Online TestTnpsc Exam

மனிதர்களின் பரிணாம வளர்ச்சி- 6th Social Science Lesson 2 Questions in Tamil

மனிதர்களின் பரிணாம வளர்ச்சி- 6th Social Science Lesson 2 Questions in Tamil

Congratulations - you have completed மனிதர்களின் பரிணாம வளர்ச்சி- 6th Social Science Lesson 2 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பற்றி படிப்பது __________ ஆகும்.
A
கல்வெட்டியல்
B
மானுடவியல்
C
தொல்லியல்
D
அகழ்வாராய்ச்சியியல்
Question 1 Explanation: 
(குறிப்பு: தொல்லியல் ஆய்விற்கு முக்கிய ஆதாரமாக அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் உதவுகின்றன.)
Question 2
மானுடவியலாளர்களால் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதக் காலடித்தடங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை?
A
2.5 மில்லியன்
B
2.5 பில்லியன்
C
3.5 மில்லியன்
D
3.5 பில்லியன்
Question 2 Explanation: 
(குறிப்பு: கல்படுகைகளில் பதிந்திருந்த அந்தத் தடங்கள் அதுவரை மண்ணில புதைந்து கிடந்தன. அவற்றை கதிரியக்கக் கார்பன் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அவை 3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று மானுடவியலாளர்கள் கண்டறிந்தனர்.)
Question 3
மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியும் படிப்பது
A
அகழ்வாராய்ச்சியியல்
B
கல்வெட்டியல்
C
மானுடவியல்
D
தொல்லியல்
Question 3 Explanation: 
(குறிப்பு: மானுடவியல் ஆய்வாளர்கள், மனித குலத்தின் வளர்ச்சியையும், நடத்தையையும் ஆராய்ந்து மனிதனின் கலாச்சார மற்றும் சமூக நிகழ்வுகள் பற்றிய முழு விளக்கத்தையும் அடைவதற்கு முயல்கின்றனர்.)
Question 4
மானுடவியல் (anthropology) என்னும் சொல் ______மொழி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
A
ஆங்கிலம்
B
இலத்தின்
C
கிரேக்கம்
D
பிரெஞ்சு
Question 4 Explanation: 
(குறிப்பு: மானுடவியல் (anthropology) என்னும் சொல் இரண்டு கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. Anthropos என்பதன் பொருள் மனிதன். Logos என்பதன் பொருள் எண்ணங்கள் அல்லது காரணம்.)
Question 5
பிரான்சில் உள்ள லாஸ்காஸ் என்னுமிடத்தில் உள்ள குகைகனில் ________ மனிதர்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.
A
நியாண்டர்தால்
B
ஆஸ்ட்ரலோபிதிகஸ்
C
ஹோமோ எரக்டஸ்
D
குரோமேக்னான்ஸ்
Question 5 Explanation: 
(குறிப்பு: குகைகளில் வாழ கற்றுக் கொண்ட குரோமேக்னான்ஸ் மனிதர்களிடம் இறந்தவர்களை புதைக்கும் பழக்கம் இருந்தது.)
Question 6
மனிதர்களின் பரிணாம வளர்ச்சியை கீழ்க்கண்ட எவற்றின் மூலம் அறிவியல் நோக்கில் பயில முடியும்?
  1. கல்வெட்டியல்
  2. தொல்லியல்
  3. மானுடவியல்
  4. நாணயவியல்
A
1, 2
B
1, 4
C
2, 3
D
2, 4
Question 7
மனித இனம் மாறுதல் அடைந்து, ஒரு மேம்பட்ட கட்டத்தை நோக்கி வளர்ச்சி அடைவதே__________ ஆகும்.
A
இடப்பெயர்ச்சி
B
மானுடம்
C
பரிணாமம்
D
மனித வளர்ச்சி
Question 7 Explanation: 
(குறிப்பு: தற்கால மனிதனின் பரிணாம வளர்ச்சி நிமிர்ந்த நிலை மற்றும் இரு கால்களைப் பயன்படுத்தி நடப்பது. பொருள்களை இறுகப் பற்றுவதற்கு வசதியாக கட்டை விரலில் ஏற்பட்ட மாற்றங்கள் மூளையின் வளர்ச்சி )
Question 8
  • கூற்று: மனிதர்கள் காலத்துக்கு ஏற்றவாறு பல மில்லியன் ஆண்டுகளாக தங்களைத் தகவமைத்துக் கொண்டு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளனர்.
