Indian PolityOnline Test

குடியுரிமை

குடியுரிமை

Congratulations - you have completed குடியுரிமை. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அரசியலமைப்பின் எந்தப் பகுதி குடியுரிமையைப் பற்றி குறிப்பிடுகின்றது
A
பகுதி I- சரத்துக்கள் 5-10
B
பகுதி II- சரத்துக்கள் 5-11
C
பகுதி II- சரத்துக்கள் 5-13
D
பகுதி III- சரத்துக்கள் 5-11
Question 2
இந்தியாவில் பின்பற்றப்படுகிற குடியுரிமை
A
ஒற்றைக் குடியுரிமை
B
இரட்டைக் குடியுரிமை
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 3
கீழ்க்கண்ட வாக்கியங்களில் இந்தியக் குடியுரிமைச் சட்டம் பற்றி எவை சரியானவை?
  1. இச்சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடங்குவதற்கு முன்பு குடியுரிமை பற்றி வகைமுறைப்படுத்துகிறது.
  2. இந்தியக் குடிமகன் எவரேனும் ஒருவர் வேறொரு நாட்டின் குடியுரிமையை அடைந்து கொண்டால் இந்திய குடிமகனாக இருக்க முடியாது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 4
குடியுரிமையை ஒழுங்குபடுத்த சட்டமியற்றும் அதிகாரம் பெற்றது யார்?
A
குடியரசுத் தலைவர்
B
நாடாளுமன்றம்
C
உச்ச நீதிமன்றம்
D
பிரதம அமைச்சர்
Question 5
பின்வருவனவற்றுள் எவை குடியுரிமை பெறும் முறை அல்ல
A
வேறொரு நாட்டின் குடியுரிமையை அடைதல்
B
பதிவு செய்து கொள்ளல்
C
எல்லையை கூட்டியணைத்துக் கொள்ளுதல்
D
இவை அனைத்தும்
Question 6
பின்வருவனவற்றுள் எவை குடியுரிமை இழக்கச்செய்யப்படுவதற்கான காரணங்கள்?
  1. ஒருவர் வெளிநாட்டவர் இந்தியக் குடிமகனாக்கல் மூலமோ அல்லது பதிவு செய்து கொள்ளல் மூலமோ பெற்று, அவ்வாறு பெற்ற குடியுரிமையானது மோசடியாகவோ,திரித்துக் கூறலினாலோ அல்லது முக்கிய பொருண்மைகளை மறைத்து பெறப்பட்டதாக இருந்தால் அவரது குடியுரிமை இழக்கச் செய்யய்யப்படும்.
  2. இந்திய அரசியலமைப்பிற்கு கட்டுப்படாமல் செயல்பட்டால் அல்லது எதிரி நாட்டுடன் சட்டவிரோத வியாபாரம் செய்தால் அவரது குடியுரிமை இழக்கச் செய்யப்படும்.
  3. ஒரு வெளிநாட்டு எல்லை இந்தியாவின் ஒரு பகுதியினால், மத்திய அரசானது அந்த எல்லை தொடர்பாக யாரெல்லாம் இந்தியக் குடிமக்களாக ஆகின்றனர் என்று குறிப்பிட்டு அதை அரசிதழில் வெளியிட உத்திரவிடலாம்.
  4. ஒரு நபர் 1922ம் ஆண்டின் குடியுரிமை திருத்தச் ச்ட்டம் தொடங்குவதற்கு பின்னிட்டு பிறந்திருந்து அச்சமயத்தில் அவரது பெற்றோரில் எவரேனும் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருப்பின் அவரது இழக்கச் செய்யப்படும்.
A
1 மற்றும் 2
B
1 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
3 மற்றும் 4
Question 7
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. 1.ஒரு நபர் 1992ம் ஆண்டின் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடங்குவதற்கு பின்னிட்டு பிறந்திருந்து அச்சமயத்தில் அவரது பெற்றோரில் எவரேனும் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருப்பின், அவர் மரபு வழித் தோன்றலினால் ஒரு இந்தியக் குடிமகனாவார்.
  2. இந்தியாவில் வழக்கமான குடியுருப்பைக் கொண்ட இந்திய வழித்தோன்றிய நபர்கள் தம்மை ஒரு இந்தியக் குடிமகனாக பதிவு செய்து கொள்ளும்படி விண்ணப்பித்து குடியுரிமை பெற விண்ணப்பம் செய்வதற்கு 10 ஆண்டுகள் முன்பு வரை அவ்வாறு இந்தியாவில் குடியிருந்திருக்க வேண்டும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 8
இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடங்கிய பின்னர் குடியுரிமை பற்றி வகைமுறைப்படுத்தும் சட்டம்
A
இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1950
B
இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1951
C
இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955
D
இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1956
Question 9
இந்திய குடிமக்களை மணந்து கொண்டு இந்தியாவில் வழக்கமாக குடியிருந்து வரும் நபர்கள்  எதன் மூலம் குடியுரிமை பெறலாம்
A
மரபுவழித் தோன்றலினால் குடியுரிமையை பெறலாம்
B
பதிவு செய்து கொள்ளல் மூலம்
C
பிறப்பால் குடியுரிமை பெறல்
D
எல்லையை கூட்டியணைத்துக் கொள்வதன் மூலம்
Question 10
ஒரு இந்தியக் குடிமகன் தன்னிச்சையாக ஒரு வெளிநாட்டு குடியுரிமையைப் பெற்றால் அவர் இந்தியக் குடியுரிமையை
A
இழப்பார்
B
பெறுவார்
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 11
