Online TestTnpsc Exam

விஜயநகர், பாமினி அரசுகள் Online Test 7th Social Science Lesson 9 Questions in Tamil

விஜயநகர், பாமினி அரசுகள் Online Test 7th Social Science Lesson 9 Questions in Tamil

Congratulations - you have completed விஜயநகர், பாமினி அரசுகள் Online Test 7th Social Science Lesson 9 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
__________நூற்றாண்டில் இந்தியாவில் நிலவிய அரசியல் சூழல், தென்பகுதிகளில் பல புதிய அரசுகள் உதயமாவதற்கான சிறந்த வாய்ப்புகளை அளித்தது.
A
13
B
14
C
15
D
16
Question 1 Explanation: 
(குறிப்பு: இந்தியாவின் தெற்கே விஜயநகரமும், குல்பர்கா அல்லது பாமினி ஆகியவை மாபெரும் அரசுகளாக எழுச்சிபெற்றன.)
Question 2
_________ன் அடக்குமுறை நடவடிக்கைகள் புதிய சுதந்திர அரசுகள் தோன்றுவதற்கு இட்டுச்சென்றன.
A
அலாவுதீன் கில்ஜி
B
குத்புதீன் ஐபக்
C
முகமது பின் துக்ளக்
D
பால்பன்
Question 3
பதினெட்டு முடியரசர்களால் ஆளப்பட்ட பாமினி அரசு எத்தனை ஆண்டுகள் நீடித்தது?
A
120 ஆண்டுகள்
B
150 ஆண்டுகள்
C
180 ஆண்டுகள்
D
200 ஆண்டுகள்
Question 3 Explanation: 
(குறிப்பு: பாமினி அரசு, மகாராஷ்டிரா மாநிலம் முழுவதிலும் மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளிலும் பரவி இருந்தது.)
Question 4
பதினாறாம் நூற்றாண்டில் சரிந்த பாமினி அரசு எத்தனை சுல்தானியங்களாக பிரிந்தது?
A
3
B
4
C
5
D
6
Question 4 Explanation: 
(குறிப்பு: பீஜப்பூர், அகமதுநகர், கோல்கொண்டா, பீடார், பிரார் ஆகியவை ஐந்து சுல்தானியங்கள் ஆகும்.)
Question 5
விஜயநகர அரசு வலுவான அரசாக _________ ஆண்டுகள் கோலோச்சியது.
A
150
B
180
C
200
D
250
Question 5 Explanation: 
(குறிப்பு: விஜயநகரின் செல்வமும் வளமும், அவ்வரசுக்கு எதிராகத் தக்காண முஸ்லிம் அரசுகளை ஒருங்கிணைத்தது.)
Question 6
தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டு ________.
A
1656
B
1565
C
1575
D
1545
Question 6 Explanation: 
(குறிப்பு: 1565 ல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் விஜயநகர் அரசை நசுக்குவதில் தக்காண முஸ்லிம் அரசுகள் வெற்றிபெற்றன.)
Question 7
ஹரிஹரர், புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் __________ன் தென்பகுதியில் விஜயநகரம் நிறுவப்பட்டது.
A
மகாராஷ்டிரா
B
கர்நாடகா
C
ஆந்திரா
D
மத்திய பிரதேசம்
Question 7 Explanation: 
(குறிப்பு: விஜயநகரம் என்பது வெற்றியின் நகரம் என அறியப்படுகிறது.)
Question 8
சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
A
சங்கம் - துளுவ – ஆரவீடு - சாளுவ
B
சங்கம - சாளுவ – ஆரவீடு – துளுவ
C
சங்கம - சாளுவ – துளுவ – ஆரவீடு
D
சாளுவ – சங்கம - துளுவ – ஆரவீடு
Question 8 Explanation: 
(குறிப்பு: சங்கம (1336 - 1485), சாளுவ (1485 - 1505), துளுவ (1505 - 1570), ஆரவீடு (1570 – 1646))
Question 9
விஜயநகர அரசர்கள், பாமினி சுல்தான்கள், ஒடிசாவைச் சேர்ந்த அரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது__________.
  1. கிருஷ்ணா-துங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதி
  2. கங்கை-யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதி
  3. கிருஷ்ணா - கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப்பகுதி
A
1, 2
B
2, 3
C
1, 3
D
எதுவுமில்லை
Question 10
விஜயநகர் அரசு உருவாகி __________ ஆண்டுகளுக்கு பிறகு பாமினி அரசு நிறுவப்பட்டது.
A
5
B
7
C
9
D
10
Question 10 Explanation: 
(குறிப்பு: சங்கம வம்சத்தைச் சேர்ந்த முதலிரண்டு சகோதர்களான ஹரிஹரர் - புக்கர் ஆகியோரின் பெருந் துணிச்சலே விஜயநகர அரசை அதிக வலிமைமிக்க பாமினி சுல்தானியத்திடமிருந்து காப்பாற்றியது.)
Question 11
__________ என்பவர் மதுரை சுல்தானியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு அங்கு ஒரு நாயக்க அரசை நிறுவுவதிலும் வெற்றி பெற்றார்.
A
ஹரிஹரர்
B
முதலாம் புக்கர்
C
குமார கம்பணா
D
கங்காதேவி
Question 11 Explanation: 
(குறிப்பு: குமார கம்பனா என்பவர் முதலாம் புக்கருடைய மகன் ஆவர்.)
Question 12
மதுரா விஜயம் என்ற நூலை இயற்றியவர் யார்?