  • காரணம்: இயற்கையில் ஏதேனும் ஒரு திடீர் மாற்றம் நிகழும்போது, உயிரினங்கள் அந்த மாற்றத்திற்கு ஏற்பத் தங்களை தகவமைத்துக் கொண்டு உயிர் பிழைக்கின்றன.
A
கூற்று, காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
B
கூற்று சரி, காரணம் தவறு
C
கூற்று தவறு, காரணம் சரி
D
கூற்று, காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல.
Question 8 Explanation: 
(குறிப்பு: கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்த ஹோமோசெப்பியன்ஸ் உலகின் வெவ்வேறு பகுதிகளில் குடியேறினார்கள். அவர்கள் வாழ்ந்த சூழலுக்கு தக்கபடி அவர்களின் வாழ்க்கை முறை மாறுபட்டது. வானிலை, காலநிலை மற்றும் இயல்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களின் உடலமைப்பும் தோல் நிறமும் வேறுபட்டன.)
Question 9
தவறான இணையைத் தேர்ந்தெடு (மனிதர்களும் அவர்களது வாழ்விடங்களும்)
A
ஆஸ்ட்ரலோபிதிகஸ் - கிழக்கு ஆப்பிரிக்கா
B
ஹோமோ ஹெபிலிஸ் – தென்ஆப்பிரிக்கா
C
நியாண்டர்தால் – பிரான்ஸ்
D
ஹோமோ ஏரக்டஸ் - ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா
Question 9 Explanation: 
(குறிப்பு: நியாண்டர்தால் - யூரோசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா))
Question 10
பொருத்துக.
  • மனிதர்கள்                                           வாழ்விடங்கள்
  1. குரோ-மக்னான்ஸ்                             i) சீனா
  2. பீகிங் மனிதன்                                   ii) பிரான்ஸ்
  3. ஹோமோ சேப்பியன்ஸ்                 iii) லண்டன்
  4. ஹைடல்பர்க் மனிதன்                     v) ஆப்பிரிக்கா
A
i iii iv ii
B
ii iii i iv
C
ii i iii iv
D
ii i iv iii
Question 11
ஆதிகாலத்தில் மனிதர்களின் முதன்மையான தொழில் __________.
A
விவசாயம்
B
மீன்பிடித்தல்
C
வேட்டையாடுதல்
D
கிழங்கு அகழ்தல், பழம் பறிப்பது
Question 11 Explanation: 
(குறிப்பு: ஆயுதங்கள் செய்ய சிக்கி முக்கிக் கல் மிகவும் ஏற்றதாக இருந்தது. அதன் வலிமையும் தாங்கும் திறனுமே இதற்குக் காரணம்.)
Question 12
கற்கருவிகளை உருவாக்கியதற்கு அடுத்த கட்டமாக நம் முன்னோர்கள் _________ ஐ கண்டறிந்தார்கள்.
A
சக்கரம்
B
இரும்பு
C
நெருப்பு
D
தாமிரம்
Question 12 Explanation: 
(குறிப்பு: மனிதர்கள் நெருப்பை உருவாக்க சிக்கி முக்கிக் கல்லைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் காட்டு விலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும் சமைக்கவும் இரவில் ஒளியை உருவாக்கவும் நெருப்பு பயன்பட்டது.)
Question 13
தீப்பெட்டியைப் பயன்படுத்தாமல் நெருப்பை உருவாக்கும் பழக்கம் __________ மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இன்றைக்கும் உள்ளது.
A
விழுப்புரம்
B
கோயம்புத்தூர்
C
நீலகிரி
D
கன்னியாகுமரி
Question 14
________ உருவாக்கம் மனித வரலாற்றில் ஒரு முதல்தரமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.
A
சக்கரம்
B
இரும்பு
C
அணிகலன்
D
ஆயுதங்கள்
Question 14 Explanation: 
(குறிப்பு: மலைகளிலிருந்து கற்கள் உருண்டு வருவதைப் பார்த்த போது, சக்கரத்தை உருவாக்குவதற்கான சிந்தனையை பெற்றனர். மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம்.)
