிலையோடு அதற்கு இனமான பாக்கு, சுண்ணாம்பு முதலானவற்றையும் சேர்த்துத் தின்றான் எனப் பொருள்படுகிறது. இவ்வாறு ஒருசொல், தன்பொருளையும் குறித்துத் தனக்கு இனமான பொருளையும் குறித்து வருவது இனங்குறித்தல் எனப்படும்.
ஒருமொழி ஒழிதன் இனங்கொளற் குரித்தே – நன்னூல் 359.
Question 121 |
அசைநிலைக்கும், விரைவு, சினம், மகிழ்ச்சி, அச்சம், துன்பம் முதலிய பொருள் நிலைக்கும், செய்யுளில் இசையை நிறைவு செய்வதற்கும் இரண்டு மூன்று நான்குமுறை அடுக்கி வருவது --------------- எனப்படும்.
இரட்டைக்கிளவி | |
ஆகுபெயர் | |
பொருள்கோள் | |
அடுக்குத்தொடர் |
Question 121 Explanation:
விளக்கம் :- அடுக்குத்தொடர் :
அசைநிலைக்கும், விரைவு சினம் மகிழ்ச்சி அச்சம் துன்பம் முதலிய பொருள் நிலைக்கும், செய்யுளில் இசையை நிறைவு செய்வதற்கும் இரண்டு மூன்று நான்குமுறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் எனப்படும்.
(எ.கா.) : 1 . அன்றே அன்றே – அசைநிலை.
2 . போ போ – விரைவு.
3 . எறி எறி – சினம்.
4 . வருக வருக – மகிழ்ச்சி.
5 . தீ தீ தீ – அச்சம்.
6 . நொந்தேன் நொந்தேன் – துன்பம்.
7 . கோடி கோடி கோடி கோடியே – இசை நிறை.
அசைநிலை பொருள்நிலை இசைநிறைக் கொருசொல்
இரண்டு மூன்று நான் கெல்லை முறை அடுக்கும். – நன்னூல் 395.
Question 122 |
இரட்டித்து நின்று பொருள் உணர்த்தும் சொற்கள் இரட்டித்தே வரும். பிரித்தால் பொருள் தராது. இதனை --------------- என்பர்.
இரட்டைக்கிளவி | |
ஆகுபெயர் | |
பொருள்கோள் | |
அடுக்குத்தொடர் |
Question 122 Explanation:
குறிப்பு :- இரட்டைக்கிளவி:- இரட்டித்து நின்று பொருள் உணர்த்தும் சொற்கள் இரட்டித்தே வரும். பிரித்தால் பொருள் தராது. இதனை இரட்டைகிளவி என்பர். (கிளவி – சொல்) இரட்டைக் கிளவி இரண்டு சொல்.
(எ.கா) :-
1 . பாவை படபடவெனப் பேசினாள்.
2 . கலா கலகலவெனச் சிரித்தாள்.
இரட்டைக் கிளவி இரட்டிற் பிரிந்திசையா – நன்னூல் 396.
அடுக்குத்தொடருக்கும் இரட்டைக்கிளவிக்கும் உள்ள வேறுபாடு:-
அடுக்குத்தொடர் : சொற்கள் தனித்தனியே நிற்கும்.
இரட்டைக்கிளவி : சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும்.
அடுக்குத்தொடர் : பிரித்தால் பொருள் தரும்.
இரட்டைக்கிளவி : பிரித்தால் பொருள் தராது.
அடுக்குத்தொடர் : இரண்டு மூன்று நான்கு முறை அடுக்கி வரும்.
இரட்டைக்கிளவி : இரட்டித்தே வரும்.
அடுக்குத்தொடர் : விரைவு, அச்சம், வெகுளி, மகிழ்ச்சி.
இரட்டைக்கிளவி : இசை குறிப்பு , பண்பு பற்றி வரும்.
Question 123 |
இளவழகன் வந்தான். இது --- தொடர்.