A
குமார கம்பணா
B
கங்காதேவி
C
சதாசிவராயர்
D
திருமலைதேவராயர்
Question 12 Explanation: 
(குறிப்பு: குமார கம்பணாவின் மனைவி கங்காதேவியால் எழுப்பெற்ற மதுரா விஜயம் என்னும் நூலில் விஜயநகரப் பேரரசால் மதுரை கைப்பற்றப்பட்டதைத் தெளிவாக விளக்குகிறது.)
Question 13
பெல்காம், கோவா ஆகிய பகுதிகளை கைப்பற்றியது யாருடைய போற்றத்தகுந்த சாதனையாகும்?
A
ஹரிஹரர்
B
இரண்டாம் ஹரிஹரர்
C
முதலாம் தேவராயர்
D
இரண்டாம் தேவராயர்
Question 13 Explanation: 
(குறிப்பு: புக்கர் இயற்கை எய்தியபோது பரந்த ஒரு நிலப்பரப்பைத் தம் மகன் இரண்டாம் ஹரிஹரர் ஆள்வதற்காக விட்டுச் சென்றார்.)
Question 14
ஒடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர்களைத் தோற்கடித்தவர் _________.
A
ஹரிஹரர்
B
இரண்டாம் ஹரிஹரர்
C
முதலாம் தேவராயர்
D
இரண்டாம் தேவராயர்
Question 14 Explanation: 
(குறிப்பு: முதலாம் தேவராயர், இரண்டாம் ஹரிஹரரின் மகனாவார்.)
Question 15
தம்மிடம் பணி செய்வதற்காகவும் தம்முடைய படைகளுக்கு நவீனப்போர் முறைகளில் பயிற்சி அளிப்பதற்காகவும் இஸ்லாமிய வீரர்களை தமது படையில் பணியமர்த்தும் முறையை தொடங்கிவைத்தவர்
A
நரசிம்மர்
B
இரண்டாம் ஹரிஹரர்
C
முதலாம் தேவராயர்
D
இரண்டாம் தேவராயர்
Question 15 Explanation: 
(குறிப்பு: இரண்டாம் தேவராயர் சங்கம வம்சத்தின் தலைசிறந்த அரசராவார்.)
Question 16
துக்ளக் அரசர்களிடம் பணி செய்து வந்த ஹரிஹரர், புக்கர் ஆகியோரை, அப்பணியை கைவிட்டு நாட்டை முஸ்லிமகளின் ஆதிக்கத்திலிருந்து மீட்குமாறு அறிவுறுத்தியவர்
A
விஜயாதித்யன்
B
விக்கிரமாதித்யன்
C
வித்யாரண்யர்
D
விக்கிரம சோழன்
Question 16 Explanation: 
(குறிப்பு: வித்யாரண்யர் என்பார் சிருங்கேரி சைவ மடத்தின் தலைவராக திகழ்ந்தவர். இவ்வாறு உருவாக்கப்பட்ட புதிய அரசு இவர்களது ஆன்மீக குருவான வித்யாரண்யருக்கு மதிப்பளிக்கும் விதத்தில் வித்யாநகர் என குறிப்பிட்ட ஒரு காலம் வரை அழைக்கப்பட்டது. பின்னர் இவ்வரசு விஜயநகர் என அழைக்கப்பட்டது.)
Question 17
சங்கம வம்சத்தின் கடைசி அரசர் _________.
A
இரண்டாம் விருபாக்சி ராயர்
B
முதலாம் விருபாக்சி ராயர்
C
முதலாம் தேவராயர்
D
இரண்டாம் தேவராயர்
Question 17 Explanation: 
(குறிப்பு: விஜயநகரப் பேரரசின் திறமை மிக்க படைத்தளபதியான சாளுவ நரசிம்மர் இரண்டாம் விருபாக்சி ராயரைக் கொலை செய்துவிட்டு, தம்மையே பேரரசராக அறிவித்துக் கொண்டார்.)
Question 18
துளுவ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர்__________.
A
கிருஷ்ணதேவராயர்
B
நரசநாயக்கர்
C
பிரதாபருத்ரன்
D
விருபாக்சிராயர்
Question 18 Explanation: 
(குறிப்பு: சாளுவ நரசிம்மரின் மரணத்துடன் அவரால் உருவாக்கப்பட்ட சாளுவ வம்சமும் முடிவுக்கு வந்தது. அவருக்குப் பிறகு திறமைமிகுந்த படைத்தளபதியான நரச நாயக்கர் அரியணை ஏறினார்.)
Question 19
துளுவ வம்ச அரசரான கிருஷ்ணதேவராயர் எத்தனை ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்?
A
5
B
15
C
20
D
25
Question 19 Explanation: 
(குறிப்பு: துளுவ வம்ச அரசர்களுள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர் கிருஷ்ணதேவராயர்.)
Question 20
  • கூற்று 1: கிருஷ்ண தேவராயர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் துங்கபத்திரா நதிப் பள்ளத்தாக்கு பகுதியில் சுதந்திரமாக செயல்பட்டு வந்த தலைவர்களை அடக்குவதே அவரது முதற்கட்ட தலையாய பணியாக இருந்தது.
  • கூற்று 2: குல்பர்காவைக் கைப்பற்றுவது கிருஷ்ணதேவராயரின் இரண்டாவது இலக்காக அமைந்தது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 20 Explanation: 
(குறிப்பு: குல்பர்காவை கைப்பற்ற முயன்ற சமயத்தில் பாமினி சுல்தான் முகமது ஷா, அவருடைய அமைச்சரால் பதவி பறிக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்தார்.கிருஷ்ணதேவராயர் அவரை விடுவித்து மீண்டும் அரியணையில் அமர வைத்தார்.)
Question 21
தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.