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கிய பொழுது குடியுரிமை பெற
A
2 ஆண்டுகளுக்கு குறையாமல் குடியிருந்து வந்தவராக இருக்க வேண்டும்
B
3 ஆண்டுகளுக்கு குறையாமல் குடியிருந்து வந்தவராக இருக்க வேண்டும்
C
5 ஆண்டுகளுக்கு குறையாமல் குடியிருந்து வந்தவராக இருக்க வேண்டும்
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 12
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. இந்தியா 3 வகைகளில் குடியுரிமை பெறலாம்
  2. இந்தியாவில் 5 வகைகளில் குடியுரிமை இழக்கலாம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 13
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கும் பொழுது பாக்கிஸ்தானிலிருந்து இந்தியாவிர்கு குடிபெயர்ந்து வந்தவர்களும் இந்திய குடிமக்களாவர்.
  2. ஆனால் அவர்களோ அல்லது அவர்களது பெற்றோரோ அல்லது பெற்றோரின் பெற்றோரில் ஒருவரோ 1935ம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டபடி இந்தியாவில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 14
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்குவதற்கு முன்பு ஒரு இந்தியக் குடிமகன் தன்னிச்சையாக ஒரு வெளிநாட்டு குடியுரிமையைப் பெற்றால் அவர் இந்தியக் குடியுரிமையை இழந்தவராகிறார்.
  2. பிரிவினையாக இந்தியாவிற்கு அப்பால் உள்ள இடத்தில் வழக்கமான குடியிருப்பைக் கொண்ட இந்திய வழிதோன்றிய நபர்கள் பதிவு செய்து கொள்ளல் மூலம் குடியுரிமையை பெறலாம்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 15
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. குடியுரிமைச் சட்டத்தின் முதலாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நாட்டின் குடிமக்களாக உள்ள உரிமை வயது மற்றும் தகுதி அடையாத நபர்கள் பதிவு செய்து கொள்ளல் மூலம் குடியுரிமையை பெறலாம்
  2. குடியுரிமைச் சட்டத்தின் முதலாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்ட ஒரு நாட்டின் குடிமகனாக இல்லாத மற்றும் உரிமை வயது மற்றும் தகுதி அடைந்த எந்த ஒரு நபரும், உரிய விண்ணப்ப செய்து குடியுரிமை பெறலாம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 16
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. இந்தியக் குடிமகனாகவும் அதே சமயத்தில் மற்றொரு நாட்டின் குடிமகனாகவும் உள்ள ஒருவர், தாம் இந்தியக் குடியுரிமை துறப்பதாக உரிய விளம்புகை ஒன்றைச் செய்தால், அவரது இந்தியக் குடியுரிமை முடிவிற்கு வருகிறது.
  2. ஒருவர் வெளிநாட்டவரை இந்தியக் குடிமகனாக்கல் மூலமோ அல்லது பதிவு செய்து கொள்ளல் மூலமோ பெற்று, அவ்வாறு பெற்ற குடியுரிமையானது மோசடியாகவோ, திரித்துக் கூறினாலோ அல்லது முக்கிய பொருண்மைகளை மறைத்து பெறப்பட்டதாக இருந்தால் அவரது குடியுரிமை இழக்கச் செய்யப்படும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 17
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): ஒருவர் தாமோ அல்லது தம் பெற்றோரில் ஒருவரோ அல்லது தம் பெற்றோரின் பெற்றோரில் ஒருவரோ 1935ம் ஆண்டின் இந்திய அரசாங்க சட்டத்தில் வரையறுக்கப்பட்டபடி இந்தியாவில் பிறந்து, இந்திய எல்லைக்கு அப்பால் உள்ள வெளிநாட்டில் வழக்கமாக குடியிருந்து வருபவராக இருந்தால் இந்திய குடிமகனாக கருதப்படுவார். காரணம் (R): அவர் தற்போது குடியிருந்து வரும் நாட்டில் உள்ள இந்திய தூதுவரிடம் விண்ணப்பம் செய்து, தம்மை ஒரு இந்தியக் குடிமகனாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 18
ஒற்றை குடியுரிமை எந்நாட்டு அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது?
A
தென் ஆப்பிரிக்கா
B
அமெரிக்கா
C
பிரான்ஸ்
D
இங்கிலாந்து
Question 19
இந்திய குடியுரிமையை இழத்தல் பற்றி கூறுகிற சரத்து எது?
A
சரத்து-5
B
சரத்து-8
C
சரத்து-6
D
சரத்து-9
Question 20
ஒருவர் 24.01.1950 ம் தேதி அல்லது அதற்கு பின்போ ஆனால் 1992ம் ஆண்டு திருத்தச் சட்டத்திற்கு முன்பு இந்தியாவிற்கு அப்பால் பிறந்திருந்து அந்த சமயத்தில் அவரது தந்தையார் ஒரு இந்தியக் குடிமகனாக இருப்பின்,
A
அவர் பிறப்பால் குடிமகனாவார்
B
அவர் மரபுவழித் தோன்றலினால் ஒரு இந்தியக் குடிமகனாவார்
C
பதிவு செய்து கொள்ளல் மூலம் இந்தியக் குடிமகனாவார்
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 20 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!