Question 15
மனித சமூகத்தின் முதல் கலை_______.
A
ஆயுதங்கள் செய்தல்
B
பானை செய்தல்
C
விவசாயம்
D
பாறை ஓவியம்
Question 15 Explanation: 
(குறிப்பு: வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். அவர்கள் அன்றாட நிகழ்வுகளை ஓவியங்களில் சித்தரித்தார்கள். பெரும்பாலும் விலங்குகளின் ஓவியங்ளே வரையப்பட்டன.)
Question 16
தவறான இணையைத் தேர்ந்தெடு.(தமிழ்நாட்டில் உள்ள தொல் பழங்கால பாறை ஓவியங்கள்)
A
கீழ்வலை – விழுப்புரம்
B
மாவடைப்பு – கோவை
C
குமுதிபதி – மதுரை
D
பொறிவரை – நீலகிரி
Question 16 Explanation: 
(குறிப்பு: குமுதிபதி - கோவை, உசிலம்பட்டி - மதுரை பொறிவரை -கரிக்கையூர், நீலகிரி ஆகிய இடங்களில் தொல் பழங்கால பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.)
Question 17
  • கூற்று 1: இந்தியாவில் 750 குகைகளில் ஏறத்தாழ  500 குகைகளில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.
  • கூற்று 2: ஆண்களும் பெண்களும் வேட்டையாடுவதையும் நடனமாடுவதையும் குழந்தைகள் விளையாடுவதையும் இந்த ஓவியங்கள் சித்தரிக்கின்றன.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 17 Explanation: 
(குறிப்பு: மொழி தோன்றுவதற்கு முன்னால், மனிதர்கள் ஒலியாகவும் அசைவுகளாகவும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தினார்கள். பாறை ஓவியங்களில் அவற்றை வெளிப்படுத்தினார்கள்.)
Question 18
கீழ்க்கண்ட எந்த கண்டுபிடிப்பால் விவசாயம் எளிதாக மாறியது ?
A
விதைகள்
B
சக்கரம்
C
நெருப்பு
D
கலப்பை
Question 18 Explanation: 
(குறிப்பு: எருதுகள் உழுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. இவை விவசாய வேலைகளை மேலும் எளிதாக்கின.)
Question 19
பரிணாமத்தின் வழிமுறை _________.
A
நேரடியானது
B
மறைமுகமானது
C
படிப்படியானது
D
விரைவானது
Question 20
  • கூற்று 1: நம் முன்னோர்கள் குழுக்களாக மரம், குகை அல்லது மலையடிவாரத்தில் தங்கினார்கள்.
  • கூற்று 2: ஒவ்வொரு குழுவிலும் 30 முதல் 40 பேர் இருந்தார்கள்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 20 Explanation: 
(குறிப்பு: பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோர்கள் அலைந்து திரிபவர்களாகவே இருந்தனர்.)
Question 21
இறுகப்பற்றுவதற்கு வசதியாகப் பெரிய கால் விரல்களையும், முன்பக்கம் நீட்டிக்கொண்டிருந்த தாடை நீட்சி சற்று குறைந்தும் காணப்பட்ட மனிதன்
A
ஹோமோ எரக்டஸ்
B
ஹோமோ ஹெபிலிஸ்
C
ஹோமோ சேப்பியன்ஸ்
D
குரோமேக்னான்ஸ்
Question 21 Explanation: 
(குறிப்பு: ஹோமோஹெபிலிஸ் தொடக்க கால மனிதன். கருவிகளை உருவாக்கினான்.)
Question 22
மனித மற்றும் குரங்கின் பண்புகளுடன் காணப்பட்டு நடக்கக் கற்றுக் கொண்ட மனிதன்________.
A
நியாண்டர்தால்
B
குரோமேக்னான்ஸ்
C
ஆஸ்ட்ரலோபிதிகஸ்
D
ஹோமோ எரக்டஸ்
Question 22 Explanation: 
(குறிப்பு: ஆஸ்ட்ரலோபிதிகஸ் தொடக்க கால மனிதன். கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றினான்.)
Question 23
தற்கால மனிதர்களை விட சிறிய மூளை உடைய மனிதர்கள்_________.