  1. கிருஷ்ணதேவராயர், ஒடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர் பிரதாபருத்திரனோடு போர் மேற்கொண்டார்.
  2. போர்த்துக்கீசியப் பீரங்கிப்படை வீரர்களின் உதவியோடு கோல்கொண்டா சுல்தானை கிருஷ்ணதேவராயர் எளிதாகத் தோற்கடித்தார்.
  3. பீஜப்பூர் சுல்தானிடமிருந்து ரெய்ச்சூரைக் கைப்பற்றினார்.
A
1, 3 தவறு
B
2 மட்டும் தவறு
C
2 மட்டும் தவறு
D
எதுவுமில்லை
Question 21 Explanation: 
(கூற்று: பிரதாபருத்ரன் தமது மகளைக் கிருஷ்ணதேவராயருக்குத் திருமணம் செய்து கொடுத்து, கிருஷ்ணதேவராயர் கைப்பற்றிய இடங்களை திரும்ப பெற்றுக் கொண்டார்.)
Question 22
கீழ்க்கண்டவற்றுள் கிருஷ்ணதேவராயர் கட்டியக் கோவில்கள் எவை?
  1. கிருஷ்ணசாமி கோவில்
  2. ஹசாரா ராமசாமி கோவில்
  3. விட்டலாசுவாமி கோவில்
  4. கைலாசநாதர் கோவில்
A
1, 2
B
2, 3, 4
C
1, 2, 3
D
1, 3, 4
Question 22 Explanation: 
(குறிப்பு: கிருஷ்ணதேவராயர் தமது தலைநகரான ஹம்பியில் மேற்கண்ட கோயில்களை கட்டினார்.)
Question 23
  • கூற்று 1: கிருஷ்ணதேவராயர் போர்களின் மூலம் தாம் பெற்ற செல்வங்களை மிகப்பெரும் தென்னிந்தியக் கோவில்களுக்கு வழங்கி, அதன்மூலம் கோவில்களின் நுழைவாயில்களில் கோபுரங்களை நிறுவினார்.
  • கூற்று 2: கிருஷ்ணதேவராயருக்கு புகழை சேர்க்கும் வண்ணம் அக்கோபுரங்கள் தேவகோபுரம் என அழைக்கப்பட்டன.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 23 Explanation: 
(குறிப்பு: கிருஷ்ணதேவராயருக்கு புகழை சேர்க்கும் வண்ணம் அக்கோபுரங்கள் ராயகோபுரம் என அழைக்கப்பட்டன.)
Question 24
  • கூற்று 1: கிருஷ்ணதேவராயர் அரேபியாவிலிருந்தும், ஈரானிலிருந்தும் பெரும் எண்ணிக்கையில் குதிரைகளை இறக்குமதி செய்தார்.
  • கூற்று 2: போர்த்துக்கீசிய, அராபிய வணிகர்களுடன் கிருஷ்ணதேவராயர் சிறந்த நட்புறவை கொண்டிருந்தார்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 24 Explanation: 
(குறிப்பு: போர்த்துகீசிய, அரேபியர் வணிகர்களின் நட்புறவினால் சுங்கவரிகள் மூலம் நாட்டின் வருமானம் அதிகரித்தது.)
Question 25
அஷ்டதிக்கஜங்கள் என்றறியப்பட்ட எட்டு இலக்கிய மேதைகள் யாருடைய அவையை அலங்கரித்தனர்?
A
கிருஷ்ணதேவராயர்
B
நரசநாயக்கர்
C
பிரதாபருத்ரன்
D
விருபாக்சிராயர்
Question 25 Explanation: 
(குறிப்பு: கிருஷ்ணதேவராயர் கலை, இலக்கியத்தை ஆதரித்தார்.)
Question 26
அஷ்டதிக்கஜங்களில் மகத்தானவர் என்றறியப்படுபவர்___________.
A
தெனாலிராமன்
B
அல்லசானி பெத்தண்ணா
C
நந்தி திம்மண்ணா
D
ராமகிருஷ்ணன்
Question 26 Explanation: 
(குறிப்பு: அஷ்டதிக்கஜங்களில் மற்றொரு குறிப்பிடத்தகுந்த ஆளுமை தெனாலி ராமகிருஷ்ணன் (தெனாலிராமன்) ஆவார்.)
Question 27
சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
A
நரசநாயக்கர் - கிருஷ்ணதேவராயர் - சதாசிவராயர் - முதலாம் வேங்கடர் - அச்சுதராயர்
B
கிருஷ்ணதேவராயர் - நரசநாயக்கர் - அச்சுதராயர் - சதாசிவராயர் - முதலாம் வேங்கடர்
C
நரசநாயக்கர் - கிருஷ்ணதேவராயர் – அச்சுதராயர் - முதலாம் வேங்கடர் – சதாசிவராயர்
D
நரசநாயக்கர் - கிருஷ்ணதேவராயர் - முதலாம் வேங்கடர் – அச்சுதராயர் – சதாசிவராயர்
Question 27 Explanation: 
(குறிப்பு: குறைந்த வயதைக் கொண்ட சதாசிவராயர் முடிசூட்டப்பட்ட போது பகர ஆளுநராகப் பொறுப்பேற்றிருந்த ராமராயர் பேரரசின் திறமை மிக்கத் தளபதியாவார். சதாசிவராயருக்கு அரசு பதவி ஏற்கும் வயதுவந்த பின்னரும்கூட அவரைப் பெயரளவிற்கு அரசராக வைத்துக் கொண்டு ராமராயரே உண்மையான அரசராக ஆட்சி புரிந்தார்.)
Question 28
ராக்சச தங்கடி என்றறியப்பட்ட போர் எது?