வெளிப்படை | |
இனம்குறித்தில் | |
குறிப்பு | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 124 |
மாடு என்னும் சொல் ----------------.
அஃறிணைப் பொதுப்பெயர் | |
உயர்திணைப் பொதுப்பெயர் | |
விரவுப் பெயர் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 125 |
ஷேத்திரங்கள் தோறும் சென்று விக்கிரகங்களை வழிபடுக - இத்தொடரில் காணும் பிறமொழிச் சொற்களுக்குரிய தமிழ்ச்சொற்கள் அமைந்த தொடரைக் கண்டறிக.
திருத்தலங்கள் தோறும் சென்று விக்கிரகங்களை வழிபடுக | |
ஊர்கள்தோறும் சென்று விக்கிரகங்களை வழிபடுக | |
புண்ணியத்தலந்தோறும் சென்று கடவுள் சிலைகளை வழிபடுக | |
சிற்றூர்கள் தோறும் சென்று இறைவனை வழிபடுக |
Question 126 |
பொருந்தாதது எது? பிறமொழிச் சொற்களுக்குரிய தமிழ்ச்சொற்கள் அமையாத தொடரைக் கண்டறிக.
இம்மார்க்கத்தில் யாத்திரை செல்லுங்கள் - இவ்வழியே புண்ணியப் பயணம் செல்லுங்கள் | |
இந்த சர்ட் மிகவும் காஸ்ட்லியானது - இந்த மேலாடை மிகுந்த விலை மதிப்புள்ளது | |
நாளை நடக்கவிருக்கும் மேட்சில் இந்தியா கண்டிப்பாய் வின் செய்யும் - நாளை நடக்கவிருக்கும் போட்டியில் இந்தியா உறுதியாய் வெற்றி பெறும் | |
நான் இந்தக் காலேஜின் ஓல்ட் ஸ்டுடென்ட் - நான் இந்த கல்லூரியின் ஓல்ட் மாணவன் |
Question 126 Explanation:
குறிப்பு :- நான் இந்தக் காலேஜின் ஓல்ட் ஸ்டுடென்ட் - நான் இந்த கல்லூரியின் மேனாள் மாணவன்.
Question 127 |
இணையான தமிழ்ப்பழமொழி - money makes many things.
பணம் பத்தும் செய்யும் | |
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது | |
காலம் பொன் போன்றது | |
வருமுன் காப்பதே சிறந்தது |
Question 128 |
இணையான தமிழ்ப்பழமொழி - Eagles dont catch flies.
பணம் பத்தும் செய்யும் | |
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது | |
காலம் பொன் போன்றது | |
வருமுன் காப்பதே சிறந்தது |
Question 129 |
இணையான தமிழ்ப்பழமொழி - old is gold.
பணம் பத்தும் செய்யும் | |
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது | |
காலம் பொன் போன்றது | |
வருமுன் காப்பதே சிறந்தது |
Question 130 |
இணையான தமிழ்ப்பழமொழி - Prevention is better than cure.
பணம் பத்தும் செய்யும் | |
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது | |
காலம் பொன் போன்றது | |
வருமுன் காப்பதே சிறந்தது |
Question 131 |
இணையான தமிழ்ப்பழமொழி - slow and steady wins the race.
முயற்சி திருவினையாக்கும் | |
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது | |
காலம் பொன் போன்றது | |
காலம் பொன் போன்றது |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 131 questions to complete.
super it is usefull
(77).விடுதலைக்குப் பிறகு இந்திய அமைச்சரவையில் அண்ணல் அம்பேத்கரையும் இடம்பெறச் செய்ய வேண்டுமென்று பெரிதும் விரும்பியவர் யார்?
நேரு தான் சரியான விடை.அண்ணா தவறு
Thank you mam. we have corrected. we appreciate you for correcting wrongly updated questions.
Question 27
WHAT IS THE CORRECT ANSWER?
115 both a and b correct answer sir..