A
ஹோமோ எரக்டஸ்
B
ஹோமோ ஹெபிலிஸ்
C
ஹோமோ சேப்பியன்ஸ்
D
குரோமேக்னான்ஸ்
Question 23 Explanation: 
(குறிப்பு: ஹோமோ எரக்டஸ் - ஜாவா மனிதன் முழுமையான மனிதர்கள் அல்ல. நேராக நிமிர்ந்த மனிதன் நெருப்பின் பயனை அறிந்திருந்தான்.)
Question 24
ஆப்பிரிக்கர்களிடம் இருந்து வேறுபட்டு கரடு முரடான கருவிகளை கொண்டிருந்த வேட்டையாடும் திறனில் பின்தங்கியிருந்த மனிதன்
A
ஹோமோசேப்பியன்ஸ்
B
நியாண்டர்தால்
C
குரோமேக்னான்ஸ்
D
ஆஸ்ட்ரலோபிதிகஸ்
Question 24 Explanation: 
(குறிப்பு: நியாண்டர்தால் - இறந்தவர்களை புதைத்தனர். சான்றுகள் ஜெர்மனியில் கிடைக்கப்பெற்றுள்ளன. முழுமையான மனிதர்கள் அல்ல.)
Question 25
சுயமாக சிந்திக்கும் திறனுடைய, வேட்டையாடும் மற்றும் உணவு சேகரிக்கும் சமுகமாக வாழ்ந்த மனிதன்
A
ஹோமோ எரக்டஸ்
B
ஹோமோ ஹெபிலிஸ்
C
ஹோமோ சேப்பியன்ஸ்
D
குரோமேக்னான்ஸ்
Question 25 Explanation: 
(குறிப்பு: ஹோமோசேப்பியன்ஸ் - ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் குடியேறினான்.)
Question 26
கற்கருவிகளுடன், எலும்பாலான கருவிகளையும், குத்தீட்டியும் நெம்புகோல் வகை கருவிகளையும் பயன்படுத்திய மனிதன்
A
ஹோமோசேப்பியன்ஸ்
B
நியாண்டர்தால்
C
குரோமேக்னான்ஸ்
D
ஆஸ்ட்ரலோபிதிகஸ்
Question 26 Explanation: 
(குறிப்பு: குரோமேக்னான்ஸ் - மனித வாழ்வின் தொடக்கம். நவீன மனிதன்.)
Question 27
தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
ஆஸ்ட்ரலோபிதிகஸ் – 4 ல் இருந்து 2 மில்லியன் ஆண்டுகளுக்குள்
B
ஹோமோ எரக்டஸ் - 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்
C
ஹோமோ ஹெபிலிஸ் – 3.2 ல் இருந்து 2.5 மில்லியன் ஆண்டுகளுக்குள்
D
நியாண்டர்தால் – 130000 முதல் 40000 ஆண்டுகளுக்குள்
Question 27 Explanation: 
(குறிப்பு : ஹோமோ ஹேபிலிஸ் – 2.3 ல் இருந்து 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஹோமோசேப்பியன்ஸ் – 300000 ஆண்டுகளுக்கு முன்)
Question 28
கிழக்கு ஆப்பிரிக்காவில் 50000 ஆண்டுகளுக்கு முன் மேற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஐரோப்பாவில் 40000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன்
A
ஹோமோசேப்பியன்ஸ்
B
நியாண்டர்தால்
C
குரோமேக்னான்ஸ்
D
ஆஸ்ட்ரலோபிதிகஸ்
Question 29
_________ ஆண்டுகளுக்கு முன் நாகரிகத்தின் தோற்றம் ஏற்பட்டது.
A
3000
B
5000
C
8000
D
8500
Question 30
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
460 கோடி ஆண்டுகளுக்கு முன் புவி தோற்றம்
B
10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் நடந்தான்.
C
3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் புவி எங்கும் பரவினர்.
D
8000 ஆண்டுகளுக்கு முன் வேளாண்மை தொடங்கியது.
Question 30 Explanation: 
(குறிப்பு: 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் நடந்தான்.)