A
சந்தேரிப் போர்
B
செளசா போர்
C
தலைக்கோட்டைப் போர்
D
பக்சார் போர்
Question 28 Explanation: 
(குறிப்பு: தலைக்கோட்டைப் போரில் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டது.)
Question 29
கிழக்கு கர்நாடகத்தில், ___________ நதியின் கரையில் உள்ள விஜயநகரம் இருந்த இடம் தற்போது ஹம்பி என அழைக்கப்படுகிறது.
A
கிருஷ்ணா
B
கோதாவரி
C
துங்கபத்ரா
D
யமுனை
Question 29 Explanation: 
(குறிப்பு: ஹம்பி சீர்குலைந்து இடிபாடுகளாகக் காணப்படுகிறது. யுனெஸ்கோ ஹம்பியை பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.)
Question 30
ஆரவீடு வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கியவர் _________.
A
ராமராயர்
B
சதாசிவராயர்
C
நரசநாயக்கர்
D
திருமலைதேவராயர்
Question 30 Explanation: 
(குறிப்பு: தலைக்கோட்டைப் போரில் ராமராயர் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். அவருடைய சகோதரர் திருமலை தேவராயர், அரசர் சதாசிவராயருடன் தப்பித்து சந்திரகிரியை அடைந்தார். அங்கு அவர் ஆரவீடு வம்சத்தை தொடங்கினார்.)
Question 31
ஆரவீடு வம்சத்தார் _________ல் புதிய தலைநகரை உருவாக்கிப் பேரரசை சிலகாலம் நல்ல நிலையில் வைத்திருந்தனர்.
A
சந்திரகிரி
B
பெனுகொண்டா
C
கோல்கொண்டா
D
உதயகிரி
Question 32
விஜயநகர அரசு ________ ஆண்டு வீழ்ச்சியுற்றது.
A
1636
B
1646
C
1656
D
1676
Question 32 Explanation: 
(குறிப்பு: பேரரசில் ஏற்பட்ட உட்பூசல்களாலும் பீஜப்பூர் கோல்கொண்டா சுல்தான்களின் சூழ்ச்சிகளாலும் விஜயநகர அரசு இறுதியாக வீழ்ச்சியுற்றது.)
Question 33
  • கூற்று 1: விஜயநகர நிர்வாகத்தில் அரச பதவி பரம்பரையானதாக இருந்தது.
  • கூற்று 2: அரச பதவியேற்றவர் வயதில் சிறியவராக இருந்தால், நிர்வாகப் பணிகளைக் கவனிப்பதற்காகப் பகர ஆளுநரை நியமனம் செய்யும் முறை நடைமுறையில் இருந்தது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 33 Explanation: 
(குறிப்பு: சில சமயங்களில் ஆட்சி செய்து வந்த அரசர்கள், தங்களுடைய வாரிசுகளின் பதவியேற்பு அமைதியாக நடைபெற வேண்டும் என்பதற்காகப் பட்டத்து இளவரசர்களை நியமித்தனர்.)
Question 34
விஜயநகர நிர்வாகம் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
ஒவ்வொரு மண்டலமும் மண்டலேஸ்வரா என்ற ஆளுநரின் கீழிருந்தது.
B
கிராமமே நிர்வாகத்தின் மிகச்சிறிய அலகாக இருந்தது.
C
ஒவ்வொரு கிராமத்திலும் கிராமசபை என்ற அமைப்பிருந்தது.
D
விஜயநகரப் படைகள் வெடிமருந்து ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை.
Question 34 Explanation: 
(குறிப்பு: விஜயநகரப் படைகள் வெடிமருந்து ஆயுதங்களைப் பயன்படுத்தின. வெடிமருந்து ஆயுதங்களும் குதிரைப்படையும் ஒருங்கிணைக்கப்பட்டதால், இப்படை இந்தியாவில் அதிகம் அச்சுறுத்தக்கூடிய படையாக இருந்தது.)
Question 35
விஜயநகரப் பேரரசில் கிராமம் தொடர்பான விடயங்களை _________ என்றழைக்கப்பட்ட கிராமத் தலைவர் நிர்வகித்தார்.
A
கிராமணி
B
கேடா
C
கெளடா
D
கிராமி
Question 35 Explanation: 
(குறிப்பு: விஜயநகர பேரரசின் இராணுவம் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தது.)
Question 36
விஜயநகர பேரரசர்கள் __________ என்னும் பெயரில் அதிக எண்ணிக்கையிலான தங்க நாணயங்களை வெளியிட்டனர்.
A
டங்கா
B
ருபியா
C
வராகன்
D
ருபே
Question 36 Explanation: 
(குறிப்பு: 15, 16ஆம் நூற்றாண்டுகளில் பேரரசிற்கு வருகை புரிந்த பல அயல்நாட்டுப்பயணிகள், தங்கள் பயணக்குறிப்புகளில் பேரரசின் செல்வம், மேன்மை குறித்துப் புகழாரம் சூட்டியுள்ளனர்.)
Question 37
விஜயநகரப் பேரரசில் போர்த்துகீசியக் கட்டுமானக் கலைஞர்களின் உதவியுடன் மிகப்பெரும் ஏரி கட்டப்பட்டதாக__________ என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
A
அல்புகர்க்
B
அல்பருனி
C
யுவான்சுவாங்
D
அப்துர்ரஸாக்
Question 37 Explanation: 
(குறிப்பு: சிறந்த நீர்ப்பாசன முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வேளாண்மையை ஊக்குவிப்பதே விஜயநகர அரசர்களின் கொள்கையாக இருந்தது.)
Question 38
சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.
  1. விஜயநகரப் பேரரசில் அரசுக்கு அடுத்தபடியாக வேளாண்மையை முன்னேற்றம் அடையச் செய்யும் பொருட்டு நிலச்சுவான்தார்கள் கோவில்களிலும், நீர்ப்பாசனத்திலும் முதலீடு செய்தனர்.
  2. ஏரியிலிருந்து நகரின் பல பகுதிகளுக்கு ஏரி நீரைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாகக் கால்வாய்கள் கட்டப்பட்டன.
  3. நகரத்தில் பல்வகைப்பட்ட வேளாண் பண்டங்கள் பெருமளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 39
விஜயநகர அரசமைப்பின் சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
A
பேரரசு – மண்டலங்கள் – ஸ்தலங்கள் - நாடுகள் - கிராமங்கள்
B
பேரரசு – ஸ்தலங்கள் – மண்டலங்கள் - நாடுகள் – கிராமங்கள்
C
பேரரசு – மண்டலங்கள் - நாடுகள் – ஸ்தலங்கள் – கிராமங்கள்
D
பேரரசு - ஸ்தலங்கள் - நாடுகள் – மண்டலங்கள் – கிராமங்கள்
Question 39 Explanation: 
(குறிப்பு: மண்டலங்கள் - மாநிலங்கள், நாடுகள் (மாவட்டங்கள்), ஸ்தலங்கள் (வட்டங்கள்))
Question 40
விஜயநகரப் பேரரசில் ___________ என்றழைக்கப்படும் தொழில்சார் அமைப்புகள் கைவினை, குடிசைத்தொழில்களை முறைப்படுத்தின.
A
காரட்டுகள்
B
கில்டுகள்
C
நியாயதர்ஷா
D
குரோம்கள்
Question 40 Explanation: 
(குறிப்பு: விஜயநகரின் வேளாண் உற்பத்திக்கு அதனுடைய பலவகையான குடிசைத் தொழில்கள் உதவிபுரிந்தன.)
Question 41
விஜயநகரப் பேரரசில் கைவினைஞர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தனித்தனியே கில்டுகள் இருந்ததாக ___________ குறிப்பிட்டுள்ளார்.
A
அல்புகர்க்
B
அல்பருனி
C
யுவான்சுவாங்
D
அப்துர்ரஸாக்
Question 41 Explanation: 
(குறிப்பு: விஜயநகர பேரரசின் குடிசைத் தொழில்களில் மிகவும் முக்கியமானவை நெசவுத்தொழில், சுரங்கத் தொழில், உலோகத் தொழில் ஆகியனவாகும்.)
Question 42
கீழ்க்கண்ட எந்த நாடுகளுடன் விஜயநகரம் வாணிகம் மேற்கொண்டது?
  1. பாரசீகம்
  2. தென்னாப்பிரிக்கா
  3. போர்த்துகல்
  4. அரேபியா
  5. சீனா
  6. இலங்கை
A
அனைத்தும்
B
1, 3, 4, 5
C
1, 3, 4, 5, 6
D
1, 2, 4, 5
Question 42 Explanation: 
(குறிப்பு: வணிகம் சீனாவிலிருந்து வந்த பட்டு, மலபார் பகுதியைச் சேர்ந்த வாசனைப் பொருட்கள், பர்மாவிலிருந்து பெறப்பட்ட விலையுயர்ந்த ஆபரணக்கற்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இயங்கியது.)
Question 43
விஜயநகர அரசர்களின் ஆதரவினால் கீழ்க்கண்ட எந்த மொழிகளில் நூல்கள் எழுதப்பட்டன?
  1. சமஸ்கிருதம்
  2. தெலுங்கு
  3. மலையாளம்
  4. கன்னடம்
  5. தமிழ்
A
1, 2, 4
B
1, 2, 3, 5
C
1, 2, 4, 5
D
1, 2, 5
Question 43 Explanation: 
(குறிப்பு: விஜயநகர அரசர்களின் ஆதரவினால் சமயம் மற்றும் சமயம் சாரா நூல்கள் ஆகிய இரண்டும் எழுதப்பட்டன.)
Question 44
கிருஷ்ணதேவராயர் அமுக்தமால்யதா என்னும் காவியத்தை _________மொழியில் இயற்றினார்.
A
கன்னடம்
B
தமிழ்
C
சமஸ்கிருதம்
D
தெலுங்கு
Question 44 Explanation: 
(குறிப்பு: அமுக்கதமால்யதா தெலுங்கு இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது.)
Question 45
  • கூற்று 1: அமுக்தமால்யதா, பெரியாழ்வாரின் மகளான கோதை தேவியைப் பற்றியதாகும்.
  • கூற்று 2: அமுக்தமால்யதா என்பதற்கு தான் அணிந்த பின்னர் கொடுப்பவர் எனப் பொருள்
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 45 Explanation: 
(குறிப்பு: கடவுள் ரங்கநாதருக்கு அணிவிப்பதற்காகத் தொடுக்கப்பட்ட மாலைகளை அவருக்கு சூடுவதற்கு முன்பாக கோதை தேவி சூடிக்கொள்வார்.)
Question 46
கிருஷ்ணதேவராயர் ஜாம்பவதி கல்யாணம் என்னும் நாடக நூலை _________மொழியில் எழுதினார்.
A
கன்னடம்
B
தமிழ்
C
சமஸ்கிருதம்
D
தெலுங்கு
Question 47
பாண்டுரங்கமகாத்தியம் என்னும் நூலை இயற்றியவர் யார்?