Question 31
______________ ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயிர் வளர்ப்பதிலும் கால்நடை வளர்ப்பதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
A
5000
B
6000
C
7000
D
8000
Question 31 Explanation: 
விளக்கம்: 8000 ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்கள் பயிர் வளர்ப்பதிலும் கால்நடை வளர்ப்பதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
Question 32
கூற்று 1: 18000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்கள் குகையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். கூற்று 2: அவர்கள் கல்லிலும், எலும்பிலும் செய்தக் கருவிகளை வேட்டைக்குப் பயன்படுத்தினார்கள்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு கூற்று 1 சரி
C
கூற்று 1 மற்றும் கூற்று 2 சரி
D
கூற்று 1 மற்றும் கூற்று 2 தவறு
Question 33
ஹோமோ சேப்பியன்ஸ் காலத்தில் வாழ்ந்த மக்கள் _____________ விலங்குகளை வேட்டையாடினார்கள்.
A
பன்றி
B
மான்
C
காட்டெருமை
D
மேற்கண்ட அனைத்தும்
Question 33 Explanation: 
விளக்கம்: ஹோமோ சேப்பியன்ஸ் காலத்தில் வாழ்ந்த மக்கள் பன்றி, மான், காட்டெருமை, காண்டாமிருகம், யானை, கரடி போன்ற விலங்குகளை வேட்டையாடினார்கள்.
Question 34
ஹோமோ சேப்பியன்ஸ் காலத்தில் வாழ்ந்த மக்கள் வேட்டையாட பின்பற்றிய முறை. 1. குழுவாகச் சென்று வேட்டையாடுதல். 2. குழி தோண்டி, அதில் விலங்குகளைச் சிக்க வைத்து வேட்டையாடுதல்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 35
ஹோமோ சேப்பியன்ஸ் காலத்தில் வாழ்ந்த மக்கள்_________யை பயன்படுத்தி கோடாரிகளை உருவாக்கினர்.
A
மரக்கிளைகள்
B
தந்தங்கள்
C
இரும்புகள்
D
பெரிய கற்கள்
Question 35 Explanation: 
விளக்கம்: ஹோமோ சேப்பியன்ஸ் காலத்தில் வாழ்ந்த காலத்தில் மனிதர்கள் கற்களின் துணை கொண்டு கூரிய ஆயுதங்களைச் செய்ததுடன், அவற்றைப் பிடிப்பதற்கு வசதியாக மரக்கைப்பிடிகளையும் பொருத்தினார்கள். பெரிய கற்களைக் கொண்டு கோடாரிகளையும் உருவாக்கினர்.
Question 36
பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் கோடாரிகளை_____________க்கு பயன்படுத்தினர்.
A
மரம் வெட்ட
B
குழி தோண்ட
C
விலங்குகளை வேட்டையாட
D
மேற்கண்ட அனைத்தும்
Question 36 Explanation: 
விளக்கம்: பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் கோடாரிகளை மரம் வெட்டவும், மரக்கிளைகளை நீக்கவும், குழிதோண்டவும், விலங்குகளை வேட்டையாடவும், விலங்குகளின் தோலை உரிக்கவும் பயன்படுத்தினார்கள்.
Question 37
தொடக்க காலத்தில் மனிதர்கள்_______________யை கண்டு பயந்தார்கள்.
A
மரங்கள்
B
நெருப்பு
C
மின்னல்
D
B C இரண்டும்
Question 37 Explanation: 
விளக்கம்: தொடக்க காலத்தில் மனிதர்கள் நெருப்பையும் மின்னலையும் கண்டு பயந்தார்கள். மின்னலால் தோன்றிய நெருப்பில் சிக்கி, காட்டு விலங்குகள் இறந்திருக்கலாம். அவர்கள் அந்த விலங்குகளின் இறைச்சியை உண்டபோது, அது மென்மையாகவும் சுவையாகவும் இருந்திருக்கும்.
Question 38
கூற்று 1: தொடக்க காலத்தில் மனிதர்கள் செம்மண்ணில் பானை செய்யக் கற்றுக்கொண்டார்கள். கூற்று 2: வண்ணச்சாயங்கள் தயாரிக்க தாவரங்களின் வேர்கள், இலைகள், மரப்பட்டைகள் ஆகியவற்றின் சாற்றினைப் பயன்படுத்தினர்.
A
கூற்று 1 சரி, 2 தவறு
B
கூற்று 1 தவறு, 2 சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 38 Explanation: 
விளக்கம்: தொடக்க காலத்தில் மனிதர்கள் களிண்ணில் பானை செய்யக் கற்றுக்கொண்டார்கள்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 38 questions to complete.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!