A
ஸ்ரீநாதர்
B
பெத்தண்ணா
C
துக்கண்ணா
D
தெனாலி ராமகிருஷ்ணா
Question 47 Explanation: 
(குறிப்பு: ஸ்ரீநாதர், பெத்தண்ணா, ஜக்கம்மா, துக்கண்ணா போன்ற புலவர்கள் சமஸ்கிருத, பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட நூல்களைத் தெலுங்கு மொழியில் மொழியாக்கம் செய்தனர்.)
Question 48
  • கூற்று 1: பெரும் எண்ணிக்கையிலான வடிவத்தில் பெரிய தூண்களும் அவற்றில் இடம்பெற்றுள்ள சிற்ப, செதுக்கல் வேலைப்பாடுகளும் விஜயநகரப் பாணியின் தனித்துவ அடையாளங்களாகத் திகழ்ந்தன.
  • கூற்று 2: விஜயநகரப் பாணி தூண்களில் செதுக்கப்பட்டுள்ள விலங்குகளில் யானைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 48 Explanation: 
(குறிப்பு: விஜயநகர அரசர்களின் கோவில் கட்டுமான நடவடிக்கைகள் ஒரு புதிய பாணியை உருவாக்கின. அது விஜயநகரப்பாணி என அழைக்கப்பட்டது.)
Question 49
எந்த ஆண்டு அலாவுதீன் ஹசன் தெளலதாபாத் நகரைக் கைப்பற்றி, பாமன்ஷா என்ற பெயரில் தம்மையே சுல்தானாக அறிவித்துக்கொண்டார்?
A
1437
B
1374
C
1347
D
1357
Question 49 Explanation: 
(குறிப்பு: அலாவுதீன் ஹசன், ஹசன் கங்கு எனவும் அறியப்பட்டார். டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக்கிற்கு எதிராக இவர் மேற்கொண்ட கலக நடவடிக்கையை ஏனைய படைத்தளபதிகளும் ஆதரித்தனர்.)
Question 50
அலாவுதீன் ஹசன் பாமன் ஷா தமது தலைநகரை எங்கு மாற்றினார்?
A
பீடார்
B
தெளலதாபாத்
C
குல்பர்கா
D
டெல்லி
Question 50 Explanation: 
(குறிப்பு: 1347 இல் தம்மை சுல்தானாக அறிவித்துக் கொண்ட பாமன்ஷா இரண்டு ஆண்டுகளில் தலைநகரை குல்பர்காவிற்கு மாற்றினார்.)
Question 51
ஹசன் கங்கின் காலத்திற்கு பிறகு பாமினி அரசின் தலைநகர் மீண்டும் பீடாருக்கு மாற்றப்பட்ட ஆண்டு
A
1419
B
1429
C
1439
D
1459
Question 51 Explanation: 
(குறிப்பு: ஹசன் கங்குவின் காலத்திற்கு பின் வந்தோர் குல்பர்காவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஓர் அரசை நிறுவுவதில் சிரமங்களை எதிர்கொண்டனர். எனவே தலைநகரை பீடாருக்கு மாற்றினர்.)
Question 52
பாமினி வம்சத்தில் மொத்தம் எத்தனை அரசர்கள் இடம்பெற்றுள்ளனர்?
A
15
B
16
C
17
D
18
Question 53
அலாவுதீன் ஹசன் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
A
8
B
9
C
11
D
13
Question 53 Explanation: 
(குறிப்பு: வாரங்கள் அரசிடமிருந்தும், ராஜமுந்திரி, கொண்ட வீடு ஆகிய ரெட்டி அரசுகளிடமிருந்தும் ஆண்டுதோறும் கப்பம் வசூலிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் அடிக்கடி போர்கள் ஏற்பட வழிவகுத்தன.)
Question 54
அலாவுதீன் ஹசன் பாமன்ஷா தமது அரசை எத்தனை மாகாணங்களாகப் பிரித்தார்?
A
2
B
3
C
4
D
5
Question 54 Explanation: 
(குறிப்பு: இவ்வாறு பிரிக்கப்பட்ட மாகாணங்கள் தராப் என அழைக்கப்பட்டன.)
Question 55
  • கூற்று 1: பாமினி அரசில் ஒவ்வொரு மாகாண ஆளுநரும் படைகளுக்கு தலைமை ஏற்றனர்.
  • கூற்று 2: மாகாணங்களை நிர்வாகம் செய்வதும், வரிவசூல் செய்வதும் ஆளுநருடைய பொறுப்பாகும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 56
முதலாம் முகமது ஷா ____________ ஆண்டு வாரங்கல் அரசோடு போரிட்டார்.
A
1365
B
1367
C
1368
D
1369
Question 56 Explanation: 
(குறிப்பு: இப்போரின் மூலம் கோல்கொண்டா கோட்டை, பச்சை கலந்த நீலவண்ணக் கற்களால் செய்யப்பட்ட சிம்மாசனம் உட்பட பெரும் செல்வத்தை இழப்பீடாக முதலாம் முகமது ஷா பெற்றார். பின்னர் இச்சிம்மாசனமே பாமினி சுல்தான்களின் அரியணை ஆயிற்று.)
Question 57
"பச்சை கலந்த நீலவண்ணக் கல்லானது விலையுயர்ந்த அணிகலன்களில் பயன்படுத்தப்படும் கல்லாகும். பாரசீக அரசர்களின் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனங்களில் இத்தகைய வண்ணக்கல்லால் ஆன அரியணையும் ஒன்றாகுமென " யாருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
A
அல்பரூனி
B
தெனாலிராமன்
C
அப்துர்ரஸாக்
D
பிர்தெளசி
Question 57 Explanation: 
(குறிப்பு: பிர்தெளசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.)
Question 58
கோல்கொண்டா கோட்டை குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
கோல்கொண்டா கோட்டையானது ஹைதராபாத்திலிருந்து 20 கி.மீ தொலைவில், ஒரு குன்றின் மீது 210 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
B
ஒலி தொடர்பான கட்டடக்கலை அம்சங்களுக்கு இக்கோட்டை பெயர் பெற்றதாகும்.
C
கோட்டையின் மிக உயரமான இடம் பால ஹிசார் ஆகும்.
D
தர்பார் மண்டபத்திலிருந்து குன்றின் கீழே அமைந்துள்ள அரண்மனைக்குச் சுரங்கப்பாதை இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
Question 58 Explanation: 
(குறிப்பு: கோல்கொண்டா கோட்டையானது ஹைதராபாத்திலிருந்து 11 கி.மீ தொலைவில், ஒரு குன்றின் மீது 120 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.)
Question 59
பாமினி அரசிற்கு வலுவான ஓர் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர்
A
அலாவுதீன் ஹசன்
B
முதலாம் முகமது ஷா
C
இரண்டாம் முகமது
D
மூன்றாம் முகமது
Question 59 Explanation: 
(குறிப்பு: முதலாம் முகமது ஷாவின் அரச அமைப்பு முறையானது, பாமினி அரசு ஐந்து சுல்தானியங்களாகச் சிதறுண்ட பின்னரும் இம்முறை தொடர்ந்தது.)
Question 60
முதலாம் முகமது ஷா __________ல் இரண்டு மசூதிகளைக் கட்டினார்.
A
பீடார்
B
தெளலதாபாத்
C
குல்பர்கா
D
டெல்லி
Question 60 Explanation: 
(குறிப்பு: பெரும் எண்ணிக்கையில் அரேபியரும் துருக்கியரும் குறிப்பாகப் பாரசீகர்களும் தக்காணத்திற்குக் குடிபெயரத் துவங்கினர். அவர்களில் பலர் சுல்தான் முதலாம் முகமதுவின் அழைப்பை ஏற்று வந்தவராவார்கள். தொடர்ந்து வந்த தலைமுறைகளின் காலத்தில் அங்கே இஸ்லாமியக் கலாச்சாரம் வளர்வதில் இவர்கள் பெரும் செல்வாக்கு செலுத்தினர்.)
Question 61
முதலாம் முகமது ஷாவால் கட்டப்பட்ட இரண்டு மசூதிகளில், முதல் மசூதி _________ ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
A
1352
B
1362
C
1367
D
1369
Question 61 Explanation: 
(குறிப்பு: முதல் மசூதியான மகாமசூதி 216 அடி x 16 அடி என்ற அளவில் கட்டப்பட்டதாகும். இம்மசூதி மேல்விதானத்தோடு கூடிய முற்றத்தைக் கொண்டுள்ளது.)
Question 62
இரண்டாம் முகமது _________ ஆண்டு அரியணை ஏறினார்.
A
1358
B
1362
C
1374
D
1378
Question 62 Explanation: 
(குறிப்பு: இரண்டாம் முகமது என்பவர், முதலாம் முகமதுவின் மாமனாரும் சதி செய்தவருமான தாவூத் என்பாரின் சகோதரனின் மகன் ஆவார்.)
Question 63
இரண்டாம் முகமதுவின் ஆட்சிக்கு பின் _________ ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், குறிப்பிட்டுச் சொல்லும்படியான அரசராக மூன்றாம் முகமது திகழ்ந்தார்.
A
65
B
75
C
85
D
95
Question 63 Explanation: 
(குறிப்பு: மூன்றாம் முகமது பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.)
Question 64
மூன்றாம் முகமதுவின் காலக்கட்டத்தில் அரசின் பிரதம அமைச்சராகவும் குறிப்பிடத்தகுந்த ஆளுமையாகவும் விளங்கியவர்__________.
A
பிர்தெளசி
B
அல்பருனி
C
தெனாலிராமன்
D
மகமது கவான்
Question 64 Explanation: 
(குறிப்பு: பிறப்பால் பாரசீகரான மகமது கவான் இஸ்லாமிய கோட்பாடுகளிலும், பாரசீக மொழியிலும், கணிதத்திலும் பெரும்புலமை பெற்றவராயிருந்தார். மேலும் அவர் கவிஞரும், உரைநடை எழுத்தாளருமாவார்.)
Question 65
தவறான இணையைத் தேர்ந்தெடு. (பாமினி அரசின் எட்டு அமைச்சர்கள்)
A
நஷீர் : உதவி நிதியமைச்சர்
B
வஷிர் – இ – அசாரப் : வெளியுறவுத்துறை அமைச்சர்
C
கொத்தவால் - காவல்துறைத் தலைவர் மற்றும் நகர குற்றவியல் நடுவர்
D
சதார் – இ – ஜகான் : தலைமை படைத்தளபதி
Question 65 Explanation: 
(குறிப்பு: சதார் – இ – ஜகான் : தலைமை நீதிபதி, சமயம் மற்றும் அறக்கொடைகளின் அமைச்சர்.)
Question 66
மகமது கவான் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
  1. கவான் தமது இராணுவ நடவடிக்கைகளுக்கும் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கும் பெயர் பெற்றவராவர்.
  2. மாகாண ஆளுநர்களைக் கட்டுப்படுத்தவும், நிர்வாகத்தைக் கட்டுக்கோப்புடையதாக மாற்றவும் பாமினி அரசில் ஏற்கனவே இருந்த நான்கு மாகாணங்களை எட்டாக மாற்றினார்.
  3. மாகாண ஆளுநர்களின் இராணுவ வலிமையைக் கட்டுக்குள் வைப்பதற்காக ஒவ்வோர் ஆளுநரும் ஒரு கோட்டையை மட்டும் தங்கள் வசம் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஏனைய கோட்டைகளைச் சுல்தான் தமது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டார்.
A
1 மட்டும் தவறு
B
2 மட்டும் தவறு
C
1, 2 தவறு
D
எதுவுமில்லை
Question 66 Explanation: 
(குறிப்பு: கவானால் அறிமுகம் செய்யப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தங்கள் அரசின் திறனை மேம்படுத்தியது. ஆனால், பிராந்தியத் தலைவர்களின் அதிகாரங்களைக் குறைத்தது.)
Question 67
மூன்றாம் முகமதுவின் இறப்பிற்கு பின்னர் ___________ என்பவர் சுல்தானாக ஆட்சி புரிந்தார்.
A
பிரோஸ்
B
சிகாபுதீன் முகமது
C
அகமதுகான்
D
அப்துல்லா
Question 67 Explanation: 
(குறிப்பு: சிகாபுதீன் முகமது அல்லது முகமது என்பவர் 1518 ல் அவர்
Question 68
மூன்றாம் முகமதுவின் இறப்பிற்கு பின்னர் ___________ என்பவர் சுல்தானாக ஆட்சி புரிந்தார்.
A
பிரோஸ்
B
சிகாபுதீன் முகமது
C
அகமதுகான்
D
அப்துல்லா
Question 68 Explanation: 
(குறிப்பு: சிகாபுதீன் முகமது அல்லது முகமது என்பவர் 1518 ல் அவர் இறக்கும்வரை சுல்தானாக ஆட்சி புரிந்தார்.)
Question 69
சிகாபுதீன் முகமதுவிற்கு பின் பதவியேற்ற __________ சுல்தான்களும் திறமைக் குன்றியவர்களாகப் பெயரளவிற்கே அரியணையில் இருந்தனர்.
A
3
B
4
C
5
D
6
Question 69 Explanation: 
(குறிப்பு: சிகாபுதீன் முகமதுவின் நீண்டகால ஆட்சி, அரசு சிதையப் போவதற்கான செயல்பாடுகள் தொடங்கியதைச் சுட்டிக்காட்டின.)
Question 70
பாமினிய சுல்தானியம் படிப்படியாக __________ சுதந்திரமான தக்காண சுல்தானியங்களாகச் சிதைந்தது.
A
3
B
4
C
5
D
5
Question 70 Explanation: 
(குறிப்பு: பீடார், பீஜப்பூர், அகமதுநகர், பீரார், கோல்கொண்டா ஆகியவை ஐந்து சுதந்திரமான சுல்தானியங்கள் ஆகும்.)
Question 71
கட்டடக்கலைக்குப் பாமினி சுல்தான்கள் ஆற்றிய பங்களிப்பைக் எந்த இடத்தில் காணலாம்?
A
பீடார்
B
தெளலதாபாத்
C
குல்பர்கா
D
டெல்லி
Question 71 Explanation: 
(குறிப்பு: குல்பர்காவில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் அரண்மனைகள், அரசர் மக்களைச் சந்திக்கும் மண்டபங்கள், தூதுவர்கள் தங்கியிருந்த குடியிருப்புகள், வளைவுகள், குவிமாடங்கள், சுவர்கள், அரண்கள் ஆகியன வெளிக்கொணரப்பட்டன.)
Question 72
பாமினி அரசை நிறுவிய அலாவுதீன் ஹசன் ஷா,________ன் படைத் தளபதிகளில் ஒருவரான ஜாபர்கான் என்பவரின் முயற்சியால் முல்தானில் கல்வி கற்றார்.
A
குத்புதின் ஐபக்
B
முகமது பின் துக்ளக்
C
அலாவுதீன் கில்ஜி
D
பால்பன்
Question 72 Explanation: 
(குறிப்பு: ஹசன் ஷா அரசரான பின்னர் தமது மகன்கள் கல்வி கற்பதற்காக ஒரு பள்ளியை நிறுவுவதில் சிறப்பு கவனம் செலுத்தினார். அவருடைய மகன் முதலாம் முகமது கல்வி கற்பதை ஆதரித்தவராவார்.)
Question 73
சுல்தான் பிரோஸ் பாமினி அரசின் எத்தனையாவது சுல்தான் ஆவார்?
A
6
B
7
C
8
D
9
Question 73 Explanation: 
(குறிப்பு: சுல்தான் பிரோஸ் மொழியியல் அறிஞரும் கவிஞரும் ஆவார்.)
Question 74
சுல்தான் பிரோசிற்கு பின் வந்த அரசர்கள் கீழ்க்கண்ட எந்த இடங்களில் கல்விக் கூடங்களை நிறுவினர்?
  1. குல்பர்கா
  2. பீடார்
  3. தெளலதாபாத்
  4. காண்டகார்
A
அனைத்தும்
B
1, 2, 4
C
1, 2, 3
D
2, 3, 4
Question 74 Explanation: 
(குறிப்பு: மேற்கண்ட இடங்களில் நிறுவப்பட்ட பள்ளிகளில் உண்டு உறைவிட வசதிகள் அரசரின் செலவில் ஏற்படுத்தப்பட்டன.)
Question 75
மகமது கவானின் மதரசா (கல்வி நிலையம்) எங்கு அமைந்துள்ளது?
A
பீடார்
B
தெளலதாபாத்
C
குல்பர்கா
D
டெல்லி
Question 75 Explanation: 
(குறிப்பு: பீடார் மதரசா 3000 கையெழுத்துப் பிரதிகளைக் கொண்ட பெரிய நூலகத்தைக் கொண்டிருந்தது.)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 75 questions to complete.

2 Comments

Leave a Reply to Rathika Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!